இயற்கையும் இறைவனும் 3

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென வழிவழிவந்த ஒரு இயல்பு உண்டு அதை உறுதியாக பற்றி நின்றவாறு செயல்படுத்துவதே அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். இந்த விஷயத்தை சிந்தித்தால் நம் நட்டின் வழிவழி வந்த இயல்பு என்ன என்பது விளங்கும் அது விளங்கிவிட்டது என்றால் நாடு சுபிட்சம் அடைந்து விடும். உண்மையில் நாம் இப்போது நமது பண்பாட்டை மறந்து இருக்கின்ற காலத்தில் இருக்கின்றோம். இது நீடித்தால் பண்பாட்டை இழந்த காலத்தில் கலந்து நமக்கென எந்த அடையாளமும் இல்லாத…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 2

மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ராஜயோகம் என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி-…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 1

“மைதுனவோரை வந்தவற்கிரவி மண்மகன் பீத்கன் கொடுமை செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற் செகமிமை யோககாரகராம் ஐயவெண் பிறையு மாரகனல்ல வந்றியுங் குசனு மாரகனாம் பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப் பழித்திடுங்கடி தடத்தணங்கே” ( யவன காவியம் ) “சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர் ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய் மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல் நந்துமேடப்படியே நாடு” ( தாண்டவ மாலை ) “மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ்“மைதுனவோரை வந்தவற்கிரவி சனியுமற்ற பலன் ”…

இயற்கையும் இறைவனும் 2

உயர்ந்தோங்கிய மலைகள்  அடி வானத்தை தொட்டு விடுமோ என்கிற நிலையில் அடர்ந்த கானகங்கள்  பரந்து விரிந்து இருக்கும் கடல் இவைகளை நாம் இயற்‍கையென்று அழைக்கிறோம். அதன் நிலைகளை கண்டு மனம் மயங்குகிறோம் நம்மையே மறக்கின்றோம். இவைகள் உருவான விதம் அல்லது உருவாக்கிய சக்தி எது என்ற பிரம்மிப்போடு சிந்திக்கிறோம். நம் முன்னோர்கள்  சிந்தித்து அந்த சக்திக்கு இறைவன் என பெயரிட்டு நமக்கு  தந்தனர். அதாவது இயற்கை – இறைவன் அவர்கள் மிக எளிதாக நமக்கு உணரும் வண்ணம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4

இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம் மனைவிக்கு அகால மரண தோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்துவிடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜ…

இயற்கையும் இறைவனும் 1

மதம் என்றால் என்ன? வாழ வேண்டிய முறையை உள்ளடக்கியது மதம். வாழ வேண்டிய முறை என்ன? நீயும், நானும் வேறல்ல. நாமும் பிரபஞ்சமும் வேறல்ல என்ற உண்மையை உணர்வது தான் வாழ வேண்டிய முறை இன்னும் சொல்லப் போனால் ஒன்று பலவாகி பலது ஒன்றாவது இயக்க சூத்திரம் அந்த இயக்க சூத்திரத்தை முழுவதும் உணர உள்ள கருவியாய் அமைவது மதம் நான் எனும் பேதம், நாம் எனும் போதமாய் மாற உள்ள படி நிலைகளில் முதல் படியாய்…

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால்

ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம். ஆனால்!!! அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% – 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.  யோசிங்க  இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும். ஒரு…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்3

சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார். சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள்தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது. ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்,குருவின் தொடர்பை பெற்றால் ( அ )பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும். சனி, ரிஷப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை…

பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் விளக்கம்: அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.

கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் ஆதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே. சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதியத்தினால் சுபராயினும்,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்.

ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-

இந்த மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது. செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்ல நிலையில் இருப்பின் யோகம் தருகிறது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 2

செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேஷ லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள். ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1

மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7,…

கோள்களின் கோலாட்டம் பாகம்-1  – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

யவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்கினத்திற்குரவி பொன்னல்லர் மிகவும் யோககாராங் கூடியேயிரக்கிற்..பிரபல யோகங் கொடுப்பர்மால் கவிசனி தீயோர்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8

கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 7

பரிசுத்தமான தெய்வப் பிறவியாக இருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறர் பொருட்டுத் துன்புற்றதையும், ஆயினும் அதே சமயம் தமது ஆனந்த பரவசத்தையும் தேவியினைப் பற்றிய தியானத்தின் இன்பத்தையும் ஒரு கணமும் இழக்காமல் வாழ்ந்ததையும் மட்டும் நீ நினைத்தாயானால், உன் துக்கமும், துன்பமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவர் ஆனந்த சொரூபி. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர் பக்தி பரவசத்திலும், களிப்பிலும், சிரிப்பிலும், போதிப்பிலும், கதை சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவர் எதற்காகவும் கவலைப்பட்டதாகத்…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஏழு முதல் பன்னிரண்டு வரை

ஏழாம் பாவம் களஸ்திரஸ்தானம்:– காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு, நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம். எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர். முற்றுகை, அறுவை சிகிச்சை ,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1

ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம., சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண சுத்தியுடன் தியானித்து ( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல புருஷோத்தராகிய வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம் ஆகும் பொருட்டு திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது காண்டம் எழுதலாயினேன். இக்காண்டத்தில், தன்வந்தரி, சாரங்கதரீயம்,…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஓன்று முதல் ஆறு வரை

முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம்,…

உரையாடலின் ஒரு பகுதி 5

ஒரு கிராம நிர்வாகத்திலும், சுய ஆட்சியிலும் பங்கு கொள்ளும் அந்த கிராம மக்கள் அனைவரும் சம உரிமைகளின் செல்வாக்கோடும், உற்சாகத்தோடும், கிராம பொது நல முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள் அந்த கிராம ஆட்சியின் சபைக்கு தலைவானக தேர்ந்தெடுப்பவன் அந்த கிராம மக்களின் நன்மையையும் நன்மதிப்பையும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சர்வ சக்திவாய்ந்த அரசு தன்னுடைய பிரநிதியை அனுப்பி அந்த கிராம ஆட்சியை நேரடியாக நடத்தினால் அந்த ராஜ பிரதிநிதிக்கு கிராமமும் தெரியாது கிராம மக்களின் உணர்வும்…

பொன் மொழிகள்

சொர்க்கமும், நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். நனையச் செய்த கடவுளே காய வைக்கவும் செய்வார். கெட்ட பெயரெடுத்த ஒரு மனிதன் ஏற்கனவே பாதித் தூக்கிலிடுகிறான். கடவுளை நெருங்கிச் செல்வதற்கு மலையேற வேண்டிய தேவையில்லை. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழைகளிலும் ஏழை. உன் பெயர் தான் வியாபார அடையாளம், அதை உன் உயிர் போல் காப்பாற்று. நமது அறியாமையை மேலும், மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும். கடன்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 3

அவித்தையாகிய அஞ்ஞானம் எனப்படுவது இப்படிப்பட்டதென்று விரித்துக்கூற இயலாதது, அது அனாதி, அது இவ்வுலகத் தோற்றறத்திற்கு காரணம். அது ஆத்மாவிடம் கற்பனை செய்யப்பட்ட உபாதி. தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் எண்ணுவது போல் மனதிற்குச் சொந்தமான கர்த்ருத்வம், போக்த்ருத்வம் ( செய்ப வனாயும், அனுபவிப்பவனாயும் இருக்குந்த தன்மை ) முதலிய குறுகிய மன பான்மைகள் ஆத்மாவிடம் தவறாகக் கற்பனை செய்யப்படுகின்றன. அஞ்ஞானி பயனில் ஆசை வைத்துக் கர்மத்தை மேற்கொள்ளுகிறான்.

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2

கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.

அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6

கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ண‍ரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 5

குருதேவர் மகா சமாதி அடைந்தபோது நானும் போகவே விரும்பினேன், ஆனால் அவர் என் முன் தோன்றி, நீ இங்கேயே இருக்கவேண்டும். செய்து முடிக்கப் பலபணிகள் இருக்கின்றன, என்று கூறினார். சூட்சும சரீரயாய்ப் பக்தர்கள் இதயத்தில் முந்நூறு வருடகாலம் வாழப்போவதாக அவர் கூறினார். உலகிற்குக் கடவுளின் தாய்மைத் தன்மையை எடுத்துக் காட்டவே ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 4

கீழ்நோக்கி ஒடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் கதிரவனின் கிரணங்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோன்ற மனமும் இழிந்த பொருள்களான விஷய சுகங்களை நாடிப் போவது இயற்கை . ஆனால் கடவுளின் அருள் உயர்ந்த பொருளை நாடிச் செல்லும்படி மனத்தை தூக்கிவிடும். நாம் நூறு தரம் கேட்டாலும் கூடத் தன் கையிலுள்ளதைக் கொடுக்க மறுக்கும் குழந்தை மற்றொருவருக்கு கேட்ட மாத்திரத்திலேயே கொடுத்துவிடலாம். அது போன்றே ஆண்டவன் அருளும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்க்கு கிடையாது .

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

கிரக பலம். கோள்களின் கோலாட்டம் –பாகம் – 1 1.6

கிரக பலம். சூரியன்-செவ்வாய்-சனி-ராகு-கேதுக்கள், மேசம்-மிதுனம்-சிம்மம்- துலாம்-தனுசு-கும்பம் போன்ற ராசியின் முதல் 15 பாகைக்குள் இருப்பது மிக நல்லது. ரிஷபம்-கடகம்-கன்னி-விருச்சிகம்-மகரம்- மீனத்தில் கடைசி 15 பாகைக்குள் இருப்பது நல்லது. சந்திரன்-புதன்-குரு-சுக்கிரன் போன்றவர்கள் மேஷம்-மிதுனம்-சிம்மம்-துலாம்-தனுசு- கும்பத்தின் பின் 15 பாகைக்குள் இருப்பது நல்லது. தை-மாசி-பங்குனி-சித்திரை-வைகாசி-ஆனி போன்ற மாதங்களில் சூரிய சந்திரருக்கு அதிக பலம்.

கால பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.6

கால பலம். பகலில் பிறந்தவர்களுக்கு … சூரியன், குரு, சுக்கிரன், பலம். இரவில் பிறந்தவர்களுக்கு .. சந்திரன், செவ்வாய், சனி, ராகு,கேது பலம். புதன் பகல் இரவு எந்த நேரமும் பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. லக்கின கேந்திர ராசியாக : – மிதுனம், கன்னி, தனுசு ஆக வருவது பலம். சதுர்த்த கேந்திர ராசியாக :- கடகம், மகரம், மீனம் ஆக வருவது பலம். 7வது இட கேந்திர ராசியாக :- விருச்சிகம், ஆக வருவது பலம்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்

லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின்…

நட்சத்திரத்தின் சிறப்பு 2

இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்: கிழமைகள் – பிருதிவி நட்சத்திரங்கள் – தேயு இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம் ஞாயிறு – பிருதிவியில் தேயு திங்கள் – பிருதிவியில் அப்பு செவ்வாய் – பிருதிவியில் தேயு புதன் – பிருதிவியில் வாயு குரு – பிருதிவியில் பிருதிவி சுக்கிரன் – பிருதிவியில் அப்பு சனி – பிருதிவியில் ஆகாயம் இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு…

நட்சத்திரத்தின் சிறப்பு 1

ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது. பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த…

அர்க்களா பலன் ( ஜெயமுனிமதம் ) 1

1.  ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2.  அர்க்களம்  சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3.  சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4.  பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2,…

யோசிக்க வேண்டிய விஷயங்கள்

வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது மரம் வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம் ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை. தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது. கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில். நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி.. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை காரணமே இல்லாமல்…

பிராமண பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

கடகம், விருச்சிகம், மீனம் :- இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள். அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள். தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள். தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள். ஜாதி,…

சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மிதுனம், துலாம், கும்பம்:- இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள். எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர். சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…

சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மேஷம் – சிம்மம் – தனுசு :- இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக்…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 2

புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே.  குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும்.  இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும்.…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 1

( ஆதான ) கருத்தரிக்கும் நேரத்தில் சந்திரன் இரட்டை ராசியிலும், சூரியன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலித் தன்மை ஏற்படும். சனி இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலியாம். செவ்வாய் ஒற்றை ராசியிலிருந்து சூரியன் இரட்டித்த ராசியிலும் இருந்து செவ்வாய் சூரியனைப் பார்த்தாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், லக்னம் ஒற்றை ராசியிலிருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருக்க, செவ்வாய்…

நபும்ஸக யோகங்கள் ..2

வியாதியினால் புணர முடியாதவர் நஷ்டகர். ஆண்குறி விரைப்பு இல்லாமல் விந்து வெளிவரக்கூடியவர் அசேவ்யர். பெண் உறுப்பை முகர்ந்த பின்னரே புணரக்கூடியவர் சுஷண்டி. பெண்மைத் தன்மை நிரம்பிய ஆண்களும், உறுப்புக்களை அறுத்துக் கொண்டவரும் ஷண்டர்கள். மோக பீஜர் என்று ஒருவகை உண்டு. பெண் தனது உறுப்புக்களை தொட்ட பின்னரே உணர்ச்சிவரக் கூடியவர், மற்றொரு வகை. க்ரஹநிலைகளை கொண்டு இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ள வேண்டும்.

நபும்ஸகயோகங்கள் 1

  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அலித்தன்மைகள் திருமணத்திற்கு முன் இவற்றைக் கவனிப்பது மிக அவசியமாகும். இவை பொதுவில் இருவகையாகும். சிலருக்கு பீஜத்தில் பலம் குறைவாகும், மற்றும் சிலருக்கு பீஜத்தில் பலமே இருக்காது. லிங்கம் இல்லாதவர்கள் நைசர்திக சண்டா வகையினர். பீஜத்தில் சக்தியில்லாதவர்கள் ( ஆண் விந்து வெளிப்படாதவர் ) பாத வகையினர். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை சம்போகம் செய்யக்கூடியவர் பக்க்ஷ ஷண்ட வகையினர், ஒரு பெண்ணை மற்றொருவர் புணர்ந்த உடனே புணர்பவர் கீலகர். குரு சாபத்தால புனர்ச்சி…

தவறு

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.. செய்த தவறு  வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்.. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.. சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லி தரும்.

திரிம்சாம்சம்

திரிம்சாம்சம் என்பது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும்…

உரையாடலின் ஒரு பகுதி 4

யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்துவிட்டால் மக்கள் அனைவரும் அடிமை, செக்கு மாடுகள், ஆகிவிடுவார்கள் அப்படி பட்ட அரசாங்கம், அரசு, சுயநலத்திற்காகத்தான் பாடுபடும். வரலாறு அதுதான் சொல்கிறது யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஜனங்களுக்காக செயல்பட்டதாக எந்த நாட்டு சரித்திரமும் கிடையாது. அப்ப ஏகாதிபத்தியம் கூடாதுன்னு சொல்லுறயா ஏகாதிபத்தியம்ன்னா என்ன ? ஒரே தலைமை புரிஞ்சுக்கோ நம்ம நாட்டுக்கு ஏகாதிபத்தியம் சரியாகாது ஏகாதிபத்தியம் என்பது சிந்திக்காத சிந்திக்க மறுக்குற அடிமை முட்டாள் பிரஜைகளை…

மதிக்க வேண்டிய உறவு

உங்கள் அன்பு யாருக்கு பலமோ… உங்கள் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ… உங்கள் புன்னகை யாருக்கு தேவையோ… உங்கள் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ… உங்கள் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ… உங்கள் நினைவு யாருக்கு பொக்கிஷமோ… அவரே   உண்மையில் நீங்கள் மதிக்க வேண்டிய உறவு

உரையாடலின் ஒரு பகுதி 3

தேசபக்தி என்றால் என்ன? தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான் சரியான பக்தி செலுத்த முடியும் சரி, இனி கேள்விக்கு வருவோம் தேசம்னா என்ன மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா இல்லை. தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும், மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும் அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி. மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை, துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும் சரி என்று ஆனந்த கூத்தாடுவது,…

பரகாயப் பிரவேசம்

தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது, உள்ளே நிலை நிறுத்தும் போதும், அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும், பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல – பருவுடன் ஜோதி வடிவாகவும், இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன், பிரணவ தேகத்தையும் அடையலாம். இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து, மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால், மனம் சுழுப்தியில் அடங்கும். இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.…

திருமணத்திற்குரிய காலங்கள் விசேஷ விதிகள்

1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு,…

உரையாடலின் ஒரு பகுதி 2

உரையாடலின் ஒரு பகுதி 2 எதிர், எதிர் கருத்து கொண்டு கட்சி ஆரம்பித்து தொண்டர்களும் மாறி, மாறி வசை பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கட்சிகள் தேர்தலின் போது இணையும் அறிக்கை மட்டும் வரும் நாங்கள் கொள்கையில் உடன்படவில்லை ஆனால் சில விஷயங்களுக்கு வேண்டி இணைகிறோம் இணைந்திருக்கிறோம் என்று, இதை ஆழமாக யோசிக்க முடியாதவாறு எப்போதும் கட்சிகள் தொண்டர்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களையும் வைத்திருப்பார்கள். இதன் அடியில் இருப்பது  என்னவென்று உற்றுப்பார் உணரப்பார் வரும் பதில்  பதவி ஆசை மட்டும்…

திருமண காலம் அல்லது குருபலம்.1 பொது விதி

ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும்.…

உரையாடலின் ஒரு பகுதி 1

உரையாடலின் ஒரு பகுதி அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால் நம்ப வைத்து கழுத்தறுப்பது, அதாவது அரசியல் துறையில் உள்ள ஒருவன்  அல்லது   வாக்கு போட்ட மக்கள்,   அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல. அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொண்டே இருப்பார்கள். இதைப் பற்றி கேட்டால் ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.…

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…

7 – ஆம் பாவமும் அதன் பலன் அறியும் மார்க்கமும். P.ATHMA

12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…

ஒலியற்ற ஒசை

வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள். இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள். இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும். இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை. இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி வாய்ந்தது. அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால் உங்களால் இயக்கமுடியாதது…

நாடிகள்

மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.

ஞானசொரூபன்.

மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.

என் மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு…

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…

இந்து லக்கினம் பார்ப்பது எப்படி? கோள்களின் கோலாட்டம் -1.16

இந்த லக்கினம் லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு  துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய. விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16.  துலாம் ராசிக்கு  9 – க்குரியவர்  புதன்  இதன் கதிர்  8 இத்தோடு கூட்ட 16+8=24 –  12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.…

கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை  பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.

கிரகங்களின் அவஸ்தா நிலை 2 கோள்களின் கோலாட்டம் -1.17

ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில், 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தாஅவஸ்த்தை 12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை

கிரகங்களின் அவஸ்தா நிலை கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில். 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவனஅவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை

கிரகங்களின் அஸ்தமன நிலை. கோள்களின் கோலாட்டம் -1.16

கிரகங்களின் அஸ்தமன நிலை. சூரியனிலிருந்து 12 பாகைக்குள் சந்திரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 17 பாகைக்குள் செவ்வாய் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 14 பாகைக்குள் புதன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 11 பாகைக்குள் குரு இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 10 பாகைக்குள் சுக்கிரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 15 பாகைக்குள் சனி இருப்பின் அஸ்தமனம்

திரேக்காண பலன். சந்திரன் கோள்களின் கோலாட்டம் -1.14

சந்திரன் சர்ப திரேக்காணத்தில் இருந்தால் கொடூர சுபாவம். ஆயுத திரேக்காணத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான். சதுஸ்பாத திரேக்காணத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான். பட்சி திரேக்காணத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.

திரேக்காண பலன். கோள்களின் கோலாட்டம் -1.14

ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள்…

சிந்திக்க செயல்படுத்த

மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ  கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .

சுதந்திரம்

ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள். பின் சுதந்திரம் பெறுவார்கள். அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம், அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள். இதில் காலம் மாறுபடும் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது என்ன செய்வது நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது எது என்பதே தெரியாததால் சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை அப்படியே வாங்கினாலும் வாங்கிய சுதந்திரத்தை வைத்து வாழவும் தெரியவில்லை பாவம்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 அசாத்திய ராசிகள்:-

அசாத்திய ராசிகள்:- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 சாத்திய ராசிகள்:-

சாத்திய ராசிகள்:- ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படும் சரீர அழகை எடுத்துக்காட்டும். மலட்டுத் தன்மைகளைத் தரும். அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும். நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 யாப்பிய ராசிகள்;-

யாப்பிய ராசிகள்;- மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள். ஆனால் குறைவான பலன்களை தரும். ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும். பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெறுமை-சிறுமை, ஆணவம், அகங்காரம், ஆசை ,போட்டி ,பொறாமை, போன்றவைகளை கொண்டது .

31 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பிறரை சுலபாக எடைபோடுவதில் வல்லவர்கள். பொதுச் சேவை, ஆன்மீக ,ஈடுபாடு போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள், பிரபலம் உடையவர்கள். ஜோதிடம், மந்திர சாஸ்திரம் போன்ற துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றிடுவார்கள் உயர்ரக பதவியை வகிப்பவர்கள். மனோதத்துவ நிபுணர் என்றும் சொல்லலாம்.

ஒரு கனவு

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை.  பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச…

30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.

29 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும்,  ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது.

28 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும்.

27 – ந் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும்  செயல் விதியின் புயலில்,  அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…

அறிவின் தாக்கம்

உங்களின் அத்தனை பொய்களையும் பொய் சமாதானங்களையும்.. ஏற்றுக்கொள்பவர்களை ஏமாளி என எண்ணாதீர்கள்..! அவர்கள் உங்களை இழக்க விரும்பாதவராக இருக்கலாம்..!! இதில் சொன்ன விஷயத்தை நாம் நம் அனுபவத்தில் கடந்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் காரணம் மறதி என்று சொல்ல முடியாது உண்மையான காரணம் மதிப்பு நாம் கொடுக்கவில்லை என்பதுதான் என்ன செய்வது நம்மை இழக்க விரும்பாதவரிடம் கூட நம்மால் உண்மையாய் இருக்க முடியாத அளவு அறிவின் தாக்கம் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது

26 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.

25 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.

அக்கறை

அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…

24 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்.  இவர்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் திடமான, நல்லநிலையைப் பெறுவார்கள். கருணை உடயவர்கள். பிறரின் உதவியால் நல்ல ஸ்தானம் பெற்றிடுவார்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள், சகல வசதிகளையும் சுயமுயற்சியால் ஏற்படுத்திக் கொள்வார்கள். இனிய இல்லறம் இவர்களுக்கு உண்டு.

நம்பிவிடாதீர்கள்..!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை. எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிந்திக்க செயல்படுத்த 5 மூல மந்திரம்

உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின் அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும். இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும். மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும். இவர்களுக்கு, சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு. அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில் சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.

முந்தைய இன்றைய தலைமுறை

முந்தைய தலைமுறைக்கும்,  இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மாறுதல்கள்  காலத்தை மீறி நின்ற போதும், அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம் இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும், சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது . இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும். சந்தோஷத்திற்கு, மன நிம்மதிக்கு, மனமகிழ்ச்சிக்கு, மனநிறைவுக்கு, எதிர்மறையான வளர்ச்சியால் என்ன…

23 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கு உடையவர்கள். அரசாங்கத்தில் புகழ் கௌரவம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் புகழும் அளவில் சகல சம்பத்தும் பெற்று ராஜயோகத்தில் இருப்பார்கள் கணித, விஞ்ஞான, வியாபார, வல்லவர்கள். சாஸ்திர அறிவு நிரம்பியவர்கள்.

ஸ்தூல பரு உடல்

ஸ்தூல உடல், சூட்சும ஆவி உடல், அதி சூட்சும அருள் உடல், காரண உடல், மகா காரண அருவசக்தி இவைகளில் அன்னமய கோசமாகிய ஸ்தூல பரு உடலைத் தவிர மற்ற நிலைகளை மூலாதாரம் எனப்பட்ட வாலறிவால்  தான் பெறமுடியும்.

22 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சிக்கலான வாழ்க்கயை உடையவர்கள். பலவிதத்தில் ஆற்றலும், திறமையும் அமைந்தவர்களே என்றாலும் நேர்மையான பாதையில் நடப்பவர்கள். எனவே தாமாக வரும் தீய நண்பர்களையும், பங்குதாரர்களையும் விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது. பல பேருக்கு வேலை கொடுத்து நடத்தும் தொழிலில் அதிக வெற்றியுடையவர்கள்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 5

அமைதியை தேடும் மனிதன் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று அன்பு அடுத்தது மரணம் இவை இரண்டையும் மனிதன் புரிந்துகொள்ளும் போது அவனுக்கு பலவிஷயங்கள் தெரிய தொடங்கும் அதில் சில விஷயங்கள் புரியத்தொடங்கும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிறுவயது முதலே போட்டி மனப்பான்மையோடு வாழ பழக்கப்படுத்தியுள்ளோம் இதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். திறந்தமனதோடு ஒப்புக்கொள்ளவும் வேண்டும் போட்டி என்றாலே வெற்றி என்பது இலக்காகி விடுகிறது ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில் நாம் வன்முறையைகைக்கொள்ள தூண்டப்படுகிறோம்…

21 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். ஆதாயம் இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடவே மாட்டார்கள். வருமானம் வருகிறது என்றால் எந்தப் பிரச்சனையிலும் ஈடுபட்டு தொந்தரவுகளைத் தேடிக்கொள்வர்கள். பல தோல்வியைக் கடந்து பிறகு வெற்றியைப் பெற்றிடுவார்கள். ஆனாலும் வசதியான வாழ்வை வாழ்வார்கள் என்று சொல்ல வேண்டும்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 4

தேசியத்தில் பார்த்தால் மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும் தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள் தான் தன்னை இழந்துவிட்டோம் தன்னை தொலைத்துவிட்டோம் என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை பாவம் என்ன செய்வது அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ தனி திறமையாளர்களாலோ மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ இதுநாள் வரையில் மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை சுதந்திரத்தை தர முடியவில்லை இனி இவர்களை நம்பி பலனில்லை அதை நாமே தேடி…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 3

பிறகு அதற்குரிய தன்மையை நாம் நமக்குள் உருவாக்கிக்கொண்டு அந்த பணியில் இறங்குவோம் இங்கு அதற்குரிய தன்மைகள் என்பதன் பொருள் என்னவென்றால் உணர்ச்சிபூர்வமாக இல்லாதிருத்தல் பாரபட்சமற்ற நோக்கு எதையும் சாரத சுதந்திரமான தெளிவான ஒரு நோக்கு எதையும் உள்ளது உள்ளபடி கண்டறிவது இது முதல் நிலை அடுத்து உள்ளது உள்ளபடி புரிந்து கொள்வது இது இரண்டாவது நிலை நமது கருத்துக்களை பிறருக்கு தெரியப்படுத்துவது என்றால்என்ன என்பதை முதலில் நாம் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டிருக்கவேண்டும் நமது கருத்துக்கள் பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு நாம்…

20 – ந்தேதியில் பிறந்தவரிகளின் பலன்கள்.

சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பொதுநலத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், சுயநலத்தை நினைத்தாலே இவர்களுக்கு மற்றவர்களின் மேல் வெறுப்பு தானாக ஏற்படும். பெரும்பாலும் இவர்கள் பொதுச்சேவை புரிவதால் இவர்களை மகான் என்றும், மேதை என்றும் போற்றுவார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமை ஸ்தானம் பெறுவார்கள், பெருமையும், புகழும் உடையவர்கள். ஸ்திரபுத்தி இருக்காது ஏற்றத்தாழ்வுகள், பிணி, நலி, கண்டங்கள் வாழ்வில் பல முறை குறுக்கிடும்.

19 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம்  என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 2

நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் , எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது.  தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது எங்கு நோக்கினும் அழிவு கோட்பாடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது எதற்கும் எதிலும் மதிப்போ ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை அது மதமாகட்டும் நிறுவனமாகட்டும் தத்துவமாகட்டும் அரசியல் ஆகட்டும் இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில் நாம் எப்படி வாழ்வது என்று நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இத்தனைக்கும் காரணம் சரியான…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 1

அன்பானவர்களுக்கு நான் படித்த சிந்தித்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன் மனித பிறவிகளாகிய நாம் ஒரு வன்முறை சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம் இதை தான் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கியுள்ளோம் என்பதை கூட நாம் இன்னும் உணரவில்லை இந்த நிலைக்கு வளர்ச்சி என்று பெயரிட்டு அழைக்கிறம் நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் எல்லாம் நமது முயற்சியின் பலனாகும் இதற்க்கு பின்புலமாக இருப்பது கடின பிரயத்தனங்கள் நமது வேதனைகள் திகைப்பூட்டும் கொடுமைகள் தான் அமைத்துள்ளன. இந்த உலகத்தில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது…

18 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள்.

17 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது லட்சியம். எனவே எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற குறிக்கோள் கொண்டவர்கள். செல்வச் செழிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என எப்படியாவது செல்வ வளத்தைத் தேடி அடைந்திடுவார்கள்.

16 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். துணிச்சலும், ஆற்றலும், அறிவுக் கூர்மையும் உடையவர்கள். தமது திறமையை ஆக்கப் பணிகளுக்குச் செயல்படுத்துவார்கள். மாறாக செயல்படுவார்களேயானால் அதிக இல்லல்களையே பெற்றிடுவார்கள். கலைகளில் தேர்ச்சியுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிவுடன் ஈடுபடுவார்கள்.

15 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உடையவர்களாகவே திகழ்வார்கள். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சியால் நல்ல பெயரும், புகழும், பொருளும் பெறுவார்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். தமது வாக்கு சாதுர்யத்தால் நல்ல முன்னேற்றம் தேடிக்கொள்வார்கள்.

14 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் பொதுநலத் தொண்டு புரிவதிலும் சிலர் தெய்வீகத் தொண்டு புரிவதிலும் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். எப்போதும் பிரயாண ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்கள் இருக்க வேண்டும்.

13 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலரின் எதிர்ப்புக்கு ஆளாவார். இவர்கள் நம்பக்கூடாத வர்களை நம்பி மோசம் போவார்கள். நண்பர்களே துரோகிகள் என்று சொல்லலாம். எனவே, இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் துயரங்களையும், எதிர்ப்புகளையும், தோல்விகளையும் பொருட்படுத்தாமல் எதிர் நீச்சல் போட்டால் சிறிது, சிறிதாக முன்னேறி உயர்நிலையைப் பெற்றே தீரலாம்.

12 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் இளம் வயதில் மிகவும் வறுமை வாட்டத்தில் இருப்பார்கள். நல்ல கல்வித் தகுதியைப் பெற்று நீதித்துறையில் உயர்ந்த பதவி பெறுவார்கள். பொது நலத் தொண்டிலும், ஆன்மீக ஈடுபாட்டிலும் அதிகமான ஆர்வம் கெண்டவர்கள். நல்ல வாக்குத்திறமையை உடையவர்கள். பொருளாதார சிறப்பு நன்றாக அமையும்.

11 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சந்திரன் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  வாழ்க்கையில் ஒரே சீரான அதே நேரத்தில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைபவர்கள். உயர்தர வாழ்க்கையை வாழ்பவர்கள். திடீர் தனயோகம் பெறுவார்கள் தமக்கு மிகவும் வேண்டியவர்களினால் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிக நஷ்டம் ஏற்படாது. எது எப்படி இருந்தபோதிலும் கவலையை மறப்பவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுபவர்கள்.

10 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  இவர்களது மனதை அவ்வளவு சுலபத்தில் எடைபோட முடியாது. இவரது பேச்சையும், செயலையும் வைத்து இதுதான் இவரது கருத்து என்று கண்டுபிடிக்க முடியாது. அன்புக்கு அடிமையாவார்கள். அடக்கமும், முன் எச்சரிக்கையும் உடையவர்கள். எப்போதும் பார்வைக்கு சந்தோஷமான தோற்றத்துடனே இருப்பார்கள். துன்பத்திலும், துயரத்திலும் புன்சிரிப்புடன் இருப்பார்கள்.

வாழறது சுகம்

நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.

பிரியமுள்ளவர்களிடத்து

நமக்கு பிரியமுள்ளவர்கள்  சொல்லும் வசை சொற்களுக்கு பொருள் இருப்பதில்லை, பிரியம், உறவு, பாசம், ஆகியவைகளின் அன்பு பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும் போது அவற்றுக்கு தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும் இதில் சொல்லியுள்ள விஷயத்தை என்றாவது உணர்ந்தது உண்டா அப்படி ஒரு சம்பவம் நிகழும் போது நாம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சிந்தித்தது உண்டா அப்படி சிந்திக்கும் போது இதில் சொன்ன விஷயம் நிஜமா, பொய்யா என்று நமக்கே தெரியவரும் அவ்வளவு தான்

உலகில் தற்போதைய ஆளுமைகளின் உண்மை சொரூபம்

சிறு குழந்தைகள் தங்கள் சந்தோஷத்திற்க்கு மண் பொம்மைகளை வைத்து விளையாடுகின்றனர். அரசியல் வாதிகள் தேசிய லட்சியங்கள் தேசபக்தி என்று உள்ளவற்றை சூதாட்ட காய்களாக வைத்து மக்களிடம் விளையாடுகின்றனர். ஆத்மவாதிகள் என கூறிக்கொள்பவர்களோ தத்துவ சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் சூதாட்டகாய்களாக மக்களிடம் வைத்து விளையாடுகின்றர் இது மூணும் ஒன்னுதானே சொல்லப்போனால் குழந்தைகளின் மண்பொம்மை விளையாட்டில் பிற ஜீவராசிகளுக்கோ,  மனித ஜாதிகளுக்கோ பெரிய பிரச்சனை எதுவும் வருவதில்லை

9 – தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.

அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

ஒரு தரமாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இடைவிடாது ஆண்டவனைப் பிரார்த்திப்பவன் அவனது அருளால் பிரேம பக்தியை அடைகிறான். குழந்தாய், , இந்தப் பிரேமையே ஆத்மிக வாழ்வின் இதயமாகும். பிருந்தாவன கோபிகள் இதனை அடைந்தனர். அவர்கள் இவுவலகத்தில் கண்ணனைத் தவிரப் பிறிதொன்றையும் உணரவில்லை.

8 – ம் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அமைதியான வாழ்க்கையை உடையவர்கள். மதப்பற்று மிக்கவர்கள். பொதுநலச் சேவை புரிபவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். தாமதத் திருமணம் உடையவர்கள். நேர்மையான முறையில் பணம் சேர்ப்பவர்கள். உயர்வு பெற பலரது உதவியையும் நாடுபவர்கள். அதிக முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள். ஏற்ற பணியை முடிக்க வல்லவர்கள்.

7 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள்.  குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.

கடவுள் தரிசனத்தைப்பற்றி சாரதா தேவிஅன்னையார் கூறியது,–

கடவுள் தரிசனம் எப்படிப் பட்டது என்று உனக்குத் தெரியுமா? அது குழந்தை கையிலிருக்கும் கற்கண்டைப் போன்றது. சிலர் அதில் கொஞ்சம் கொடுக்கும்படி அதனிடம் கெஞ்சுவார்கள். ஆனால் அது அவர்கட்குக் கொடுக்கச் சற்றும் நினைப்பதில்லை. ஆயினும் தான் விரும்புகின்ற வே‍று ஒருவனது கையில் வெகு சுலபமாக அக்குழந்தை அதைக் கொடுதுவிடுகிறது. கடவுளின் தரிசனம் பெற வாழ்நாள் முழுவதும் தவஞ்செய்யும் மனிதன் வெற்றி பெறுதில்லை. ஆனால் எந்தவிதச் சிரமமுமின்றி மற்றொருவன் அதனைப் பெற்று விடுகிறான். அது கடவுளின் கருணையைப் பொறுத்தது.…

அன்னை சாரதா தேவியாரின் அன்பு முரசு

படிப்படியாகவே குண்டலினி சக்தி எழும், ஆண்டவனது நாமத்தை ஜபிப்பதால் நீ எல்லாவற்றையும் உணர்வாய். மனம் அமைதியாக இல்லாவிடினும் கூட நீ ஓரிடத்தில் அமர்ந்து புனித நாமத்தைப் பத்து லட்சம் முறை ஜபிக்கலாம். குண்டலினி எழுவதற்கு முன் அனாஹா ஒலி கேட்கும், ஆனால் தெய்வீக அன்னையின் அருளின்றி எதுவுமே கிட்டாது.

6 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது  லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.

கெளரவம்

உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்கள் கூட்டங்களில் வம்பு, தும்புகளும் புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும் பயனற்ற முரண்பாடுகளும் நிறைந்தது தான் இதில் இனம், மொழி, ஜாதி, பேதங்கள் எதுவுமில்லை அது குடும்பமானாலும் சரி,  சமுதாயமானாலும் சரி, இதில் சமுதாய பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது கெளரவம் பார்ப்பதில் முன் காலத்தில் மதமும் ஜாதியும் கெளரவத்தை பிடித்துக்கொண்டிருந்தது பின் வந்த காலத்தில் படிப்பு அந்த இடத்தை பிடித்துக்கொண்டது இப்போது பொருளாதாரம் அந்த கெளரவம் என்கின்ற இடத்தை கோலாச்சுகிறது. அந்த…

5 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்க்ள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் லட்சியத்துடன் வாழ்க்கயை நடத்துவபவர்கள். இவர்கள் சிறிய வயதில் முடிவெடுக்கும் திட்டத்தினால்தான் தமது வாழ்க்கையை அமைக்க முடியும். தமது லட்சிய அடிப்படையில் எதிர்காலத்தை ஒளிமயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அளவு கடந்த ஈடுபாடும் ஏற்பட்டு விடும்.

4 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். உறுதியான மனம் கொண்டவர்கள். எதையும் திட்டவட்டமாகச் செயல்படுத்துவார்கள். கண்டிப்பான குணம்கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் என்றாலும், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் நிரந்தரமான வெற்றியைப் பெறலாம். மற்றவர்களை அனுசரித்து நடந்தாலே இவர்களுக்கு தாமாக முன்னேற்றம் ஏற்படும்.

எல்லாம் ஒன்றுதானா

எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்

3 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் திட்டமிட்டு செயலில் இறங்குவதால் இவர்கள் பெரும் பயன் பெறமுடியும். நுட்பமான தொழில்களில் ஈடுபாடு உடையவர்கள். அதில் நல்ல எதிர்காலம் பெறுபவர்கள். எழுத்துத்துறையிலும் இவர்கள் பிரகாசிக்க முடியும். உயர்ந்த எண்ணம் உடையவர்கள். பயன்தரும் திட்டங்களை உடையவர்கள். அதை செயல்படுத்தவும் செய்வார்கள்.

மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்த

சேர்ப்பது அழிவிலும் முன்னேறுவது வீழ்ச்சியிலும் சேர்க்கை பிரிவிலும் வாழ்க்கை மரணத்திலும் முடியும் என்பதை அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும் அப்படி புரிந்துகொண்டால் அதிக மன சங்கடமில்லாமல் வாழ்க்கையை நகர்த்திவிடலாம்

முன்னேற்றத்திற்கு வழி

தான் செய்த தவறுகளை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோறுவதுதான் உயர்ந்த பண்பு  அதுதான்  சரியான வாழ்க்கை முறை தான் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதும் அதை ஒப்புக்கொள்வதும் மறுபடியும் அவற்றை செய்யாமல் இருப்பதும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

2.ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்  உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். தீவிரமாக எப்போதும் ஆராயச்சியில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அமைதியான குணம் உடையவர்கள். கற்பனைசக்தி மிகுந்தவர்கள். எதையுமே அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பெரும்பான்மையாக  கலைத்துறை ஈடுபாடு உடையவர்கள் 2-ம் தேதி பிறந்தவர்களாகவே  இருப்பார்கள்.

நட்பு

நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்  நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில்  நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.

அத்தி (Ficus racemosa)

அத்தி  அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.

யோக பாதை.

நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது. குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண…

புளிச்சைக் கீரை (Hibiscus surattensis)

புளிச்சைக் கீரை புளிப்புச்சுவை கொண்டதான இந்தக் கீரையை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும் எனினும் உடலில் புளிப்புச் சுவையை அதிகப்படுத்தப் பண்பு இதற்கு உள்ளது பாரம்பரிய மக்கள்  மீன்களை சமைக்கும் போது அவற்றுக்கு புளிப்புச்சுவை கொண்ட இந்த கீரையை பயன்படுத்துவார்கள்

சொத்தைக்களா (Falcourtia indica)

சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

கரிசாலை(வெள்ளை கரிசலாங்கண்ணி) Eclipta prostrata

கரிசாலை  (வெள்ளை கரிசலாங்கண்ணி) வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். இதனால் கண் பார்வை அதிகரிப்பதுடன் உடல் பலமும் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகையை உண்டு வர நரை,திரை முதுமை மாறும் என்பதாக நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர் அதோடு,கல்லீரல் பலப்படும். இராமலிங்க வள்ளலார் கரிசாலையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தினமும் காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட மலச்சிக்கல் தீரும். கரிசாலைச் சாற்றல் வாய் கொப்பளித்தால் பற்களும், ஈறுகளும்,…

1 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.

நறுவிலி, (Cordia dichotoma)

நறுவிலி பலவிதமான நுண்சத்துக்கள் நிறைந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும். கொழகொழப்புச் சுவை மிகுந்த இந்த பழம் வாய்,பல் மற்றும் ஈறு நோய்களுக்கும். மார்பு மற்றும் சிறுநீர்த்தாரை நோய்களுக்கும் சிறந்த துணை மருந்தாகும்.

எலுமிச்சை புல்(Cymbopogon citratus)

எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…

நல்வேளை

நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு  நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.

(Coccinia grandis) கோவைப் பழங்கள்

கோவைப் பழங்கள் உண்ணுவதற்கு மிகவும் விருப்பமானவை. கோவைக்காய் கூட்டு மற்றும் பொறியல் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது மேலும் வற்றல் செய்வதற்கும் உகந்தது. இந்த வற்றலை நெய்யில் வறுத்துச் சாப்பிட இளைத்த உடலைத் தேற்றும், வயிற்று புழுக்களை வெளியேற்றும். சில நாட்டுப் பழங்குடி மக்களால் இதன் இளம் தளிர் இலைகளை உண்ணப்படுகின்றன கோவைக்காயை சாம்பார், கூட்டு போன்றவை செய்து சாப்பிடலாம்.

பால்பெருக்கி:

பால்பெருக்கி: இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம். இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு  இந்தக் கீரைக்கு உள்ளதால் தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட சிறந்த பலன் ஏற்படும். இறுகிப் போன பழைய மலத்தை வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அருகம்புல் :

அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…

மாகாளிக்கிழங்கு :

மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.

சுக்கங்காய்: (சுகன்)

சுக்கங்காய் முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து வற்றலாகக் செய்து கொள்ளலாம் . இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.

காகனம் (சங்கு புஷ்பம்)

சங்கு புஷ்பம் மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீராக கூட அருந்தலாம் . இதனால் உடல் அரிப்பு குணமாகும். இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் . இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன் உடலுக்கு நல்ல பலம் ஏற்படும். இதன் மலர் சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலப்படும் தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும். இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மீனம் :-

மீனம் :- “மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும். உபயராசி  இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி  கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது. அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும். தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி. ஆனால் மௌனமானதும்…