வித்தியாசமான கணக்குகள் 1 கூட்டல்:
கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்
கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்
கேட்டால் தவிர யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள் புத்தகங்களை எரிப்பது பாவம் ! அதைவிடப்பாவம் அதைப் படிக்காமல் இருப்பது!!
இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில் தான்.
தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான், நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.
உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம்.
ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.
இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.
மலச்சிக்கல் வருவானேன்? உண்பது எளிதாயிருப்பது போல் மலக்கழிவும் சாதாரணமாய் ஏன் நடக்கக்கூடாது? சுலபமாய் இஷ்டம் போல் வாயில் பொருள்களைக் கொட்டிவிடுகிறோம். இவ்வளவு சுலபமாக மலத்தையும் கழிக்கச் சக்தியில்லையா?
இப்பெருங்குடலை இரண்டு, மூன்று, நான்காவது சேக்ரல் நரம்புகள் ( SECRAL NERVES ) ஆளுகின்றன இடுப்புக்கிரந்திகள் வழியாக “ ஸிம்ப தெடிக் “ கும் (SYMPATHETIC SYSTEM ) வேலை செய்கின்றது. இந்நரம்புகள் எல்லாம் மிகப் பொடி நரம்புகளாக மலப்போக்குக் குழாய் மேல் முடிகின்றன. இவைகளில் தான் முக்கிய செயல் சக்தியுண்டு.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.