நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனி மனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும்
மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும்
இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன.
அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை.
சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர்
. தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே
மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.
