சுக்கிரன் 13

சுக்கிரன் துலாத்தில் அமர்ந்து அதுவே லக்னமாயின் பல சிறு தொழிலில் நவீன பொருளை விற்று, தொழில் செய்து சம்பாதிப்பர். சுக்கிரன் மிதுன வீட்டிலோ, ரிஷப வீட்டிலோ, துலாம் வீட்டிலோ இருப்பின் 4ஜாதகர் காமுகனாக இருப்பான். சுக்கிரன் வீட்டில் லக்னாதிபதி இருப்பினும் சுக்கினுடன் சேரினும், பார்ப்பினும் அந்த ஜாதகர் ஸ்தீரிலோலன்.

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்.. உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.. இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 5

அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம் அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். “உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?”  எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?” “அப்படியா?” பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும் விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.  தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 4

பொதுவில் மனைவியைத் திருத்த வேண்டாம்  உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும். கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும் கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 3

எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள் நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள் உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்..2

 காதலில் செய்யுங்கள்  காதலில் திருத்த வேண்டும்.  வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.  3a: விமர்சிக்க வேண்டாம் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது.  ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள்.  ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.  திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்  திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல  3b: கணவர் A கூறுகிறார்  இது என்ன வகையான…

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்…1

 உங்கள் குரலைக் குறைக்கவும் மனைவியைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்? கத்துவதால் பிரச்னை பெரிதாவது தவிர்க்கமுடியாது அப்படி பெரிதாவதால் நம் நிம்மதி கெடும் அதனால் கத்துவதை செய்யாதீர்கள்

மன்னிப்பு கேட்பது 3

ஒரு மனிதன் என்பவன் ஒருவனல்ல என்றும் எல்லா மனிதனும்  ஒன்றுதான் என்றும் இங்கு நட்சத்திரத்திற்கும் எறும்பிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரிதல் தொடங்கியிருக்க வேண்டும்… தெரியாமல் சிந்தி விடும் தேநீருக்காக சகமனிதன் மீது கோபத்தை வெளிப்படுத்தாத நிமிடத்தில் இருந்து நாம் மன்னிப்பிற்கான முதல் விதையைக் கண்டெடுக்கிறோம் மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் வெறும் செயல் அல்ல ஞானத்திற்கான சிறு ஒத்திகை.

மன்னிப்பு கேட்பது 2

ஒரு குழந்தையின் புன்னகையில் சில நிமிடங்களாவது நிஜமாகக் கரைந்திருக்க வேண்டும். யாரும் பார்க்காத போதும் ஒரு கவிதைக்காக அழுதிருக்க வேண்டும். சக மனிதனின் புன்னகையின் மதிப்பை கண்ணீரின் அர்த்தத்தை மரணத்தின் விஸ்வரூபத்தை நிஜமாகத் தரிசித்திருக்க வேண்டும்.

யதார்த்தம்!!

கஷ்டப்பட்டு படிச்சோம் கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தோம்.. கஷ்டப்பட்டு காதலிச்சோம் கஷ்டப்பட்டு கண்ணாலம் கட்டிகிட்டோம்.. கஷ்டப்பட்டு புள்ள பெத்து வளக்குறோம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுறோம்.. கஷ்டப்பட்டு கடன                  அடைக்க ஓடுவோம்.. கஷ்டப்பட்டு கடைசில கஷ்டப்படாம செத்துட்டா போதும்ன்னு நினைச்சு நினைச்சு.. கஷ்டப்பட்டுட்டே செத்திடுவோம்..

வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

கணவன்கள் – படபடப்பு மனைவிகள் – நச்சரிப்பு டீன் ஏஜ்க்கள் – பரபரப்பு மாணவர்கள் – ஏய்ப்பு மாமியார்கள் – சிடுசிடுப்பு மருமகள்கள் – கடுகடுப்பு வக்கீல்கள் – ஒத்திவைப்பு டாக்டர்கள் – புறக்கணிப்பு அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு வயதானவர்கள் – தொணதொணப்பு ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு சிரிப்பு. இது உடம்புக்கு மிகச்சிறப்பு…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  55

மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  54

யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 53

 பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  52

மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 51

உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 50

தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்கு நெருக்கமாகத் தெரியும்.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

அந்தணர்கள் மனிதனை பற்றி

அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள் மனிதனின் போருக்கு காரணம் மண், பெண். அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை.  என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை. கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து. இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி முடிந்தால் நீதி சொல்வது இல்லையேல் மவுனமாக இருப்பது.

எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்

இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம். அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு. அந்தணர்கள் கர்வம் வினோதமானது அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும்.  வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும். எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் அதுதான் வாழ்க்கையின் அடிப்படை உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணர்வு உனக்குள் நீ

உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது,  அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது. பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.  

சுக்கிரன் 12

சுக்கிரன் மீனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர். உயர்ந்த தன்மைகள் குடிகொண்டிருக்கும், உயர்ஸ்தானம் வகிப்பார்கள்.  சுக்கிரன் தனுசில் இருக்கப் பிறந்தவர்கள் நல்லொழுக்கம் இருக்கும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள், எல்லோராலும் விரும்பப்படுவார்கள் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். சுக்கிரன் 9,7,5 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.

சுக்கிரன் 11

சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள். சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர், ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும் துடுக்காகப் பேசுவார்கள்.  மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர் பல செல்வம், கல்வியறிவு கூடும்.  புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.

சுக்கிரன் 10

சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.   காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும். சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.

சுக்கிரன் 9

சுக்கிரனும், செவ்வாயும் 7ல் இருந்தால் அந்த ஜாதகர் விதவை பெண்ணை விவாகம் செய்வர். சுக்கிரன் 12ல் இருந்தால் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். கலைத்திறனும் உண்டாகும்.  ஆனால், தொழில் தடையைச் சந்திக்கநேரும். சுக்கிரன் 4ல் இருந்தால் ஜாதகர் மற்றையோரைவிட அந்தஸ்திலும், தாய் மீது பாசம் அதிகரித்தும், அறிவில் உயர்ந்தவராய் விளங்குவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 5

உலகத்தை யாரால் வெல்ல முடியும் ? சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ? எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. செவிடன் யார் ? நல்லதைக் கேட்காதவன். ஊமை யார் ? சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். நண்பன் யார் ? பாவ வழியில் போகாமல் தடுப்பவன். யாரை விபத்துகள் அணுகாது ? மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 4

எது மரணத்துக்கு இணையானது ? அசட்டுத்தனம். விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ? காலமறிந்து செய்யும் உதவி. இறக்கும் வரை உறுத்துவது எது ? ரகசியமாகச் செய்த பாவம். எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ? துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் ! சாது என்பவர் யார் ? ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 3

உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 2

எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள்  1

எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். எதிரி யார் ? சோம்பல்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  4

அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப்பல புராண வரலாறுகளும் சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.  

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  3

சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர், அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள், வண்ண சித்திரங்களாக உள்ளனர்

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  2

 லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதும் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும் புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  1

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல்திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 6

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான். ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போது தான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  5

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். “இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்து விடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.” மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 4

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார். மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  3

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது. முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  2

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  1

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். “ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது…

ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். “ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?” “வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்றான் ஒரு மாணவன்.  “ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.  “பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”.  பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, “”ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 144

காலனி” ன், வளைவுகளில் மலம் குவிகிறது. அது மிகப்பெரிதாகி வேலைக்கு உதவாமல் போய்விடுகிறது. இம்மலத் தேக்கம் படிப்படியாய் உயர்ந்து குறுக்குக் குடல், ஏறுகுடல், சீகத்திற்கும் எட்டி விடுகிறது. நீர்க்குழம்புகள் தேங்குகின்றன. உடைகின்றன.  உள்ளிழுக்கப்படுகின்றன. வினை விளைகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 143

இக்கெட்டி மலம், சதா நரம்பு முனைகளை வெளிப்போக்கு உணர்ச்சி உண்டாகத் தூண்டிக்கொண்டே நிற்கிறது. பயனின்றி இந்நரம்புகள் துடித்து, முடிவில் வேலைநிறுத்தம் செய்கின்றன. நாள் கணக்காக இவ்வாறு நடந்து வரவே ரெக்டத்தின் நரம்புகள் க்ஷீணித்து, இவ்விடம் மலம் சேர்ந்தாலும் கழிக்க உணர்ச்சியைத் தூண்டுவதில்லை. கிடைப்பது தீரா மலச்சிக்கல் “

சுந்தர யோக சிகிச்சை முறை 142

தூண்டுதலுக்கு இணங்க, மலப்போக்குச் செய்யாவிட்டால் கோரநிலை உண்டாகிறது. மலத்துவாரத்திற்கு மேல் நிற்கும் “ ரெக்ட “ த்துக்குள் ( RECTUM ) பெருங்குடல்  வழியாக  மலம் தள்ளப்பட்டவுடன் தான் போக்கு  உணர்ச்சி ஏற்படுகிறது. வெளிச்செல்லாவிட்டால் முன்போக வழியில்லாமல் ரெக்டத்திலேயே குவிந்து தேங்குகிறது இதிலிருக்கும் நீர்ச்சத்து உள்ளிழுக்கப்படவே கெட்டியாக கல்போல் ஆகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 141

இது விஷயமாய் கார்டிடம் கம்ப்ளெயிண்ட் செய்ய, அப்பாவி மூன்றாவது வகுப்புப் பிரயாணிக்குத் தைரியமிராது. பிராது கொடுத்தவுடன் பிரியமாய் உதவி கிடைப்பதுமில்லை. இயற்கை தர்மங்களைத் தழுவ உன்னத வழிகளைத் திட்டமிட்டு நிற்பதே நாகரிகம் தற்கால உடையிலும், நடையிலும், உண்பதிலும், வீண் கர்வத்திலும் நல்ல நகாரீகத்தைக் காணமுடியாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 140

தற்கால நகரங்களில் பொதுமக்கள் செளகரியங்கள் சரியாகக் கிடையாது. ஜெர்மனி, ஹாலந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சிறு செலவுக்குப் பெருத்த மலநீர்போக்கு செளகரியங்களை அதிகாரிகள் அமைத்துள்ளார்களாம் பிரயாணம் செய்யும் பொழுது புகை வண்டியில் பேருக்குத்தான் கக்கூஸ் இருக்கிறது. இது சுத்தமாயுமில்லை தண்ணீர் வசதியும் கிடையாது. குழாய் இருக்கும், பம்பிருக்கும், ஆனால் தண்ணீர் மட்டுமிராது.

சுந்தர யோக சிகிச்சை முறை 139

வயது வந்த வாழ்க்கையில் புகுந்தவுடன் நேர்மை வந்து விடுகிறதா? டாக்டருக்கு, ‘ விசிட்டுகளும், பேஷண்டுகளும் “ காத்திருக்கும். வக்கீல் கட்சிக்காரன் மணிபர்சையோ நீதிபதியின் முகத்தையோ தாரணையில் நிறுத்தி நிற்பார். வியாபாரிக்கு மூச்சுவிட ஓய்வு ஏது? காலை எட்டு மணிக்கப் பெட்டியடி சென்றால், இரவு எட்டு வரையிலும் மடித்த காலை நீட்ட  நேரமிராதே! இயற்கை ஒன்று அமைக்க, நாமொன்றாக அதை மாற்றி விடுகிறோம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 138

தற்கால வாழ்க்கையில் உண்டாகும் தீங்கை நன்கு ஆராய்ந்து தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மலத்தை அடக்குவது பால்யப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பள்ளியில் சேர்ந்தால் ஆசிரியரின் டம்ப கர்வம் கொட்டமடிக்கும். அவர் என்ன செய்து விடுவாரோ என்ற பயம் பையனுக்கு வைத்தாலும் பரவாயில்லை! தன்னுடைய அமிர்த மொழிகள் தடைபெற்ற கோபத்தில் பிரம்பால் “ நொக்கி “ விட்டால் என்ன செய்வது? அக்காலத்தில் எது ஜெயிக்குமோ? மலமோ பயமோ!

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 5

நிறைய வேலைகள் இருக்கும் போது ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். *வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் *நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும்* என்பதை மனதில் கொள்ளுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் !* அடுத்தவர்களைக் ~*காயப் படுத்தாமல்*~ வாழப் பழகுங்கள். இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே* மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 4

தினமும் *உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்* எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் ~*பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதையேனும்   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து *பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும்.  உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 3

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’*~ என்று சொல்லப்பழகுங்கள்  எளிமையாக வாழுங்கள்  உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம் !* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். *தடையற்ற தூக்கத்துக்கு* அது உதவும்  ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்  குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் *நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 2

 சற்று *முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள்*.  பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இப்படி பயணப்படலாம் என்பது போன்றவை.  தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, *சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்*. சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள்.*~ ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள்.! 1

காலையில் *சூரிய உதயத்திற்கு முன்* எழுந்துவிடுங்கள்! ஒரு காகிதத்தில் அன்றைய தினம் *செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்* என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். *ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது* காத்திருத்தலை சுகமாக்கும் ! முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் ~*கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.*~

உலக பூமி நாள் 3

குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சைக்கிள் செலவை இல்லாமல் செய்வதுடன் உடல் நலத்துக்கும் மிக நல்லது.  உங்கள் சர்க்கரை,கொழுப்பை குறைக்கும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.  சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள் தேவையான மின் சக்தியை சூரிய ஆற்றல், காற்றாலைகள் மூலம் பெற வேண்டும். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களை சேர்த்து வருங்கால மக்களாவது  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். நாம் வாழும் பூமி, தாய்,…

உலக பூமி நாள் 2

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கைலார்ட் நெல்சன்‘ என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது.  தற்போது இந்த “எர்த் டே நெட்வொர்க்‘ அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. உலகை காக்க நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யலாம். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும். பாலிதீன்,மக்கா…

உலக பூமி நாள் ” 1

நாம் அதிகப்பட்சமாக 100 ஆண்டுகள் வாழும்  பூமிப்பந்தை அப்படியே விட்டுச்செல்லுகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரவர்களால் முடித்த அளவு நாசப்படுத்தியே வருகிறோம். இயற்கைவளம்–கனிம வளம் மிக்க பூமியை காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கி வாழ்கிறோம். சக வாழ்விகளான விலங்குகள்–பறவைகளை வாழ வழியில்லாமல் செய்கிறோம். பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இந்த இயற்கை சுழற்சியில், பூமி அவ்வப்போது, நினைவுப்படுத்துவது போல இயற்கை…

சமத்துவ சிந்தனை 5

வெள்ளையாய்யும் – நீர்ம நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பாலும், கள்ளும் ஒன்று என்று சொல்லுவது அறிவுடைமை ஆகுமா? அப்படி இரண்டையும் ஒன்றாய் பாவித்தால் பலன் ஒன்றாய் வருமா? இப்படி எல்லாம் யோசிக்கும் போது சமத்துவம் என்பது இயற்கைக்கு மாறுதலான விஷயம். அதனால், நெடு நாட்கள் அந்த தத்துவம் நிலைபெறாது என்ற முடிவுக்கு தான் வர வேண்டியயிருக்கிறது.

சமத்துவ சிந்தனை 4

கிரககிக்கும் ஆற்றல் செயல்படுத்தும் திறமை போன்றவற்றில் பல்வேறு வித்தியாசங்களை சமமாய் பாவிப்பது எப்படி சரியாய் வரும். சமத்துவத்தை சமநிலையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்துவது சரியா? அப்படி செய்தால் எதிர் கால வளர்ச்சி என்பது சரியாய் வருமா? தனிப்பட்ட மனிதனின் ஆற்றல் மனிதருக்கு மனிதர் வேறுபடுவதை கண்கூடாய் நாம் காணும் போது எப்படி சமன் செய்ய முடியும்.

சமத்துவ சிந்தனை 3

நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.

சமத்துவ சிந்தனை 2

சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது. ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று, எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட  தத்துவம் தானே சமத்துவம் என்பது  ரொம்ப சரியான தத்துவம் தானே என்று தோன்றினாலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.

சமத்துவ சிந்தனை 1

சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது.  அதிலும் முக்கியமாக அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில் சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும். அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும். அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.

தற்போதய சமுதாய சூழ்நிலையில்

தற்போதய சமுதாய சூழ்நிலையில் அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது காரணம் என்று தேடினால் நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது. விளைவு சரி  தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு இல்லாமல் போய்விட்டது அதனால் ஏமாற்றுதல் என்பது வாழ்க்கையின் நியதியாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும் அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.   பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, ‍தொழில் என்று எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம். இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து சரி செய்து விட்டால் குடும்பம்…

கணவன், மனைவிக்கிடையே

கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால்

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சியை விட நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள்

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 4

எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும். நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் ! நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள். உறுதி காட்டியதில்லை. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள். நான் தலையிட்டுள்ளேன் !! உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்திருக்கிறேன் !! மேற்சொன்ன  கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க…

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 3

நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம். எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !! உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம். பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !! உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள். நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 2

பிறரது பொறுப்புகள் குறித்து, சதா பேசிக் கொண்டிருக்காதீர்கள். அதை மட்டும் தான் செய்துள்ளேன் !! கேட்டால் மட்டும் உதவுங்கள். உணர்ந்து உதவினேன் !! மற்றவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறேன் !! எந்த ஆபத்தும் வளர்ந்து, உங்கள் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு விடாதீர்கள். பல ஆபத்துக்களில் என் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 1

மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.   மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து ஆலோசனைகள் சொல்லிகொண்டே  இருப்பேன் கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள். பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை, வந்தால் ருத்ரதாண்டவம் தான் ! யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள். நான் பலபேர் மத்தியில் பாராட்டியுள்ளேன்

உரையாடலில்l ஒரு பகுதி 68

எப்போதுமே ஆசை வேகம் கொடுக்கும் நிறைவேறாத ஆசை ஏக்கம் வளர்க்கும், ஏக்கம் சோர்வு தரும் சோர்வு ஆசைக்கு எதிர்மறையான விஷயம் அப்படியிருக்கும் நாம் ஆசையினால் ஏக்கப்படாமல் தேடுவதே ஏக்கத்தை தொலைக்கும் விஷயம் இது தெரிந்து விட்டது என்றால் எதிர்பாராமல் ஆசை கைகூடாவிட்டாலும் நம்மை ஏக்கமும் சோர்வும் ஆட்கொள்ளாது காரணம் ஆசையை அடைய நாம் எடுத்த முயற்ச்சிகள் நமக்கு அனுபவமாயிருக்கும்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 11

இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம். இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 10

நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும் நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 9

நெருப்பு [உழைப்பு] இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 8

அதே போல் ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாகஇரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 7

.4. ஆகாயம் [தூக்கம்] நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 6

நீர் நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா எனவே தண்ணீரும் மருந்துதான் அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்

சுந்தர யோக சிகிச்சை முறை 137

எவ்விதத் தொந்தரவும் அற்றவை இவ்விலங்குகள். இதைக் காட்டிலும் கிராமங்களிலும், சுதந்திரமாய் வாழும் நகர, நாகரீகமற்ற மக்களும் தடைகளின்றி இந்த இயற்கைக் கடனை முடிக்கிறார்கள். இவர்கள் டாக்டர்களுக்கும் பேடண்ட் மருந்துகளுக்கும் கப்பம் கட்டுவதில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 136

காட்டில் வசிக்கும் மிருகங்களின் இயற்கை வாழ்க்கை மிகவும் உன்னத மாயிருக்கின்றது. மல உணர்ச்சி ஏற்பட்டதும் அதைக் கழித்து விடுகின்றன. பஜாரில் கக்கூஸ் இல்லையென்று அடக்க வேண்டுமா? ஆபீஸ் உத்தியோகத்தில் அவகாசமில்லையென்று புறக்கணிக்க வேண்டுமா? அல்லது சினிமாப் படம் தவறிவிடுமோ என்ற தயக்கமா?

சுந்தர யோக சிகிச்சை முறை 135

காட்டு மிருகங்களிடத்திலும், நாட்டு இனத்தினரிடத்திலும் இது தென்படுவதில்லை அனால் வெகு தாராளமாய் நாகரீக சமூகத்தில் நின்று வருகிறது. பெரு நகரங்களில் அடிக்கடி உண்டாகும் சீர்கேடே இது. அசையா மேஜையடி வாழ்க்கையும், தற்கால உணவு பழக்கங்களுமே, அதிகரித்து நிற்கும் மலச்சிக்கலுக்கு பெருத்த காரணங்கள், பெருங்குடலை அதிகமாய் உபயோகப்படுத்தாதற்கு அனுபவிக்கும் தண்டனைகளில் இது ஒன்று “.

சுந்தர யோக சிகிச்சை முறை 135

லக்ஹார்ட்மம்மரி ( LOCKHART MUMMERY ) என்ற நிபுணர் பெருவாரியாய் முறையிடுகிறார். “ CHRONIC CONSTIPATION, LIKE MANY OTHER COMPLAINTS OF THE PRESENT DAY, IS IN MOST CASES A RESULT OF MODERN CIVILISED LIFE – AMONG NATIVE RACES AND WILD ANIMALS, IT IS PRACTICALLY UNKNOWN, BUT IS ALL TOO COMMON IN CIVILISED COMMUNITIES, AND INDEED FORMS ONE OF THE…

சுந்தர யோக சிகிச்சை முறை 134

நாக்குத் தூண்ட ஆசை கெடுக்க, அவசியம். ஆரோக்கியம் என்ற யோசனையின்றி வயிற்றில் கொட்டினால் இவை வெளிச் செல்ல வேண்டுமே! மலமாகமாறி, தேங்கி, விஷம் கக்கிய பிறகு “ ஐயோ! இது அல்வாவாக அல்லவா” வாயில் நுழைந்தது! என்று முறையிட்டால், நோயும், சாவும் விலகி விடுமா? இம்மாதிரி இரைப்பைக்கு கொடுமை செய்வது மட்டுமல்ல, நாகரீக வாழ்க்கையில் மலத்தூண்டுதலைப் புறக்கணித்து, பெருங்குடலையும் கெடுக்கிறோம் என்ன விபரீதம்!

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18

6 – க்குரியவர் 11 -இல் லக்கினாதிபதியுடன் சம்பந்தப்பட்டு அல்லது பார்வை பெற்று அல்லது சாரம் பெற்று இருப்பின்  எதிரி அதிகம் உண்டு. சத்துரு தனம் கிடைக்கும். நோய் இன்றி வாழ்ந்தாலும், மேற்படி தசாபுத்தி காலங்களில் ஆளை புடம்போட்டு, பல வித கெட்ட பெயர்கள் வாங்கித் தர வாய்ப்பு உண்டு. 10, 6, 12, 2 – இல் சூரியன், செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பார்வை இருப்பின் ஏவல், பில்லி சூன்யத்தால் பயம் ஏற்படும். 6,…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8

மருந்துகளால் ஏற்படும் புல்லரிப்பு… பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புல்லரிப்பு தற்காலிகமானதாக இருக்கும். அவை சில விநாடிகளில் போய் விடும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கடுமையான மருந்துகளின் விளைவாகக் கூட இது ஏற்படலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7

ஆழ்ந்த உணர்ச்சிகள் நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும். இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும். இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஒரு படத்தைப் பார்க்கும் போதோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான சமூக தூண்டுதல்களைப் பார்ப்பது அல்லது உணர்ச்சிபூர்வமான ஒன்றைக்…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6

குளிரால் ஏற்படும் புல்லரிப்பு… நமது உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது அல்லது நாம் குளிரால் நடுங்கும் போது, மயிர்க்கால்களின் முடிவில் அமைந்துள்ள சிறிய தசைகள் சுருங்கி, முடி எழுந்து நிற்கும். புல்லரிப்பு ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் நமது மூளை உடலை சூடாக்குவதற்கு எதாவது செய்யுங்கள் என்று எச்சரிக்கிறது. உங்கள் உடம்பை சூடேற்றியதும் இந்த புல்லரிப்புகள் போய் விடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 5

நமது உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரிலும் அரெக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது. இந்த சிறிய தசை இறுகும்போது, தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இந்த இறுக்கம் நாம் அதிக உணர்ச்சி வசப்படும் போது ஏற்படுகிறது. பிறகு உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரும் போது புடைப்புகள் மறைந்து விடுகின்றன.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 4

இந்த புல்லரிப்புக்கும் நம் உணர்ச்சிக்கும் இடையே ஏகப்பட்ட சம்பந்தங்கள் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போது இந்த மாதிரி ஏற்படுகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த புல்லரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாய்கள், குரங்குகள் மற்றும் முள்ளம் பன்றிகள் இந்த தோல் புல்லரிப்பை பெறுகின்றன. சரி  இது எப்படி ஏற்படுகிறது, நம் உடல் இதற்கு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை பார்ப்போம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 3

பைலோரெக்ஷன், க்யூட்டிஸ் அன்செரினா மற்றும் ஹார்பிபிலேஷன் என்றும் மருத்துவ ரீதியாக இதற்கு பெயரிடுகின்றனர். பயம், மகிழ்ச்சி, குளிர், சோகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் தீவிர உணர்வை நீங்கள் அனுபவிக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பு புடைப்புகளை பெறுவோம். சில நேரங்களில் இது எந்த காரணமும் இல்லாமல் கூட நிகழலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 2

நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். அப்படியே தோல் சிலிர்த்துக் கொண்டு சிறிய சிறிய புடைப்புகள் தோன்றும். பார்ப்பதற்கு இறகுகள் நீக்கிய கோழியின் தோல் போன்று இருக்கும். இதை கூஸ்பம்ப்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த புல்லரிப்பு பொதுவாக கைகளின் கீழ்ப்பகுதியில் ஏற்படக் கூடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா1 .

நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது.

காத்திருக்கப் பழகு 6

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா……??? நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும். காத்திருக்கப் பழகினால்…….. வாழப் பழகுவாய். இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்ப  காத்திருப்பதை உணர்வாய் எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய் … !!!

காத்திருக்கப் பழகு 5

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது

காத்திருக்கப் பழகு !4

உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 3

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு  2

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 1

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு

உரையாடலில்l ஒரு பகுதி 67

எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.

உரையாடலில்l ஒரு பகுதி 66

 பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.

உரையாடலில்l ஒரு பகுதி 65

ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை. 

மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.

மது அருந்த

மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும்.  மனசு வீரியம் கொள்ளும்.  உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!

சுக்கிரன் 8

சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.

சுக்கிரன் 7

சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.

சுக்கிரன் 6

சுக்ரன் பலமுடன் இருந்தால் லட்சுமீ பூஜை மூலமாக ஞானவொளி பிறக்கும். சுக்கிரன் லக்னத்தில் தனித்து நின்றால் இருதாரயோகம் ஏற்படலாம். சுக்கிரன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், கலைத்துறையில், நாடகம், போன்றவற்றில் ஏற்பட வைப்பர்.

சப்த முனீஸ்வரர் 5

நாதமுனி : தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி. சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகின்றன

சப்த முனீஸ்வரர் 4

தருமமுனி : தருமச் செயல்களை காத்து,தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி. ஜடாமுனி : வனங்களை காப்பவர்,ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.  

சப்த முனீஸ்வரர் 3

வாழமுனி : வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி. தவமுனி : தேவர்கள்,ரிஷிகள்,யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

சப்த முனீஸ்வரர் 2

மஹாமுனி : அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார்.வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் மஹாமுனி ஆவார்.

சப்த முனீஸ்வரர்: 1

சிவமுனி : உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, உலக மக்களை காக்க படைத்தார். இவர்களில், சிவமுனி : சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17

7 – க்குரியவர் சாரம் பெற்று 8 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று 12 – இல் அமர்ந்தால், மனைவிக்கு நிரந்தர நோய்த்தொல்லை பீடிக்கும். இல்லறம் சோபிக்காது. மன அமைதி கெடும். சரிவர தூக்கம்வராது. 6 – இல் கேது 8 – க்குரியவர் சாரம் பெற்று, சாரநாதன் கேதுவுக்கு லாபம் பெற்று, கேதுவுக்கு நான்கு கேந்திரங்கலும் கிரகங்கள் நிற்கில், கேது தசாகாலம் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் பலம் ஏற்படும். 6 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

6 – இல் 8 – க்கரியவர் 3 – இல் கேது சாரம் பெற்று 9 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் நல்ல யோகம். இவர் தசையில் யோகம் தரும். இந்துடன் லக்கினாதிபதி லக்கினத்திற்கோ, சந்திரனுக்கு 11 – இல் இருப்பது மிக விசேஷம். சுக்கிரன் ( அ ) சனி இருவரில் ஒருவர் 6, 8, 12 – க்கு அதிபதியாகி 6, 8, 12 – ல் பரிவர்த்தனை பெற்றால், பெரும் ராஜயோகம் தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 – ல் ராகு, சனி, சந்திரன், சுக்கிரம் சேர்க்கை ஈனஸ்திரீகளால் கடன் ஏற்படும். 9 – இல் ராகு, 6 – க்குரியவர் சேர்க்கை பெற்று இருப்பின் விபசாரிகளால் கடன் ஏற்படும். 3 – க்குரியவர் நீச்சம் பெற்று, சனியால் பார்க்கப்பட்டு, 6 – க்குரியவர், 3 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் 6 – க்குரியவர் திசையில் வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு பல வருடம் கழித்து ரோகம் நிவர்த்தியாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

2 – இல் பாவர், 10 – இல் பாவர் சுபர் சம்பாதிக்கும் பணத்தில் 25 சதவீதம் வீட்டிற்கு வரும். மீதி எல்லாம் கடன் விழுங்கும். 11, 12 – க்குடையவர் சேர்க்கை 12 – இல் ராகுவுடன் சம்பந்தப்பட்டால் விபசாரிகளால் கடன் ஏற்படும். 5, 9 – இல் குரு இருப்பின் சாப்பட்டு வகை, விருந்தினர் உபசாரம் சுப செலவுகளால் கடன் ஏற்படும். யாத்திரை வகை, புத்திர புத்திர வகை குடும்பச் செலவு இவைகளால் கடன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

புதன், சனி சேர்க்கை, வாத ரோகத்தால் தொல்லை தரும். எங்கு இருப்பினும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. 4, 5, 8,12 – ல் சுபர் சம்பந்தம் பெற்றால் இவர்கள் தசாபுத்தியில் கடன் தீரும். 2, 10, 11 – இல் பாவர் இருந்து பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி அந்திரங்களில் கடன் தொல்லை பொறுக்க முடியாது.

வித்தியாசமான கணக்குகள் 3 பெருக்கல்:

பெருக்கல்: மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை மனிதன் × கவலை = தற்கொலை மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி மனிதன் × இயலாமை = அவதி மனிதன் × அன்பு = மனிதாபிமானம் மனிதன் × ஆசை = வக்கிரம்

வித்தியாசமான கணக்குகள் 2 கழித்தல்:

மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = சோம்பல் மனிதன் – இயலாமை = முயற்சி மனிதன் – அன்பு = குரோதம் மனிதன் – ஆசை = அமைதி

வித்தியாசமான கணக்குகள் 1 கூட்டல்:

கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 49

தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான், நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 48

இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 47

உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 46

ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 45

இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.

நாகரீக வாழ்க்கையின் கேடு

மலச்சிக்கல் வருவானேன்? உண்பது எளிதாயிருப்பது போல் மலக்கழிவும் சாதாரணமாய் ஏன் நடக்கக்கூடாது? சுலபமாய் இஷ்டம் போல் வாயில் பொருள்களைக் கொட்டிவிடுகிறோம். இவ்வளவு சுலபமாக மலத்தையும் கழிக்கச் சக்தியில்லையா?

சுந்தர யோக சிகிச்சை முறை 132

இப்பெருங்குடலை இரண்டு, மூன்று, நான்காவது சேக்ரல் நரம்புகள் ( SECRAL NERVES ) ஆளுகின்றன இடுப்புக்கிரந்திகள் வழியாக “ ஸிம்ப தெடிக் “ கும் (SYMPATHETIC SYSTEM ) வேலை செய்கின்றது. இந்நரம்புகள் எல்லாம் மிகப் பொடி நரம்புகளாக மலப்போக்குக் குழாய்  மேல் முடிகின்றன. இவைகளில் தான் முக்கிய செயல் சக்தியுண்டு.

சுந்தர யோக சிகிச்சை முறை 131

போக்கு உணர்ச்சி மலம் வெளித் தள்ளப்படத் தயாராகி கடைசி இடத்திற்கு வந்தவுடன் மலப்போக்கு உணர்ச்சி உண்டாகிறது.   மலம் அங்குள்ள நரம்பு முனைகளைத் தூண்டி உணர்ச்சி தருகிறது. பல காரணங்களால் இதை அலட்சியம் செய்கிறோம். பல தடைவைகள் தந்தியடித்து பதில் வராமலிருக்கவே நரம்புகள் வேலை நிறுத்தம் செய்கின்றன. மறுபடியும் உணர்ச்சி வருவதில்லை, மலமும் வெளிப்போவதில்லை. சிக்கல், நிலை உண்டாகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 130

ஆரோக்கிய காலங்களில் இச்சலனங்கள் நடக்கின்றன. நோயில் இவைகள் தடைபெறவே உள்ளிருக்கும் சாமான்கள் அழுகி, விஷங்களைக் கக்கி, அபாயத்திற்கிடமாகின்றன.  சிறுகுடல் சீகம் மூடி( LLEO CAECAL VALVE ) யிலிருந்து ரெக்டத்திற்குவர சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும். இங்கு வந்த பிறகு, சில மணி நேரம் தங்கியே ரெக்டத்திற்குள் செல்லுகின்றது. இங்கு அதிகச் சரக்கு சேரவே, இங்குள்ள  காலன் ம‍டிப்பு உயர்ந்து ரெக்டத்திற்குள் தள்ளி, மலத்தை வெளியேற்றுகிறது இந்த வேலைக்கு டயாப்ரமும் வயிற்றுச் சதைகளும் தேவையான இறுக்கத்தால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 129

ஆறில் ஒரு பங்கு ஜீரணத்தை உள்ளிழுக்கும் வேலை சீகத்திலும் “ ஏறு காலனி “ லும், நடக்க வேண்டும்.  அதற்காகவே இப்பாகங்களுக்கு மட்டும் இவ்வளவு சலனங்களுமுண்டு.   இக் “ காலனில் “ இதர பாகங்களுக்குத் தள்ளும் ( PERISTALSIS ) சக்தி மட்டும் தான் உண்டு.

சுக்கிரன் 5

சுக்ரன் லக்னத்தில் நின்றுவிடில் வசதிகளோடு நாகரீகமாக நாலுபேர் மெச்சும்படி வாழ்வர், சுக்கிரன், சனி இருவரும் 10 இடத்தில் இருப்பின் வீர்யசக்தி இழந்தவராய் இருப்பர். சுக்ரன், சந்திரன் சேர்ந்து 1,5,7,8,9மிடங்களில் இருந்தால் ஜாதகர் வாழ்க்கை துணையினை பிரிந்து வாழ நேரிடும்.

சுக்கிரன் 4

சுக்கிரன் நின்ற இராசிக்கு அடுத்த இராசியில் தனியே சந்திரனிருந்தால் திருமணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கையும், பார்வையும் எந்த வீட்டில் ஏற்பட்டாலும் ஆண், பெண் சுக வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் நாசமாகிவிடும். சுக்கிரன் செவ்வாயோடு ஆறாம்பாவதிபனோடு சேர்ந்து இருந்தால் மனைவி மூலம் துக்கம் ஏற்படும்.

சுக்கிரன் 3

சுக்கிரனோடு சனி, செவ்வாய் சேர்ந்து சனி, செவ்வாய் வீட்டில் நின்றால் இல்லறம் சிறக்காது, செல்வமும் இருக்காது. சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து 7, 8ல் இருப்பின் சில சமயம் கொலைபாதகம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கும். சுக்கிரனும் , செவ்வாயும், இராகுவும் ஒரே ராசியிலிருந்தால் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படக்கூடும்.

சுக்கிரன் 2

சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர், எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர். இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால், ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.

சுக்கிரன். 1

சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும் லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும், இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர். சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின் சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும். செழிப்போடும் வாழ்வர்.  சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.

வியாழன் 16

குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள். குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின் அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர். குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது.  குழந்தைகள் குணம் கெட நேரிடும். குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும், சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர். குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம்,…

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா..

ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். அந்த ஊரில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்…

அன்போடு 2

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான் இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்….? உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான் இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான் நான் எடை அதிகமாக…

அன்போடு…. 1  

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா நல்லா தானே இருக்கு என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   2

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.  இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.  குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   1

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.  அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.  ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’  ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள்.…

நல்லது கெட்டதுகளுக்கு யார் காரணம்? 

ஒருநாள், அந்த துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம். ‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா? ’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.  துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே…

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என்…

புகையிலை வரலாறு..

கி . பி. 1405 – ல் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழி காண புறப்பட்டார்.  அப்போது வழியில் மேற்கிந்திய தீவில் தங்க நேரிட்டது.  அவர் கியூபாவைச் சுற்றி பார்த்தபோது அங்கிருந்த கியூபா நகரவாசிகள் சோளத்தட்டை சருகைச் சுருட்டிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதைப் பார்த்த கொலம்பஸ் அதிசயித்து தான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.  அது உலகப் பழக்கமாகி விட்டது.  இதுதான் புகையிலை வரலாறு..

சைக்களில் சாதனை பயணம் செய்த இளம் பெண்

 நீ ஒரு பெண் உன்னால் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் முடியாது இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் அதையெல்லாம் தகர்த்து ஒரு பெண் 4,500 கிலோ மீட்டார் சைக்கிளில் பயணம் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர் பெயர் அனாஹிதா ஸ்ரீபிரசாத் என்ற இளம் பெண் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிரை இவர் வெற்றிபயணம். பெண்கள்  பாதுகாப்புப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டார். 2015ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கி சந்தித்த…

தலைநகரம் பிறப்பெடுத்தது எப்படி?

1639 – ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆக்ரா இந்தியாவுக்கு தலைநகராக இருந்தது. மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தனர். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார். 

எந்த மனிதன்

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான். பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.