மனித முக விநாயகர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.
சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.
வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான் இதைக்…
இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்திக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? அவர்கள் ஏன் இந்த இயக்கங்களின் மிகப் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கப்படக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத்…
தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும் வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.
ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசபிக் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.
தன் நம்பிக்கை என்பது தனது திறமைகளை பற்றி அதீதமான தவறான மதிப்பீடு செய்வதல்ல அல்லது போலியான தற்பெருமையோடு அலைவதல்ல, அவரவரின் உள்ளார்ந்த ஆற்றலின் மீது உள்ள மன திடம் தன்நம்பிக்கை ஆகும். இன்னுமொரு விஷயம் அவரவரின் திறமையில் கிடைக்கும் பயன் கூட தன் நம்பிக்கையை வளர்க்கும் அனால் அது நீண்ட காலம் அல்லது எல்லா சூழ்நிலைகளிலும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது ஏமாந்தால் இது தற்பெருமை உள்ளவராகவும், ஆணவகாரராகவும் மாற்றிவிட வாய்ப்பு உண்டு ஆனால் உள்ளார்ந்த ஆற்றலின்…
ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் மிக பலவீன மனம் படைத்தவனாகவே இருக்கிறான். காரணம் ஆழமாக சிந்தித்து அதன் மூலம் பணி செய்து கிடைக்கும் பயன்களை அவன் விரும்புவதில்லை எதையும் சுலபாக அடைய வேண்டும் என்பதே அவனது ஆசையாய் இருக்கிறது. உழைக்காமலும் உயர்ந்த சிந்தனை இல்லாமலும் மன உறுதியும், வைராக்கியத் தோடும் கூடிய காரியங்கள் இல்லாமலும் எப்படி நினைத்ததை அடைய முடியும். மனிதன் பொருளாதாரத்தில் லாபம் தரக்கூடிய, புலன்களால் அனுபவிக்க கூடிய விஷயங்களை மட்டுமே நம்புகிறான். அதனாலேயே…
இந்த பூ உலகில் எந்த விஷயமானாலும் சரி எந்த செயலானாலும் சரி காரணம், காரியம், விளைவு இதனோடுதான் முழு சம்பந்தம் கொண்டுள்ளது. விளைவு நம் விருப்ப படி அமைய வேண்டுமானால் காரியம் அந்த விளைவுக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும் அது மட்டுமல்ல காரியமும் அந்த காரணத்திற்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும் இது மிக, மிக கடினமான நெடுங் கணக்கு இதை புரிந்து அறிந்து கொள்ளவே மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை போராடுகிறது ஆனால்…
மறுபடியும், மறுபடியும் சொல்வது மனிதனுக்கு தன்னைப் பற்றிய அக்கறை, தெளிவு கண்டிப்பாய் வேண்டும் என்பது தான் எனக்கு எது சிறந்தது எனக்கு நான் எப்படிப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன் என்பது தான் இது தெரிந்து விட்டது என்றாலே நாம் செய்ய வேண்டிய பயண இலக்கு தெரிந்து விடும் இலக்கு தெரிந்த பின் பயணப்படுதல் சுலபமாகிவிடும் இலக்கில் தெளிவு இல்லாத போது துன்பத்தையும், சோகத்தையும் தவிற நாம் வேறு எதையும் அடைய முடியாது.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.