தன்னைத்தான் அறிய வேணும்
சாராமல் சார வேணும்
பின்னைத் தான் அறிவதெல்லாம்
பேயறிவு ஆகுமடி – அகப்பேய் சித்தர்.
தேவையைப் பற்றியும் ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு
வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அது தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும்.
பேயறிவு என்று அவர் சொன்ன காரணம்
அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தை போக்காது, புண்ணியத்தை சேர்க்காது
முக்கியமாக தன்னை அறிந்திருக்காது.
தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத் தொடங்கும்.
