எந்தவிதக் கொள்கையும்

சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அடக்கம்

அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன் சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

6 – க்குடையவர், 7 – இல், 5 – க்குடையவர் 6 – இல் ராகுவுடன் சேர்ந்தால் நீர் வியாதி, இளைப்பு போன்ற ரோகமும், சத்துருக்களால் தொல்லையும் ஏற்படும். புத்திரங்களுக்கு நோய் ஏற்படும். 6 – க்குரியவர் 4, இல் 8, 11 – லிருப்பின் சூதாட்டம், ரேஸ், குடிப்பழக்கம் இவைகளால் கடன் ஏற்படும். மனைவி வர்க்கத்தில் அவமானம் தரும். மூத்திர இருச்சின ரோகம் ஏற்படும். மகரம், மிதுனம், லக்கினமாக குரு நீச்சம் பெற, சுக்கிரன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11

6, 12 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று இருப்பின் இளம் வயதில் குன்ம நோய் ஏற்படலாம். 6 – இல் சந்திரன், கேது சேர்க்கை இருப்பின் ரத்த குஷ்ட நோய் ஏற்படும். 1 – க்குரியவர் 8 – இல் சனி, புதன், ராகு சேர்க்கை மத்திம வயதிற்கு மேல் வாத ரோகம் ஏற்படும். 1- க்குரியவர் 6 – இல் ( அ ) 12 – க்குரியவர் 1 – இல் மிருகங்களால் பயம்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

6 – இல் செவ்வாய் இருந்து, 6 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று இருப்பின், இளம் வயதிலும், அந்திம வயதிலும் கடுமையான உஷ்ண நோய் உண்டாம். 6 – இல் குரு, 12 – இல் சந்திரன் இருப்பின் இளம் வயதில் வயிற்று வலி, குடல், நோய் உண்டாம். 6 – இல் இராகு, சந்திரன், சனி, இருப்பின், 1 – க்குரியவர் 6 – லிருப்பின் மத்திம வயதில் கொடி ரோகம் உண்டாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

சூரியன், செவ்வாய் பரிவர்த்தனம் பெற்றாலும், எதிர் கேந்திரம் பெற்றாலும், அம்சத்திலிருப்பினும், அடிதடி சண்டையில் தொல்லை ஏற்பட்டு கஷ்டம் ( அ ) மாரகம் ஏற்படலாம். 1, 2, 7 – ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பினும், சூரியனையோ ( அ ) செவ்வாய் பார்வை பெற்றாலும் கடுமையான நோய்கள் ஏற்படும். 8 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை ( அ ) 8 – இல் சனி 12 – இல் செவ்வாய் இருப்பினும்,…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 6

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 5

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 4

மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 3

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2

உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 1

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ…