வங்கி மேலாளரிம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.
மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?”
கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”
அடமானமாய் என்ன தருவீங்க…?”
ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன…?”.
நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.
அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!”
ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.
மேலாளர் நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார்.
சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.
மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார். “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா? அது கிடைச்சது நிறைய…!”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்…?”.
என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”. மேலாளர்
நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே?” என்றார்.
ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன?”.
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி
அடமானமாய் என்ன தருவீங்க?”
