1 குரு கீதை* –
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல்.
இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி
அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது.
இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
2 அஷ்டவக்ர கீதை* –
ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது.
இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது.
இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால்
உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும்,
அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த,
அதன் துன்பங்களையும் வலியுறுத்துகிறது.
இது மஹாபாரதத்தின் வன பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
