பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து
இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது.
இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட
எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர்
என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்
புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான்
இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.
