உரையாடலின் ஒரு பகுதி 92
ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்

ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்
அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.
கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.
சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும். பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.
சனி 4வது வீட்டில் இருந்து 4வது வீடு துலாம், மகரம், கும்பமாக இருப்பின் ஜாதகர், ஜோதிடர், கணித ஆசிரியர், அகெளண்ட்ஸில் வேலை பார்ப்பவராக இருப்பார். சனி, ராகு சம்பந்தம், புதன், ராகு சேர்க்கை எலக்ட்ரனிக் கல்வியில் சிறந்து விளங்குவர். சனி லக்னத்திலிருந்தோ, சந்திரனிடமிருந்தோ 5ம் வீடு, 10 வீட்டில் இருப்பினும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.
சனி 7ல் இருந்து பாபகிரஹங்களால் பார்க்கப்பட்டால் அவருக்கு இருதாரம் ஏற்படும். சனி, புதன் சேர்க்கை 7ம் வீட்டில் இருப்பின் விதவையை மணப்பர். அதேபோல் சந்திரன், சனி சேர்க்கை 7ல் இருப்பின் விதவையை மணந்து சுகமாக வாழ்வர். சனி ஜன்ம ராசிக்கு கோச்சாரப்படி 12ம் வீடு, 1,2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஏழரை ஆண்டு சனி அல்லது சாடே சாத்தி அல்லது ஏழரை சனி என்று கூறுவர். சனி பகவான் லக்னத்தைப்பார்த்தாலோ, அல்லது லக்னாதிபதியை பார்த்தாலோ, 10மிடத்தை…
சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும். 7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும். சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின் திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம். சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும், வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.
விடுபட எண்ணுகையில் கொஞ்சம் தீனிகேட்டு எழுந்திருக்கும் புத்தி கரையான் புற்று போல வளரத் தொடங்கிவிடும் நீங்களாக அதற்கொரு பூச்சிக்கொல்லி மருந்து அடித்துக் கலைக்கும் வரை உங்கள் பேச்சு அதன் பேச்சுடன் ஒத்துப்போகும் கவனித்துப் பாருங்களேன்.. பின் குறிப்பு எதில் இருந்து விடுபடஎன்பது அவரவர் சம்பத்தப்பட்ட விஷயம்
காத்திருப்பது வீண் சில சமயம் தோணும்போதும் மனம் காத்திருக்க தவறியதில்லை, காத்திருப்பு உனக்காக என்ற போதிலே; ஏதோ ஒரு நம்பிக்கையில்.. பாரமான உன் நினைவோடு என்றென்றும்.. பின் குறிப்பு உனக்கு என்பதை எதை கொண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தரம் உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.