பகை
பகை காட்டினில் விளையும் நெருப்பு போல பரவிக் கொண்டும் ஆற்றலை பெருக்கிக்கொண்டும் எல்லாவற்றையும் அழித்துக் கொண்டும் இருக்கும்.
பல சமயங்களில் காதல் என்பது தண்ணீர் இல்லாத குளத்தில் குளித்து வருபவருக்கு தலை துவட்ட துண்டு கொடுக்க காதலனிடம் சொல்லும் இதை புரிந்து கொள்ள நிச்சயம் காதலித்திருக்க வேண்டும்.
ஒவ்வொருத்தருக்கும் நாம் இயற்கையின் படைப்பு இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்பதை திடமாகவும், தெளிவாகவும் நம்புவது அவசியம். அது மட்டுமல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து இருப்பவனே மனிதன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் இருக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் பல நிறை, குறைகளை அனுபவிக்கிறான். அந்த அனுபவம் எதற்கென்றால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கே ஆகும். சோதனைகளும், வேதனைகளும் எல்லோருக்கும் அவரவர் நிலையில் கண்டிப்பாக உண்டு. அதில், பெறும் அனுபவத்தை பாடமாக கொண்டு…
மனிதன், மனித வாழ்க்கை நிறை குறைகளுடன் கூடியதே என்பதை முதலில் நன்கு புரிந்து மனதில் இருத்திக் கொண்டாலே தானாகவே மன்னிக்கும் சுபாவம் கைகூடி வரும் மன்னிக்கும் சுபாவம் கைகூடினால் மனதில் வன்மம் வளராது வன்மம் இல்லாத மனம் கோபமும், அழிக்கும் ஆவேசமும் இல்லாத மனம் ஆகும் அந்த மனம் வெகு இயல்பாகவே ஆனந்தத்தின் பிடியில் சிக்கும்.
நம் வாழ்க்கையை பிறர் வாழ முடியாது அதுபோல தான் பிறர் செயல்களும் வாழ்க்கையும் நாம் ஆசைப்படும்படி, நாம் நினைக்கும்படி இருக்க வேண்டியது இல்லை இதை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே நமக்கு சோகமோ, கோபமோ உண்டாகாது இவை இரண்டும் இல்லாவிட்டாலே வாழ்வு இனிமை தானே வாழ்க்கையில் ஆனந்தம் தானே!
நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக நிறம், மொழி, வயது, அறிவு, புத்திசாலிதனம் அனுபவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொவரு விதத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானதே என்பதுதான் அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முயல வேண்டும். நம்மையும் சேர்த்துதான் எப்போது நாம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள பழகுகிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நாம் இறைவன் அருகில்…
ஒவ்வொருவரும் தற்கால சூழ்நிலையில் முக்கியமான இரண்டு வினாக்களை தம்முள் வைக்க கடமைப்பட்டுள்ளோம். முதல் வினா எதுவாக ஆக வேண்டும்? இரண்டாவது வினா அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே உப வினாவாக இதையும் சேர்த்துக்கொள்ளலாம். அது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த வினாக்களை ஆராயும் நமக்கு தெரிந்து விடும் நம்முடைய இலட்சியம் என்ன நம்முடைய குறிக்கோள் என்னவென்று பின் என்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் மன உறுதியோடு முழு நம்பிக்கையோடு நீங்கள் அதை நோக்கி…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அவர் அவர் திறமையை கண்டு உணர்வது அவரவர் கையில் அதை கண்டு கொண்ட பின் நீங்கள் முழு மனதுடன் ஈடுபடுங்கள் நிச்சையமாய் ஈடுபடுவீர்கள் ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு தெரிந்ததை செய்கிறீர்கள் அப்படி செய்யும் போது உங்கள் வாழ்வு முழுமையாய் இருக்கிறது என்பதை அறிவீர்கள் இங்கு நீங்கள் எதனுடனும், எவருடனும் ஒப்பீடு செய்வதில்லை. அதனால் உங்களின் ஆனந்தம் உங்களிடமே சுழலும்.
எப்போதும் நீங்கள் உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவர்களையும் கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பவர்கள் அப்படி உங்களுக்கு எடுக்கப்படும் பாடத்தை கவனமோடு படித்து தேர்ந்தீர்கள் என்றால் அது தான் அனுபவம் அந்த அனுபவமே உங்கள் சொத்து அதைக் கொண்டு நீங்கள் உங்கள் உறவுகளிடம் மற்றும் சமுதாயத்தில், மனநிறைவோடு வாழலாம்.
இறை நம்பிக்கையின் அடித்தளமே சுய நம்பிக்கை தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பது முழுக்க, முழுக்க என்னுடைய சிந்தனை தான் இதில் பிறறின் தலையீடு இருக்காது, இருக்கக் கூடாது அப்படி பிறறின் தலையீடு இருந்தால் அது கடவுள் நம்பிக்கையாய் இருக்காது அதாவது முழுமையான என்னுடைய கடவுள் நம்பிக்கையாக இருக்காது. இதை, நன்கு யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.