அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 2 பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 1 ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும் இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது தமிழும் அழகுக்கு அழகாகிறது அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம் அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம். காப்பு தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி அம்மையை பார்க்கும் இடந்தோரும் பார்க்கும் திசை தோறும் கண்டு ஆராதித்து அகம் மலர்ந்தவர் எண்ணும் எண்ணத்திலும் சிந்திக்கும் சிந்தையிலும் செய்யும் செயல் யாவையிலும் அபிராமியை கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்தவர் அவர் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் இப்படி நமக்கு சொல்லுகின்றார். பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லெல்லாய் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் – வார்க்குங்கும முலையும் மேல் முத்து மாலையுமே என்று நமக்கு சொல்கிறார்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்.

சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர் அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும். சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.  தெய்வ அருள் பெற்ற அபிராமி…

நம்முடைய மதிப்பு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.…

உங்களது பேச்சில் பணிவும்

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார்.   சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக்…

வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்

   தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்    மகன்: என்னால் முடியாது    தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.   மகன்: டபுள் ஓகே டாட்.   தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா?   பில்கேட்ஸ்: முடியாது   மகனின் தந்தை: என் பையன் world bank CEO.   பில்கேட்ஸ்: டபுள் ஓகே   தந்தை…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 11

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில்  தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 10

பெண்ணாடகம் விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார். உடனே நந்தியெம் பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 9

 திருவைகாவூர் கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 8

சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். திருவல்லம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும்…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 7

திருப்புள்ளார் திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம். பட்டீஸ்வரம் இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பொறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   84

இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  83

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  82

நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்து எழ  செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும் அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 81

எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 80

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன் பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!

எத்தனை தர்மங்கள் செய்தாலும்

எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.

பழ மொழிகள் 15

தை மழை நெய் மழை. படித்த முட்டாள் படு முட்டாள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?

பழ மொழிகள் 14

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்பாய். செயலே புகழ் பேசும். மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். பொய்க்கு எல்லையில்லை.

பழ மொழிகள் 13

திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். தீயில்லாமல் புகை கிளம்பாது. தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.

பழ மொழிகள் 12

தன் பாவம் தன்னுடன் வரும், கோபத்திற்கு கண்ணில்லை. தீயிலிட்ட நெய் திரும்பி வருமா? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.

பழ மொழிகள் 11

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான். சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம். செய்து முடி அல்லது செத்து மடி. தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.

கீதைகள் மொத்தம்\ – 60-27 to 30

*வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது. *மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல். *ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு முனிவர் ஸ்ரீ வசிஷ்ட…

கீதைகள் மொத்தம்\ – 60- 23 to 26

*ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து, சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி கீதை*…

கீதைகள் மொத்தம்\ – 60- 19 to 22

*கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின்…

கீதைகள் மொத்தம்\ – 60-15 to 18

பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம…

கீதைகள் மொத்தம்\ – 60 -11 to 14

சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன் சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள் வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது. வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு , குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கண்டாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள் உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நில, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  1

சிம்ம லக்னம் லக்கினாதிபதி சூரியன் இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் .சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகையில் ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

மன முதிர்ச்சி  3

நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். Understanding the difference between the basic needs and what we want. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.  Reaching the status that happiness is not connected. with material things.

மன முதிர்ச்சி  2 

செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை…

மன முதிர்ச்சி – Maturity of Mind 1

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

சனி 22

சனிக்கு மீனம் 2மிடமாகி நின்றால் பெயர், புகழ், செல்வம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சனிக்கு துலாம் 2மிடமாகி உச்சம் பெற்று நின்றால் தலைவர், செல்வந்தர், அயர்நாட்டுத் தொடர்பும் இருக்கும், சிறப்பாக வாழ்வர். சனி 5மிடத்திலிருந்து லக்னாதிபதியை பார்ப்பது அல்லது 4, 5 வீட்டையும் 4,5க்குரிய கிரகத்தையும் பார்ப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுகிறது. சனி ஆயுள் காரகன், சனி பலம் பெற்று 8ம் பாவத்துக்கு சம்பந்தம் பெற்றால் ஆயுள் விருத்தியாகும். சனி 8ல் நின்றால் பலம் பெற்றால்…

இருப்பதுவும் பிரிவதும்

இருப்பதுவும் பிரிவதும் அவரவர் விருப்பம்  ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 79

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   78

மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால்  கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகக் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   77

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   76

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனி மனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர் . தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   75

இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.    

உரையாடலின் ஒரு பகுதி  107

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாக போக வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் அதை எவர்கள் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதிகம் வருத்தப்படுவது இல்லை. மனித பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயம். மனித பிறவிகள் அனைத்திற்கும் ஒரு விஷயத்தில் என்று மட்டும் பலவீனம் இல்லை நபருக்கு நபர் சூழ்நிலை, அறிவு அந்தஸ்து மனோபாவம் போன்றவைகளை கொண்டே பலவீனங்கள் வெளிப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  106

கனவுகளிலும், கற்பனைகளிலும் யூகித்துக் கொண்ட அனுபவம் (இறைவழிபாடு, இறையை தேடுதல் முக்தி போன்றவை) இது போல் காதலும், குடும்ப வாழ்வையும் சேர்த்துக்கொள்ளலாம் யதார்த்திற்கு வரும் போது பல பேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதை பார்க்கலாம்.

உரையாடலின் ஒரு பகுதி  105

உலகிலேயே ரொம்ப துர் அதிர்ஷ்டசாலி 10 பேர் நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன். தனிமையில் இருக்கும் போது 10 பேர் வேண்டும் என்று தவிப்பவன்.

கீதைகள் மொத்தம் – 60 9 – 10

இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றாக சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.

கீதைகள் மொத்தம் – 60 = 7 – 8

ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல். இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 =5 – 6

அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார். ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 3 – 4

3  அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது. 4  பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.

கீதைகள் மொத்தம் – 60 1 – 2

1   குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. 2   அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன் துன்பங்களையும்…

உரையாடலின் ஒரு பகுதி  104

யதார்த்தமான உண்மை – தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும் மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும் மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.

உரையாடலின் ஒரு பகுதி  103

பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும் ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும் ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால் காதல் எனும் அன்பில் முடியும். இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும். ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  102

தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும் அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம் செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ் எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம் வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம் இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும் அதுவே _ஷடாங்கம் அதுவே…

உரையாடலின் ஒரு பகுதி  101

தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான…

உரையாடலின் ஒரு பகுதி  100

ப்ருத்ருஹரியின் நீதி சதகம் அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே விஷேச- ஞானலவ _துரீவிதக்தம் ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி.. இதன் பொருள் – அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம் அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம் மிக குறைவாகவே அறிந்து எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.

உரையாடலின் ஒரு பகுதி  99

ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனதளவில் இறந்து போக தொடங்கினால் அதற்கு பிறகு அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது நிற்கவும் நிற்காது.

உரையாடலின் ஒரு பகுதி 98

எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.

உரையாடலின் ஒரு பகுதி  97

காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.

உரையாடலின் ஒரு பகுதி  96

எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி.   எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…

உரையாடலின் ஒரு பகுதி  95

அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்

உரையாடலின் ஒரு பகுதி  94

இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும்  உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  93

வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி  92

ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்

உரையாடலின் ஒரு பகுதி  91

அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.

உரையாடலின் ஒரு பகுதி  90

கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.

சனி 21

சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும்.  பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.

சனி 20

சனி, 3ம் பார்வையாகவோ, 10ம் பார்வையாகவோ, 7ம் பார்வையாகவோ சுக்கிரனைப் பார்ப்பின் சன்யாஸ வாழ்க்கை அமையும். சனியும்,  சந்திரனும் இணைந்தால் அசையாத சொத்துக்கள் உண்டு.  நிறைய ஏவலாட்கள் உண்டு. சனி பொதுவாக ராகு, கேது, சூரியனைப்பார்ப்பது பிதுர்தோஷமாகும்.

சனி 19

சனி 4வது வீட்டில் இருந்து 4வது வீடு துலாம், மகரம், கும்பமாக இருப்பின் ஜாதகர், ஜோதிடர், கணித ஆசிரியர், அகெளண்ட்ஸில் வேலை பார்ப்பவராக இருப்பார். சனி, ராகு சம்பந்தம், புதன், ராகு சேர்க்கை எலக்ட்ரனிக் கல்வியில் சிறந்து விளங்குவர். சனி லக்னத்திலிருந்தோ, சந்திரனிடமிருந்தோ 5ம் வீடு, 10 வீட்டில் இருப்பினும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சனி 18

சனி 7ல் இருந்து பாபகிரஹங்களால் பார்க்கப்பட்டால் அவருக்கு இருதாரம் ஏற்படும்.  சனி, புதன் சேர்க்கை 7ம் வீட்டில் இருப்பின் விதவையை மணப்பர். அதேபோல் சந்திரன், சனி சேர்க்கை 7ல் இருப்பின் விதவையை மணந்து சுகமாக வாழ்வர். சனி ஜன்ம ராசிக்கு கோச்சாரப்படி 12ம் வீடு, 1,2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஏழரை ஆண்டு சனி அல்லது சாடே சாத்தி அல்லது ஏழரை சனி என்று கூறுவர். சனி பகவான் லக்னத்தைப்பார்த்தாலோ, அல்லது லக்னாதிபதியை பார்த்தாலோ, 10மிடத்தை…

சனி 17

சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும். 7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும். சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின் திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம். சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும், வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.

விடுபட எண்ணுகையில் கொஞ்சம் தீனிகேட்டு எழுந்திருக்கும் புத்தி கரையான் புற்று போல வளரத் தொடங்கிவிடும் நீங்களாக அதற்கொரு பூச்சிக்கொல்லி மருந்து அடித்துக் கலைக்கும் வரை உங்கள் பேச்சு அதன் பேச்சுடன் ஒத்துப்போகும் கவனித்துப் பாருங்களேன்.. பின் குறிப்பு எதில் இருந்து விடுபடஎன்பது அவரவர் சம்பத்தப்பட்ட விஷயம்

காத்திருப்பது

காத்திருப்பது  வீண் சில சமயம் தோணும்போதும்  மனம் காத்திருக்க தவறியதில்லை,  காத்திருப்பு  உனக்காக  என்ற போதிலே;  ஏதோ  ஒரு நம்பிக்கையில்..  பாரமான  உன் நினைவோடு  என்றென்றும்..   பின் குறிப்பு உனக்கு என்பதை எதை கொண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தரம் உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்

உங்களிடம் நீங்கள்

உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.

பழ மொழிகள் 10

குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே. கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது. கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை. சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை. தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை

பழ மொழிகள் 9

ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.

பழ மொழிகள் 8

கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன். பட்டவரைக்கும் பலன் உண்டு. முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.

பழ மொழிகள் 7

நகமும் சதையும் போல் வாழ்க்கை. மாதா செய்த பாவம் மக்கள் தலையில். கொடுப்பதற்கும், சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். முட்டிக் கொள்ளும் முன்பே குனிய வேண்டும். எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்.

வெற்றிகளை சத்தித்தவனின் இதயம்

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன்  துன்பபடமாட்டான்

கோபம் என்பது

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே  கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,  

நாம மேல ஏற ஏற

நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!

கார்ட்டூன் சேனலில் இருந்து

கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள்

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 158

உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும். உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும். பயிற்சியும் சரியாக வராது. நெளலியை நின்றும் செய்யலாம் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம் குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி, தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும். இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 157

உட்டியாண வயிற்றின் வீரியத்திற்கு எடுத்ததே. ஆனால் இதைக் காட்டிலும் உயர்ந்த அப்பியாசம் ஒன்றுள்ளது. அதுவே ‘ நெளலி ‘ பழகும் வகைக்கு சென்ற பயிற்ச்சிக்கும் இதற்கும் வித்தியாசம் நன்கு தெரியும். உட்டியாணாவில் வயிறு எங்கேயோ முதுகை நோக்கி ஓடிவிட்டது. நெளலியில் இது உருண்டு திரண்டு தண்டாக, நடுவில் நின்று காட்சி அளிக்கிறது.  ஜாலவித்தை ஒன்றுமில்லை. உட்சதைகளின் ஆட்சியால் கிடைக்கும் நிலையே இது இலட்சக்கணக்கான சாதகர்கள் இதை இப்பொழுதும் நம்நாட்டில் பழகி வருகிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 156

யோக சாதனையில் உட்டியாணா, நெளலி என்ற அபூர்வ அப்பியாசங்கள் உள்ளன. நான்கோரும் பலனைக்கொடுக்க இவைகள் தான் மிகவும் உகந்தவை. உட்டியாணாவை பழகும் வகையைப் படித்த உடனேயே, உட்டியாணாவின் பலன்களை ஊகிக்க முடியும். பழக ஆரம்பித்தால் சந்தேகம் அறவே ஒழியும். அப்பியாசம் சித்திக்கவே, வயிற்றுச் சதைகளின் பலவீனம் பறந்தோடி உழைக்கப்படுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 155

பெருங்குடல் பொருள்கள் வெளித்தள்ளப்படாமல் தேங்குகின்றன. தீவிர மலச்சிக்கல் உண்டா கின்றது. வயிற்றுச் சதைகளின் பலவீனத்தால் இங்கே கெடுதல் ஏற்படுகிறது. விளக்கெண்ணெயும், ‘சால்டு’களும், ‘எனிமா’வும் ஒரு பலனும் தரா. குடல் கெடுமே ஒழிய குறைநீங்காது சதைப்பயிற்சி கொடுத்தே தீர வேண்டும். நான் என்ன வரைந்தாலும் இந்த உண்மை சிலர் மூளைக்குள் புகாது. ‘ஸர்ஜரி’ யைப் ( SURGERY  – ரணசிகிச்சை ) பற்றிய பெரிய வைத்திய புத்தகங்கள் கூட வயிற்றுச் சதைப்பயிற்சி  செய்யத் திட்ட மிடுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 154

ஆனால் வயிற்றுச்சுவர் ( சதைகள் ) பலவீனமடைந்தால் இந்நிலை தவறுகிறது. பூமி சக்தி கருவிகளையெல்லாம் கீழே இழுக்கின்றன. வயிற்று இறுக்கம் ( INTRA ABDOMINAL PRESSURE ) குறைகிறது. வயிற்றுச் சுவர் ( சதைகள் ) பூமி சக்தியைத் தடுப்பதுமின்றி, பெருங்குடலை வேலைக்குத் தூண்டுகிறது. இச்சதைகள் இளகவே மேற்கூறிய இறுக்கம் குறைகிறது. பெருங்குடலின் மேல் தூண்டுதலும் பலவீனப்படுகிறது. இரைப்பையும், குடல்களும் உப்புகின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   74

ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   73

நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள் நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   72

எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   71

தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   70

பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன் புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  89

இப்படிதான் வாழ வேண்டும் என்ற நியதியோ, நியாயமோ, வரம்போ எந்த ஒரு வாழ்க்கையையும் இந்த ஜென்மத்தில் வாழாதவனால் அடுத்த ஜென்மத்தில் மட்டும் எப்படி (அப்படி பட்ட) ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகில் அறிவினாலும் மனதினாலும் வாழ விரும்புவர்கள் இந்த உலகில் புதிய ஆண்மை ஒன்றை படைத்திருக்கிறார்கள் அதுதான் சான்றாண்மை சால்பை ஆள்வது தான் சான்றாண்மை, சான்றாண்மை குணத்தை விரும்புகிறவர்கள் எதை எதிர்ப்பதையும் வீரமாக கொள்வதில்லை பொறுத்து நிற்பதை தான் வீரமாக கொள்கிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  88

அழுக்கு படாமல் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமல் போய்விடும். அன்பில்லாமல் கருணை இல்லை எல்லையை உடையது அன்பு எல்லையற்றது கருணை அன்பு முதிர்ந்து தான் கருணையாக மாற வேண்டும் அன்பே இல்லாத கருணை உலகில் தோன்றியதில்லை. பூ அழிந்து தானே காய் உண்டாகிறது

உரையாடலின் ஒரு பகுதி  86

மனித குலம் இத்தனை பாடு பட்டும் இன்பமாய் சந்தோஷமாய் ஆனந்தமாய் இல்லாதிருக்க காரணம் அவரவர்களின் பதிவுகளே முதலில் நாம் நம் மனதின் துணை கொண்டு அதாவது மனதின் அறிவு கொண்டு நம் பதிவுகளை அறிவோம் பின் அந்த பதிவுகள் இல்லாமல் செயல் புரிவது எப்படி என்று பார்ப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  85

 கீதை அதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. கர்மத்தை செய், பலனை எதிர்பார்க்காதே என்று. அதாவது, அதை புரிந்து கொள்ள வேண்டிய விதம் கர்மத்தை செய். பதிவுகளை உருவாக்காதே என்பதே பதிவுகளில் நல்ல பதிவு, கெட்ட பதிவு என்று இல்லை ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. பதிவு என்பது வேண்டாம் என்பதே

உரையாடலின் ஒரு பகுதி  84

மேலே சொன்ன திரைகளனைத்தும் நம் செயல்களின் விளைவுகளால் உண்டானது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் உண்மை என்னவென்றால் நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இது தான் இதை அறிந்து கொண்ட பின் நாம் நமது செயல்களில் கவனம் வைத்து செயல்களை செய்து பழக வேண்டும் அது எப்படியென்றால் செயல்கள் இருக்கும் விளைவுகள் இருக்கும் ஆனால் பதிவுகள் இருக்காது. இந்த முறையில் செயல்களை செய்ய தான் கீதை நமக்கு அறிவுறுத்துகிறது.

இதை உணர்ந்து இருக்கிறீர்களா

ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது

7 தலைமுறைகளின் முக்கியத்துவம்

ஜீன்களை சுமந்து செல்வதே சுக்லதாது . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது . தந்தையிடமிருந்து (father) 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து (grand father) 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து (great grandfather) 10 அம்சங்கள் ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. பாக்கி உள்ள 10 அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை. நான்காவது மூதாதையிடமிருந்து 6…

ஓசை ……

  தடுக்கி விழுந்தால்                         அ  ஆ. சிரிக்கும் பொழுது                          இ..  ஈ. தீ புண்பட்டால்                                  உ..  ஊ. அதிகாரம் செய்யும் போது.…

புலன்களை வென்றவனே வீரன்.

இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.

யோசிக்க 15

‘உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, ‘நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்’ என்று சொல்ல உங்களால் முடியவேண்டும். இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான்…

யோசிக்க 14

நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.

யோசிக்க 13

ஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி ‘ஹிந்து வளர்ச்சி விகிதம்’ என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை ‘நேருவின் வளர்ச்சி விகிதம்’ என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

யோசிக்க 12

சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.’என்று குறிப்பிட்டுள்ளார்

யோசிக்க 11

இந்தியர்களின் முன்னேற்றம்: அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

யோசிக்க 10

ஜாவஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.

யோசிக்க 9

இந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல. சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு ‘வளம் பெற வேண்டுமா? சகித்துக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை. ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது (மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும்…

யோசிக்க 8

இந்தியாவின் பிரச்னை வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல, அது அரசியல் பிரச்னை. இப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்க நமக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு அரசியல் சார்ந்தது. நாம் நமக்கு இருக்கும் சக்தியைக் கூட்டாகப் பயன்படுத்தி, பொறுப்புள்ள பதவிகளுக்கு நல்ல மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

யோசிக்க 6

ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது? இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும்? ‘இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள் மனத்தை உலுக்கக் கூடியவை. இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.’ என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.

சனி 16

சனி, சந்திரனும் சமசப்தமாக இருப்பின் திருமணம் நடைபெறுவதற்கு பலபிரச்சனைகள் உண்டாகும்.  திருமணம் தாமதமாகும்.  ( ஸ்ரீ கிருஷ்ணன் ) . சனிக்கு 2,12ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். நல்ல செல்வ சேர்க்கை ஏற்படும். லக்னம், சூரியன், சந்திரன், புதன் ஒன்றக்கொன்று 7\7 ஆக அமைவது இருவரும் கருத்தொருமித்து வாழ்வர். சனி 2 வது வீட்டில் உச்சத்தில் இருப்பின், ஜாதகர் ஆட்களை வைத்து வேலைகள் செய்வித்து நிறைய சம்பாதிப்பர், இரும்பு, கற்கள், உழுவுத்தொழிலில், பெரும்பணம்…

சனி 15

சனியுடன், சுக்கிரன், ராகு, புதனுடன் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பின் திருமணம் தாமதமாக ஏற்படும். சனி 2ல் செவ்வாய் 7ல் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருப்பின் இவ்வமைப்பு திருமணமாகாத நிலமை ஏற்படுத்திவிடும். சனி, புதன், லக்னாதிபதி இவர்களுக்கு 6மிடம் சம்பந்தம் ஏற்பட்டால் சேர்க்கை, பார்வை பெற்றால், வழக்கு, வியாஜ்ஜித்தில் திசா, புத்தி காலங்களில் ஈடுபடுவர்.

சனி 14

சனி மகர லக்னகாரர்களுக்கு மாடமாளிகைகளை வழங்குவார். சொத்துக்களை சேர்த்து வைத்து வழி வகுப்பார். சனி  7 ம் மிடத்தை பார்ப்பதினால் பொருள் களவு போகும், அக்னிபயம் கொடுத்த  பொருளைத் திரும்பி வாங்க இயலாமல் போகும் தனநாசம், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சுகம் இராது. சனிக்கு கேந்திர, திரிகோணங்களில் புதன், சுக்கிரன், கேது நின்றால் யோகம் ஏற்படும்.

சனி 13

சனியை லக்னமாக உடையவர்கள் சற்று மந்தகுணம் உடையவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பர், நிதானம், பிரதானமாக இருப்பர். சனி, செவ்வாய் 7ல் இருந்து 7க்குடையவன் செவ்வாய் வீட்டில் இருப்பின் அவன் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு கொள்வாள். சனியினால் மகர லக்னக்காரகர்கள் பெறுகின்ற வருவாய், புகழ் அனைத்துச் சிறப்புகளும் அடிப்படை கடும் உழைப்பாகவே இருக்கும், மற்றவரின் நலத்துக்காக தம் உடலையும், மனத்தையும் வருத்திக்கொண்டு பிறர் அடைகிற சுகத்தை கண்டு உள்ளம் பூரிப்பார்கள்.

சனி 12

சனிக்கு 7ல் சுக்கிரன் இருந்தால் அவனுக்கு களத்திரத்தால் துக்கம் சம்பவிக்கும். சனி – 4ல் அமர்ந்து செவ்வாய் பார்த்தால் துர்மரணம் ஏற்படலாம். சனி செவ்வாய் கூடி 6மிடத்தில் இருக்க சூரியனாவது, ராகுவாவது பார்த்தால் ஜாதகர் எப்போதும் நோயாளியாகவே இருப்பர். சனி 9மிடத்தில் பலமாக இருந்தால் வேதாந்த அறிவு, ஜோதிடம் போன்றகளைகளில் திறமை ஏற்படும். சனி துலாத்தில் அமர்ந்து உச்சமாகி இருப்பின், அவர் மருத்துவ துறையில் மருத்துவராகவோ அல்லது ஒரு மருந்துக்கடை வைத்தோ பணமீட்டுவர்.

சனி 11

சனி எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும் அவருக்கே உரிய மந்தகதியால் பலன்களை மெள்ள மெள்ளத்தான் கொடுப்பார்.  வேகம் அவரிடம் கிடையாது. சனியும், சூரியனும் ஒன்றுகூடி இருந்தால் அறிவாளியாக, சுறுசுறுப்புடனும், அனுபவசாலியாகவும், உலோகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணராவார். சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தால் யுத்தமும், சத்தமும் இல்லத்தில் அதிகரிக்கும்.

யோசிக்க 5  

பொருளாதார விடுதலை: நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்து குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது.

யோசிக்க 4

 மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன. இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும் உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது , நடந்தேறும்…

யோசிக்க 3 

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யோசிக்க 2

 பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று உண்டு. அது, அரசாங்கம் செய்யாமல் விட்ட காரியங்களால் ஏற்பட்ட தோல்வி. நீதிமன்ற அமைப்பின் செயல்பாட்டை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத    நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது.

இந்த உலகம் உங்களை ஒரு போதும்

சமன்பாடு 1×9=7 2×9=18      3×9=27     4×9=36   5×9=45    6×9=54    7×9=63        8×9=72   9×9=81      10×9=90 மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக…

அடமானமாய் என்ன தருவீங்க…?”

வங்கி மேலாளரிம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?” கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!” அடமானமாய் என்ன தருவீங்க…?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன…?”. நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!” ஆதிவாசி ஆள் சொன்னார்.…

தொடர்ச்சியான உழைப்பு மட்டுமே

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான் அதற்கு மீன் பிடிப்பவன் தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். அது எப்படி செயல் படுகிறது?” என்று கேட்டான். சொல்கிறேன். ஆனால்…

ஏசு நடந்து தான் சென்றிருப்பார்

இந்த தொகை மிகவும் அதிகம் ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை. படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார். இருபது டாலர்” என்று அவன் சொன்னான். இந்த தொகை மிகவும் அதிகம்” என்று வாதிட்டார் நம்ம ஆள். அய்யா, இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்” என்றான் படகோட்டி. நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம்…

ரசிக்கும் வாழ்க்கை

குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை” என்றான் சீடன் ஒருவன். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால் அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்த தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக…

பழ மொழிகள் 5

பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். நோயின் தந்தை யாரோ, தவறான உணவு தான் அதன் தாய். பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு. மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏறமுடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்.

பழ மொழிகள் 4

அமைதியான மனத்திற்குப் பார்ப்பதெல்லாம் விருந்து. மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை. பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை, நீ பெறுவது பேரின்பம். கோபத்திற்கு கண்ணில்லை. கற்பனைப் பேய்களைத் தவிர வேறு பேய்களில்லை.

பழ மொழிகள் 3

காவி உடுத்தாலும் கவலை போகாது. கொடுப்பதை பிறர் அறியாது கொடு. உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு. முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். வளைகிற முள் நுழையாது.

பழ மொழிகள் 2

கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

பழ மொழிகள் 1

மலை இலக்கானால் குருடனும் எய்வான். சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. காட்டு விலங்கை வீட்டில் வளர்க்காதே. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.

உரையாடலின் ஒரு பகுதி 83

அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது காம, குரோத, மோக, மத மாச்சர்யம், அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது. சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும் ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால் அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு அறிவேயல்ல என்பது…

உரையாடலின் ஒரு பகுதி  82

 இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம் அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது. அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது. இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல் பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  81

நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…

உரையாடலின் ஒரு பகுதி  80

எல்லாம் நம் மனதில் இருப்பதே அப்படி இருப்பதை வெளி கொணர உண்டான சாதனமே. மனம் புறம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அது ஆதவனாகட்டும் அல்லது அடுப்படி ஆகட்டும் ஆதவனின் உதயம் மனதிற்கு தரும் உணர்வு, அடுப்பு எனும் புறப்பொருள்.  நம் மனதிற்கு தரும் உணர்வு இரண்டும் ஒன்றா என்று யோசித்தால் இல்லையென்ற பதிலே வரும் அப்படியானால் அந்த புறப்பொருள் மூலம் நாம் அடைந்த உணர்வு அகத்தில் என்பது புரியும் அதில் கவனம் செலுத்தி பார்க்கும் போது காலப் போக்கில்…