தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
கரும்பினால் ஆனா நீண்ட தனி வில்லும் ஐந்து மலர்களும் கொண்ட நின்ற தேவியே
நின்றை தவிர எனக்கு வேறு பிடிமானம் இல்லையென்று
நின்னை தியானிக்க மனதை பழகும் படி செய்ய எண்ணவில்லை.
பஞ்சை மிதிக்கக்கூட நினையாத மென்மையான பாதங்களை உடைய தாய்மார்கள்
பிள்ளைகள் அறியாமை உடையவர்களாக இருந்தாலும்
தண்டிக்கமாட்டார்கள்.
