திருத்தணி
சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம் திருத்தணி சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.
நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள் கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன்பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்
பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.
இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம். சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள் தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு. கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…
லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4 நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று. கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…
எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும். எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம். எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம். தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம், உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது, மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.
நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்? இதற்கு தினசரித் திட்டம் என்ன? எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா? ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில் எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்? எவைகளை இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும். நித்தியக் கடனாக…
மனதிற்குச் சாந்தி அளிக்கிறது. பிராண உடலில் சமாதானமாக இயற்கைக்குகந்தவாறு பரவி, நிலைத்து வேலை செய்யத் தூண்டுகிறது. சளைக்காது அதிக வேலை, அதிகப்படிப்பு, அதிகச் சிந்தனை செய்ய உதவுகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் சக்தி பெற புத்தி, சாமார்த்தியத்தை அளிக்கிறது. இக்கவசத்தின் எண்ணற்ற பலன்களை எடுத்துரைக்க இயலாது.
பயம் இது எல்லோரிடமும் உள்ளது. அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன் நெருப்பைக் கண்டு பயப்படலாம். பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை. அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம். கொடிய…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.