கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32

 2 – ல் புதன் நிற்க, 2 – க்குடையவர், லக்கினத்தில் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு 10 – ல்நிற்க, அவருக்கு 3 – ல் சுக்கிரன் நிற்க, யோக்கியவான். வாக்குவளம், யூகம் கல்வி உடையவர். லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு திரிகோணமடைய லக்கினத்தைப் பார்க்க சாஸ்திர ஆராய்ச்சியாளர் ஆவார்  2 – ல் குரு நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  31

 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, 7 – ல் சந்திரன், புதன் நிற்க தமிழ் பண்டிதர் பாக்கியவான். 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, சந்திரனும், புதனும் கேந்திரமடைய 4 – க்குடையவர் 11 – ல் நிற்க செவ்வாய் கேந்திரமடைய அல்லது சுக்கிரன், செவ்வாய்க்கு 3 – ல் நிற்க, பாக்கியம் செல்வம், பல பாஷை பண்டிதர்.

சந்தோஷம் என்பது 5

மனித உணர்வுகளில்,  உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று ஆளுமை அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம்.  அதுமட்டுமல்ல மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும் உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால் அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும் இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.  மனிதன் இவற்றோடு இருப்பவன் இவைகளை இல்லாமல் செய்ய முடியாது ஆனால் இவைகளை செயலற்றதாக்க முடியும் அது…

சுந்தர யோக சிகிச்சை முறை 51

நோய் தடுக்க எல்லாவற்றிலும் மிதம், சமாதானம், ஹிதம் என்பவை பிணைய வேண்டும். சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் யோகியாக வாழ வேண்டும். யோக வாழ்க்கையை கைப்பற்ற வேண்டும்.  யோகி என்றால் தாடி, ஜடை, அழுக்கு, மணி, ருத்திராட்சம், ஆடம்பரம், படிப்புச் சொற்களுடன், மலை மடங்களில் வாழ்கிறவனல்ல. 

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  13

(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம் இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும் எங்ஙனம் பிறவியை அடைவான். ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும் தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ, தள்ளத்தக்கதோ ஆகாது.

ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் 

நாம் அறிபவை அனைத்தும் கூட்டுப் பொருளே. பகுத்துப் பார்ப்பதன் மூலம் புலனறிவை நாம் அடைகிறோம். மனம் எளிமையானது, தனிமையானது, சுதந்திரமுள்ளது எனக் கருகிறது துவைத மதம். தத்துவஞானம் என்பது ஏட்டுக் கல்வி மூலம் கிட்டுவதல்ல. அதிக நுால்களைப் படிப்பதன் மூலம் மனக் குழப்பம்தான் அதிகமாகிறது. ஆழ்ந்த ஆராய்ச்சி இல்லாத தத்துவஞானிகள் மனத்தைத் தனிப்பொருள் என்கின்றனர். அதன் விளைவாக, மனிதன் எண்ணச் சுதந்திரத்துடன் வாழலாம் என்று அவர்கள் முடிவு கட்டினர். மன நுாலோ  மனத்தை ஒரு கூட்டுப் பொருளாகக்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம்  இரண்டாவது காண்டம்    54

வாத தோஷம் …..  வாத தோஷத்தில் தேகமானது தொட்டால் அளவாய் இருக்கும். பித்த தோஷம் …..  பித்த தோஷத்தில் தேகமானது தொட்டால் அதிக உஷ்ணமாயாவது அல்லது சீதளமாயாவது இருக்கும். கப தோஷ குணம் …..  கபரோகத்தில் தேகம் தொட்டால் குளிர்ச்சியாயும் சில்லிட்டு இருக்கும். துவந்த தோஷ குணம் …..  துவந்த தோஷத்தில் தேகமானது தொட்டால் இரண்டு தோஷ  குணங்களை அல்லது சகல தோஷ  குணங்களை பெற்று இருக்கும்.  

சுந்தர யோக சிகிச்சை முறை  50

உடலுழைப்பே அற்று ஓய்வின்றி மூளை வேலை செய்யும் மானிடரும் உழைப்பின் சீர் தூக்கின்மையால் நோய் கொள்வர், நோயைத் தடுக்க, மூளை வேலையும் வரம்புக்குட்பட வேண்டும். மனஉழைப்பு, இதை மனக்கவலை என்று பொதுவாகக் கூறலாம்.  வாழ்க்கையின் சம்பவங்கள் அதிகமாக மனதைத் தாக்கிவிட்டால், வலிவு குன்றும், சிகிச்சைக்கடங்காப் பிணிகள் உண்டாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  12

ஆத்மா வெளியே உள்ள பொருள்களைப் போல் அறியப்படுவதன்று. அதில் பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லை. ஆகையால் அதை எவராலும் கொள்ளவோ தள்ளவோ இயலாது. உள்ளும், புறமும் எங்கும் வியாபித்ததும் பிறப்பு, தேய்வு, மூப்பு, சாவு முதலியவற்றிற்க்கப்பாற்பட்டதுமான ஆத்மா தான் என்ற அறிந்து கொண்ட பின் ஒருவர் எதற்காக ஒரு சிறிதேனும் அஞ்சவேண்டும்?

எண்ணம் என்பது சொல்லின் ஆற்றல்

பிரபஞ்சம் என்பது எண்ணம். அந்த எண்ணத்தை வேதங்கள் வார்த்தைகளால் வெளியிடுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை நம்மால் ஆக்கவும் அழிக்கவும் முடியும். மந்திரங்களை  உச்சரிக்குந்தோறும் காட்சிக்கு எட்டாதிருந்த எண்ணம் உருப்பெற்று புறப்பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இப்படி கர்ம காண்டத்தில் இருப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர். நம்மில் ஒவ்வொருவருக்கும் படைக்கும் ஆற்றல் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். மந்திரங்களை உச்சரிப்பதால் அவற்றுக்குத் தொடர்புள்ள எண்ணம் உருவாகிறது. விளைவையும் கண்கூடாகக் காணலாம். எண்ணம் என்பதுசெயலின் ஆற்றல். எண்ணத்தின் வெளிப்பாடே சொல் என்று மீமாம்சகர்கள் கூறுகின்றனர்.…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  53

ம ல ப ரி க்ஷ வாத தோஷ  மலம் …..  வாத தோஷத்தில் மலமானது  கருப்பு  நிறத்துடனும் பந்தகித்து  இருக்கும். பித்த தோஷ மலம் …..  பித்த தோஷத்தில் மலமானது, மஞ்சள்  நிறம்  அல்லது சிகப்பு  நிறமாயாவது விசர்ஜனமாகும். கப தோஷ மலம் ……  கபத்தில் மலமானது  வெண்மை நிறத்துடன் ஆமத்துடன் கலந்து நுறை நுறையாக வெளியாகும். துவந்த தோஷ மலம் …..  துவந்த தோஷத்தில் இரண்டு தோஷ குணங்கள் கூடி மலம் வெளியாகும். சந்நிபாத…

சுந்தர யோக சிகிச்சை முறை 49

மானிட வாழ்க்கை, இந்த பொய் நாகரீக சுயநல புலனடிமை விலங்குகள் உலாவும் உலகில் எளிதல்ல, அறிவைப் பெருக்கி நற்புத்தியைத் தீட்டி வாழாவிட்டால், கேடும், தோல்வியும் பற்றிக் கொள்ளும். அதிக உழைப்பு உடலை அழிக்கும்.  நோயைத் தடுக்காது.  இந்த அதிக உழைப்பு உடலை மட்டும் குறிப்பதாகக் கருதக்கூடாது.  மூளையையும், மனத்தையும் குறிக்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  11

ஆத்மா  இங்கே இப்பொழுது உளது, இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி வாக்கியங்களைக் கொண்டு ஒருவன் ஜீவாத்மாவை பிரம்மம் என்று இங்கேயே இப்பொழுதே கண்டு கொள்ள வேண்டும். 

சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.

சந்தோஷம் என்பது 3

மனிதனின் மனம் உறவுகளில் இன்பம் கொள்கிறது. அடுத்ததாக கலை, இலக்கியம், புகழ், வெற்றி, ஏதாவது ஒரு துறையில் அங்கீகாரம், போன்றவற்றில் இன்பம் பெறுகிறது. இதுகளில் ஒன்றின் பின் ஒன்றாக சிந்திப்போம். உறவுகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த உறவுகளை பற்றி ஒரு முழுமையான புரிதல் வேண்டும் அப்படி புரிந்து கொள்ள உறவுகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் மனிதர்கள் பெரும்பான்மையோருக்கு அதில் ஏனோ அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை

சந்தோஷம் என்பது 2

சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட அடிப்படையானது அக காரணியான மனமே அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.   அப்படி அந்த முடிவிற்கு வந்த பின் இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின் அதில் நாம் கவனம் செலுத்தி அதை கையாள பழகிக் கொண்டால் நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும் அதற்கு உண்டான விஷயங்கள் எது,…

குருசந்திர யோகம் 1

குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் “குருசந்திர யோகத்தை “வாரி வழங்குகிறார் “கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே” பாடல் விளக்கம்:- குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும். மனைவி வழியில் தனலாபம்…

சந்தோஷம் என்பது  1

இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால் மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.    ஒவ்வொரு  சந்தர்ப்பத்தில்  ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால் படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது இன்னொருவருக்கு இன்பம் படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு  இன்பம், சந்தோஷம் தருகிறது.  இதை ‍இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே  போகும்  இதிலிருந்து…

மனம் எனும்  7

இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால் அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம். இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை. சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும், அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.

மனம் எனும்  6

 நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால் முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை, காரணம்,  மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும், வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய் இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது. அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக…

மனம் எனும் 5

உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும், மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து பழக, பழக தெரிந்துவிடும். இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது, ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள் அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்…

மனம் எனும் 4

இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன் என்ற வினா வரலாம், பதில் இதுதான் தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம், அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால் சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். அதாவது, பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்  முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்

மனம் எனும் 3

 தவறு நடக்காததின் காரணம், அறிவானது மனதை ஆட்சி செய்ததால் வேறு சிலருக்கு அறிவு ஆட்சி செய்யப்படாத மனமிருக்கும் அங்கே தவறு என்பது சர்வ சாதாரணமாக நிகழும், நிகழ்த்தப்படும் அதில் பயமோ, குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்காது.  அவரவர் வாழ்க்கையில் மேலே சொன்ன விஷயங்களை எத்தனை முறை கடந்துள்ளீர்கள், அதில் உங்களின் செயல்பாடுகள் எந்தெந்த நிலையில் இருந்தது என்பதை கவனித்தலே தன்னை அறிதலுக்குண்டான முதல்படி.

மனம் எனும்  2

மனம் பற்றி படறும் விஷயத்தை, பலதுடன் இணைத்து சீர் தூக்கி பார்த்து அதனால் ஏற்படும் விளைவுகளை  சொல்லுவது அறிவு.  ஆனால், பல சமயங்களில் அறிவு சொல்லுவதை மனம் கேட்பதில்லை எதார்த்தமான உண்மைநிலை இதுதான்.         யாருக்கும் தவறு செய்ய பயமே கிடையாது.   ஆனால், தவறு வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் மட்டுமே உண்டு.  இங்கு நாம் இதை கவனித்தால் பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது.   தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டது.

மனம் எனும்  1

        மனம் எனும் வார்த்தை ஒன்றுதான் ஆனால் மனம் எப்போதும் இரண்டானது ஏமாந்தால் அது மூன்று, நான்கு, ஐந்தாகவும் இருப்பது சலனப்படுவதும், சஞ்சரிப்பதுவுமே அதன் குணம் மனம் ஒரு விஷயத்தை பற்றும் போது அது எதைப்பற்றியும் சிந்திக்காது அதாவது நல்லது, கெட்டது, சரி, தவறு, தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம், என்கிற எதையும் கவனிக்காது, கண்டு கொள்ளாது.  ஆனால், அறிவு இதையும் இதற்கு மேலே உள்ளதையும் சொல்லும்.  மனம் அறிவாக மாறும் போது அல்லது மனம் அறிவால்…

எல்லைகளை நிர்ணயித்து  3

சுருக்கமாகச் சொன்னால் — உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை , நினைத்ததெல்லாம்  சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,  எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை  தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது , எல்லாவற்றிக்கும் போராட்டம்  சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம் எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும் அந்த  கேள்வியில் இருந்து  தன்னை கவனித்தல் தொடங்கும். அது தன்னை அறிதலுக்கு அழைத்து…

எல்லைகளை நிர்ணயித்து 2

எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும்.  படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும் அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை தனக்குள் பிரயாணிப்பதை தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது ஆனால் எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான் ஏன் என்ற கேள்வி வரும் அது அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.  அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,…

எல்லைகளை நிர்ணயித்து 1

ஓடும் போது அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது மனம் அடையும் நிலை, சந்தோஷம், திருப்தி என்பதைவிட வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும் அது நாம் அடைந்த எல்லையை மீண்டும் விஸ்தாரப்படுத்தி மீண்டும் நம்மை ஓட வைக்கும் அந்த ஓட்டத்திலும் எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால், மனதினால் தன்னைப் உற்று பார்க்கவோ, தனக்குள் செல்லவோ தோணாது அப்படி செய்து பார் என்று சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும் ஏளனமாய் கிண்டல் செய்யும் எல்லை கோடுகளை வகுத்து…

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்அவரவர் விருப்பம் கேட்காமல்  ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டு போகும் கட்டாறு. திருமணம், குழந்தை, செல்வம் சேர்த்தல் நோய்வாய்ப்படுதல் எல்லாம் பூர்வ வினை இதை புரிந்து கொண்டாலே மனம் அமைதியின் பக்கம் திரும்பிவிடும். அப்படி அமைதியின் பக்கம் மனம் திரும்பிவிட்டாலே மனம் தியானத்திற்கு பக்கம் சென்று விடும்

தியானம் என்றால்

  தியானம் என்றால் என்ன?   ஒவ்வொருவர் ஒவ்வொன்று  சொல்லுகின்றனர் தவறில்லை இதையும் சேர்த்துக் கொள்வோம். வேலையோடு வேலையாய் தன்னை மறந்து மூழ்கி விடுவது.  கடந்த காலத்திலும் இல்லாமல் எதிர்காலத்திலும் இல்லாமல் இடை விடாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஏங்குதலும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே தியானம்.

தத்துவம் தெரிந்த வாழ்க்கை

தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை. சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது அந்த வினாவிற்கு பதிலாக பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும் பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும் அதற்க்கு பதிலாக வயது அனுபவம் போன்றவை விடையாக வரும் வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும் கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும்…

உங்கள் தவறுகளே காரணம் 4

நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம் கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும். பலசரக்குக் கடைகள்,  பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ  52

சந்நிபாத தோஷ ஜிம்மை ….. நாக்கானது சந்நிபாதத்தில் கறுப்பு  நிறமாயும் சுக்கிற வர்ணமாயும் இருக்கும். துவந்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது துவந்தத்தில் இரண்டு தோஷ குறிகளை மிசிரமமாய் கலந்து தோணும். அசாத்திய ரோக ஜிம்மை குறி …..  நாக்கு நீண்டும் சகல வர்ணங்கள் கலந்தும் சொள்ளு வடிந்து கொண்டு நாக்கு பிரண்டும் பேச முடியாமல் செய்யும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 8

சம்ஹார பைரவர் சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 48

உழைப்புக்கும் வரம்புண்டு. அதற்கு மீறி உழைக்கப்பட்டால் உடல் நசியும், உணவின் அதே சேர்க்கையால் திருத்தக் கூடிய இவைக் காட்டிலும் உழைப்பு உடலை நசித்தால், ஆரோக்கியம் குன்றி நோயைத் தடுக்க முடியாது. உழைப்பு இயற்கை வாழ்க்கையில் ஏற்படாமல் வயிற்றுப் பாட்டுக்கென்று ஏற்பட்டால், மனப்போக்கின் கூட்டுறவால் இந்த உழைப்பு ஒரு பங்கு சோர்வைத் தரும். மனதின் உற்சாகத்தால் ஏற்படும் உழைப்புக்கும், நாம் நன்மைக்காகச் செய்கின்றோம் என்ற கருத்துடன் செய்யும் உழைப்புக்கும் முடிந்ததோ முடியவில்லையே, தலை விதியே, என்று செய்யும் கட்டாய…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  10

ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம் தான் ஆத்மா என்பதேயாகும் .  அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா என்று கொள்வது அறிவாகாது. அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை ஒருவன் விட்டு விலக வேண்டும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ 51

    வாத தோஷ ஜிம்மை …..  நாக்கானது வாயு தோஷத்தில் மஞ்சள் நிறத்துடன் கறகறப்புமாயிருக்கும். பித்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது பித்த தோஷத்தில் ரத்த வர்ணத்துடன் கலந்த நீலவர்ணம் போல் தோணும். கப தோஷ ஜிம்மை ……  நாக்கானது கபதோஷத்தில் வெண்மையும் திரவமுடன் கனத்தும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 7

பீக்ஷன பைரவர் பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி ஏழாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 47

 உழைப்புடன் மட்டும் நிறுத்தவில்லை எப்படி சுகஜீவிதம் உடையவன், உழைப்பு இல்லாமல் வாழுகிறனோ அதற்கு நேரிடையாகப் பாட்டாளிக்கு சக்திக்கு மீறி தொழில் காரணத்தைக் குறித்து, உழைப்பு தினம் ஏற்படுகிறது.  இந்த உழைப்பைத் தாங்க, உழைப்பால் ஏற்படும் உடல் சதை சக்திக்கழிவை மறுபடி நிரப்ப, போதுமான உணவுக்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது உழைக்கப்பட்ட உடல், உணவையும் ஓய்வையும் கேட்கின்றது.  இவைகளைப் பெறமுடியாமல் பாட்டாளியிடம் வறுமை ஒரு முக்கியத் தடையாக நிற்கின்றது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  9

ஒளிவடிவாயுள்ள சூரியனிடம் எவ்வாறு இருள் இல்லையோ அவ்வாறே அறிவு வடிவான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கிடமில்லை. அவ்வாறே மாறுபாடற்ற ஆத்மாவில் மாறுபடும் நிலைகளுக்கிடமில்லை. அப்படி மாறுபடுமேயானால் அது அழிவுடையதாய்விடும்.

உங்கள் தவறுகளே காரணம் 3

நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம் ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல் எனது அருமைக் குழந்தைகளே * முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது.. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றுருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித்தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 6

கபால பைரவர் கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.  இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 50

மரண குறி …..  தெற்கு திசையாய் தைலபிந்து பரவினால் சிலநாளில் மரணம் சம்பவிக்கும் அல்லது மீளான் என்று அறியவும். சுக குறி ……  மேற்கு, வடக்கு திசையில் தயிலபிந்து பரவினால் ஆரோக்கியம், என்று அறியவும். மாத மரண குறி ……  ஈசான்ய மூலையாய் தயிலபிந்து பரவினால் ஒருமாதத்தில் எமனைப் பார்ப்பான் என்று அறியவும். மரண குறி ……  நிருருதி மூலைலும், வாயுமூலையிலும் தயில பிந்து பரவுதலால் மரணம் சம்பவிக்கும் என்று அறியவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

கிராம வாழ்க்கையில் ஓய்வுடன் இருப்பவர் இவைகளையும் செய்யலாம் மலப்போக்குக்குக் கூட செம்பு தூக்கப் பண்ணையாள் இருக்கும் பொழுது, இந்த கிராம சுக புருஷர்கள் உழைப்பிற்கு இறங்குவதும் ஆகாததாகத் தோன்றுகிறது. பணம் பெருக, நடையும் இல்லாமல் போய்விடுகிறது. நோய் தடுத்தலுக்கு உழைப்பு, அவசியமென்று விளக்கினேன். இந்த உழைப்பும், ஒழுக்கமும் தானத்துடன் கலந்திருக்க வேண்டும்.  உழைப்பே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமானால்.  ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியிடம் ஆரோக்கியப் பெருக்கைக் காணோமே என்று வினவலாம்.  இந்த சந்தேகத்தை நினைத்தே நோயற்ற வாழ்க்கையை…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  8

விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்க‍ளிலும் ஒன்றாயுமிருக்கும் ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது.  ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன.  சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன.  கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.

நமக்குத்தான்

சிலவற்றை கண்டும் காணாமல் நடக்கப்பழகிக் கொண்டாலே போதும்.. மனதுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்! நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள்தான்..

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில் உள்ளது! நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்.. நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!  

தானம் 16 வகைப்படும்-

1. அன்னம்,    2. பூமி,      3. கன்னிகை,     4. பசு,     5. காளை        6.பொன்        7. வெற்றி,     8. ஆடை,    9. படுக்கை,      10. வாகனம்,     11. தீபம்,       12. எள்,      13. தானியம்,     14. வீடு,     15. வித்தை,    16. அபயம்   …

வெற்றி எட்டு வகைப்படும்.

1. எதிரிகளின் அதாவது பகைவர்களின் பொருளை கவர்தல். 2. பகைவர் தன்னிடம் இருந்து அபகரித்ததை மீட்டெடுத்தல். 3. பகைவர் மேல் போர் தொடுத்தல். 4. போருக்கு வரும் பகைவரை எதிர்கொண்டு தாக்குதல். 5. தன் குடிகளையும் உடைமைகளையும் காத்தல். 6. பகைவரின் உடைமைகளை, குடிகளை தனதாக்கி கொள்ளல். 7. போருக்கு திட்டமிடுல். 8. போரிடுதல் என்பவையே. இவை அனைத்தும் அரசர்களுக்கு உண்டான நியதிகள் இது ஒவ்வொன்றிக்கும், பூக்களும், மாலைகளும் உண்டு அவை முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி,…

நண்பர்கள் எத்தனை வகை?

வீட்டில் உங்கள் மனைவியும் வெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி) நோயாளிக்கு மருந்தும் இறந்துபோனவனுக்கு தர்மமுமே நண்பர்கள் ஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் க்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு வம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள் ரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள் ஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் ரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம் –காமாந்தகீய நீதிசாரஹ

உங்கள் தவறுகளே காரணம் 2

செம்மறி ஆடுகளாக வாழ்வதா * ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமை படைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை – ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது நன்பரே இவை எல்லாம் எல்லா…

உங்கள் தவறுகளே காரணம் 1

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே* நமது நாடு என்னும் இந்தக் கப்பல் நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தைக் ஏற்றி கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும் பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும்மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது . பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக்…

அர்த்தம்!

நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்.. நாம் அதிபுத்திசாலி என்று அர்த்தமில்லை.. நமக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

நன்றி சொல்ல வேண்டிய தருணங்கள்

உங்களை சிரிக்க வைத்தவர்களுக்கு அழ வைத்தவர்களுக்கு உங்களோடு  தொடரப் போகிறவர்களுக்கு உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு … பாராட்டியவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு . அன்பு செய்தவர்களுக்கு வெறுத்தவர்களுக்கு தட்டிக் கொடுத்தவர்களுக்கு இவர்கள் எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உங்களுக்கே உணர்த்தியவர்கள் அதனால் நன்றி சொல்லுங்கள் எப்போதும் சந்தோஷமாய் இருப்பீர்கள்

எந்த ஒரு உறவும்

எந்த ஒரு உறவும் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர்கள் நுழையாத வரை.. லட்சியங்கள் மாறாதவரை பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை எந்த ஒரு உறவும் உடைதல் என்பது.. அவ்வளவு எளிதில் நடப்பதில்லை!

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்

வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான் வெட்டியான். இறந்து போன பின் படுத்துக் கிடந்தார், ஜமீன்தார், நிமிர்ந்து நின்றான் வெட்டியான். இது தான் வாழ்க்கை..

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 5

உன்மத்த பைரவர் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 3

தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  நேத்திர பரீக்ஷ.,  55

வாத தோஷ நேத்திரம்   வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர  நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண்  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண்  கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 4

குரோதன பைரவர் குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 2

வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 3

சண்ட பைரவர் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 2

ருரு பைரவர் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 1

எங்கு எதிர்ப்பு வராதோ, எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ, எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ, அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஒரு கன்னத்தில் அறைந்த பின் மறு கன்னத்தை காட்டுபவரிடமே இப்போதைய தலைமுறை மட்டுமல்ல எந்த கால தலைமுறையும் வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.

பெண் அனுபவ பொருள் 4

ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை. அந்த நிலையை ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள். ஆணுக்கு அப்படியல்ல குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு தந்தையாய் மாறும் போது உடலில் மாற்றங்கள் குறைவாகவும் மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான். இப்படியெல்லாம், யோசிக்கும் போது அனுபவ பொருள் என்பது உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள்  1

காசி மாநகரில் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 12

மயூகாதித்யர் கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது.  புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவ – பார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார்.  மனம் இரங்கிய சிவன், சூரியனுக்கு ‘மயூகன்’ ( என்றும் அழியாதவன் ) என்று பெயர் சூட்டினார்.  காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

பெண் அனுபவ பொருள் 3

ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள் அதனால் தான் அவள் எப்போதும் புதிரானவள் படித்து மாளாத அனுபவபட்டு தீராத விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது இந்த காரணத்தினாலேயே சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம் அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே இதில் சந்தேகம் இல்லை பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது. அவன் அனுபவத்தை தன்மையை உணர்ந்து விடுகிறாள் அதனால் அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 11

விருத்தாதித்யர்      விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.  விருத்தன் வழிபாடு செய்த    விருத்தாதித்யர் காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

பெண் அனுபவ பொருள் 2

 ஒவ்வொரு புலனும் மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை ஆனால் மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது. அதனால், அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது. சரி இப்போது விஷயத்திற்க்கு வருவோம். அனுபவ பொருளான பெண் எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள் என்றுபார்த்தால் மற்ற பொருள்களிடம் நமக்கு உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை. பெண்ணிடம் உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் அதனால் தான் மற்ற அனுபவ பொருள்களை விட பெண்…

யாருக்கு எங்கே பலம்? 6

கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.  கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.

பெண் அனுபவ பொருள் 1

பெண் அனுபவ பொருள். அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள் தற்போது கூட முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம். அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே. பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது. அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம் அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது. காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும் காண்பதற்க்குண்டான…

யாருக்கு எங்கே பலம்? 5

 சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட…

புரிதலை எது தருகிறதோ 2

தன்னைப் போல் பிறரையும், பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும். இந்தக் கல்வி கிடைக்க நாம் நமக்குள் போரட வேண்டும். கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது. கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல இந்த கல்வி. இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம். பற்றற்று இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். தன் மரணத்தை தானே சந்தோஷமாய் அழைக்கும் தகுதியை இந்த கல்வி தரும்.

யாருக்கு எங்கே பலம்? 4

 அணியான ஜென்மம், உயிரான நாதன், அழகான கேந்திரமத்திலே -விரிவான ஆயுள் வெகுவாய் உயர்ந்து கெம்பீரனாவன் குயிலே! மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் எந்த ராசி ஜென்ம லக்கினமாக அமைந்த போதிலும் லக்கினாதிபதி லக்கின கேந்திரத்தில் அமர்ந்திருப்பது எல்லா வகையிலான யோகங்களுக்கும் சூட்டிய யோக லட்சணமாகும்.  இவர்களுக்கு ஆயுளுக்கு குறைவில்லை. விரிவான ஆயுள் ஏற்படுவதுடன் கெம்பீரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்பது விதியாகும். ஆதிபத்தியத்தில் பாதகாதிபத்தியம் பெற்று பாபக்கிரகங்கள் பகை நீச்சம் வீடுகளில் அமர்ந்து கேந்திரம் பெற்று அல்லது…

புரிதலை எது தருகிறதோ 1

பல மரணங்களைக் கண்டு, பல மனிதர்களுடன் பழகி, அவர்களின் நிலைகளை அறிந்து வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற புரிதலை எது தருகிறதோ, அதுவே கல்வி. அந்த கல்வி ஆணவப்படாது, ஆசைப் படாது, ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில் திருப்தி இயல்பாகவே இருக்கும். திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும். மனநிம்மதியும், மனநிறைவும் நாணயத்தின் இருபக்கங்கள் போல இப்படி வாழும் வாழ்க்கை நிறைவையும், இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் மனம்…

யாருக்கு எங்கே பலம்? 3

 உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.  சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம்  இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.  இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன. லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில்…

உரையாடலின் ஒரு பகுதி 21

 நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும் அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம் முதலாவதாகவும், முன் உரிமை தரபட வேண்டியதாகவும் உள்ள எண்ணம், நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன். என்னால், என் சமுதாயமும், என் மனித குலம் முழுவதும் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இருக்கும் என்னுடைய செயல்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என்ற எண்ணத்தை முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள் ஆனந்தம் உங்களுடையதே.

யாருக்கு எங்கே பலம்? 2

 கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார். 7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.  களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும். புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் (முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி 20

எண்ணமே வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள் நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன. இதனை, ஊன்றி கவனித்தால் எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி நம்மிடம் நிறைவடைய வேண்டும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்

யாருக்கு எங்கே பலம்? 1

கொடியோர்கள் கேந்திரத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதும்  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் அமர்ந்திருந்தால் சுப யோகத்தைச் செய்வார்கள் என்பதும் பொது விதி. கேந்திரம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,4,7,10. திரிகோணம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,5,9.ஆகும். சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தசம கேந்திரத்தில் பூரண பலம் பெறுகிறார்கள். இப்படியாக பத்தாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். இவர்களுக்கு படிப்பும் நல்ல விதமாக…

குறைகள் கூறி

குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை. நீங்கள் ஒன்றைப்பற்றி ஒருவரை பற்றி குறை கூறும் போது உங்கள் மனதில் விஷ கறை படிகிறது. மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை. அது மனிதனை பல வழிகளில் நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது. மகிழ்ச்சியை, ஆனந்தத்தை விரும்பும் எவரும் குறை கூறுவதை நிறுத்துங்கள் குறை கூறும் மனதிற்குள் ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களை விதையுங்கள் அது உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

இந்த நிலையில்தான் பயிற்சி என்று சொல்லக்கூடிய, செயற்கை உழைப்புகள் அவசியமாகின்றன. இந்தப் பயிற்சி நோய், தடுக்க எவ்விதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால் யாராயிருந்தாலும் கால் நடைக்கும் சாதாரண உழைப்புக்கும் காலம், காரணம், சமயம் இல்லையென்று கூற முடியாது. நம் வாழ்க்கைச் செயல்களை நாமே நமக்குச் செய்து கொள்ளுவதால் உடலின் பல பாகங்களுக்கும் உழைப்பு ஏற்படும்.

துக்கத்திற்க்கு காரணம்

துக்கத்திற்க்கு காரணம் ஆசை. அந்த ஆசையை இல்லாது ஆக்கிவிட்டால் துக்கத்திலிருந்து தப்பிவிடலாம் என்பதே பெளத்த தத்துவத்தின் மைய கருத்து.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 49

குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி சம்பவித்ததென்று அறியவேண்டியது. சுகதயில பிந்து லக்ஷணம் ….. தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில் வியாதி கிடையாதென்று அறியவேண்டியது. வியாதி நிவர்த்தி குறி ….. பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால் வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.

தர்மம் என்பதற்கு 3

இந்த சிந்தனை வர காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட சமுதாய மாற்றமே காரணம் வேறு என்ன சொல்வது இருந்ததை தொலைத்து இல்லாததற்க்கு ஏங்கி இல்லாததை இருப்பதாய் நினைத்து தலை தெறிக்க தறிகெட்டு ஓடும் இந்த மனித சமுதாயத்தில் தர்மம் என்று சொல்லுவதே கூட பாபம் என்று தான் தோன்றுகிறது.

தர்மம் என்பதற்கு 2

இப்போது நம் முன் உள்ள கேள்வி, அல்லது சிந்தனை அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே காரணம் வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால் தற்கால மனிதர்கள் இருக்கும் போது மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது எப்படி தேடுவது ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு

தர்மம் என்பதற்கு 1 மாதவராவ், சதாசிவ கோல்வல்கர்

தர்மம் என்பதற்கு மாதவராவ், சதாசிவ கோல்வல்கரின் விளக்கம் எது உண்மை வடிவில் உள்ளதோ, எது அனைவரையும் ஒரு நூலில் இணைக்குமோ எது பிரிவினையையும், விளைவையும் உண்டாக்காதோ எது வழிபாட்டு பிரிவுகளிடையே மோதல்களின் மூலம் மக்களை கட்டி போடாதோ, எது பல்வேறு கொள்கைகளில் இடையே ஒத்திசைவை உண்டாக்குமோ, அதுவே தர்மம்

உரையாடலின் ஒரு பகுதி 19

எப்போது நாம் பிறருடன் ஒப்பிடுதல் , என்கிற நிலைக்கு நகர்கின்றேமோ அப்போது நாம் வாழ்தலில் பகுதியாக உள்ள அனுபவித்தல் என்கிற நிலையில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விடுவோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

உரையாடலின் ஒரு பகுதி 18

ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல் அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான். இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான தகுதியையும் வளர்த்து தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும் திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் காரணம் இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி 17

நம்முடைய வாழ்க்கை முறையில் ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது. இந்த ஒப்பிடுதலின் காரணத்தால் போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன் தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான். ஆனாலும் அவன் போராடுகிறான் வெற்றி அடைகிறான்

சூரியன் எழுவதற்க்கு

சூரியன் எழுவதற்க்கு முன் நீ எழுந்தால்.. அது உன் வாழ்க்கை! அலாரம் அடித்த பின்னும் நீ எழவில்லை என்றால்.. வாழ்க்கையின் போக்கில் தான் நீ

வேண்டியது வேண்டாதது

வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!  

பிராணனைப் பற்றி.

பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…

மறு பிறவியை நிர்ணயிப்பது எது ?

மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…

நீதி மொழிகள்

மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம். யாராலும் செய்ய முடியாததை நல்லதோ கெட்டதோ ஒரு பெண் செய்வாள். கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும் போது அது ஒரு போதும் சிரித்ததில்லை. பூவாக இருந்தாலும் அதில் வாசனை இருந்தால் தான் அழகு. நட்பாக இருந்தாலும் அதில் நம்பிக்கை இருந்தால் தான் அழகு.

கற்பனை வாழ்க்கைக்கு

கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்

மனிதனுக்கு ஏனோ 2

பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…

மனிதனுக்கு ஏனோ 1

மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.

அழகும் அறிவும்

அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 10

சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.

அகத்தியர் லோப முத்திரை 4

இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 44

பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.

அகத்தியர் லோப முத்திரை 3

அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 7

ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.

அகத்தியர் லோப முத்திரை 2

அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 30

61) குரு திரிகோணமடையவும், சுக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும், புதன் கேந்திரத்தில் நிற்கவும், குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க, ஜோதிடம், இலக்கியம், கற்றவர். 62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க, தனுசு லக்கினமாயிருந்து 11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம். 63) 2 – ல் புதன் நிற்க, குரு திரிகோணமடைய 4 – இல் சந்திரன் நிற்க வித்தையில் வல்லவர்.

குடும்ப வாழ்க்கைக்கு அகத்தியர் லோப முத்திரை. 1

லோபா முத்திரை அழகி, இளவரசி ஆபரணங்களின் மேல் அதிகபிரியமுள்ளவள் அகத்தியர் துறவி, ஞானி காட்டில், பர்ணசாலை ஆனால் இவர்கள் இருவரும் ஆண், பெண் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம். எப்படி இளவரசியும் ஆபரணங்களில் அதிக ஆசை உடையவளும் பேரழகியாக இருந்த லோப முத்திரை கணவனின் மேல் தீராத மாறாத காதல் கொண்டு காட்டிற்க்கு வந்து பர்ணசாலையில் வசிக்கும் தன் கணவனுக்கு சற்றும் அலுப்பில்லாமல் பிரியம் குறையாமல் குடித்தனம் செய்தாள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 29

58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க, பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம். 59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர் 2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான். 60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க, புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.

உரையாடலின் ஒரு பகுதி 16

மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 9

கேசவாதித்யர் காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள் புரியும் சூரியன் ‘கேசவாதித்யர் ‘ எனப்படுகிறார்.

உரையாடலின் ஒரு பகுதி 15

பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு

சுந்தர யோக சிகிச்சை முறை 43

உழைப்பற்றால் பசி எடுக்காது. ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும். ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும். பூர்ண சுவாசமுண்டாகாது. சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால் முதுமை அடையும். தூங்கும், அழுகும். உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும். சகல வியாதிகளுக்கும் மூல காரணமான மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும். உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது. தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான் ” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும். எளிதில் நோய் பற்றும்,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 6

ஒருவனுக்கு நான் என்னுடையது என்ற சொற்கள் எப்பொழுது முற்றும் அர்த்தமற்றவையாகின்றனவோ அப்பொழுது அவன் ஆத்மஞானியாகின்றான். எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க் கருதுபவன் அப்பொழுதும் தனக்குப் பகைவர்கள் இருப்பதாய்க் கருதுவானேயானால் அவன் நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.

உரையாடலின் ஒரு பகுதி 14

நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 48

பூத தோஷ நிவார தயிலபிந்து ரூபம் ….. மண்டலாகாரமாய் தோன்றுமாகில் கிரஹபீடை ஒழிந்தததென்று ஓளஷத சிகிச்சை செய்தல் வேண்டும். சாகினி கிரஹ தேவதா தோஷ லக்ஷணம் ….. தயிலபிந்து திரிகோணகாரமாய் தோணுமாகில் சாகினிதேவதை வீட்டு தேவதைகளால் நோய் உண்டானதென்று அறியவேண்டியது. பூத பிரேத தோஷ குறி ….. தைல பிந்துவில் சாலனி உருவம் தோன்றினால் பூத பிதேங்களினால் நோய் உண்டானதென்று அறிய வேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 13

எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 8

உத்திர அர்க்கர் காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.

உரையாடலின் ஒரு பகுதி 12

மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.

சுந்தர யோக சிகிச்சை முறை 42

பொய் நகாகரிகமற்ற பண்டைக்காலத்தில், இயந்திர, விஞ்ஞான முன்னேற்ற செளகரியக் குறைவால் உடல் மேற்கூறிய பலவித உழைப்புகளுக்கு ஈடுபட்டு, நன்றாக வளர்ந்து, திறமை திடம் பெற்று, மானிடர் வனப்பு ஓங்கி, கஷ்ட சுகங்களின் மாறுதலைத் தாங்கும் சக்தியுடன் இருந்தனர். இவர்களுடைய ரத்த நாடிகளும், இருதயமும், ஸ்வாசக் கருவிகளும், பலத்துடன், சுறுசுறுப்புடன், சிரமம் தாங்கி வேலை செய்து நின்றன. எனவே நோய் எளிதில் வரவில்லை. வந்தாலும், நீண்டு நிற்கவில்லை உயர், உயிர் கருவிகளைச் சிதைக்கவில்லை. தாறுமாறான நிலைகளை உண்டாக்கி, புதுப்புது…

ஆண்களும், பெண்களும் 2

எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…

ஆண்களும், பெண்களும் 1

ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 5

செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல் என்றும் இன்பவடிவானதும், மாசற்றதும், குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை எவன்,  நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான், உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால் உடலுக்குக் குறைவேற்படும்பொழுது ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை. மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை

கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் விதம்.

இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது. அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது. அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது. (செயலிலக்கம் செய்யப்படுகிறது )…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 47

சிராயுதயில பிந்து ரூபம் ….. அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ முதலியது நிறைந்த தடாகத்தை போலும், சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல் தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான். பூததோஷ தயில பிந்து ரூபம் ….. தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால் அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால் தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது. கிரஹதேவதா தோஷ ரூபம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால் தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 7

திரவுபதி ஆதித்யர் சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. சூரியனுக்கு திரவுபதி ஆதித்யர் என்று பெயர்.

உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்

மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ? இந்தியஅன்னை அறிவாற்றலில் குறைந்தவளா ? அல்லது திறமையில் தான் குறைந்தவளா ? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார். பிறகு அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான் உலக நாடுகளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 41

இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல், இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல், நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள், நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன. சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை உபயோகித்து பலனுண்டாக்குகிறது.

இந்தியா அழிந்து விடுமா ?

இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 46

அசாத்திய தயிலபிந்து உருவம் ….. மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும், நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின் உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது அசாத்தியமென்றும் அறிய வேண்டியது. மரண கால தயிலபிந்து ரூபம் …… ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 6

சுஷோல்கர் ஆதித்யர் கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழி பட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கர் ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 40

சதைக் கூட்டங்கள் உழைத்தே உயிர், வீரியம் பெறவேண்டும். உழைக்காத சதைகள் மெலிந்து விடும் அல்லது உளைச் சதையாகப் பயனின்றி ஜீவனுக்கு அவசியமற்ற பாரமாக வளரும். இயந்திர முன்னேற்றம், மனிதனுடைய இயற்கைக்குகந்த உழைப்பு வாழ்வைப் பாழாக்கிவிட்டது. இயந்திர முன்னேற்றமே நேராகக் கெடுத்ததென்று சொல்ல நியாயமில்லை. இயந்திரம் உழைப்பின் அவசியத்தை நீக்கவே, மனிதர் சோம்பலுக்கிடங் கொடுத்தனர். இயந்திரம் நீக்கிய உடலுழைப்பை வேறு விதமாகப் பெற முயற்சிக்கவில்லை, உடலை எத்தீவிரத் திட்டத்தில் வைக்கின்றோமோ அதற்கொத்தவாறு தான் வீணைத் தந்தி போல் உயிர்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 4

ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும் அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது. அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா ‍ அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது. உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப் புறம்பாக ஒரு சிறிதுமில்லை. குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல் ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 45

சந்நிபாத குறி ….. கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால் சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பிரசூதி தோஷ குறி ….. மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன் புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி தோஷமென்றும் அறியவேண்டியது. பித்த வாத கப சுராதிக்க குறி ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும், கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில் புகை நிறமும் தோணுகின்றது. மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை…

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 5

எமாதித்யர் சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. எமாதித்யர் என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 39

இயற்கை, உடலை உழைப்பிற்கென்றே அமைத்துள்ளது. உடலின் எந்த பாகமும் அவசியமற்றதல்ல. ஒவ்வொரு பாகமும் உழைப்பில் ஈடுபட்டு, உழைப்புக் கூட்டுறவால் உடல், உயிர், உன்னத வாழ்வு பெறவேண்டுமென்பதே திட்டம். இந்த திட்டத்தை முறித்தால் அந்த பாகம் பலவீனமடையும் அல்லது உடல் முழுவதும் நோய் கொண்டு அழிவு ஏற்படும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 3

புத்திமான் தன்னுடைய அறிவால் காணும் உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம் போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும். அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம் ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 4

விமலாதித்யர் தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள் புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 44

ரசாதிக்ய மூத்திர குறி ….. மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால் சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து வங்கணம் செய்விக்கவேண்டியது. ஆமவாத ரோக குறி …… மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும் ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது. அதிகசுர குறி ….. சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால் அதிக சுரமென்று அறியவேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 11

இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.   இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.  அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.  ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.  

உரையாடலின் ஒரு பகுதி 10

மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 38

பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும். இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு, புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின் பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது, புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும். பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.

உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.