கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி.
இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது.
இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது.
உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர்.
அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில்,
விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து
தண்ணீர் பொங்கி வந்த படியே இருக்கிறது.
