ஒரு மனிதன் என்பவன் ஒருவனல்ல
என்றும்
எல்லா மனிதனும் ஒன்றுதான் என்றும்
இங்கு நட்சத்திரத்திற்கும் எறும்பிற்கும்
எந்த வேறுபாடும் இல்லை என்ற
புரிதல் தொடங்கியிருக்க வேண்டும்…
தெரியாமல் சிந்தி விடும் தேநீருக்காக
சகமனிதன் மீது கோபத்தை வெளிப்படுத்தாத
நிமிடத்தில் இருந்து நாம் மன்னிப்பிற்கான
முதல் விதையைக் கண்டெடுக்கிறோம்
மன்னிப்பு கேட்பதும்
மன்னிப்பதும்
வெறும் செயல் அல்ல
ஞானத்திற்கான சிறு ஒத்திகை.