கற்பனை வாழ்க்கைக்கு
கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்
கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்
பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…
மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.
அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.
சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.
இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…
பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.
அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.
ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.
அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.