ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் – HASTHA PADANGUSTHASANAM

கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு, மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி ஒரு காலைத் தூக்கும்போது மூச்சை வெளியிட்டு, மடக்கிய காலை படத்தில் காட்டியபடி உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். இப்பொழுது கால் தூக்கிய நிலையில் வந்தவுடன் இரு கைகளையும் படத்தில் காட்டியபடி நீட்டி, தூக்கிய நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக்கொண்டு சில வினாடியில் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை…

சக்கராசனம் — CHAKKARASANAM

சக்கராசனம் — CHAKKARASANAM முதல் முறை — பிறையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தரையில் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்கவேண்டும். இரண்டாவது முறை — தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் காட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.…

நெளலி — NAULI

நெளலி உட்டியானா செய்யச் செய்ய நெளலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று, கைகளைப் படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும். சுவாசம் முழுமையும் மெதுவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியைடைந்த வயிற்றின் சதைகளை இறுகக் கட்டிச் செய்யவும். இப்படி இறுக்கியவுடன் மேல் சென்ற வயிறு தானாக முன்னால் துருத்தும் பின் வயிறு தடிபோல் முன்வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவவிட்டு சுவாசத்தை…

உட்டியானா – UDDIYANA

உட்டியானா கால்களை ஒரடி அகற்றி நின்று கொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல் முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விடவேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப் படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடிகள் 2 முதல் 4 முறை செய்யலாம். உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்யவேண்டும். ஆகாரம்…

கோணாசனம் — KONASANAM

கோணாசனம் நேராக நின்றுகொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கெள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளையவேண்டம். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப்பக்கம் சாயவேண்டும். 3 முறை செய்யலாம். பலன்கள் — விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும் பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால், இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்.

திரிகோணாசனம் — THIRIKONASANAM

திரிகோணாசனம் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக…

பாதஹஸ்தாசனம் — PADHAHASTHASANAM

பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…

பிறையாசனம் — PIRAIYASANAM

பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை…

நின்ற பாத ஆசனம் — STANDING FOOT ASANAM

நின்ற பாத ஆசனம் — இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலைமடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக்கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு…

சிரசாசனம் — SIRASASANAM

சிரசாசனம்   15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசானம் தொடங்க வேண்டும். அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஒரமாகவோ, மூலையிலோ இருந்து கொண்டு இலேசாக மூச்சுசப் பிடித்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும். கால்களை விறைப்பாக இல்லாமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும். சாதாரண மூச்சு. கண் மூடி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம். நன்றாக பேலன்ஸ் கிடைத்தபின் தனியாக நிற்கலாம். ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5…

அர்த்த சிரசாசனம் — ARDHA SIRASASANAM

அர்த்த சிரசாசனம் கெட்டியான விரிப்பில மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில்அமர்ததி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்கவேண்டும். ஒருமுறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை…

அர்த்த மத்ச்யேந்திராசனம் — ARDHA MATSYENDRASANAM

அர்த்த மத்ச்யேந்திராசனம் —  உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது…

மகாமுத்ரா — MAHAMUDRA

மகாமுத்ரா — உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம். வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு. 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும் .பலன்கள் — வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம் — USSERT ASANAM

உசர்ட்டாசனம் —  உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப்பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.…

ஜானுசீராசனம் — JANUSEERASANAM

ஜானுசீராசனம்  நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்கவேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம், இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச்…

யோக முத்ரா — YOGA MUDRA

யோக முத்ரா — YOGA MUDRA பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி நெஞ்சைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடடவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தைப் பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5…

தனுராசனம் — DHANURASANAM

தனுராசனம் விரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை ( கரண்டைக்கால் ) இறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் காட்டியபடி வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப்பொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக…

சலபாசனம் — SALABASANAM

சலபாசனம் — குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும். பலன்கள்…

புஜங்காசனம் — BUJANGASANAM

புஜங்காசனம் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு , பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும். ஒருமுறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 மு‍றை ‍ செய்யலாம். புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் பெயர் பெற்றது. பலன்கள் –– வயிற்றைறையில் தசைகள்…

சுப்தவஜிராசனம் — SUPTAVAJIRASANAM

சுப்தவஜிராசனம்முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமரவேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படு படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும் தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்துப் படுக்க வேண்டும். அடுத்து ஆசன…

மச்சாசனம் — MATSYASANAM

மச்சாசனம் பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள் –– சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு…

ஹலாசனம் — HALASANAM

ஹலாசனம் — HALASANAM சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும். அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில்வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்கவேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்கவேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுபபிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4

ஜோதிட விதிகள் இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான். இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன். இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால், சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும். இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன். இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன் இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன். இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன் இலக்கினாதிபதி சுக்கிரனாகில்,…

மயூராசனம் — MAYURASANAM

மயூராசனம் மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர். முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலைய‍ணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம். பலன்கள் – வாத…

வஜ்ராசனம் — VAJIRASANAM

வஜ்ராசனம் கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும். நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும். 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம் ..பலன்கள் — வச்சிரம் போன்று திட மனது ஏற்படும் அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்குரிய ஆசனம்

உத்தித பத்மாசனம் – UTHITHA PADMASANAM

உத்தித பத்மாசனம்  பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது ஒருமுறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் செளகரியம்போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும். பலன்கள் – தொந்தி…

சர்வாங்காசனம் – SARAVANGASANAM

சர்வாங்காசனம் – விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும். சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும். 2 நிமிடத்திற்கு ஒரு முறையாக,…

விபரீத கரணி — VEEBAREETHA KARANI

விபரீத கரணி  விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும் .ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட…

நவாசனம் — NAVASANAM

நவாசனம்  நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்கவேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு . பலன்கள் — இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்‍தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல்…

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM.

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM. விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் – இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்துது ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் எக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுக்களைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியே விட் நிலையில்…

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும் . இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4…

பஸ்சிமோத்தாசனம்

செய்முறை: மல்லாந்து படுத்த நிலையில் இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை பிடிக்கவும், விரல்கள் எட்டவில்லையானால், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலை பிடிக்கவும். முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, மூச்சை வெளியேவிட்ட நிலையில் வயிற்றுப் பகுதியை மெதுவாக எக்கவும். கைகளின் இரு…

பத்மாசனம்.

                                                           பத்மாசனம். பத்மாசனம் செய்யும் முறை — முதலில் காற்றோட்டமான நல்ல ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தூய ஒரு வெண்ணிற ஆடையை விரியுங்கள், உடலுக்கு இறுக்கமில்லாத ஆடையை அணியுங்கள், அப்படி அணியக்கூடிய ஆடை பருத்தி ஆடையாக இருப்பது…

தியானம்

தியானம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக தியானம் இருந்து வந்திருக்கிறது. உடலுக்கு செய்கின்ற பயிற்சி உடலை உறுதியாக்குவது போல் மனதுக்கு செய்யும் பயிற்சி மனதை உறுதியாக்கும் தியானம் என்பது மனதிற்கு செய்யும் பயிற்சியே ஆகும். மனம் ஈடுபடாத செயல் உயிர் இல்லாத உடலை போன்றது. மனம் ஈடுபட்டு செய்யக்கூடிய எல்லா செயல்களுமே தியானம்தான் கோவிலுக்குச் சென்று கண்களை மூடி வேண்டிய தேவைகள் பூர்த்தியாக வேண்டுதல் தியானம் அல்ல,அது பிரார்த்தனை. பிரார்த்தனை வேறு தியானம்…

அர்த்தசர்வாங்க ஆசனம்

அர்த்தசர்வாங்க ஆசனம் செய்முறை: விரிப்பின் மேல் தரையில் படுத்து நேராக கால்களைச் சேர்த்து தொடைகள் நெருங்கியிருக்குபடி வைத்துக் கொண்டு முழங்கால்களை மடக்கி நிறுத்தவும். அச்சமயம் இரு கைகளையும் இரு புறமும் இடுப்புக்கு கீழ் விலாபுறத்தில் பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்கி புறங்கைகள், கழுத்து, பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும். இந்நிலையில் சுவாசம் மெதுவாக நடைபெற வேண்டும். 10 முதல் 25 விநாடிகள் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவும். இரண்டு முறை செய்வது நலம்.…

யோகா.

மனித வாழ்க்கையில் யோகா மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம்  மிக முக்கியம். ஆரோக்கியமாக வாழ யோகா மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். உடலின் உள்உறுப்புகளுக்கு உண்டான பலத்தை தருவதில் யோகாவிற்கு நிகர் யோகா மட்டுமே. உள் உறுப்புகளின் ஆற்றல்கள் குறையாமல் இருக்கவும், அதனுடைய ஆற்றல்கள் மேம்படவும், யோகா மூலம் செய்ய முடியும். வரும் முன் காத்தல், என்னும் சொல்லுக்கிணங்க யோகாவை சரியான முறையில் முறையாக, ஆசானிடம் பயிற்சி பெற்றால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகளை வரும்…