அவர்களே வருவார்கள்
அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!
அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!
எந்த துன்பமும் நமக்கு மட்டுமே என்ற நினைவு நமக்கு தேவையில்லாதது அது பணம் சம்பந்தப்பட்டதாகட்டும் தொழில் சம்பந்தப்பட்டதாகட்டும், குடும்பம், உறவு, நட்பு, கல்வி என எது சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் அதிலும் இன்பம் உண்டு என்பதை அறிந்து அதை கண்டு பின் அதை கொண்டு இன்பமாய் மகிழ்ச்சியாய், ஆனந்தமாய் இருக்கலாம் காரணம் பூமியின் மக்கட் தொகையை சிந்திக்கும் போது நாம் நம்முடைய துயரத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவேண்டியது இல்லை கவிஞரின் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து…
நாம் சிறிது சிந்தித்து பார்த்தால் இந்த பூமியின் தற்போதய மக்கள் தொகை சற்றேற குறைய 750 கோடி இத்தனை மக்களும் நாம் வரையறத்துள்ள நியதிபடி பல்வேறு நாடுகளில், பல்வேறு சீதோஷண நிலைகளில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர் சிலர் அறிவாளிகள், பலர் அப்படியில்லை சிலர் பெரும் செல்வந்தர்கள், பலர் அப்படியில்லை சிலர் கறுத்தவர் சிலர் பழுப்பு நிறகண்களை உடையவர், சிலர் கறுத்தவர் , சிலர் சுருள், சுருளான தலை முடிஉடையவர், சிலர் இறை நம்பிக்கை உடையவர், பலர் அப்படியில்லை,…
எந்த மனிதனின் தனிப்பட்ட கவலைக்கும் சுலபமான மாற்று விஷயம் சேவை செய்தலாகும். ஆம், உண்மையில் அடுத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் போது நமது உள்ளார்ந்த சக்தியும் கவலையினால் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன், புது சக்தியுமாக உருப்பெறுகிறது. இந்த முறையை கைகொண்டால் நம் வாழ்க்கைப் பயணத்தில் உண்டாகும் எந்த துயரம் மிகுந்த காலத்தையும் வென்று சுகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கலாம். நான் துயரத்தின் வலியில் அழுது கொண்டிருந்தாலும் எனது இதயம் சோகத்தில் இருந்தாலும் எனது இதழ்கள் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்கட்டும்…
எந்த ஒரு கவலை அது யாருக்கு வந்தாலும் எதன் மூலம் வந்தாலும் அந்த கவலைக்கு காரணமான விஷயத்தில் இருந்து மனதை மடை மாற்றம் செய்வதுதான் கவலையில் இருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி அப்படி மடை மாற்றம் செய்வது நமது உள்ளார்ந்த சக்தியினை பெருக்குவதற்க்கு அனுகூலமான விஷயங்களில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும் அது இல்லாமல் நமது உள்ளார்ந்த சக்தியினை குறைப்பதற்க்கு உண்டான விஷயங்களில் மடை மாற்றம் செய்தால் நாம் கவலை எனும் புதை சேற்றில் மூழ்கி மறைந்துவிடுவோம்.
ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி என்ற நிலையில் இருந்து மாற்றி அந்த வெற்றியை பிறருக்கும் அல்லது பிறரும் மகிழத்தக்கதாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை தான் வளரும் போதே தன்னோடு உள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்த கலை கை கூடுகிறது. தேனீயின் உழைப்பிற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் தருகிறோம் காரணம் அது மற்றவர்களுக்காக உழைப்பதால் தான்.
ஆசைப்படாமல் உழைக்க மனம் வராது ஆர்வம் இல்லாமல் செயலில் வெற்றி கிடைக்காது உலகில் மிக, மிக உன்னதமான உழைப்பே அதன் ஆற்றலே மனிதனை இப்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும் எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும் அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும் மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரக்கெடு அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கம் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யும் போது நம் மனதுக்கு உண்டாகும் ஆனந்தமே தனிதான் எந்த வேலையை செய்வதற்கு முன்னும் அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டியது முக்கியம் அப்படி தீர்மானிக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தும் பழக வேண்டும். ஏனென்றால் கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாமதங்கள் பல அபாயகரமான முடிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி. விடும்
இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில் நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம். மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும் மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.