சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர்
சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல்,
கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல்,
திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.
திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.
