தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார்.
ஐயா! எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார்
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும்.
அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால்
அதையும் நீ தெரிந்துகொள்வாய்
. எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு” என்றார் துறவி.
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது
அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.
அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார்.
“என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன்
. ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.”
அந்த முதியவர் கேட்டார். “சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?”
அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது
