உரையாடலின் ஒரு பகுதி  79

அறிந்து கொள்வது அறிவெனப்படுவது அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம் அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது. அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம். ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை. புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  78

சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம். மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது. இது புரிந்து கொள்ள முயலும் போது முரண்பாடாகவே தோன்றும் புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.

உரையாடலின் ஒரு பகுதி  77

அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் இன்ப துன்பமென்ற ஆசிரியரிடம் கற்று அதன் வழியே குருவிடம் வரும் போது அனுபவத்தின் மூலம் நாம் அதை கண்டு உணர்ந்து கொள்ளலாம் வேறு வழி_ இருப்பதாக தெரியவில்லை. சரியாக சிந்தித்தால் இன்ப துன்பங்களால் உண்டான அனுபவபதிவே குண இயல்புகளாக மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  76

அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய   நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.   

உரையாடலின் ஒரு பகுதி  75

 அதுவும் நிரந்தரமாக இது கேட்பதற்கும், படிப்பதற்கும் புரியாதது போலவும், புதிரானது போலவும் இருந்தாலும் உண்மை இதுதான். படிப்பினையே ஒரு மனிதனை புடமிடுகிறது. அந்த படிப்பினை இந்த உலகத்தில் இன்பம், துன்பமாக இருக்கிறது. அவரவர் வினை விதிப்படி இன்ப, துன்ப என்ற ஆசிரியர்கள் மூலம் வெறும் சாதாரண அறிவானது ஒரு கால கட்டத்தில் பிரபஞ்ச அறிவாக மாறுகிறது.

 உரையாடலின் ஒரு பகுதி  74

ஒரு மனிதனின் லட்சியமே இந்த பிரபஞ்ச அறிவை பெறுவது தான் அதற்கு மனிதன் தற்போது தான் கொண்டுள்ள அறிவை எல்லாம் முழுக்க, இழக்க வேண்டியது மிக அவசியமாகிறது. தற்போது, மனிதன் கொண்டுள்ள அறிவினால் அழிவும் அனர்த்தமுமே விளையும், விளைகிறது. ஆனால், பிரபஞ்ச அறிவை கொண்ட மனிதன் அன்பும் ஆனந்தமும் இன்பமும் உடையவனாகவே இருக்கிறான்.

கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு ராகு, கேது நின்றால்:-தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம். வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு சனி நின்றால்:- நீண்ட ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு குரு நின்றால்:- குழந்தைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம். சுக்கிரன் நின்றால்:- இல்லற வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம். புதன் நின்றால்:-  மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.              சூரியன் நின்றால்:-  தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.  அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை. சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது. மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.

உங்கள் பாதையை

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.. ஏனென்றால்.. நடக்கப்போவது உங்கள் கால்கள் தான்.. அடுத்தவர்களது அல்ல! விருப்பங்களுக்கே விலை அதிகம்.. மகிழ்ச்சிக்கு அல்ல!

மன்னிக்கப் பழகிவிட்ட

மன்னிக்கப் பழகிவிட்ட எவரும் பிறரின் குற்றங்களை சுமந்து திரிவதில்லை… அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம் வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம் என்பதே நிதர்சனம்.

வாழ்க்கையின் ரகசியம்

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?” அம்மா சொன்னாள், “எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!” அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை  “நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?” என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் “நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்” என்றான். ஆசிரியை கோபமாக, “உனக்குக் கேள்வி புரியவில்லை”…

சோம்பேறித்தனத்திற்கு விலை

எறும்பும் வெட்டுக்கிளியும் எறும்பும் வெட்டுக்கிளியும் மிகவும் வித்தியாசமான ஆளுமைகளுடன் சிறந்த நண்பர்களாக இருந்தன. வெட்டுக்கிளி தனது நாட்களை உறங்கியோ அல்லது கிதார் வாசித்தோ கழிக்கும் போது எறும்பு உணவை சேகரித்து தனது எறும்பு மலையை கட்டும். எப்போதாவது வெட்டுக்கிளி எறும்பிடம் ஓய்வு எடுக்கச் சொல்லும். இருப்பினும், எறும்பு மறுத்து, தனது வேலையைத் தொடரும்.  விரைவில் குளிர்காலம் வந்தது, இரவும் பகலும் குளிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் எறும்புகளின் கூட்டத்தினர் சில சோள தானியங்களை உலர்த்தும் முயற்சியில் மும்முரமாக…

ஒற்றுமையே வலிமை

ஜெய் உப்புமா! ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல்…

கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி

 மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி  ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த கல்லைக் கண்டாள்.    அடுத்த நாள் அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள்,  பெண் தனது ஞானி உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள்.  பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து,  அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த கல் தனக்கு…

எனக்கும்தான்

அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன” என்றான்.    அதற்கு அந்தத் துறவி  என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது” என்றார்.  ஆனால் நான் ஒரு திருடன் என்றான் அவன்.  நானும் ஒரு திருடன்தான் என்றார் துறவி.  நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

 வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   68

மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   67

நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் – உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   66

அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   65

இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர் அது தான் செய்யப்பட வேண்டியது, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  73

அதில் உள்ள கருத்து இன்பத்தை, சந்தோஷத்தை இன்பம் சந்தோஷம் என்று சொல்லாமல் அறிவு என்ற ஒரு வார்த்தையில் குறிப்பிட்டு அந்த அறிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் அந்த அறிவை நாம் பெற்றால் நாம் நினைக்கின்ற, நினைத்துக் கொண்டிருக்கின்ற நிரந்தர இன்பம் நம் வசப்படும் என்கிறார்கள். அது என்ன அறிவு என்று சிந்தித்தால் அந்த அறிவுக்கு பிரபஞ்ச அறிவு என்ற விளக்கம் வருகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  72

இது எதனால் தொடர்ந்து இன்பம் தர கூடியது மனிதனிடம் _நிறைய இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் அவனுக்கு இன்பம் எது தந்ததோ அதனை சீ சீ என்று ஒதுக்கிறானே இது ஏன்? இப்படி சிந்தித்துக் கொண்டே போனால் நாம் வேதங்கள் உபநிஷத்துகளிடம் தான் சென்றடைய வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை அது பொய்யான கற்பனையாக நமக்கு தோன்றினாலும் அதில் தான் உண்மையே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதில் மட்டும் தான் நிரந்தர இன்பம் பற்றியும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

உரையாடலின் ஒரு பகுதி 71

மனித வாழ்வின் லட்சியம் எது? இது வினா, பதில் நிறைய வருகிறது கூட்டி கழித்து பார்த்தால் மனிதன் சந்தோஷமாய் இருப்பது பதில், இத்தனை தான் என்று நினைத்தால் இதில் எத்தனை கிளை பதில்கள் சந்தோஷத்தை நாடி இன்பத்தை தேடி என்று மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுக்கு இன்பத்தை தந்துவிட்டதா என்றால் பூரண இன்பம் தரவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், நிரந்தர இன்பம் எது என்ற வினாவை வைக்க வேண்டியிருக்கிறது. இனிப்பு பண்டம்…

உரையாடலின் ஒரு பகுதி 70

வானின் நட்சத்திரங்களை விஞ்ஞானி கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். ஞானியின் உள்ளத்தில் வானின் நட்சத்திரங்கள் இடம் கொள்ளுகின்றன இவை இரண்டும் என்றுமே ஒன்றாகாது. எப்போதுமே எந்த துறையிலுமே அரை வேக்காடுகளினால், தான் கோளாறு உண்டாகிறது. ஆத்ம தரிசனத்தின் முன்னனியில் கருணை, அன்பு மிக முக்கியமானது ஆனால் ஆத்ம தரிசனத்தின் அரை வேக்காடான நிலையில் மத வாதம் கருணையற்ற ரணகளங்களை சரித்திரத்தில் ஏற்படுத்துகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 69

மனதிற்கு பற்றுதல் இல்லாத சூழ்நிலையில் இருந்தும் ஒட்டுதல் இல்லாத உறவுகளில் இருந்தும் விடுபட்டு வெளியேறுவது மனதிற்கு எத்தனை சந்தோஷம் தருகிறது. அந்த சந்தோஷம் நீடித்து நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? ஒன்று தான் செய்ய வேண்டும் பற்றுதலோடும், ஒட்டுதலோடும் பிரபஞ்சத்தை படைத்த இறையின் உணர்வோடு இருக்க வேண்டும் அத்தனைதான். விஞ்ஞானம் மனிதனின் உச்ச கட்ட முயற்சியின் விளைவு ஆன்மீகம், மனித முயற்சிகளை துறந்த ஆழமான செயலின்மையின் விளைவு.

சனி 10

சனி பலமுள்ளவர் தொழில்துறைகளில் விற்பன்னர்களைத் தோற்றுவிப்பார், பிறகு தியாகம் செய்வார், வேத தத்துவங்களை உணர்த்தி ஒருவரை விவேகியாக்குவர் எதிர்காலத்தை உணரும் மேதைகளையும் எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்களையும் உருவாக்குவார். சனி தன்னுடைய தசாகாலத்தில் பலமுள்ள சனி, 4  11  ஒருவரை மலையளவுக்கு உயர்த்தவும், இதர கிரக நிலைகள் பலவீனமாக இருந்தால் மலையிலிருந்து கீழே தள்ளவும் செய்வர்.

சனி 9

சனி, சுக்ரன் சஷ்டாஷ்டகமாக இருந்தால் நபும்சகராக இருப்பர். சனி 10 ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் விவசாயத்துறையிலும், உலோகத்துறையிலும், சிறிய நிறுவனத்தில் தொழில் செய்வர். சனி 10ல் பலமுற்று இருந்தால் உத்தியோக நிலை ஆட்டம் காணும், மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கும்.

சனி 8

சனி கும்பத்தில் இருப்பின் பல தொழில்களில் ஈடுபடுவர், கோபிஷ்டி, குடி பழக்கம், கெட்ட பழக்கம் பேச்சில் துடுக்கு இருக்கும், உண்மை இராது.  சனி மீனத்தில் இருப்பின் அரசாங்கத்தில் செல்வாக்கு, வாக்குவன்மை, ஸ்தாபன தலைமை, நல்ல மனைவி மக்கள், நற்பண்பு, தெய்வீக நெறியில் ஈடுபாடு உண்டு. சனி, சந்திரன் இருவரும் நீசம் பெற்று சூரியன் கும்பத்தில் இருந்தால் சரீர உறுப்பு பலவீனமடையும்.

சனி 7

சனி விருச்சிகத்தில் இருப்பின், கடின உழைப்பு, உடல்நலக்கோளாறு, கோபகுணம், பொறமை குணம் உள்ளவர். சனி தனுசு ராசியில் இருப்பின் செல்வம் குவிப்பார்கள், மனிதாபிமானம் உள்ளவர், நல்லொழுக்கம், மென்மைத்தன்மை அமையும், தலைமை பொறுப்பு வகிப்பர். சனி மகரத்தில் இருப்பின் சொந்த ஊரைவிட்டு அன்னிய ஊரில் வாழ்வர் அறிவாற்றல், புகழ் உன்னதஸ்தானம் ஏற்படும், வசதியான வாழ்க்கை அமையும்.

சனி 6

சனி சிம்மத்தில் இருப்பின் உறவினர்களுடன் சண்டை சச்சரவு கெட்ட செயலில் நாட்டம் மக்கள் நலம் திருப்திகரமாக இராது. உத்தியோகம் செய்து பொருள் சேர்ப்பார்கள். சனி கன்னியில் இருப்பின் மற்றவர்களுக்காக தியாகம் புரிவர், ராணுவத்துறையில் பொறுப்பு வகிப்பர், பொருளாதார சுபிட்சம் சீராக அமையாது. சனி துலாத்தில் இருப்பின் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பர், தலைமை தாங்கும் தகுதி ஏற்படும், வெளிநாடு செல்வர், தொழில் துறையில் அபிவிருத்தி காணலாம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 6

திருப்புன்கூர் நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 5

சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 4

பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 3

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது 

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 2

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 1

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

சனி 5

சனி ரிஷபத்தில் இருப்பின் அடிமைத்தொழில் செல்வ சபிட்சமிராது. கெட்டசகவாசம் இருக்கும், ஒழுக்கத்தில் தரம் குறைந்திருக்கும். சனி மிதுனத்தில் இருப்பின் கடுமையாக உழைப்பவர்கள், பெரிய நிறுவனத்திற்கு தலமை ஏற்பார், குணப்போக்கு நன்றாய் இராது. சனி கடக்ததில் உள்ளவர்கள் இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும், ஒய்வில்லாமல் உழைப்பார்கள், குடும்ப நலம் குறைவாக இருக்கும்.

சனி 4

சனி 1,3,6,9ல் இருந்தால் வாதம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 2ல் இருந்தால் ஜாதகர் தனது அறிவை கொண்டே சம்பாதிப்பர். சனி பலமுடன் இருந்தால் ஸ்ரீ தத்தாத்ரேயர் போன்றவரை பூஜை செய்தால் ஞானம் பிறக்கும். சனி மேஷத்தில் இருப்பின், கடுமையாக பேசுவர், கடினமாக உழைப்பவர், நீச்சனாகவும், நண்பர்கள் குறைவாகவும் பாபகாரியத்தில் ஈடுபடவர்.

சனி 3

சனி 3,8,11ல் இருந்து 5ல் ராகு இருப்பின் கர்மகிரியை செய்ய புத்திரர் இருக்கமாட்டார். சனியுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும், சனி நின்ற ராசிக்க 3,7,10ல் சந்திரன் இருந்தாலும் வசதியான வாழ்க்கைத்துணை அமையாது, சன்யாசிபோல் பற்றற்று வாழ்வர். சனி 1,5,10 ஆகிய இடங்களியொன்றில் இருந்து 1,3,6,11ல் ராகு இருப்பின் திருமண வாழ்வில் பிரச்சனை, விவாகரத்துவரை செல்லலாம்.

ப்ராணனே அமுதம்

ப்ராணனே அமுதம் என்கிறது ப்ரச்ன உபநிடதம். சூரியனாகச், சந்திரனாக, பஞ்ச பூதங்களாக விளங்குவது ப்ராணனே என்று அது கூறுகிறது. ஆணில் விந்துவாகவும், பெண்ணில் கருவாகவும் விளங்குவது ப்ராணனே என்று கூறுகிறது. பெறறோரின் சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும், அந்த உடலில் உயிராக நின்று உலகை அனுபவிப்பதும், அதற்காகப் புலன்களை இயக்குவதும் ப்ராணனே என்பது கோட்பாடு. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. மனிதனும் நிழலும் போல ஆன்மாவும் ப்ராணனும் பிரிக்க முடியாதது. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. அது தன் ஆசைகளுக்கேற்ற உடலைத்…

ப்ராணாயாமம்

ப்ராணாயாமம் என்பது யோக சாதனங்களில் முக்கியமானது. ப்ராணனின் சலனம் மனதின் சலனம் என்பார்கள். அதாவது ப்ராண சக்தி குறைவுபட்ட ஒருவனது மனது சலனமடைந்து கொண்டேயிருக்கும் என்பது அதன் உட்பொருள். அதனால்தான் யோகத்தின் படித்தரத்தில் ப்ராணாயாமம் நான்காவது நிலையாக உள்ளது. அதாவது ஒழுக்கம், உடல் நலம், ப்ராண சக்தி இது மூன்றும் இருந்தால்தான் ஒருவன் மனதைக் கையாளவே முடியும். இந்த மூன்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவன் மனதின் கைப்பாவையாகத்தான் இருப்பான். இந்த மூன்றையும் முறைப்படுத்திய பிறகுதான் அவன் புலனடக்கம்,…

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு உங்களைக் காட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்..   உங்கள் தூரத்தை வைத்து பின்வாங்கவும்.. ஏனெனில், தூரம் தான் சிறந்த பதில்!

எந்த அர்த்தமும் தராத

எந்த அர்த்தமும் தராத வார்த்தையும் இருக்கிறது.. எல்லா அர்த்தங்களையும் தருகின்ற மௌனமும் இருக்கிறது! மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது.. இரவலாக வாங்குகின்ற எதுவும்‌ மகிழ்ச்சியை தராது!

நாம் விரும்புவதால்

எப்போது யாரைப் பிரிவோம் என்று சொல்ல முடியாது.. ஆனால்.. யாரையும் பிரியாமலும் இருந்துவிட முடியாது! நாம் விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம்  கிடைப்பதில்லை.. வெறுப்பதால் கல்லறையும்  நம்மை விட்டு விட போவதில்லை..

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 64

அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  63

மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது நமது மதக் கருத்துக்களை அன்போடும் கனிபோடும் பார்ப்பதாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  62

இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  61

நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  60

மேலை நாட்டில், மேலை நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான் அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 153

வயிற்றுக் குழியில் குடல், இரைப்பை, லிவர் என்று பல கருவிகள் அமைந்திருக்கின்றனவென்றும் அவை ஒன்றுக்கொன்று அழுத்திக் கொள்ளுகின்றனவென்றும், அறிந்தோம். இந்த இறுக்கத்தை மேலிருந்து டையாப்ரமும், சுற்றிலுமிருந்து வயிற்று முன்பின் பக்கச் சதைகளும் அதிகமாக்கி நிறுத்துகின்றன என்பதும் தெரிந்த விஷயம் இந்த இறுக்கம் சிலர் வயிற்றில் ஒரு சதர அங்குலத்திற்குப் பத்து பவுண்டு ( ராத்தல் ) என்று கணக்கிடுகிறார்கள். சாதாரணமாயுள்ள மனிதர்களுக்கு இந்த இறுக்கம் உள்கருவிகளைக் கீழே இழுக்கும் பூமி ஆதர்ஷன சக்தியைக் தடுக்கப் போதும். இக்காலத்தில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 152

1. வயிற்றுச் சதையின் ( ABDOMINAL MUSCLES ) பலவீனம். 2. பெருங்குடல் சுவரின் சதை வீரியம், நரம்பு ஆட்சி இல்லாமையும் இவைகளின் கெடுதலும். வயிற்றுக் குழியின் ( ABDOMINAL CAVITY )  பின் சுவருக்கும் பெருங்குடல் மெஸோ காலன் (  MESO COLON ) என்ற தெளிவு சதை மடிப்புகளாய் ஒட்டப்பட்டிருக்கிறது. மெஸோகாலன் மீது குடல் கனம் விழுவதில்லை. வயிற்றுச் சுவர் சதைகள் தான் முக்கியமாய் பெருங்குடல் பாரத்தைத் தாங்குகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 151

மலச்சிக்கலை தடுக்கவும், ஒழிக்கவும் ஹடயோக சிகிச்சை தான் இணையற்றது. ஆராய்ச்சி செய்தால், இதன் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் முன் எழுதிய அத்தியாயங்களைப் படித்தவர்கள் மலச்சிக்கல் நிலையில் உடல் எந்நிலை பெறுகிறதென்று எளிதில் அறியலாம். இந்த நோயின் காரணங்களை இரண்டு பெரிய தலைப்புகளின் கீழ் குறிப்பிடலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 150

ஸர் ஆர்தர்கீர் ( SIR ARTHUR KEITH ), ஆபரேஷன் செய்து கொண்ட பதினைந்து நபர்களைப் பரிசோதித்து அதிருப்தி அடைந்தார். இக் காரணம் பற்றிச் சிறுகுடல்மாறுவதற்கு ஆரம்பித்தாம். இது குறுகித் தடித்து பெருங் குடலைப் போல் பார்வையில் வளர்ந்து விட்டதாம். டாக்டர் ஹர்ஸ்ட் ( Dr. HURST ), அவர்களின் ஆபரேஷன் ஆராய்ச்சிப்படி, ஜீரண சக்தியைக் கெடுத்து விடுகிறதாம். விஷம் ஏற்பட்டால், சிறுகுடல் முழுவதும் பரவ இடம் கொடுக்கிறதாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 149

இப்படி ஆபூர்வமாய் சம்பவிக்கும் நிலையில் ஆபரேஷன் தேவையே. இதைச் செய்துகொள்ள வேண்டியதுதான் இவ்வளவு உருத்தெரியாமல் பெருங்குடலே அழியாவிட்டால், அதை ஆபரேஷன் செய்து எடுத்து விடக் கூடாது.   கொஞ்சம் உயிரிருக்கும் குடல்களை எடுப்பதால் பலகேடுகள் விளைகின்றன. இந்த ஆபரேஷன் சிகிச்சை நிபுணர் பலருக்கு அறுத்து எறிந்து விட்டார் .எல்லோரும் குணம் அடையவில்லை. உயிரற்ற அழிந்த குடலை வைத்திருந்தவருக்கு சுகம் ஏற்பட்டது. சிலர் ஆபரேஷனுக்குப் பின் நோயாளிகளானார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 148

இந்த “காலன்” எல்லாம் கேவலம் கோணிப்பையாக நின்றிருந்தது. இதில் விழுந்த சாமான்களை பூமியின் ஆகர்ஷண சக்தியாலாவது, வயிற்றின் மேலமுக்கத்தாலாவத தான் வெளியேற்ற முடியும். இந்தக் “காலனி”ல் சேர்ந்த வாயுவானது வயிற்றையே ( ABDOMEN ) மிகவும் உப்பச்செய்ய இதன் சதைகளெல்லாம் உயிர்த்தன்மையை இழந்து, மலப்போக்குக்கு ஒத்துழைக்கச் சக்தியற்றதாய் நின்றன”.

சுந்தர யோக சிகிச்சை முறை 147

“ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தேன்.  பெருங்குடலையும் முழுமையாக எடுத்துவிட்டேன். சுமார் மூன்று அடி நீளமும், நான்கு அல்லது ஐந்து அங்குல குறுக்கு அளத்தையுமிருந்தது. இதன் வெவ்வேறு பாகங்களிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்ததில், அவைகளில் சதைப் பற்றே (  MUSCULAR TISSUE ) இல்லை இதிலிருந்து இந்தக் குடலின் சதைச்சுவர்கள் முற்றிலும் செத்துவிட்டன என்பது விளங்கியது.

சுந்தர யோக சிகிச்சை முறை 146

வயிற்றுச் சதைகளின் சக்தியின்மை. குடல் உளுத்தல் பெருங்குடலையே அறுத்தெடுத்து விடுகிறார்கள் என்று முன் கூறினோம். இது சாதாரணமாக அவசியமில்லை. இதனால், எல்லோருக்கும் குணம் ஏற்படாது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். மிக ஆபூர்வமாகத்தான் நோயாளியின் குடலை “ ஆபரேஷன்” செய்து தீரவேண்டும். ஆபரேஷன் செய்த ஒரு “கேசை” சர்ஜன் ஒருவர் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

சுந்தர யோக சிகிச்சை முறை 145

உணவுத் தவறுதலாலும், பெருங்குடல் புண் வருவதாலும், மலச்சிக்கல் நிலைத்துவிடும். இடுப்புக்கான நரம்புகள் கெடுவதாலும் இது உண்டாவதுண்டு. மலச்சிக்கலுண்டாக, ஒரு பெரும் கெடுதிச் சக்கரம் ஏற்படுகிறது.

உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 2

தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா! எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார் நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய் . எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு” என்றார் துறவி. அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.…

உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 1

அந்த மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை…

முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே 2

மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார். இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது…” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார். இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர். மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மந்திரி வேடனிடம் பேசி, அவர்…

 முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே  1

ஒரு அரசன் யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில், “மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார். நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார் படுத்துகிறேன்.” எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?” மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத் தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார் . “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், விலங்குகள்…

நான் இங்கு வெறும் பிரதிநிதி   2

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும்” என்ற ஞானி “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்” முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா???” இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்?? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்???”” விழித்தான்…

கதை 18  நான் இங்கு வெறும் பிரதிநிதி  1

ஒரு அரசன், ஞானியிடம் “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?” என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு”…

கதை 17ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்

முன்பு ஒரு நாடு பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை…

சனி 2

சனி 5ம் பாவத்தில் இருப்பின் புத்திர சுகம் இருக்காது. சனியுடன் மாந்தி சேர்ந்திருந்தால் வாழ்வில் சிரமமே ஏற்படும். சனி லக்னத்திற்க 8ல் இருந்தால் தீர்காயுள் அளித்து செல்வத்தினையும் அளிப்பார். சனி, சுக்கிரசேர்க்கை எங்கிருப்பினும் திருமண வாக்கையில் குறைபாடோ இரகசிய முறைகேடோ இருக்கும்.

சனி 1

சனி லக்னத்தில் நின்றிடில் அதிகம் பேசாத மந்தநிலை, பலரையும் குறை சொல்லும் குணம் இருக்கும். சனீஸ்வரன் 7ம் பாவாதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் 7மதிபதியை பார்த்தாலும் நல்ல ஆயுளுடன் வாழலாம். சனி 8ம் பாவத்தில் இருந்தால் தீர்க்காயுசு. சனியுடன், சூரியன் நின்றிடில் ஜாதகரை நீசசெயலில் ஈடுபடவைக்கும். சனிபகவான், செவ்வாயுடன் 6ம்பாவாதிபதியோடு இருப்பின் திருட்டுபயம் ஏற்படும். சனியும், செவ்வாயும், சக்கிரனும் 2,4,7,12ல் ஏதாவத ஒரு பாவத்தில் இருந்தால் இருதார யோகம் உண்டு.

சுக்கிரன் 21

சுக்கிரன் அல்லது 7ம் வீட்டிற்கு அதிபதி சனி, சூரியனுக்கு இடையில் இருப்பின் திருமணம் நடைபெறாது.  சனி 7ம் வீட்டை பார்த்தாலும் திருமணமாவது அறிது. சுக்கிரன் நீச்சமாக இருந்தால் தன் இனத்திலேயே காதல்புரிந்து மணம் செய்து கொள்வர். சுக்கிரனுக்கு சுக்ரன் 6 ,8 ஆக ஆண், பெண்ணுக்கு இருக்குமாயின் இனிதான குடும்ப வாழ்க்கை அமையாது, அன்பாக இருக்கமாட்டார்கள்.

சுக்கிரன் 20

சுக்கிரன் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சிபெற்றோ செவ்வாயுடன் இணைந்து லக்கினத்திற்கு 1,4,7,10 ஆகிய இடத்தில் இருப்பின் பெண்களை விரும்புவர்களாகவும், இழிவு குணம் கொண்டோராகவும் இருப்பர். சுக்கிரனுக்கும் 7ம் அதிபதிக்கும் அல்லது 7மிடத்திற்கும் நல்ல சம்மந்தமாக காதல் திருமணம் கைகூடிவரும். சுக்ரன் உள்ள ராசியும் ( ஆண் ஜாதகத்தில் ) செவ்வாய் உள்ள ராசியும் ( பெண் ஜாதகத்தில்) ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஆகும்.

சுக்கிரன் 19

சுக்கிரன், சனி பரிவர்த்தனை பொதுவாக திருமண வகையில் நாட்டத்தினை தடுத்து ஆன்மீக வழியில் மனதை ஈடுபடுத்தும். சுக்கிரன் மகரத்தில் அமர்ந்தால் பெருமாள் மீது பக்தியும், ரிஷப சந்திரன் ஸ்ரீ வெங்டாஜலபதி மீது அளவற்ற பக்தி ஏற்படும். சுக்ரன் 7ம் பாவம், 7ம் அதிபதி ஆகியவற்றிற்கு, சனி, ராகு, கேது சம்பந்தம் ஏற்படின் பிரிவினைதரும், செவ்வாய் சம்பந்தம் ஏற்படின் விவாக ரத்து ஏற்படும்.

வாழ்க்கை 9

வாழ்க்கை என்பது கற்பனை அல்ல யதார்த்தம் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் பெறுவதற்கு எதை, எதை இழந்தோம் என்றும் இழந்ததற்கு எதை எதை எப்படி எப்படி எவர் எவரிடம் பெற்றோம் என்றும் நடு நிலையில் தனக்குள் உண்மையாய் சிந்தித்து பார்த்தால் மட்டுமே தெரியும் விளங்கும்.

மொழி 4

தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான். ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர் விதி வகுத்த வாழ்வை மீறி தான் வகுத்த வாழ்விற்கு விதி அமைத்து கொண்டவர்ளும் இருக்கிறார்கள்.

மொழி 3

சொல் _செவிக்கு புலனாகும் போது ஒலியாகவும் கண்ணுக்கு புலனாகும் போது எழுத்து வடிவில் இயங்குகிறது. இறைவன் விதியை வகுத்து எழுதி படைத்தான்.  மனிதன் எழுதி விதியை படைத்தான். கம்பன், காளிதாசன், வால்மீகி, திருவள்ளூவர், பாரதி போன்றோர் இந்த வகையை சார்ந்தவர்கள். இறைவன் உண்டாக்கிய நம் தலைஎழுத்தின் வரியும், வடிவமும் தெரியவில்லை, அதன் பொருளும் தெரியவில்லை. ஆனால் மண், உலகிற்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள் தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் எனும் பெயரும் சூட்டி உள்ளனர்.

மொழி 2

எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தது. சொற்கள் பொருள்களை உடையதாயிற்று அதில் பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரு பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி  நிலத்தில் வார்த்தைகள் விளைந்தது. ஒற்றை தனி மலர் போல் ஒர் எழுத்தில் விளைந்த சொற்களும் தொகுத்த மலர் மாலையை போல் பல எழுத்துக்கள் இணைந்த விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது.

மொழி 1

தனை புகழ தன்னிடத்திலே சொல் இல்லாத தனி தமிழ். எந்த மொழிக்கும் ஆதி வடிவம் ஒசைதான். முன் பண்படாமலும், வரையறையில்லாமல் வந்த சப்தங்களே ஒசை கால போக்கில் பண்பட்டு, வரையறையில் அமைந்ததே ஒலி, ஒலியும் ஒசையும் கண்ணுக்கு புலன்கா கண்ணுக்கு தெரியாத கடவுளை கண்ணுக்கு தெரியும் விக்கிரகங்களை உண்டாக்கி கண்டு வழிபட்டு இறையை அறிவது போல தோற்றமில்லா ஒலிக்கு தோற்றமாய் அமைவதே வரி வடிவங்களாய் வந்ததே எழுத்து எழுத்தின் மூலம் மொழிக்கு உருவம் பிறந்தது.

இராமாயணம் பற்றி –

1927 வையாபுரி புலவர் அறிஞர் குழு ஆராய்ந்து அறிவித்தது 124000 – தனி சொற்கள். 118 படலங்கள்       இடை செருகல்  10.368 பாடல்கள் மிகை பாடல் 1286   கம்பன் பயன் சொற்கள் 3. முதல் 3 1\2 லட்சம்

கம்பன் 3

கரையறியா காட்டாற்று வெள்ளம் போல கவி பொழிந்து வான்மீகி உலகுக்கு ஈந்த _ திரையறியா ஒட்டத்தை தேக்கி கட்டி திறன்மிகு கால்வாய்கள் செய்து பாய்ச்சி தரையறியா காவனத்தை தந்தான் தனி புலமை   கவிதை தச்சன் வில் கிடந்தது மிதிலை தனில் கல் கிடந்தது கானகம் தனில் நெல் கிடந்தது சடையன் வீட்டில் சொல் கிடந்தது கம்பன் மனத்தில் உதித்தெழுந்து ராமன் கதை

கம்பன் 2

கம்ப இராமாயணம் பற்றி மேல்படிந்த பிசின் அகற்றி மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து தேன் வார்த்து நூல் படித்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன். நாமக்கல் கவிஞர்

கம்பன் 1

கம்பன் என்றாலே நினைவுக்கு வருவது யுக நாயகனான ராமனின் கதையாகிய  ராமாயணமே, கம்ப ராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்க்கு தந்தவர் கம்பர். கம்பரின் ராமாயணம் தமிழ் பண்பாட்டின் நன்மைகளை முழுமையாக பிரதிபலிப்பது இவரின் காலம் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி, இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூர் என்னும் இடத்ததில் பிறந்தார். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் அவை புலவரான ஒட்டக் கூத்தரும் நளவெண்பா தந்த புகழேந்தியும் கம்பரின்…

ஆசிரியருக்கு உண்டான தகுதி வரையறை

நிலத்தை போல தம்மை அடைந்தவர்களை தாங்கும் பொறுமையும் மலையை போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ள குறையாத வளமும் நல்ல நறுமணம் தரும் மலரை போன்ற மென்மையும் துலாகோலை போல நடுநிலை பிறழாத தன்மையும் உடையவரே ஆசிரியர் ஆவர்.

அறிவு என்பதற்கு வரையறை

அறிவு என்பதற்கு வரையறை நல்லதின் நலனும் தீயதின் தீதும் உள்ளவாறு அறிதலே அறிவு என்பதாம் இதில் எங்கு பிழை ஏற்படினும் மிக்க கற்றவரேயானாலும் அவர் அறிவு அற்றவரே

வாழ்க்கை 8

நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும் போது நம்முடைய நினைவில் அந்த வினாடி வரை தோன்றாத ஏதேனும் ஒரு திசையை காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதின் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே யாரோ வந்து போகிறார்கள். அதன் காரணங்கள் நமக்கு தெரிவதில்லை நமக்கு தெரிந்த காரணங்கள் அதற்க்கு பொருந்துவதில்லை இது  தான் வாழ்க்கையின் சூட்சுமம்

வாழ்க்கை. 7

நம்முடைய வினைகள் நமக்குத் தெரியத் தொடங்கும் போது நாம் எதை, எதை எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டி வரும் என்பது தெரிந்து விடும். அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய் விடும், பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும். தெளிவு வந்து விட்டால் சிந்தனை சரியாய் அமையும். சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும். சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும் அப்போது பாபம் பின் தொடராது. பாபம் தொடராத வாழ்க்கை அமைவது…

வாழ்க்கை. 6

தன்னைத்தான் அறிய வேணும் சாராமல் சார வேணும் பின்னைத் தான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி – அகப்பேய் சித்தர். தேவையைப் பற்றியும் ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அது தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும். பேயறிவு என்று அவர் சொன்ன காரணம் அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தை போக்காது, புண்ணியத்தை சேர்க்காது முக்கியமாக தன்னை அறிந்திருக்காது. தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத்…

வாழ்க்கை.5

உண்மையில், நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப்பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால் நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம். நாம், உடலை பற்றி அறிந்து கொண்டால் தேவையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது இரண்டை பற்றியும் அறிந்து கொண்டவர் எல்லாம் அறிந்தவர் ஆகின்றனர்.

வாழ்க்கை. 4

 நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம். இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்ல தோன்றுகிறது,  இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது நோக்கமாகிவிட்டது. அப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறிதானே போகும். வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மானது வினைகளை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்து விட்டது.

வாழ்க்கை.3

தன்னைப் பற்றிய சிந்தனையை  தேவைகளில் செலுத்தும் போது நன்மை  நம்மை நாடி வரும் தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக, அதிகமாக தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும்.  இதை புண்ணியம், பாபம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில் நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும்.

வாழ்க்கை. 2

உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்ய தொடங்கிவிடுகிறது. அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல் அமிர்தமும் நஞ்சாகிறது. நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கி விட்டாலே நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.

வாழ்க்கை. 1

மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும்  நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது, பசி, தூக்கம், போன்றவை, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும்போது, நன்மையோ, தீமையோ உண்டாகிறது.

வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

    நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.   இந்த நொடி முதல் யாவும் மாறும், மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்…. செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டு வளமாக வாழ்வோம்…

சிங்கிரி குடி நரசிம்மர்

கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது. ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

உத்திரகோசமங்கை 2

உத்திரகோசமங்கை கோவில் அமைப்பு முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு…

உத்திரகோசமங்கை. 1

 இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.  இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது. உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  59

மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   58

ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  57

இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  56

வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர், ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி – இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார்.

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

சுக்கிரன் 18

சுக்ரன், குரு விருச்சிக லக்னகாரர்களுக்கு சமசப்தமாக இருந்தால் சிற்றின்ப நாட்டம் அதிகம் ஏற்படும். சுக்கிரனுக்கு கேந்திர கோணங்களில் சனி, ராகு, கேது நின்றால் யோகம் ஏற்படும். சுக்கிரனுடன் ராகு அல்லது கேது, சூரியன் கூடி நின்றால் ஜாதகரைத் தேடி வம்புகள் வழக்குகள் வரும், பொருள் இழப்பும் ஏற்படும்.

சுக்கிரன் 17

சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம், நிறைய பெறுவார்கள். சுக்ரன் 4ல் இருந்தால் சிறு பிராயம்  முதலே தாய்மீது பாசம் அதிகம் இருக்கும்.  தாய் நலனில் கவனம் செலுத்துவார், அறிவிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராய் விளங்குவார். சுக்ரன் விருச்சிக லக்னகாரர்களுக்கு 7மிடத்ததிபதியாக, களத்திரகாரகனாக ஆகிறார், காதல் திருமணத்தையும், சனி, ராகு கலப்பு திருமணத்தையும், தேய்பிறைச்சந்திரன் குறையுள்ள களத்திரத்தையும் தருவார்.

சுக்கிரன் 16

சுக்ரன் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் அறிவாற்றல் இருக்கும், வேற்றுமாநிலத்தில் உழைத்து வாழ்வார்கள்.   அழகுசாதனங்களில் நாட்டமுள்ளவராய் இருப்பர், காதல் தோல்வி ஏற்படும். இனிமையாக பேசுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பெலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.

சுக்கிரன் 15

சுக்கிரன், சந்திரன் கூடி மேஷம், விருச்சிகம், கும்பம், மகரம் இவைகளில் ஒன்றில் இருந்து லக்னமாகி அதை சனி, செவ்வாய், சூரியன், ராகு நோக்கின் அந்த ஜாதகி விபசாரியாவாள். சுக்கிரனும், லக்னாதிபதியும் சேர்ந்து 6,8,12ல் இருப்பின் அந்த ஜாதகர் காமசுகத்தில் அதிகம் ஈடுபடமாட்டார்.  வெறுப்புள்ளவர் ஆவர். சுக்ரன் கும்பத்தில் இருப்பின் தோற்றப் பொலிவுடனிருப்பார்கள், மனதில் கலவரமும், மனைவிக்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.

சுக்கிரன் 14

சுக்கிரன் பாவரோடு கூடி 6,8ல் பலம் பெற்றிருக்கப் பிறந்தவர் ஸ்திரீ சபலம் உள்ளவன். சுக்கிரன் களத்திராதிபதியாகி அந்த சுக்கிரனை சனி, செவ்வாய் பார்க்க பிறந்தவர் எப்போதும் விலை மாதர்கள் தொடர்பு உடையவர். அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் அமையப்பெறின், ஜாதகி தன் இச்சையினாலேயே பல பேர்களை சம்போகம் செய்து சந்தோஷமாக இருப்பாள்.

சுக்கிரன் 13

சுக்கிரன் துலாத்தில் அமர்ந்து அதுவே லக்னமாயின் பல சிறு தொழிலில் நவீன பொருளை விற்று, தொழில் செய்து சம்பாதிப்பர். சுக்கிரன் மிதுன வீட்டிலோ, ரிஷப வீட்டிலோ, துலாம் வீட்டிலோ இருப்பின் 4ஜாதகர் காமுகனாக இருப்பான். சுக்கிரன் வீட்டில் லக்னாதிபதி இருப்பினும் சுக்கினுடன் சேரினும், பார்ப்பினும் அந்த ஜாதகர் ஸ்தீரிலோலன்.

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்.. உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.. இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 5

அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம் அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். “உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?”  எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?” “அப்படியா?” பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும் விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.  தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 4

பொதுவில் மனைவியைத் திருத்த வேண்டாம்  உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும். கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும் கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 3

எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள் நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள் உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்..2

 காதலில் செய்யுங்கள்  காதலில் திருத்த வேண்டும்.  வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.  3a: விமர்சிக்க வேண்டாம் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது.  ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள்.  ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.  திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்  திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல  3b: கணவர் A கூறுகிறார்  இது என்ன வகையான…

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்…1

 உங்கள் குரலைக் குறைக்கவும் மனைவியைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்? கத்துவதால் பிரச்னை பெரிதாவது தவிர்க்கமுடியாது அப்படி பெரிதாவதால் நம் நிம்மதி கெடும் அதனால் கத்துவதை செய்யாதீர்கள்

மன்னிப்பு கேட்பது 3

ஒரு மனிதன் என்பவன் ஒருவனல்ல என்றும் எல்லா மனிதனும்  ஒன்றுதான் என்றும் இங்கு நட்சத்திரத்திற்கும் எறும்பிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரிதல் தொடங்கியிருக்க வேண்டும்… தெரியாமல் சிந்தி விடும் தேநீருக்காக சகமனிதன் மீது கோபத்தை வெளிப்படுத்தாத நிமிடத்தில் இருந்து நாம் மன்னிப்பிற்கான முதல் விதையைக் கண்டெடுக்கிறோம் மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் வெறும் செயல் அல்ல ஞானத்திற்கான சிறு ஒத்திகை.

மன்னிப்பு கேட்பது 2

ஒரு குழந்தையின் புன்னகையில் சில நிமிடங்களாவது நிஜமாகக் கரைந்திருக்க வேண்டும். யாரும் பார்க்காத போதும் ஒரு கவிதைக்காக அழுதிருக்க வேண்டும். சக மனிதனின் புன்னகையின் மதிப்பை கண்ணீரின் அர்த்தத்தை மரணத்தின் விஸ்வரூபத்தை நிஜமாகத் தரிசித்திருக்க வேண்டும்.

யதார்த்தம்!!

கஷ்டப்பட்டு படிச்சோம் கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தோம்.. கஷ்டப்பட்டு காதலிச்சோம் கஷ்டப்பட்டு கண்ணாலம் கட்டிகிட்டோம்.. கஷ்டப்பட்டு புள்ள பெத்து வளக்குறோம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுறோம்.. கஷ்டப்பட்டு கடன                  அடைக்க ஓடுவோம்.. கஷ்டப்பட்டு கடைசில கஷ்டப்படாம செத்துட்டா போதும்ன்னு நினைச்சு நினைச்சு.. கஷ்டப்பட்டுட்டே செத்திடுவோம்..

வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

கணவன்கள் – படபடப்பு மனைவிகள் – நச்சரிப்பு டீன் ஏஜ்க்கள் – பரபரப்பு மாணவர்கள் – ஏய்ப்பு மாமியார்கள் – சிடுசிடுப்பு மருமகள்கள் – கடுகடுப்பு வக்கீல்கள் – ஒத்திவைப்பு டாக்டர்கள் – புறக்கணிப்பு அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு வயதானவர்கள் – தொணதொணப்பு ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு சிரிப்பு. இது உடம்புக்கு மிகச்சிறப்பு…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  55

மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  54

யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 53

 பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  52

மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 51

உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 50

தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்கு நெருக்கமாகத் தெரியும்.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

அந்தணர்கள் மனிதனை பற்றி

அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள் மனிதனின் போருக்கு காரணம் மண், பெண். அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை.  என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை. கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து. இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி முடிந்தால் நீதி சொல்வது இல்லையேல் மவுனமாக இருப்பது.

எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்

இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம். அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு. அந்தணர்கள் கர்வம் வினோதமானது அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும்.  வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும். எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் அதுதான் வாழ்க்கையின் அடிப்படை உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணர்வு உனக்குள் நீ

உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது,  அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது. பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.  

சுக்கிரன் 12

சுக்கிரன் மீனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர். உயர்ந்த தன்மைகள் குடிகொண்டிருக்கும், உயர்ஸ்தானம் வகிப்பார்கள்.  சுக்கிரன் தனுசில் இருக்கப் பிறந்தவர்கள் நல்லொழுக்கம் இருக்கும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள், எல்லோராலும் விரும்பப்படுவார்கள் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். சுக்கிரன் 9,7,5 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.

சுக்கிரன் 11

சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள். சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர், ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும் துடுக்காகப் பேசுவார்கள்.  மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர் பல செல்வம், கல்வியறிவு கூடும்.  புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.

சுக்கிரன் 10

சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.   காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும். சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.

சுக்கிரன் 9

சுக்கிரனும், செவ்வாயும் 7ல் இருந்தால் அந்த ஜாதகர் விதவை பெண்ணை விவாகம் செய்வர். சுக்கிரன் 12ல் இருந்தால் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். கலைத்திறனும் உண்டாகும்.  ஆனால், தொழில் தடையைச் சந்திக்கநேரும். சுக்கிரன் 4ல் இருந்தால் ஜாதகர் மற்றையோரைவிட அந்தஸ்திலும், தாய் மீது பாசம் அதிகரித்தும், அறிவில் உயர்ந்தவராய் விளங்குவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 5

உலகத்தை யாரால் வெல்ல முடியும் ? சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ? எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. செவிடன் யார் ? நல்லதைக் கேட்காதவன். ஊமை யார் ? சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். நண்பன் யார் ? பாவ வழியில் போகாமல் தடுப்பவன். யாரை விபத்துகள் அணுகாது ? மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 4

எது மரணத்துக்கு இணையானது ? அசட்டுத்தனம். விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ? காலமறிந்து செய்யும் உதவி. இறக்கும் வரை உறுத்துவது எது ? ரகசியமாகச் செய்த பாவம். எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ? துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் ! சாது என்பவர் யார் ? ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 3

உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 2

எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள்  1

எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். எதிரி யார் ? சோம்பல்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  4

அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப்பல புராண வரலாறுகளும் சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.  

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  3

சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர், அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள், வண்ண சித்திரங்களாக உள்ளனர்

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  2

 லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதும் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும் புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  1

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல்திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.