பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?
தேவர்களும், திருமாலும் கொன்றைவார் சடையுடைய சிவனும்
வேதங்கள் பாடும் நான்கு பீடங்களை காட்டிலும்
பாலை காட்டிலும் இனிய சொல்லை உடைய தேவியே
நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை
நாய் தலை போல் உள்ள என் தலை மேல் வைப்பது
மிகவும் நன்றோ.
