நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும் போது
நம்முடைய நினைவில் அந்த வினாடி வரை தோன்றாத ஏதேனும் ஒரு திசையை காண்பித்து
அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதின் அவசியத்தை
யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே யாரோ வந்து போகிறார்கள்.
அதன் காரணங்கள் நமக்கு தெரிவதில்லை
நமக்கு தெரிந்த காரணங்கள் அதற்க்கு பொருந்துவதில்லை
இது தான் வாழ்க்கையின் சூட்சுமம்
