7 – க்குரியவர் சாரம் பெற்று 8 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று 12 – இல் அமர்ந்தால்,
மனைவிக்கு நிரந்தர நோய்த்தொல்லை பீடிக்கும். இல்லறம் சோபிக்காது. மன அமைதி கெடும். சரிவர தூக்கம்வராது.
6 – இல் கேது 8 – க்குரியவர் சாரம் பெற்று, சாரநாதன் கேதுவுக்கு லாபம் பெற்று,
கேதுவுக்கு நான்கு கேந்திரங்கலும் கிரகங்கள் நிற்கில், கேது தசாகாலம் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும்.
தொழில் பலம் ஏற்படும்.
6 – க்குரியவர் சுயசாரம் பெற்று 10 – ஆமிடத்தைப் பார்த்தால்,
அவர் திசை முழுவதும் அடிமைத் தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்
6 இல் செவ்வாய் இருந்து, 8 – க்குரியவர் பார்த்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளால் மன நிம்மதி கெடும்.
பல தொல்லைகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.