மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.. முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..!
காரணமின்றி காயங்கள் பல.. காரணமானவர்கள் தேவையா; காயங்கள் தேவையா.. இவற்றை விரும்பி பெற்றோமா? இல்லை விதியென கடந்து போவதா?!
ஆசை..யார் மீது வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால், ஏக்கம்.. நமக்காக வாழும் ஒருவர் மீதுதான் வரும்!
எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.
தை மழை நெய் மழை. படித்த முட்டாள் படு முட்டாள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்பாய். செயலே புகழ் பேசும். மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். பொய்க்கு எல்லையில்லை.
திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். தீயில்லாமல் புகை கிளம்பாது. தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.
தன் பாவம் தன்னுடன் வரும், கோபத்திற்கு கண்ணில்லை. தீயிலிட்ட நெய் திரும்பி வருமா? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.
தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான். சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம். செய்து முடி அல்லது செத்து மடி. தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.