மனித வாழ்வின் லட்சியம் எது? இது வினா,
பதில் நிறைய வருகிறது கூட்டி கழித்து பார்த்தால் மனிதன் சந்தோஷமாய் இருப்பது பதில்,
இத்தனை தான் என்று நினைத்தால் இதில் எத்தனை கிளை பதில்கள்
சந்தோஷத்தை நாடி
இன்பத்தை தேடி
என்று மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுக்கு இன்பத்தை தந்துவிட்டதா என்றால்
பூரண இன்பம் தரவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்படியானால், நிரந்தர இன்பம் எது என்ற வினாவை வைக்க வேண்டியிருக்கிறது.
இனிப்பு பண்டம் மீது ஆசை
அதை தின்றால் சந்தோஷம்,
ஆனால் ஆயுள் முழுவதும் இனிப்பு பண்டம் சாப்பிட முடிவதில்லையே
