ஒரு குழந்தையின் புன்னகையில்
சில நிமிடங்களாவது
நிஜமாகக் கரைந்திருக்க வேண்டும்.
யாரும் பார்க்காத போதும்
ஒரு கவிதைக்காக அழுதிருக்க வேண்டும்.
சக மனிதனின்
புன்னகையின் மதிப்பை
கண்ணீரின் அர்த்தத்தை
மரணத்தின் விஸ்வரூபத்தை
நிஜமாகத் தரிசித்திருக்க வேண்டும்.