திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில்
தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல்திருமேனிகளாக உள்ளன.
இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவர்கள்
தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே
தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.