கோள்களின் கோலாட்டம் -1-14 மிதுனம்.-திரேக்காணத்தின் பலன்கள்.

மிதுனம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்காணம் – நல்ல ரூபத்துடன் கூடியவள், நகை செய்வதில் பற்று உள்ளவள். சந்ததி இல்லாதவள். உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள். மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவள், ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள். ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்காணம் – தோட்டத்தில் வசிப்பவன். கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற…

பழங்களின் சத்தும் பயன்கள்

சப்போட்டாப் பழம் சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை. இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது. அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது. இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. பயன்கள் சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள் 1, இரத்த சோகையைப் போக்கும் 2, உடலின் கருமை நிறத்தை மாற்றும் 3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் 4, அதிக பேதி…

கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள்.ரிசபம்.

ரிசபம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்காணம் – சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன் குடம் போன்ற வயிறை உடையவன். ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன் தாகமுடையவன், அதிகமான சாப்பாட்டு பிரியன், ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ சுக்கிரன் நாயகன். ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் – வயல், நெல், வீடு, பசு  இவைகள் சம்பந்தமான பரீட்சை செய்யும்காரியங்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.14  திரேக்கானதணத்தின் பலன்கள்.மேசம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள். மேசம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்காணம் பலன்கள். வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் கழுத்து வரை அதிபதி. 10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால் பட்சி ஸ்திரீ திரேக்காணம் ஆபரணம்,…

மச்சாசனம் — MATSYASANAM

மச்சாசனம் பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள் –– சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு…

ஹலாசனம் — HALASANAM

ஹலாசனம் — HALASANAM சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும். அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில்வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்கவேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்கவேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுபபிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4

ஜோதிட விதிகள் இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான். இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன். இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால், சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும். இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன். இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன் இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன். இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன் இலக்கினாதிபதி சுக்கிரனாகில்,…

கடவுள்

காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.  — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”   — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71

திருமந்திரமாலை பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில் அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம்…

திருமண யோகத்திற்கு தடை செய்யும் அமைப்பு

திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…

மயூராசனம் — MAYURASANAM

மயூராசனம் மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர். முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலைய‍ணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம். பலன்கள் – வாத…

வஜ்ராசனம் — VAJIRASANAM

வஜ்ராசனம் கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும். நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும். 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம் ..பலன்கள் — வச்சிரம் போன்று திட மனது ஏற்படும் அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்குரிய ஆசனம்

இறைவன்

இறைவன் தாம் விரும்பியதைச் செய்கிறார். எவரும் அவரை அதைச் செய், இதைச் செய் எனக்கட்டளையிட முடியாது. அவர் அரசர்க்கெல்லாம் அரசர், சக்கரவர்த்திகளுக்கெல்லாம் மேலான சக்கரவர்த்தி, அவரது கட்டளைக்கும், விருப்பத்துக்கும் இணங்கி வாழ்வதே நாம் வாழ வேண்டிய வழியாகும். ”                                                       …

உத்தித பத்மாசனம் – UTHITHA PADMASANAM

உத்தித பத்மாசனம்  பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது ஒருமுறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் செளகரியம்போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும். பலன்கள் – தொந்தி…

சர்வாங்காசனம் – SARAVANGASANAM

சர்வாங்காசனம் – விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும். சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும். 2 நிமிடத்திற்கு ஒரு முறையாக,…

விபரீத கரணி — VEEBAREETHA KARANI

விபரீத கரணி  விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும் .ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட…

நவாசனம் — NAVASANAM

நவாசனம்  நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்கவேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு . பலன்கள் — இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்‍தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல்…

முயற்ச்சி

கோமு: என்ன பண்ணிட்டு இருக்க காமு: -ப்ளேன் பண்ணிட்டேன் இனி வொர்க்குள்ளே போக போறேன். கோமு – என்ன ப்ளேன் பண்ணீட்டே காமு – எப்படியும் இந்தியன் டீமில செலக்ட் ஆகணும்னு, கோமு அப்படியா வொர்க் என்ன பண்ணப்போற காமு – தினமும் பிராக்ட்டீஸ் கோமு – அப்புறம் காமு – அத்தனை தான் கோமு – அது மட்டும் போதுமா காமு – ஏன் அதுதான் பண்ணனும் அத தவிர வேற என்ன பண்ணனும். கோமு…

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM.

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM. விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் – இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்துது ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் எக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுக்களைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியே விட் நிலையில்…

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியஉணவு உண்ணும்முறைகள்

உணவு உண்ணும்முறைகள் 1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் . 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும். 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும் 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று…

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும் . இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4…

விடுகதைகள்

விடுகதைகள் 1, கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி, அது என்ன? 2. பாடி அழைப்பான் உறவை கூடி உணவை உண்பான், அவன் யார்? 3. ஒரு வாய் தண்ணீரை சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான், அவன் யார்? விடைகள் 1 கரும்பு 2 காகம் 3 தென்னை மரம்

சுக்கிரன்

சுக்கிரன் – களத்திரகாரகன் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்  திசை புக்தியில்  திருமணம் நடக்கும் ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும்,…

நாவல் பழம்

பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும். அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. நாவல்…

வெங்காயம்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. 1. வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 3. காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே…

களத்திர பாவம்

களத்திரகாரகன் லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு…

இந்த உலகம்

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :- என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின்…

முருங்கையின் சிறப்பு

மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம். பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால்…

யோகபாவம் வேலை செய்யும் காலங்கள்

ஜெனன லக்கினாதிபதிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சிக் கோள்களும், சந்திரன் இருந்த ராசிக்கு 3 – ம் வீட்டோன் உச்சம் பெற்று இருந்தால், 30 வயதிற்கு மேல் சகல விதமான செல்வங்களோடு சௌக்கியமாக இருப்பான். பாக்கியாதிபதி 3 – ம் இடத்திலிருக்க அவனை குரு பார்க்க உள்ள அமைப்பிற்கு சர்ப்பயோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயது முதல் 9 வயது வரை பாக்கியத்தோடு இருப்பான். 5 – ம் வீட்டோன் 3, அல்லது 11 –…

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்  வேகமாக நடக்கத் தொடங்கினர்… திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்   ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.  மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து  வந்ததால் மனைவி பாலத்தை கடக்க   பயப்பட்டாள். அதோடு மின்னலும்…

தனவான்

எதனை கொண்டு இந்த விதிகளை சொன்னார்கள் – 6 இலக்கினம் முதற்கொண்டு இலக்கினாதிபதியிருக்கும் வீடாகவும் எண்ணிக் கண்ட தொகையை இலக்கினாதிபதியைத் தொட்டு எண்ணி வருகையில்அந்த வீடு பாவர்வீடாகில் தரித்திர யோகமென்றும், சுபர்கள், வீடாகில் தனவானாகவுமிருப்பன். ஜன்ம லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து பன்னிரண்டு இந்தவிடங்கள் சுபர் வீடாகில் தனவானுமாவான். ஜன்மத்தில் சனியும், நாலாமிடத்தில் சந்திரனும், ஏழாமிடத்தில் செவ்வாயும், பத்தாமிடத்தில் சூரியனும், குருவும், புதனும், சுக்கிரனும் இவர்கள் கூடி ஒரு வீட்டில் நிற்கப் பிறந்த ஜாதகன் இராஜயோகத்தை அனுபவிப்பான். எட்டு,…

கோமு vs காமு

கோமு; நீங்கதான் என் குரு காமு ; அப்படியெல்லாம் நினைக்காதே அது பொய் கோமு ;என்ன அப்படி சொல்லிடீங்க காமு ;வேற எப்படி சொல்லணும் கோமு ; உங்களையே கதின்னு வந்துருக்கேன் காமு ;குரு எல்லாம் என்ன ஆனாங்கன்னு எனக்கு தெரியும் அதனால தான் சொல்லறேன் நான் உனக்கு மட்டுமல்ல யாருக்கும் குரு இல்ல கோமு; குரு எல்லாம் என்ன ஆனாங்க அதை கொஞ்சம் விளக்கமா சொன்னிங்கன்னா பரவாயில்லை காமு ;சொல்லறேன் சொல்லறேன் அதுதானே என் வேலை…

புதினா கீரை

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர…

மாதுளம் பழம்

மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழவகைகளில் ஒன்று. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த…

ஜோதிட அனுபவம்

அன்பார்ந்த இணைய தள வாசகர்களுக்கு, ஜோதிடத்தில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் எல்லா விஷயங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவுமே இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது என்று அறிந்து சொல்வதில்தான் குழப்பமும், சிக்கலும் வருகிறது. 7ல் செவ்வாய் இருந்தால் விவாக தோஷம், களத்திர மரணம் பலன். இது நிஜம். பல இடங்களில் இது பொய்யாகிறது. சில இடங்களில் இந்த பலன் நிஜமாகிறது. இது எப்படி? ஏன் இப்படி வினா உருவாகிய…

பொறுப்பு

குடும்ப வாழ்வில் புருஷனுடைய பொறுப்பு என்ன? நம்பிக்கையை தருபவன் புருஷன். தீங்கு செய்யாதவன் தீமையிலிருந்து காப்பவன். உடலுக்கும் உள்ளத்திற்கும் சந்தோஷத்தைத் தருபவன். மனைவியின் கடமை என்ன? புருஷனின் கடமையை வளர்ப்பது எல்லா நேரங்களிலும் துணை நிற்பது

அஸ்தம் நட்சத்திரம்-சில குறிப்புகள்.

அஸ்தம் நட்சத்திரம்   பொதுவான குறிப்புகள் ஐந்து நட்சத்திரங்கள் கொண்டது, கைபோல தோற்றம் தரக்கூடியது. முழு நட்சத்திரம் அதிபதி சந்திரன், வாயு மண்டலம் சுப நட்சத்திரத்தில் அமையும், சாஸ்தா அதிதேவதை, ராட்சச குணம், தேவகணம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் தயாள குணம் கொண்டவர்கள். வெட்கமில்லாதவர்கள், குருத்துரோகம் செய்பவர்கள், சூழ்நிலை அப்படி அவர்களுக்கு அமையும். காரியத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் பசி தாகத்தை மறந்தவர்கள், தன்னை உயர்வாக வெளியில் காண்பித்துக் கொள்வார்கள் அதற்கு வேண்டி அடுத்தவர்களை எப்போதும் மட்டம் தட்டிக்…

பஸ்சிமோத்தாசனம்

செய்முறை: மல்லாந்து படுத்த நிலையில் இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை பிடிக்கவும், விரல்கள் எட்டவில்லையானால், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலை பிடிக்கவும். முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, மூச்சை வெளியேவிட்ட நிலையில் வயிற்றுப் பகுதியை மெதுவாக எக்கவும். கைகளின் இரு…

சுண்டக்காய் மகத்துவம்

சுண்டக்காய் அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள் காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது.…

வாழ்க்கை

‘சந்தோஷமா வாழறேன்’ னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.. நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல…!பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின்…

பரிகாரம் என்றால் உண்மையில் என்ன

பரிகாரம் ஜோதிடர் சொன்ன “எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை.  எதுவும் நடக்கலே..  இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” –பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை களின் பேரிலும் அல்லது தோஷங்களுக் காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது…

இயற்கை மருத்துவம்

என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை. உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை. மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம். ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல். கேன்சர் நோயை குணமாக்கும் சீதா பழம். மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம். நீரிழிவு நோயை குணமாக்கும்…

இன்றைய மருத்துவத்தின் நிலை..

ஒரு நாள் திடீரென்று குப்புசாமியின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். பரிசோதனை செய்து விட்டு காலில் #விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த குப்புசாமி தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு…

யாருக்கு எங்கே பலம் ? 1

கேந்திர  திரிகோண  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் 1,4,7 10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு…

லட்சியம்

லட்சியம் என்பது சுயநலமா? லட்சியத்திற்கும் சுயநலத்திற்கும் உள்ள வித்தியாசம் ஒரு தனிமனிதனின் ஆசை சுயநலம். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூட்டாக சேர்ந்து ஆசைப்படுவதற்கு பெயர் லட்சியம். பல்லாயிரக் கணக்கான பேர்களின் சுயநலம் ஒருவனுக்கு வரும்போது அது லட்சியம்

அன்பை கணிக்க முடியாது

அன்பு வெளிப்படும் விதம் ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்… தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்தாள் தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்… உடனே அந்த சிறுமி, தாயிடம்…

பத்மாசனம்.

                                                           பத்மாசனம். பத்மாசனம் செய்யும் முறை — முதலில் காற்றோட்டமான நல்ல ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தூய ஒரு வெண்ணிற ஆடையை விரியுங்கள், உடலுக்கு இறுக்கமில்லாத ஆடையை அணியுங்கள், அப்படி அணியக்கூடிய ஆடை பருத்தி ஆடையாக இருப்பது…

ஜோதிடம் பார்க்கும்முறை

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கின்ற விதி ஜோதிடத்திற்கு 90 சதவிகிதம் ஒத்துவராது. ஏனென்றால் இதிலுள்ள விஷயங்கள் அனைத்தும் முக்காலங்களையும் அறிந்தவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் அதிக அளவு பிரயாசைப் பட தேவையில்லை. தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாக கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்படும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கங்களையும் உணர்த்துவார்கள். அப்படி…

தியானம்

தியானம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக தியானம் இருந்து வந்திருக்கிறது. உடலுக்கு செய்கின்ற பயிற்சி உடலை உறுதியாக்குவது போல் மனதுக்கு செய்யும் பயிற்சி மனதை உறுதியாக்கும் தியானம் என்பது மனதிற்கு செய்யும் பயிற்சியே ஆகும். மனம் ஈடுபடாத செயல் உயிர் இல்லாத உடலை போன்றது. மனம் ஈடுபட்டு செய்யக்கூடிய எல்லா செயல்களுமே தியானம்தான் கோவிலுக்குச் சென்று கண்களை மூடி வேண்டிய தேவைகள் பூர்த்தியாக வேண்டுதல் தியானம் அல்ல,அது பிரார்த்தனை. பிரார்த்தனை வேறு தியானம்…

பாவ புண்ணியம்

குருவருளும் திருவருளும் துணை நிற்க பாவ புண்ணியம் அன்பு சார்ந்த இணைய தள வாசகர்களுக்கு வணக்கம் மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும், நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை, தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது பசி, தூக்கம் போன்றவை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும் போது…

நட்சத்திர சார சூட்சமம்

ஆனை முகனையும் ஈசனையும் தாய் பராபரையையும் பிரார்த்தித்து அனுபவத்தின் வாயிலாக சார கதிப்படி கிரகங்கள் நடத்தும் லீலா வினோதங்களை உங்களுக்கு அளிக்கிறேன். ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு…

அர்த்தசர்வாங்க ஆசனம்

அர்த்தசர்வாங்க ஆசனம் செய்முறை: விரிப்பின் மேல் தரையில் படுத்து நேராக கால்களைச் சேர்த்து தொடைகள் நெருங்கியிருக்குபடி வைத்துக் கொண்டு முழங்கால்களை மடக்கி நிறுத்தவும். அச்சமயம் இரு கைகளையும் இரு புறமும் இடுப்புக்கு கீழ் விலாபுறத்தில் பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்கி புறங்கைகள், கழுத்து, பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும். இந்நிலையில் சுவாசம் மெதுவாக நடைபெற வேண்டும். 10 முதல் 25 விநாடிகள் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவும். இரண்டு முறை செய்வது நலம்.…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது?

நாலில் ஒருத்தரும் இல்லாவிட்டால் அவன் பிறந்த வீட்டிற்கு சமீபத்தில் பாழாயிருக்கும .நாலாமிடத்திற்கு முன்னே பாபரிருந்தால் பிறந்த வீட்டிற்கு மேற்கே பாழாயிருக்கும்பாழாயிருக்கும். இலக்கினத்திற்கு 2, 4, 10, 12 இந்த இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தனவோ அத்தனை பேர்கள் அவன் பிறந்த வீட்டிலிருந்தபேர்கள் என்று அறியவும். அதில் சனியிருந்தால் அன்னிய ஸ்திரீ ஒருத்தியென்று சொல்லவும். சுக்கிரன் சந்திரனிருந்தால் சுமங்கலியென்றும், செவ்வாய், புதன் இருந்தால் அமங்கலியென்றும் சொல்லவும். மேஷம், ரிஷபம், சிம்மத்தில் சூரியன், நிற்க, மற்ற கோள்கள் உபயராசியில் பலமாய் நிற்க,…

ஒட்டாத கற்பனை

இன்று விளையும் உணர்ச்சி கொந்தளிப்பால் பொருளாதார சிக்கலால் மரபு  மீறமுடியாத பேடித்தனத்தால் விளையக்கூடிய நெருக்கடிகளை எதார்த்தமுறையில் ஆராயவேண்டிய அவசரம் அவசியம் நமக்கு இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் இயங்கும் ஜீவனுக்கு லட்சியத்தின் தேவை வெளிப்படை எனினும் வெறும் லட்சிய கண்ணோட்டம் மட்டும் பலன் தராது . வாழ்க்கைக்கு ஒட்டாத கற்பனை மேலோட்டமான மகிழ்ச்சியைத் தந்து மறைந்துவிடும்.

உறவு

உறவு என்பது சடங்கால் வருவது அல்ல. அது ஒரு உணர்வு. உணர்வு வரவேண்டும் என்பதற்கான கருவிதான் சடங்கு. கருவியே உணர்வாகாது மனிதரை தெரிந்து சடங்குகளை உதற தெரிந்தவர்கள் வெகு சிலரே.

மனிதனின் லட்சியம்

மனம் எனும் ரகசியம். மனிதனின் லட்சியத்தை ஒரு சில வார்த்தைகாளகக் கூறிவிட முடியும். அது என்னவென்றால் மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதை போதிப்பது ஆகும்  எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள் நாம் பலவீனமானவர்கள், நம் மனம் பலவீனமானது என்று தயவு செய்து கருத்தில் கொள்ளாதீர்கள்.  ஒவ்வொர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற…

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள்.

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள். 1. ஜென்ம லக்கின ஸ்புடத்தை 5 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும் 2. ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றம் 3. ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 ஆல் பெருக்கி வரும் தொகையுடன்…

ஆயுள்சம்பந்தமான விஷயங்கள்

 ஜாதக பராசர ஹோரை முதல் பாகத்தில் இருந்து, எட்டாம் பாவாதி பாபருடன் கூடி அதனுடன் லக்னாதி இணைந்து எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். லக்னாதி பாபருடன் கூடி எட்டாம் பாவத்தில் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். ஆயுளை பற்றி சிந்திக்கும் போது சனி பத்தாமாதி, பாதக ஸ்தான அதிபர்கள் மாரக ஸ்தான அதிபர்கள் இவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சந்திரன் இருந்த ஜென்ம ராசி ஜாதகத்தில் சூரியன், நாலில் ( 4 ) சந்திரன், 8 –…

யோகா.

மனித வாழ்க்கையில் யோகா மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம்  மிக முக்கியம். ஆரோக்கியமாக வாழ யோகா மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். உடலின் உள்உறுப்புகளுக்கு உண்டான பலத்தை தருவதில் யோகாவிற்கு நிகர் யோகா மட்டுமே. உள் உறுப்புகளின் ஆற்றல்கள் குறையாமல் இருக்கவும், அதனுடைய ஆற்றல்கள் மேம்படவும், யோகா மூலம் செய்ய முடியும். வரும் முன் காத்தல், என்னும் சொல்லுக்கிணங்க யோகாவை சரியான முறையில் முறையாக, ஆசானிடம் பயிற்சி பெற்றால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகளை வரும்…

ஜோதிடரும் ஜோதிடமும்

ஜோதிடம் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே.இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிடக் கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல்.ஆனால் ஜோதிடத்தின் மூலம்…