பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்?
எனக்குச் செல்லும் வழி எது?
நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்?
இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும்.
பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும்.
இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற
பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக்
கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில்
பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு.

