ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால்
நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை
வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே.
ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம்,
அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும்,
இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.