முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.
தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.
மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.
ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.
அக்கிரமம் செய்பவன் இப்போது தான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும்
தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.
அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.
இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை.
இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை.