உரையாடலில் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.