வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது..
”யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”, என்பார்.
நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம்.
ஆனால்,
நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ
அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது
உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள்.
ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன
ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன.
ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா
என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
