ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில்
திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும்
அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, தொழில் என்று
எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம்.
இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால்
அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும்.
எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து
சரி செய்து விட்டால்
குடும்பம் குழப்பம் இல்லாமல் நகர்ந்து விடும்,
இல்லாவிட்டால் சங்கடம் தான்.