பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 11 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…. * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நின்று இயங்குகிறார். இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும். க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும்தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல… * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 10 கோள்களின் கோலாட்டத்தின் படி

‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமி நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும். இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளியான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர், மகான், யோகி, மகரிஷி, போன்றவர்கள் இந்நிலையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்..

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 8 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம் இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு தக்கபடி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்.. நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வாரத்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான சுக்கிரன்-சந்திரன் திதியையும் நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும் காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும், ஆகாயத்தின் இயக்க கர்த்தாவான சனி,…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 7 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

 குரூர குணத்தின் செயலாளராக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்று நர்த்தனம் புரியும் லீலையை சொல்லவும் வேண்டுமா? சத்தியம், தர்மம், போன்றவற்றிற்கு குரு, புதன் சுக்கிரன் அதர்மம் கலந்தது சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், ராகு தர்மம் அதர்மம் கலந்தது சந்திரன், கேதுவாக நின்று இயங்கும் இதே போல் நமது தேகத்தின் ஒவ்வொரு மயிர் துவாரத்திலும் நின்றுஇயங்கும் தெய்வம் கிரகம் நட்சத்திரம் தன் தேவதைகள் போன்ற அமைப்பை இதுவரையில் நாம் தத்துவார்த்தமாகவும் சித்தர்கள் ஞானிகள் மகான்களின் வழிமுறைகளிலும்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 6 கோள்களின் கோலாட்டத்தின் படி

எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குரு வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம்,சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும்,  நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதன் பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடும் ஆட்டம் தான் கோலாட்டம் 

மகரிஷி தயானந்த ஜோதி கோவை

குருவருளும் திருவருளும் துணை நிற்க இந்த இணைய தளத்தில் சஞ்சரிக்கும் அன்பு வாசகர்களுக்கு என்றென்றும்என் மனமார்ந்த வணக்கங்கள். எத்தனையோ பிறவிகளின் தொடர்ச்சியால் ஏற்படும் பந்தம் தாய், தந்தை, மனைவி, மக்கள் மட்டுமல்ல, குருவும் கூட; யார் அந்த குரு? யாருக்கு வேண்டும் குரு? எதற்கு அந்த குரு? இப்படிப்பட்ட சிந்தனைகள் உடையவர்களுக்கும், தன்னந்தனியே முழு வாழ்க்கையைப் பார்க்க தைரியம் இருப்போருக்கும், வேண்டிய விஷயங்களைத் தாங்கி உலா வரும் இந்த இணைய தளத்தில் நான் மகரிஷியுடன் இப்புவிகால கணக்கின்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 5 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது? .

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 4 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம், முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும். இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம். இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 3 கோள்களின் கோலாட்டத்தின் படி

ஜோதிமயமாக நின்று இயங்கும் பராசக்தியின் பல உரு தோற்றப் பிரிவுகளே படைக்கும் தொழிலுக்கான பிரம்மா இவரின் இயக்கத்தில் குரு காக்கும் தொழிலுக்கான விஷ்ணு இவரின் இயக்கத்தில் சுக்கிரன், சந்திரன், அழிக்கும் தொழிலுக்கான ருத்திரன் இவரின் இயக்கத்தில் சனி, ராகு, கேது அருள் பாலிக்கும் தொழிலுக்கான மகேஸ்வரன், இவரின் இயக்கத்தில் புதன் ஆக நவக்கிரகங்கள் அவரவரின் இயக்க கர்தாவின் ஏவலாளிகளாக நின்று செயல்படுவது தான் மனித தேகம்,மரம், செடி, கொடி, புல் பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 5

சூரியன், குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன், புதன் சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும் குடும்ப சூழ்நிலையும் மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக, ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது. சூரியன், சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு,…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 4

இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன், செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மன பயம், காமஇச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார். தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள். இந்த விருச்சிக லக்கினக்காரகளுக்கு ” குருதிசை ” சுபத்தை தருகிறது. குற்றங்கள் நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது. ” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 3

செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரகர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம், மது, மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், ‘கொலை பாதகம் ‘ ராகு, கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரகர்கள் நல்ல நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன், சேர்க்கை புத்திர நாசத்தையும் குடும்பம் பாதிப்படைதலும் மூடத்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 2

இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன், குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒரு வகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வ பலம் ஆகியவை சிறந்து விளங்கும் படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2, 5க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம். 1

”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந் தேவர்கட்கிரை வனுஞ்சுபராய் கோளாறு சேய் மாலுசனனுமதர் குபேரனுமி ரவியும் யோகர் கேளுடன் கூடிலி ராஜயோக மதாங் கிளத்தியவசுபர் மாரகராய் நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார் நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ). ”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர் இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும் நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன் அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை ) ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே இயன்ற பாவர் இந்து சுபன் ”…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 2 கோள்களின் கோலாட்டத்தின் படி

பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றதன்மைகளின் பிரதிபலிப்பாக குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்,செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே பூமி, நீர், நெருப்பு, காற்று,ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும் கர்த்தாவாகதிகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும் ” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே. லம்,  ‘ க்லீம் ’ பீஜத்தின்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம். இதன் பொருள் நம்மிடமே உள்ளது.  அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம். பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக…

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..3

ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.. வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2

ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன்   சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்    சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன்    சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன்     சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன்.  குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 5 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1 ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்குஉரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.. உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம்…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 4

5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது. இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.. எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 3

 லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தம் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.. இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும். இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 2

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால்கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4

பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்3

புதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம், போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது. இவர்கள் தசா – புத்திகாலங்களில், சொத்து சேர்க்கை, கெளரவம், பட்டம், பதவி, உண்டு. துலாம் லக்கினத்திற்கு, ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை, செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார். ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கை பெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையே செய்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரனோட சேர்க்கை பெற்ற ராகு,…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 2

” கொற்றவனே கதிரவனும் கோணமேற செப்பினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ” என்று  புலிப்பாணி சொன்னபடி சூரியன் 5. 9ல் இருப்பினும் யோகபலனைத் தருவார் எனச் சொல்லி உள்ளது. இது  நடைமுறையில் செயல்படுவதாகும். இதே போல் சுக்கிரன் 1, 4, 5, 7, 9, 10 ல் இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின் நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார். லக்னாதிபதியான சுக்கிரன் 8க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள்…

கோள்களின் கோலாட்டம் 1- 1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 1

துலாம் லக்கினம். துலை தனக்கருணன் புகர்சனிசுபராஞ் சூரியனிலமகன் சுபர் கலைமதிமகனும்ம யோககாரகனாங் காணுமவ்விருவரமருவிற் றலமிசை மிகுந்த பலனத தருவர் தபனனுங்குருவுமாரகராங் குலநவமிரண்டே முடையவர்கொல்லார் கொல்வதம் மாரகர்குணமே. (யவண காவியம்) குருவிரவி சேய்கொடியர்கூறுசனிபுந்தி மருவு நலமுடையார் வண்டில் – திருமருவும் யோகத்தாரிந்து மேயச்சுதனுமொண்ணுதன்மீ தாகுமறகத்தாயறி. (தாண்டவ மாலை) ” போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனிபுதனும் மேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே” (ஜாதக அலங்காரம்) துலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும் சொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3

எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு, மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள். அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுமி கடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள். சிலருக்கு இரண்டு தாரம் ஏற்படுகிறது. இரண்டாம் தாரம் திருப்திப்படுவதில்லை. சிலர் சின்னவீடு வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு. பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும். இவர்கள் பெண்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2

4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி  முனிவர். இது மறுக்க முடியாத உண்மை, உண்மையே.. சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம்.1

“கன்னி லக்கினத்தக்கசுரருக்கிறைபொன் காரியுஞ்சுபர்மதியரிசேய் மன்னிய மூவரசுபராங்கவி மாலுமேயோக காரகராம் உன்னியவன்னோர்மருவினுமதிக யோகமே தரவரவசுபர் பன்னுமாரகராமாரகத்தானப் பதிவரிற்கண்டமாம்பலனே ” (யவன காவியம் ) செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர் செவ்வாயர் வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன் பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள் ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ” (தாண்டவ மாலை ) “மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும் காலேயோகம் புந்திபுகர் ” (ஜாதக அலங்காரம் ) மேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 –…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.3

5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கபடி நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன்இணைவு பெறும் போது பெரும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன்,தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.2

 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை. இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை ,பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது. 3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை. தனித்த நிலையில் இருந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார். செவ்வாயுடன்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.1

“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி சேய் சுபர்கவி புதன்பாவர் மங்கல குசனும் யோககாரனாய் வரினுமம் மண் மகனாலுக் கங்க மாயுள் ளோனாதலிற்றீமை யாம் பலனீ குவன் வெள்ளி பங்குமாரகாரகமாரகத் தானம் பரிவினுங் கண்ட மாய்ப்பகரே” ( யவன காவியம்) “புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரார் புகர் ” ( தாண்டவ மாலை ) “முதலே சிங்கம் புந்தி, புகர், மோதும் பாவர், செய்சுபனாம் ”, “சேர்ந்த சிங்க…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்3

கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை. நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராகு திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்2

குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடக லக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடக லக்கினம்.1

“கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்சுபராங்காரகன் யோககாரகனா முடனிருந்திடினும் பிரபல யோக  முற்றவனி ரவியோ கொல்லான் றிடமுள பளிங்கு மாலிவர சுபர்  செப்பிய விவரொடுங்கொடிய முடவன் மாரகனாமாரகத்தான்  முற்றிடிற் கண்டடமு மொழியே” ( யவன காவியம் ) “சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள் மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன் சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல் ( தாண்டவ மாலை ) “நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய், இதமார் சுபனாம் சேய்யோகம் இருக்கும்” ( ஜாதக அலங்காரம் ) “கர்கடக…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 4

இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும். ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை. இதே லக்கினத்திற்கு,  அந்தணரும் கேந்திரமேர  அவர் செய்யும் கொடுமையது மெத்தவுண்டு குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு. ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே. செப்புவாய்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3

மிதுன  ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை (அ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ (அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களும் மாரகத்தை தரக்கூடியவர்களே. இந்த மிதுன லக்கினகாரர்களுக்குப் பெரும் பாவியான குரு பகவான் தனது வீட்டிற்கு மறைந்து இருப்பினும் (அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 2

மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ராஜயோகம் என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி-…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 1

“மைதுனவோரை வந்தவற்கிரவி மண்மகன் பீத்கன் கொடுமை செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற் செகமிமை யோககாரகராம் ஐயவெண் பிறையு மாரகனல்ல வந்றியுங் குசனு மாரகனாம் பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப் பழித்திடுங்கடி தடத்தணங்கே” ( யவன காவியம் ) “சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர் ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய் மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல் நந்துமேடப்படியே நாடு” ( தாண்டவ மாலை ) “மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ்“மைதுனவோரை வந்தவற்கிரவி சனியுமற்ற பலன் ”…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4

இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம் மனைவிக்கு அகால மரண தோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்துவிடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜ…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்3

சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார். சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள்தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது. ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்,குருவின் தொடர்பை பெற்றால் ( அ )பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும். சனி, ரிஷப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை…

கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் ஆதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே. சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதியத்தினால் சுபராயினும்,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்.

ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-

இந்த மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது. செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்ல நிலையில் இருப்பின் யோகம் தருகிறது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 2

செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேஷ லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள். ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1

மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7,…

கோள்களின் கோலாட்டம் பாகம்-1  – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

யவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்கினத்திற்குரவி பொன்னல்லர் மிகவும் யோககாராங் கூடியேயிரக்கிற்..பிரபல யோகங் கொடுப்பர்மால் கவிசனி தீயோர்…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஏழு முதல் பன்னிரண்டு வரை

ஏழாம் பாவம் களஸ்திரஸ்தானம்:– காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு, நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம். எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர். முற்றுகை, அறுவை சிகிச்சை ,…

கிரக பலம். கோள்களின் கோலாட்டம் –பாகம் – 1 1.6

கிரக பலம். சூரியன்-செவ்வாய்-சனி-ராகு-கேதுக்கள், மேசம்-மிதுனம்-சிம்மம்- துலாம்-தனுசு-கும்பம் போன்ற ராசியின் முதல் 15 பாகைக்குள் இருப்பது மிக நல்லது. ரிஷபம்-கடகம்-கன்னி-விருச்சிகம்-மகரம்- மீனத்தில் கடைசி 15 பாகைக்குள் இருப்பது நல்லது. சந்திரன்-புதன்-குரு-சுக்கிரன் போன்றவர்கள் மேஷம்-மிதுனம்-சிம்மம்-துலாம்-தனுசு- கும்பத்தின் பின் 15 பாகைக்குள் இருப்பது நல்லது. தை-மாசி-பங்குனி-சித்திரை-வைகாசி-ஆனி போன்ற மாதங்களில் சூரிய சந்திரருக்கு அதிக பலம்.

கால பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.6

கால பலம். பகலில் பிறந்தவர்களுக்கு … சூரியன், குரு, சுக்கிரன், பலம். இரவில் பிறந்தவர்களுக்கு .. சந்திரன், செவ்வாய், சனி, ராகு,கேது பலம். புதன் பகல் இரவு எந்த நேரமும் பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. லக்கின கேந்திர ராசியாக : – மிதுனம், கன்னி, தனுசு ஆக வருவது பலம். சதுர்த்த கேந்திர ராசியாக :- கடகம், மகரம், மீனம் ஆக வருவது பலம். 7வது இட கேந்திர ராசியாக :- விருச்சிகம், ஆக வருவது பலம்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்

லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின்…

நட்சத்திரத்தின் சிறப்பு 2

இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்: கிழமைகள் – பிருதிவி நட்சத்திரங்கள் – தேயு இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம் ஞாயிறு – பிருதிவியில் தேயு திங்கள் – பிருதிவியில் அப்பு செவ்வாய் – பிருதிவியில் தேயு புதன் – பிருதிவியில் வாயு குரு – பிருதிவியில் பிருதிவி சுக்கிரன் – பிருதிவியில் அப்பு சனி – பிருதிவியில் ஆகாயம் இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு…

நட்சத்திரத்தின் சிறப்பு 1

ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது. பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த…

பிராமண பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

கடகம், விருச்சிகம், மீனம் :- இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள். அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள். தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள். தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள். ஜாதி,…

சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மிதுனம், துலாம், கும்பம்:- இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள். எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர். சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…

சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மேஷம் – சிம்மம் – தனுசு :- இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக்…

திருமண காலம் அல்லது குருபலம்.1 பொது விதி

ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும்.…

இந்து லக்கினம் பார்ப்பது எப்படி? கோள்களின் கோலாட்டம் -1.16

இந்த லக்கினம் லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு  துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய. விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16.  துலாம் ராசிக்கு  9 – க்குரியவர்  புதன்  இதன் கதிர்  8 இத்தோடு கூட்ட 16+8=24 –  12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.…

கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை  பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.

கிரகங்களின் அவஸ்தா நிலை 2 கோள்களின் கோலாட்டம் -1.17

ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில், 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தாஅவஸ்த்தை 12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை

கிரகங்களின் அஸ்தமன நிலை. கோள்களின் கோலாட்டம் -1.16

கிரகங்களின் அஸ்தமன நிலை. சூரியனிலிருந்து 12 பாகைக்குள் சந்திரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 17 பாகைக்குள் செவ்வாய் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 14 பாகைக்குள் புதன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 11 பாகைக்குள் குரு இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 10 பாகைக்குள் சுக்கிரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 15 பாகைக்குள் சனி இருப்பின் அஸ்தமனம்

திரேக்காண பலன். சந்திரன் கோள்களின் கோலாட்டம் -1.14

சந்திரன் சர்ப திரேக்காணத்தில் இருந்தால் கொடூர சுபாவம். ஆயுத திரேக்காணத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான். சதுஸ்பாத திரேக்காணத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான். பட்சி திரேக்காணத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.

திரேக்காண பலன். கோள்களின் கோலாட்டம் -1.14

ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 அசாத்திய ராசிகள்:-

அசாத்திய ராசிகள்:- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 சாத்திய ராசிகள்:-

சாத்திய ராசிகள்:- ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படும் சரீர அழகை எடுத்துக்காட்டும். மலட்டுத் தன்மைகளைத் தரும். அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும். நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கும்பம்

கும்பம்:- “கும்பத்ததோன் குன்நின்று வெல்வோன்” என்ற இந்த ராசி, கும்பம் அலங்கரித்தது போன்றதும் கோயில் கோபுர கலசம் போலவும் தோற்றம் தரும். இந்த ராசி கால புருஷனின் லாபஸ்தானம் என்னும் பெருமை பெற்றதாகும். இது 300 பாகை முதல் 330 பாகை வரை வான மண்டலத்தில் வியாபித்து உள்ளது. இதன் அதிபதி சனிஸ்வரன் ஆகும். ஒற்றை ராசி என்றும் ஆண் ராசி என்றும் வழங்கப்படும். ஸ்திர ராசியும் ஆகும் தென்முக ராசியில் 5 – வதாக வரும்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மகரம்:-

மகரம்:- “மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்” என்ற இந்த ராசி பெண் தலையும் மீன் உருவமும் கொண்ட தோற்றத்தில் வானவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த ராசி கால புருஷனின் கர்மஸ்தானமாகும். இது 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது. இதன்அதிபதி சனீஸ்வரன் ஆவார் இது பெண் ராசி ஆகும். சரராசியும் தென்முக ராசிகளில் நான்காவதாக இடம் வகிக்கும் இது அயன ரேகைக்குரிய ராசியும் ஆகும். மண் தன்மையுள்ள ராசியாதலால் லோகாதாய விருப்பம் செயலை…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் தனுசு:-

தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும்.   இது  240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது.   இதன் அதிபதி குருவாகும்.   உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும்.  ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது.  தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் விருச்சிகம்

விருச்சிகம்:-  “தேளானைப் பேணி கொள்” என்ற இந்த ராசி, வான மண்டலத்தில் தேளைப் போன்ற அமைப்பை உடையது இந்த ராசியாகும். இது கால புருஷனின் தர்ம ஸ்தானங்களை குறிப்பிடுகிறது. இது 210 டிகிரி பாகை முதல் 240 பாகை வரை பரவியுள்ள ராசியாகும். இது தென் முகராசிகளில் இரண்டாவது ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய், பெண் ராசி அதாவது இரட்டை ராசி என்ற பெயரும் கொண்டது. ஸ்திர ராசி அதிக சீற்றமுள்ள ராசி எனவே மிகத் துணிவும்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் துலாம்

துலாம் “துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்” என்ற இந்த ராசி, நீதியின் தன்மையை உணர்த்தும் பாவ, புண்ணியங்கள் எடையிடும் வண்ணம் தராசு போல தோற்றமுடைய அமைப்பை உடைய இந்த ராசி வான மண்டலத்தில் 180 டிகிரி பாகை முதல் 210 பாகை வரை பரவியுள்ளது. கால புருஷனின் ஏழாவது ராசியாகிய இது தென்முக ராசியில் முதல் ராசியாகும். விஷவரேகைக்குரிய ராசியில் இரண்டாவது ராசியாகும். ஓஜை ,  எனப்படும் ஒற்றை ஆண்ராசி எனவே இது உறுதியானது பலங்கொண்டது. அதிக ஆற்றலில்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கன்னி:

கன்னி:- “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தோற்றமுடைய அமைப்பை உடையது இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும். கால புருஷனின் ஆறாவது ராசி இதன் அதிபதி புதன் ஆகும். இது உபய ராசி ஆகும். இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது. மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும், சிந்தனை…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் சிம்மம்:-

சிம்மம்:- “சிங்கத்தானோடு செருஏரேல்” என்ற இந்த ராசி. சிங்கத்தின் உருவை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ராசியானது, கால புருஷனின் 5 வது ராசியாகும். வானவெளியில் 120 பாகை முதல் 150 வரை வியாபித்துள்ளது . ஸ்திர ராசி, ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி, எனவே அதிக அளவு துணிவும் தலைமை பதவி வெறியும் எவருக்கும் அடங்காத தன்மையும் அடக்க வேண்டும் என்கிற சர்வாதிகள் போக்கும் கம்பீரமும் மிக்கது. வட, முக ராசிகளில் 5 வது இதன்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கடகம் :-

கடகம் :- “நண்டானுக்கு இடம் கொடேல்” என்ற இந்த ராசி, நண்டின் அமைப்பைக் கொண்டது இந்த ராசி 90 பாகை முதல் 120 பாகை வரை வான மண்டலத்தில் பரவியுள்ளதாகும். காலபுருணனின் நான்காவது ராசி ஆகும். இது பெண் தன்மை உடையது. பேராசையின் மீது விருப்பம் உடையது. பலவந்தம், விருப்பங்களில் மாற்றமும் திருத்தி அமைப்பதும் போன்ற குணங்கள் உடையது. நீர் தன்மை உடையதில் முதலாவது ராசி மிக சிறந்த கற்பனை வளம் கோழைத்தனம் புறமுதுகில் குத்துதல் ஆணவத்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மிதுனம்

மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் ரிஷபம் :-

ரிஷபம் :- “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது பெண் தன்மையுள்ளது. சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது. ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது வட…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மை மேசம் :-களும்

27 நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் அது அமைந்திருக்கும் ராசிகள் முதலியவற்றை அறிந்து கொண்ட நாம் அடுத்ததாக 12 ராசிகளின் தன்மையைப் பற்றி சிறிது விரிவாக காண்போம் மேசம் :- “தகடோடு எகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலை உடைய ராசி மேஷம் ஆகும். இது உறுதியானது. துணிவு மிக்கது முரட்டு சுபாவம் மிக்கது. நிலையான பலமும் தூய நம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.…

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும் தனுசு முதல் மீனம் வரை

நட்சத்திரம் மூலம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி தனுசு ராசி அதிபதி  குரு நட்சத்திரம் பூராடம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி தனுசு ராசிஅதிபதி குரு நட்சத்திரம் உத்திராடம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி தனுசு ராசி அதிபதி  குரு நட்சத்திரம் உத்திராடம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மகரம் ராசி அதிபதி  சனி நட்சத்திரம் திருவோணம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி மகரம் ராசிஅதிபதி சனி நட்சத்திரம் அவிட்டம்…

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும்ராசியும் அதன் அதிபதிகளும் சிம்மம் முதல் விருச்சிகம்,வரை

நட்சத்திரம் மகம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி சிம்மம் ராசிஅதிபதி சூரியன் நட்சத்திரம் பூரம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி சிம்மம் ராசி அதிபதி  சூரியன் நட்சத்திரம் உத்திரம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி சிம்மம் ராசி அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி கன்னி ராசி அதிபதி புதன் நட்சத்திரம் அஸ்தம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி கன்னி ராசிஅதிபதி புதன் நட்சத்திரம் சித்திரை…

கோள்களின் கோலாட்டம் -1-1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் ராசியும் அதன் அதிபதிகளும் மேஷம் முதல் கடகம் வரை

நட்சத்திரம் அஸ்வினி பாதம் 4 நட்.அதிபதி  கேது ராசி  மேஷம் ராசி அதிபதி செவ்வாய் நட்சத்திரம்  பரணி 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி மேஷம் ராசி அதிபதி  செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மேஷம் ராசி அதிபதி  செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி ரிஷபம் ராசி அதிபதி  சுக்கிரன்  நட்சத்திரம் ரோகிணி 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி ரிஷபம் ராசி அதிபதி  சுக்கிரன்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 1.2 ராசிகளின் அமைப்பு :- துலாம் முதல் மீனம் வரை

இராசி துலாம் 180 பாகைமுதல் 210பாகை வரை சரராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி விருச்சிகம் 210 பாகைமுதல் 240பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி தனுசு 240 பாகைமுதல் 270 பாகைவரை உபயராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி மகரம் 270 பாகைமுதல் 300பாகை வரை சரராசி தன்மைகள் ஆணவம்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சுக்கிரன் :- சனி :-

சுக்கிரன் :- கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன் தான். சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும். அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும். இது பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம். சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது. சனி :- நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் செவ்வாய் :-புதன் :-வியாழன் ( குரு ) :-

செவ்வாய் :- செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது. இங்கே பல எரிமலைகள் உள்ளன. புதன் :- சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 பூமி :-சூரியன்:- சந்திரன்:-

சூரியன்:-  இது தானாக ஒளிரும் கோளம். இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். இது தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும். வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது. இந்த பயணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. பூமி :- இது சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள்

ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சோதிடம் எங்கு எப்படி தோன்றியது என்பது பற்றி எவருக்கும் தெரியாது ஆனால், சீனர்கள், இந்துக்கள், சால்தியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர், ரோமானியர், அரேபியர் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு முறைகளை கையாண்டு வந்தனர் என்பது அறிந்த உண்மை. இக்கலை ஒரு பழங்கால கலை அது விதியையும் எதிர் காலத்தையும் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பின்படி முன் கூட்டித் தெரிவிக்கும் ஒரு விஞ்ஞானக்கலை. ” வேதயஸ்யசஷ ¨ ஜ்யோதிஷம் ஜயோதிஷம் ஜகதாய சக்ஷ ¨…

ஜோதிடர் அமரும் திசை

ஜோதிடர் அமரும் திசை தெற்கு, மேற்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் :- கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பார்த்து அமருவது நல்லது. ஜோதிடம் கேட்பவர் கிழக்கு முகமாய் இருந்தால் அனுகூல பலன்கள் ஏற்படும். மேற்கு முகமாய் இருப்பது கூடாது. வடக்கு, தெற்கு முகமாய் இருந்தால் நல்லது நடக்கும். தென்மேற்கு முகமாய் இருந்தால் காரியங்கள் நடக்க கால தாமதமாகும். வடகிழக்கு முகமாய் இருந்தால் பல தடைகள் ஏற்படும். வடமேற்கு தென்கிழக்கு முகமாய் இருந்தால் தோல்வி, ஏமாற்றம், தடுமாற்றம்…

கோள்களின் கோலாட்டம்பாகம் – 1 – 1.1- ஜோதிட ஞானம்

ஜோதிட ஞானம். தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாகக் கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்டும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கத்தையும் உணர்த்துவார்கள். அப்படி அல்லாமல் ஒருவர் எத்தனை நூல்கள் கிரந்தங்கள் படித்தாலும், கணிதங்கள் ஆராய்ச்சிகள் செய்தாலும் இக்கலையைப் பற்றிய அருமை பெருமைகளை தெரியமுடியாது. இவர்கள் சொல்லும் பலாபலன்கள் சரிவர நடக்காது. இக்கலையை கையாள்பவர்கள் கண்டிப்பாக…

கோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.

இது காகிதப்பூ அல்ல!! காவியப்பூ! இதை வாழ்த்தவில்லை!! வணங்குகிறேன்.!! கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். நான் சோதிடன் அல்லன், சோதிடத்தை அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுகிற சாதாரணமானவன் என்ன காரணத்தாலோ எனது நண்பர்களில் பலரும் சோதிடர்களாகவே அமைந்துவிடுகிறார்கள். சோதிடம் படிக்கிறவர்கள் எல்லோரும் சோதிடர்கள் ஆவது இல்லை. முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய எல்லோரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவது இல்லை அல்லவா? எந்தத் துறையிலும் உவமை சொல்ல இயலாத உயர்ந்தவர்கள் உருவாவது உண்டு. ஓடுகிறவர்கள் எல்லோருமா உஷா…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 அணிந்துரை R.P சாமி

அணிந்துரை R.P சாமி “கோள்களின் கோலாட்டம்” என்ற இந்நூல் ஓர் ஒப்பற்ற அரிய ஆய்வு நூலாகும். இந்நூலாசிரியர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மகரிஷி அவர்கள் சிறந்த வாசியோகியாகவும், தலைசிறந்த சோதிட வல்லுநரும் ஆவர். பிரம்மரிஷி சோதிஷ ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும், ”ஞான சிந்தாமணி” மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிக் கொண்டு வருகிறார்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அவருடன் ” நந்தி சோதிடம்” மாத இதழ் வந்து கொண்டிருந்த காலத்திற்கு முன்பிருந்தே இணைந்து நின்று சோதிடகலைக்கு தொண்டாற்றியவன்…

கோள்களின் கோலாட்டம் -1.14 மீனம்.  திரேக்காணத்தின் பலன்கள்.

மீனம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – பாத்திரம், முத்துக்கள், ரத்தினங்கள், சங்கு இவற்றுடன் கலந்த பொருள்களால் சம்பந்தம் பெற்ற கையை உடையவனும், அலங்காரங்களுடன் கூடியவனுமான, மனையாளின் ஆபரணத்திற்காக கடல் தாண்டி செல்பவனும்.ஆவான் குரு நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– செண்பகத்திற் – கொப்பான முகமுள்ளவனும், சேடிகள், வேலையாட்கள், இவர்களுடன் கூடியவளுமான ஸ்திரீயாக மிகவும் உயர்ந்தவளும், கொடி இவைகளுடன் கூடின தெப்பத்தை உடையவனும் கடலில்…

கோள்களின் கோலாட்டம் -1.14 கும்பம். திரேக்காணத்தின் பலன்கள்.

கும்பம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம் – எண்ணெய்கள், ஜலம் உணவு இவற்றின் லாபத்தில் கவலை அடைந்த மனதை உடையவன் , கம்பளத்துடன் கூடியதாகவும், பட்டு வஸ்திரமுடையதாகவும், மான் தோல் உடன் கூடியதாகவும் கழுகுக்கொப்பான முகமுடையதாயும், இருப்பது சனி நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ அக்னிதிரேக்காணம்– அழுக்கடைந்த துணியினால் சுற்றப்பட்டவள். சிரசில் மண் பாத்திரங்களுடன் கூடியது. காட்டில் பொசுக்கப்பட்ட வண்டியில் உலோகங்கள் எடுக்கப்படுவது…

கோள்களின் கோலாட்டம் -1.14 மகரம். திரேக்காணத்தின் பலன்கள்.

மகரம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத்திரேக்காணம்– மயிர்கள் அடர்ந்தவன், மீனின் பல்களை போல் பல் அமைந்தவன், பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவன் மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன் பயங்கர முகம் உள்ளவன். சனி நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தானவன் தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவள் கருத்த நிறம்…

கோள்களின் கோலாட்டம் -1.14 தனுசு  திரேக்காணத்தின் பலன்கள்.

தனுசு 1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்– மனிதனின் முகம் உள்ளது, குதிரைக்கொப்பான சரீரம் ஆஸ்ரமம்  வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும்  உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– மனதைக் கவரக் கூடிய அமைப்பு, செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும், பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள்…

கோள்களின் கோலாட்டம் -1.14 விருச்சிகம் திரேக்காணத்தின் பலன்கள்.

விருச்சிகம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும் தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும், பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும் அழகு பொருந்தியவளுமான தோற்றம், கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை செவ்வாய் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவள் பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள். கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள். குரு…

கோள்களின் கோலாட்டம் -1.14 துலாம் திரேக்காணத்தின் பலன்கள்.

துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…

கோள்களின் கோலாட்டம் -1.14 கன்னி திரேக்காணத்தின் பலன்கள்.

கன்னி. 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– புஷ்பம் நிரம்பிய குடத்துடன் அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும், வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும் தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளவள். புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம், கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் — எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை தலையில் சுற்றப்பட்டவனும், செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும், ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும் ஆயுதம் தரித்தவனும் ஆவான்.…

கோள்களின் கோலாட்டம்- 1.14கடகம். திரேக்காணத்தின் பலன்கள்

கடகம். 1 முதல் 10 பாகைக்குள் — நாற்கால் புருஷதிரேக்காணம்– இலை, கிழங்கு, பழம் இவற்றைத் தரித்தவனும், யானைக் கொப்பான சரீரமுடையவனும், காட்டில் வாசனை நிரம்பிய இடங்களில் வசிப்பவனும், பெருத்த கால் உள்ளவனும், பன்றிக் கொப்பான முகம் உள்ளவனும் ஆவான். சந்திரன் நாயகன் — ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– சிரசில் தாமரை புஷ்பங்கள் உள்ளவளும், சர்மங்கள் கூடியவளும், தனிமையான இடத்தை அடைந்தவளும் கதறும் குணம் உள்ளவளும்…

கோள்களின் கோலாட்டம் -1-14 மிதுனம்.-திரேக்காணத்தின் பலன்கள்.

மிதுனம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்காணம் – நல்ல ரூபத்துடன் கூடியவள், நகை செய்வதில் பற்று உள்ளவள். சந்ததி இல்லாதவள். உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள். மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவள், ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள். ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்காணம் – தோட்டத்தில் வசிப்பவன். கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற…

கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள்.ரிசபம்.

ரிசபம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்காணம் – சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன் குடம் போன்ற வயிறை உடையவன். ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன் தாகமுடையவன், அதிகமான சாப்பாட்டு பிரியன், ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ சுக்கிரன் நாயகன். ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் – வயல், நெல், வீடு, பசு  இவைகள் சம்பந்தமான பரீட்சை செய்யும்காரியங்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.14  திரேக்கானதணத்தின் பலன்கள்.மேசம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள். மேசம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்காணம் பலன்கள். வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் கழுத்து வரை அதிபதி. 10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால் பட்சி ஸ்திரீ திரேக்காணம் ஆபரணம்,…

யோகபாவம் வேலை செய்யும் காலங்கள்

ஜெனன லக்கினாதிபதிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சிக் கோள்களும், சந்திரன் இருந்த ராசிக்கு 3 – ம் வீட்டோன் உச்சம் பெற்று இருந்தால், 30 வயதிற்கு மேல் சகல விதமான செல்வங்களோடு சௌக்கியமாக இருப்பான். பாக்கியாதிபதி 3 – ம் இடத்திலிருக்க அவனை குரு பார்க்க உள்ள அமைப்பிற்கு சர்ப்பயோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயது முதல் 9 வயது வரை பாக்கியத்தோடு இருப்பான். 5 – ம் வீட்டோன் 3, அல்லது 11 –…

ஜோதிடம் பார்க்கும்முறை

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கின்ற விதி ஜோதிடத்திற்கு 90 சதவிகிதம் ஒத்துவராது. ஏனென்றால் இதிலுள்ள விஷயங்கள் அனைத்தும் முக்காலங்களையும் அறிந்தவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் அதிக அளவு பிரயாசைப் பட தேவையில்லை. தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாக கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்படும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கங்களையும் உணர்த்துவார்கள். அப்படி…

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள்.

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள். 1. ஜென்ம லக்கின ஸ்புடத்தை 5 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும் 2. ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றம் 3. ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 ஆல் பெருக்கி வரும் தொகையுடன்…