உரையாடலின் ஒரு பகுதி  100

ப்ருத்ருஹரியின் நீதி சதகம் அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே விஷேச- ஞானலவ _துரீவிதக்தம் ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி.. இதன் பொருள் – அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம் அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம் மிக குறைவாகவே அறிந்து எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.

உரையாடலின் ஒரு பகுதி  99

ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனதளவில் இறந்து போக தொடங்கினால் அதற்கு பிறகு அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது நிற்கவும் நிற்காது.

உரையாடலின் ஒரு பகுதி 98

எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.

உரையாடலின் ஒரு பகுதி  97

காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.

உரையாடலின் ஒரு பகுதி  96

எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி.   எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…

உரையாடலின் ஒரு பகுதி  95

அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்

உரையாடலின் ஒரு பகுதி  94

இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும்  உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  93

வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி  92

ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்

உரையாடலின் ஒரு பகுதி  91

அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.

உரையாடலின் ஒரு பகுதி  90

கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.

சனி 21

சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும்.  பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.

சனி 20

சனி, 3ம் பார்வையாகவோ, 10ம் பார்வையாகவோ, 7ம் பார்வையாகவோ சுக்கிரனைப் பார்ப்பின் சன்யாஸ வாழ்க்கை அமையும். சனியும்,  சந்திரனும் இணைந்தால் அசையாத சொத்துக்கள் உண்டு.  நிறைய ஏவலாட்கள் உண்டு. சனி பொதுவாக ராகு, கேது, சூரியனைப்பார்ப்பது பிதுர்தோஷமாகும்.

சனி 19

சனி 4வது வீட்டில் இருந்து 4வது வீடு துலாம், மகரம், கும்பமாக இருப்பின் ஜாதகர், ஜோதிடர், கணித ஆசிரியர், அகெளண்ட்ஸில் வேலை பார்ப்பவராக இருப்பார். சனி, ராகு சம்பந்தம், புதன், ராகு சேர்க்கை எலக்ட்ரனிக் கல்வியில் சிறந்து விளங்குவர். சனி லக்னத்திலிருந்தோ, சந்திரனிடமிருந்தோ 5ம் வீடு, 10 வீட்டில் இருப்பினும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சனி 18

சனி 7ல் இருந்து பாபகிரஹங்களால் பார்க்கப்பட்டால் அவருக்கு இருதாரம் ஏற்படும்.  சனி, புதன் சேர்க்கை 7ம் வீட்டில் இருப்பின் விதவையை மணப்பர். அதேபோல் சந்திரன், சனி சேர்க்கை 7ல் இருப்பின் விதவையை மணந்து சுகமாக வாழ்வர். சனி ஜன்ம ராசிக்கு கோச்சாரப்படி 12ம் வீடு, 1,2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஏழரை ஆண்டு சனி அல்லது சாடே சாத்தி அல்லது ஏழரை சனி என்று கூறுவர். சனி பகவான் லக்னத்தைப்பார்த்தாலோ, அல்லது லக்னாதிபதியை பார்த்தாலோ, 10மிடத்தை…

சனி 17

சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும். 7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும். சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின் திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம். சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும், வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.

விடுபட எண்ணுகையில் கொஞ்சம் தீனிகேட்டு எழுந்திருக்கும் புத்தி கரையான் புற்று போல வளரத் தொடங்கிவிடும் நீங்களாக அதற்கொரு பூச்சிக்கொல்லி மருந்து அடித்துக் கலைக்கும் வரை உங்கள் பேச்சு அதன் பேச்சுடன் ஒத்துப்போகும் கவனித்துப் பாருங்களேன்.. பின் குறிப்பு எதில் இருந்து விடுபடஎன்பது அவரவர் சம்பத்தப்பட்ட விஷயம்

காத்திருப்பது

காத்திருப்பது  வீண் சில சமயம் தோணும்போதும்  மனம் காத்திருக்க தவறியதில்லை,  காத்திருப்பு  உனக்காக  என்ற போதிலே;  ஏதோ  ஒரு நம்பிக்கையில்..  பாரமான  உன் நினைவோடு  என்றென்றும்..   பின் குறிப்பு உனக்கு என்பதை எதை கொண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தரம் உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்

உங்களிடம் நீங்கள்

உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.

பழ மொழிகள் 10

குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே. கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது. கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை. சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை. தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை

பழ மொழிகள் 9

ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.

பழ மொழிகள் 8

கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன். பட்டவரைக்கும் பலன் உண்டு. முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.

பழ மொழிகள் 7

நகமும் சதையும் போல் வாழ்க்கை. மாதா செய்த பாவம் மக்கள் தலையில். கொடுப்பதற்கும், சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். முட்டிக் கொள்ளும் முன்பே குனிய வேண்டும். எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்.

வெற்றிகளை சத்தித்தவனின் இதயம்

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன்  துன்பபடமாட்டான்

கோபம் என்பது

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே  கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,  

நாம மேல ஏற ஏற

நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!

கார்ட்டூன் சேனலில் இருந்து

கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள்

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 158

உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும். உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும். பயிற்சியும் சரியாக வராது. நெளலியை நின்றும் செய்யலாம் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம் குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி, தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும். இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 157

உட்டியாண வயிற்றின் வீரியத்திற்கு எடுத்ததே. ஆனால் இதைக் காட்டிலும் உயர்ந்த அப்பியாசம் ஒன்றுள்ளது. அதுவே ‘ நெளலி ‘ பழகும் வகைக்கு சென்ற பயிற்ச்சிக்கும் இதற்கும் வித்தியாசம் நன்கு தெரியும். உட்டியாணாவில் வயிறு எங்கேயோ முதுகை நோக்கி ஓடிவிட்டது. நெளலியில் இது உருண்டு திரண்டு தண்டாக, நடுவில் நின்று காட்சி அளிக்கிறது.  ஜாலவித்தை ஒன்றுமில்லை. உட்சதைகளின் ஆட்சியால் கிடைக்கும் நிலையே இது இலட்சக்கணக்கான சாதகர்கள் இதை இப்பொழுதும் நம்நாட்டில் பழகி வருகிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 156

யோக சாதனையில் உட்டியாணா, நெளலி என்ற அபூர்வ அப்பியாசங்கள் உள்ளன. நான்கோரும் பலனைக்கொடுக்க இவைகள் தான் மிகவும் உகந்தவை. உட்டியாணாவை பழகும் வகையைப் படித்த உடனேயே, உட்டியாணாவின் பலன்களை ஊகிக்க முடியும். பழக ஆரம்பித்தால் சந்தேகம் அறவே ஒழியும். அப்பியாசம் சித்திக்கவே, வயிற்றுச் சதைகளின் பலவீனம் பறந்தோடி உழைக்கப்படுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 155

பெருங்குடல் பொருள்கள் வெளித்தள்ளப்படாமல் தேங்குகின்றன. தீவிர மலச்சிக்கல் உண்டா கின்றது. வயிற்றுச் சதைகளின் பலவீனத்தால் இங்கே கெடுதல் ஏற்படுகிறது. விளக்கெண்ணெயும், ‘சால்டு’களும், ‘எனிமா’வும் ஒரு பலனும் தரா. குடல் கெடுமே ஒழிய குறைநீங்காது சதைப்பயிற்சி கொடுத்தே தீர வேண்டும். நான் என்ன வரைந்தாலும் இந்த உண்மை சிலர் மூளைக்குள் புகாது. ‘ஸர்ஜரி’ யைப் ( SURGERY  – ரணசிகிச்சை ) பற்றிய பெரிய வைத்திய புத்தகங்கள் கூட வயிற்றுச் சதைப்பயிற்சி  செய்யத் திட்ட மிடுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 154

ஆனால் வயிற்றுச்சுவர் ( சதைகள் ) பலவீனமடைந்தால் இந்நிலை தவறுகிறது. பூமி சக்தி கருவிகளையெல்லாம் கீழே இழுக்கின்றன. வயிற்று இறுக்கம் ( INTRA ABDOMINAL PRESSURE ) குறைகிறது. வயிற்றுச் சுவர் ( சதைகள் ) பூமி சக்தியைத் தடுப்பதுமின்றி, பெருங்குடலை வேலைக்குத் தூண்டுகிறது. இச்சதைகள் இளகவே மேற்கூறிய இறுக்கம் குறைகிறது. பெருங்குடலின் மேல் தூண்டுதலும் பலவீனப்படுகிறது. இரைப்பையும், குடல்களும் உப்புகின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   74

ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   73

நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள் நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   72

எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   71

தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   70

பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன் புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  89

இப்படிதான் வாழ வேண்டும் என்ற நியதியோ, நியாயமோ, வரம்போ எந்த ஒரு வாழ்க்கையையும் இந்த ஜென்மத்தில் வாழாதவனால் அடுத்த ஜென்மத்தில் மட்டும் எப்படி (அப்படி பட்ட) ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகில் அறிவினாலும் மனதினாலும் வாழ விரும்புவர்கள் இந்த உலகில் புதிய ஆண்மை ஒன்றை படைத்திருக்கிறார்கள் அதுதான் சான்றாண்மை சால்பை ஆள்வது தான் சான்றாண்மை, சான்றாண்மை குணத்தை விரும்புகிறவர்கள் எதை எதிர்ப்பதையும் வீரமாக கொள்வதில்லை பொறுத்து நிற்பதை தான் வீரமாக கொள்கிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  88

அழுக்கு படாமல் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமல் போய்விடும். அன்பில்லாமல் கருணை இல்லை எல்லையை உடையது அன்பு எல்லையற்றது கருணை அன்பு முதிர்ந்து தான் கருணையாக மாற வேண்டும் அன்பே இல்லாத கருணை உலகில் தோன்றியதில்லை. பூ அழிந்து தானே காய் உண்டாகிறது

உரையாடலின் ஒரு பகுதி  86

மனித குலம் இத்தனை பாடு பட்டும் இன்பமாய் சந்தோஷமாய் ஆனந்தமாய் இல்லாதிருக்க காரணம் அவரவர்களின் பதிவுகளே முதலில் நாம் நம் மனதின் துணை கொண்டு அதாவது மனதின் அறிவு கொண்டு நம் பதிவுகளை அறிவோம் பின் அந்த பதிவுகள் இல்லாமல் செயல் புரிவது எப்படி என்று பார்ப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  85

 கீதை அதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. கர்மத்தை செய், பலனை எதிர்பார்க்காதே என்று. அதாவது, அதை புரிந்து கொள்ள வேண்டிய விதம் கர்மத்தை செய். பதிவுகளை உருவாக்காதே என்பதே பதிவுகளில் நல்ல பதிவு, கெட்ட பதிவு என்று இல்லை ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. பதிவு என்பது வேண்டாம் என்பதே

உரையாடலின் ஒரு பகுதி  84

மேலே சொன்ன திரைகளனைத்தும் நம் செயல்களின் விளைவுகளால் உண்டானது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் உண்மை என்னவென்றால் நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இது தான் இதை அறிந்து கொண்ட பின் நாம் நமது செயல்களில் கவனம் வைத்து செயல்களை செய்து பழக வேண்டும் அது எப்படியென்றால் செயல்கள் இருக்கும் விளைவுகள் இருக்கும் ஆனால் பதிவுகள் இருக்காது. இந்த முறையில் செயல்களை செய்ய தான் கீதை நமக்கு அறிவுறுத்துகிறது.

இதை உணர்ந்து இருக்கிறீர்களா

ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது

7 தலைமுறைகளின் முக்கியத்துவம்

ஜீன்களை சுமந்து செல்வதே சுக்லதாது . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது . தந்தையிடமிருந்து (father) 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து (grand father) 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து (great grandfather) 10 அம்சங்கள் ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. பாக்கி உள்ள 10 அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை. நான்காவது மூதாதையிடமிருந்து 6…

ஓசை ……

  தடுக்கி விழுந்தால்                         அ  ஆ. சிரிக்கும் பொழுது                          இ..  ஈ. தீ புண்பட்டால்                                  உ..  ஊ. அதிகாரம் செய்யும் போது.…

புலன்களை வென்றவனே வீரன்.

இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.

யோசிக்க 15

‘உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, ‘நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்’ என்று சொல்ல உங்களால் முடியவேண்டும். இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான்…

யோசிக்க 14

நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.

யோசிக்க 13

ஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி ‘ஹிந்து வளர்ச்சி விகிதம்’ என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை ‘நேருவின் வளர்ச்சி விகிதம்’ என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

யோசிக்க 12

சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.’என்று குறிப்பிட்டுள்ளார்

யோசிக்க 11

இந்தியர்களின் முன்னேற்றம்: அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

யோசிக்க 10

ஜாவஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.

யோசிக்க 9

இந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல. சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு ‘வளம் பெற வேண்டுமா? சகித்துக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை. ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது (மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும்…

யோசிக்க 8

இந்தியாவின் பிரச்னை வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல, அது அரசியல் பிரச்னை. இப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்க நமக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு அரசியல் சார்ந்தது. நாம் நமக்கு இருக்கும் சக்தியைக் கூட்டாகப் பயன்படுத்தி, பொறுப்புள்ள பதவிகளுக்கு நல்ல மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

யோசிக்க 6

ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது? இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும்? ‘இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள் மனத்தை உலுக்கக் கூடியவை. இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.’ என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.

சனி 16

சனி, சந்திரனும் சமசப்தமாக இருப்பின் திருமணம் நடைபெறுவதற்கு பலபிரச்சனைகள் உண்டாகும்.  திருமணம் தாமதமாகும்.  ( ஸ்ரீ கிருஷ்ணன் ) . சனிக்கு 2,12ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். நல்ல செல்வ சேர்க்கை ஏற்படும். லக்னம், சூரியன், சந்திரன், புதன் ஒன்றக்கொன்று 7\7 ஆக அமைவது இருவரும் கருத்தொருமித்து வாழ்வர். சனி 2 வது வீட்டில் உச்சத்தில் இருப்பின், ஜாதகர் ஆட்களை வைத்து வேலைகள் செய்வித்து நிறைய சம்பாதிப்பர், இரும்பு, கற்கள், உழுவுத்தொழிலில், பெரும்பணம்…

சனி 15

சனியுடன், சுக்கிரன், ராகு, புதனுடன் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பின் திருமணம் தாமதமாக ஏற்படும். சனி 2ல் செவ்வாய் 7ல் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருப்பின் இவ்வமைப்பு திருமணமாகாத நிலமை ஏற்படுத்திவிடும். சனி, புதன், லக்னாதிபதி இவர்களுக்கு 6மிடம் சம்பந்தம் ஏற்பட்டால் சேர்க்கை, பார்வை பெற்றால், வழக்கு, வியாஜ்ஜித்தில் திசா, புத்தி காலங்களில் ஈடுபடுவர்.

சனி 14

சனி மகர லக்னகாரர்களுக்கு மாடமாளிகைகளை வழங்குவார். சொத்துக்களை சேர்த்து வைத்து வழி வகுப்பார். சனி  7 ம் மிடத்தை பார்ப்பதினால் பொருள் களவு போகும், அக்னிபயம் கொடுத்த  பொருளைத் திரும்பி வாங்க இயலாமல் போகும் தனநாசம், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சுகம் இராது. சனிக்கு கேந்திர, திரிகோணங்களில் புதன், சுக்கிரன், கேது நின்றால் யோகம் ஏற்படும்.

சனி 13

சனியை லக்னமாக உடையவர்கள் சற்று மந்தகுணம் உடையவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பர், நிதானம், பிரதானமாக இருப்பர். சனி, செவ்வாய் 7ல் இருந்து 7க்குடையவன் செவ்வாய் வீட்டில் இருப்பின் அவன் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு கொள்வாள். சனியினால் மகர லக்னக்காரகர்கள் பெறுகின்ற வருவாய், புகழ் அனைத்துச் சிறப்புகளும் அடிப்படை கடும் உழைப்பாகவே இருக்கும், மற்றவரின் நலத்துக்காக தம் உடலையும், மனத்தையும் வருத்திக்கொண்டு பிறர் அடைகிற சுகத்தை கண்டு உள்ளம் பூரிப்பார்கள்.

சனி 12

சனிக்கு 7ல் சுக்கிரன் இருந்தால் அவனுக்கு களத்திரத்தால் துக்கம் சம்பவிக்கும். சனி – 4ல் அமர்ந்து செவ்வாய் பார்த்தால் துர்மரணம் ஏற்படலாம். சனி செவ்வாய் கூடி 6மிடத்தில் இருக்க சூரியனாவது, ராகுவாவது பார்த்தால் ஜாதகர் எப்போதும் நோயாளியாகவே இருப்பர். சனி 9மிடத்தில் பலமாக இருந்தால் வேதாந்த அறிவு, ஜோதிடம் போன்றகளைகளில் திறமை ஏற்படும். சனி துலாத்தில் அமர்ந்து உச்சமாகி இருப்பின், அவர் மருத்துவ துறையில் மருத்துவராகவோ அல்லது ஒரு மருந்துக்கடை வைத்தோ பணமீட்டுவர்.

சனி 11

சனி எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும் அவருக்கே உரிய மந்தகதியால் பலன்களை மெள்ள மெள்ளத்தான் கொடுப்பார்.  வேகம் அவரிடம் கிடையாது. சனியும், சூரியனும் ஒன்றுகூடி இருந்தால் அறிவாளியாக, சுறுசுறுப்புடனும், அனுபவசாலியாகவும், உலோகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணராவார். சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தால் யுத்தமும், சத்தமும் இல்லத்தில் அதிகரிக்கும்.

யோசிக்க 5  

பொருளாதார விடுதலை: நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்து குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது.

யோசிக்க 4

 மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன. இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும் உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது , நடந்தேறும்…

யோசிக்க 3 

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யோசிக்க 2

 பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று உண்டு. அது, அரசாங்கம் செய்யாமல் விட்ட காரியங்களால் ஏற்பட்ட தோல்வி. நீதிமன்ற அமைப்பின் செயல்பாட்டை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத    நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது.

இந்த உலகம் உங்களை ஒரு போதும்

சமன்பாடு 1×9=7 2×9=18      3×9=27     4×9=36   5×9=45    6×9=54    7×9=63        8×9=72   9×9=81      10×9=90 மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக…

அடமானமாய் என்ன தருவீங்க…?”

வங்கி மேலாளரிம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?” கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!” அடமானமாய் என்ன தருவீங்க…?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன…?”. நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!” ஆதிவாசி ஆள் சொன்னார்.…

தொடர்ச்சியான உழைப்பு மட்டுமே

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான் அதற்கு மீன் பிடிப்பவன் தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். அது எப்படி செயல் படுகிறது?” என்று கேட்டான். சொல்கிறேன். ஆனால்…

ஏசு நடந்து தான் சென்றிருப்பார்

இந்த தொகை மிகவும் அதிகம் ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை. படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார். இருபது டாலர்” என்று அவன் சொன்னான். இந்த தொகை மிகவும் அதிகம்” என்று வாதிட்டார் நம்ம ஆள். அய்யா, இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்” என்றான் படகோட்டி. நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம்…

ரசிக்கும் வாழ்க்கை

குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை” என்றான் சீடன் ஒருவன். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால் அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்த தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக…

பழ மொழிகள் 5

பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். நோயின் தந்தை யாரோ, தவறான உணவு தான் அதன் தாய். பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு. மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏறமுடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்.

பழ மொழிகள் 4

அமைதியான மனத்திற்குப் பார்ப்பதெல்லாம் விருந்து. மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை. பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை, நீ பெறுவது பேரின்பம். கோபத்திற்கு கண்ணில்லை. கற்பனைப் பேய்களைத் தவிர வேறு பேய்களில்லை.

பழ மொழிகள் 3

காவி உடுத்தாலும் கவலை போகாது. கொடுப்பதை பிறர் அறியாது கொடு. உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு. முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். வளைகிற முள் நுழையாது.

பழ மொழிகள் 2

கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

பழ மொழிகள் 1

மலை இலக்கானால் குருடனும் எய்வான். சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. காட்டு விலங்கை வீட்டில் வளர்க்காதே. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.

உரையாடலின் ஒரு பகுதி 83

அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது காம, குரோத, மோக, மத மாச்சர்யம், அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது. சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும் ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால் அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு அறிவேயல்ல என்பது…

உரையாடலின் ஒரு பகுதி  82

 இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம் அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது. அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது. இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல் பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  81

நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…

உரையாடலின் ஒரு பகுதி  80

எல்லாம் நம் மனதில் இருப்பதே அப்படி இருப்பதை வெளி கொணர உண்டான சாதனமே. மனம் புறம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அது ஆதவனாகட்டும் அல்லது அடுப்படி ஆகட்டும் ஆதவனின் உதயம் மனதிற்கு தரும் உணர்வு, அடுப்பு எனும் புறப்பொருள்.  நம் மனதிற்கு தரும் உணர்வு இரண்டும் ஒன்றா என்று யோசித்தால் இல்லையென்ற பதிலே வரும் அப்படியானால் அந்த புறப்பொருள் மூலம் நாம் அடைந்த உணர்வு அகத்தில் என்பது புரியும் அதில் கவனம் செலுத்தி பார்க்கும் போது காலப் போக்கில்…

உரையாடலின் ஒரு பகுதி  79

அறிந்து கொள்வது அறிவெனப்படுவது அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம் அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது. அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம். ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை. புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  78

சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம். மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது. இது புரிந்து கொள்ள முயலும் போது முரண்பாடாகவே தோன்றும் புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.

உரையாடலின் ஒரு பகுதி  77

அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் இன்ப துன்பமென்ற ஆசிரியரிடம் கற்று அதன் வழியே குருவிடம் வரும் போது அனுபவத்தின் மூலம் நாம் அதை கண்டு உணர்ந்து கொள்ளலாம் வேறு வழி_ இருப்பதாக தெரியவில்லை. சரியாக சிந்தித்தால் இன்ப துன்பங்களால் உண்டான அனுபவபதிவே குண இயல்புகளாக மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  76

அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய   நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.   

உரையாடலின் ஒரு பகுதி  75

 அதுவும் நிரந்தரமாக இது கேட்பதற்கும், படிப்பதற்கும் புரியாதது போலவும், புதிரானது போலவும் இருந்தாலும் உண்மை இதுதான். படிப்பினையே ஒரு மனிதனை புடமிடுகிறது. அந்த படிப்பினை இந்த உலகத்தில் இன்பம், துன்பமாக இருக்கிறது. அவரவர் வினை விதிப்படி இன்ப, துன்ப என்ற ஆசிரியர்கள் மூலம் வெறும் சாதாரண அறிவானது ஒரு கால கட்டத்தில் பிரபஞ்ச அறிவாக மாறுகிறது.

 உரையாடலின் ஒரு பகுதி  74

ஒரு மனிதனின் லட்சியமே இந்த பிரபஞ்ச அறிவை பெறுவது தான் அதற்கு மனிதன் தற்போது தான் கொண்டுள்ள அறிவை எல்லாம் முழுக்க, இழக்க வேண்டியது மிக அவசியமாகிறது. தற்போது, மனிதன் கொண்டுள்ள அறிவினால் அழிவும் அனர்த்தமுமே விளையும், விளைகிறது. ஆனால், பிரபஞ்ச அறிவை கொண்ட மனிதன் அன்பும் ஆனந்தமும் இன்பமும் உடையவனாகவே இருக்கிறான்.

கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு ராகு, கேது நின்றால்:-தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம். வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு சனி நின்றால்:- நீண்ட ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு குரு நின்றால்:- குழந்தைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம். சுக்கிரன் நின்றால்:- இல்லற வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம். புதன் நின்றால்:-  மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.              சூரியன் நின்றால்:-  தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.  அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை. சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது. மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.

உங்கள் பாதையை

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.. ஏனென்றால்.. நடக்கப்போவது உங்கள் கால்கள் தான்.. அடுத்தவர்களது அல்ல! விருப்பங்களுக்கே விலை அதிகம்.. மகிழ்ச்சிக்கு அல்ல!

மன்னிக்கப் பழகிவிட்ட

மன்னிக்கப் பழகிவிட்ட எவரும் பிறரின் குற்றங்களை சுமந்து திரிவதில்லை… அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம் வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம் என்பதே நிதர்சனம்.

வாழ்க்கையின் ரகசியம்

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?” அம்மா சொன்னாள், “எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!” அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை  “நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?” என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் “நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்” என்றான். ஆசிரியை கோபமாக, “உனக்குக் கேள்வி புரியவில்லை”…

சோம்பேறித்தனத்திற்கு விலை

எறும்பும் வெட்டுக்கிளியும் எறும்பும் வெட்டுக்கிளியும் மிகவும் வித்தியாசமான ஆளுமைகளுடன் சிறந்த நண்பர்களாக இருந்தன. வெட்டுக்கிளி தனது நாட்களை உறங்கியோ அல்லது கிதார் வாசித்தோ கழிக்கும் போது எறும்பு உணவை சேகரித்து தனது எறும்பு மலையை கட்டும். எப்போதாவது வெட்டுக்கிளி எறும்பிடம் ஓய்வு எடுக்கச் சொல்லும். இருப்பினும், எறும்பு மறுத்து, தனது வேலையைத் தொடரும்.  விரைவில் குளிர்காலம் வந்தது, இரவும் பகலும் குளிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் எறும்புகளின் கூட்டத்தினர் சில சோள தானியங்களை உலர்த்தும் முயற்சியில் மும்முரமாக…

ஒற்றுமையே வலிமை

ஜெய் உப்புமா! ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல்…

கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி

 மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி  ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த கல்லைக் கண்டாள்.    அடுத்த நாள் அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள்,  பெண் தனது ஞானி உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள்.  பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து,  அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த கல் தனக்கு…

எனக்கும்தான்

அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன” என்றான்.    அதற்கு அந்தத் துறவி  என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது” என்றார்.  ஆனால் நான் ஒரு திருடன் என்றான் அவன்.  நானும் ஒரு திருடன்தான் என்றார் துறவி.  நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

 வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   68

மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   67

நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் – உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   66

அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   65

இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர் அது தான் செய்யப்பட வேண்டியது, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  73

அதில் உள்ள கருத்து இன்பத்தை, சந்தோஷத்தை இன்பம் சந்தோஷம் என்று சொல்லாமல் அறிவு என்ற ஒரு வார்த்தையில் குறிப்பிட்டு அந்த அறிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் அந்த அறிவை நாம் பெற்றால் நாம் நினைக்கின்ற, நினைத்துக் கொண்டிருக்கின்ற நிரந்தர இன்பம் நம் வசப்படும் என்கிறார்கள். அது என்ன அறிவு என்று சிந்தித்தால் அந்த அறிவுக்கு பிரபஞ்ச அறிவு என்ற விளக்கம் வருகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  72

இது எதனால் தொடர்ந்து இன்பம் தர கூடியது மனிதனிடம் _நிறைய இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் அவனுக்கு இன்பம் எது தந்ததோ அதனை சீ சீ என்று ஒதுக்கிறானே இது ஏன்? இப்படி சிந்தித்துக் கொண்டே போனால் நாம் வேதங்கள் உபநிஷத்துகளிடம் தான் சென்றடைய வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை அது பொய்யான கற்பனையாக நமக்கு தோன்றினாலும் அதில் தான் உண்மையே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதில் மட்டும் தான் நிரந்தர இன்பம் பற்றியும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

உரையாடலின் ஒரு பகுதி 71

மனித வாழ்வின் லட்சியம் எது? இது வினா, பதில் நிறைய வருகிறது கூட்டி கழித்து பார்த்தால் மனிதன் சந்தோஷமாய் இருப்பது பதில், இத்தனை தான் என்று நினைத்தால் இதில் எத்தனை கிளை பதில்கள் சந்தோஷத்தை நாடி இன்பத்தை தேடி என்று மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுக்கு இன்பத்தை தந்துவிட்டதா என்றால் பூரண இன்பம் தரவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், நிரந்தர இன்பம் எது என்ற வினாவை வைக்க வேண்டியிருக்கிறது. இனிப்பு பண்டம்…

உரையாடலின் ஒரு பகுதி 70

வானின் நட்சத்திரங்களை விஞ்ஞானி கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். ஞானியின் உள்ளத்தில் வானின் நட்சத்திரங்கள் இடம் கொள்ளுகின்றன இவை இரண்டும் என்றுமே ஒன்றாகாது. எப்போதுமே எந்த துறையிலுமே அரை வேக்காடுகளினால், தான் கோளாறு உண்டாகிறது. ஆத்ம தரிசனத்தின் முன்னனியில் கருணை, அன்பு மிக முக்கியமானது ஆனால் ஆத்ம தரிசனத்தின் அரை வேக்காடான நிலையில் மத வாதம் கருணையற்ற ரணகளங்களை சரித்திரத்தில் ஏற்படுத்துகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 69

மனதிற்கு பற்றுதல் இல்லாத சூழ்நிலையில் இருந்தும் ஒட்டுதல் இல்லாத உறவுகளில் இருந்தும் விடுபட்டு வெளியேறுவது மனதிற்கு எத்தனை சந்தோஷம் தருகிறது. அந்த சந்தோஷம் நீடித்து நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? ஒன்று தான் செய்ய வேண்டும் பற்றுதலோடும், ஒட்டுதலோடும் பிரபஞ்சத்தை படைத்த இறையின் உணர்வோடு இருக்க வேண்டும் அத்தனைதான். விஞ்ஞானம் மனிதனின் உச்ச கட்ட முயற்சியின் விளைவு ஆன்மீகம், மனித முயற்சிகளை துறந்த ஆழமான செயலின்மையின் விளைவு.

சனி 10

சனி பலமுள்ளவர் தொழில்துறைகளில் விற்பன்னர்களைத் தோற்றுவிப்பார், பிறகு தியாகம் செய்வார், வேத தத்துவங்களை உணர்த்தி ஒருவரை விவேகியாக்குவர் எதிர்காலத்தை உணரும் மேதைகளையும் எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்களையும் உருவாக்குவார். சனி தன்னுடைய தசாகாலத்தில் பலமுள்ள சனி, 4  11  ஒருவரை மலையளவுக்கு உயர்த்தவும், இதர கிரக நிலைகள் பலவீனமாக இருந்தால் மலையிலிருந்து கீழே தள்ளவும் செய்வர்.

சனி 9

சனி, சுக்ரன் சஷ்டாஷ்டகமாக இருந்தால் நபும்சகராக இருப்பர். சனி 10 ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் விவசாயத்துறையிலும், உலோகத்துறையிலும், சிறிய நிறுவனத்தில் தொழில் செய்வர். சனி 10ல் பலமுற்று இருந்தால் உத்தியோக நிலை ஆட்டம் காணும், மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கும்.

சனி 8

சனி கும்பத்தில் இருப்பின் பல தொழில்களில் ஈடுபடுவர், கோபிஷ்டி, குடி பழக்கம், கெட்ட பழக்கம் பேச்சில் துடுக்கு இருக்கும், உண்மை இராது.  சனி மீனத்தில் இருப்பின் அரசாங்கத்தில் செல்வாக்கு, வாக்குவன்மை, ஸ்தாபன தலைமை, நல்ல மனைவி மக்கள், நற்பண்பு, தெய்வீக நெறியில் ஈடுபாடு உண்டு. சனி, சந்திரன் இருவரும் நீசம் பெற்று சூரியன் கும்பத்தில் இருந்தால் சரீர உறுப்பு பலவீனமடையும்.

சனி 7

சனி விருச்சிகத்தில் இருப்பின், கடின உழைப்பு, உடல்நலக்கோளாறு, கோபகுணம், பொறமை குணம் உள்ளவர். சனி தனுசு ராசியில் இருப்பின் செல்வம் குவிப்பார்கள், மனிதாபிமானம் உள்ளவர், நல்லொழுக்கம், மென்மைத்தன்மை அமையும், தலைமை பொறுப்பு வகிப்பர். சனி மகரத்தில் இருப்பின் சொந்த ஊரைவிட்டு அன்னிய ஊரில் வாழ்வர் அறிவாற்றல், புகழ் உன்னதஸ்தானம் ஏற்படும், வசதியான வாழ்க்கை அமையும்.

சனி 6

சனி சிம்மத்தில் இருப்பின் உறவினர்களுடன் சண்டை சச்சரவு கெட்ட செயலில் நாட்டம் மக்கள் நலம் திருப்திகரமாக இராது. உத்தியோகம் செய்து பொருள் சேர்ப்பார்கள். சனி கன்னியில் இருப்பின் மற்றவர்களுக்காக தியாகம் புரிவர், ராணுவத்துறையில் பொறுப்பு வகிப்பர், பொருளாதார சுபிட்சம் சீராக அமையாது. சனி துலாத்தில் இருப்பின் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பர், தலைமை தாங்கும் தகுதி ஏற்படும், வெளிநாடு செல்வர், தொழில் துறையில் அபிவிருத்தி காணலாம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 6

திருப்புன்கூர் நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 5

சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 4

பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 3

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது 

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 2

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 1

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

சனி 5

சனி ரிஷபத்தில் இருப்பின் அடிமைத்தொழில் செல்வ சபிட்சமிராது. கெட்டசகவாசம் இருக்கும், ஒழுக்கத்தில் தரம் குறைந்திருக்கும். சனி மிதுனத்தில் இருப்பின் கடுமையாக உழைப்பவர்கள், பெரிய நிறுவனத்திற்கு தலமை ஏற்பார், குணப்போக்கு நன்றாய் இராது. சனி கடக்ததில் உள்ளவர்கள் இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும், ஒய்வில்லாமல் உழைப்பார்கள், குடும்ப நலம் குறைவாக இருக்கும்.

சனி 4

சனி 1,3,6,9ல் இருந்தால் வாதம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 2ல் இருந்தால் ஜாதகர் தனது அறிவை கொண்டே சம்பாதிப்பர். சனி பலமுடன் இருந்தால் ஸ்ரீ தத்தாத்ரேயர் போன்றவரை பூஜை செய்தால் ஞானம் பிறக்கும். சனி மேஷத்தில் இருப்பின், கடுமையாக பேசுவர், கடினமாக உழைப்பவர், நீச்சனாகவும், நண்பர்கள் குறைவாகவும் பாபகாரியத்தில் ஈடுபடவர்.

சனி 3

சனி 3,8,11ல் இருந்து 5ல் ராகு இருப்பின் கர்மகிரியை செய்ய புத்திரர் இருக்கமாட்டார். சனியுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும், சனி நின்ற ராசிக்க 3,7,10ல் சந்திரன் இருந்தாலும் வசதியான வாழ்க்கைத்துணை அமையாது, சன்யாசிபோல் பற்றற்று வாழ்வர். சனி 1,5,10 ஆகிய இடங்களியொன்றில் இருந்து 1,3,6,11ல் ராகு இருப்பின் திருமண வாழ்வில் பிரச்சனை, விவாகரத்துவரை செல்லலாம்.

ப்ராணனே அமுதம்

ப்ராணனே அமுதம் என்கிறது ப்ரச்ன உபநிடதம். சூரியனாகச், சந்திரனாக, பஞ்ச பூதங்களாக விளங்குவது ப்ராணனே என்று அது கூறுகிறது. ஆணில் விந்துவாகவும், பெண்ணில் கருவாகவும் விளங்குவது ப்ராணனே என்று கூறுகிறது. பெறறோரின் சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும், அந்த உடலில் உயிராக நின்று உலகை அனுபவிப்பதும், அதற்காகப் புலன்களை இயக்குவதும் ப்ராணனே என்பது கோட்பாடு. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. மனிதனும் நிழலும் போல ஆன்மாவும் ப்ராணனும் பிரிக்க முடியாதது. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. அது தன் ஆசைகளுக்கேற்ற உடலைத்…

ப்ராணாயாமம்

ப்ராணாயாமம் என்பது யோக சாதனங்களில் முக்கியமானது. ப்ராணனின் சலனம் மனதின் சலனம் என்பார்கள். அதாவது ப்ராண சக்தி குறைவுபட்ட ஒருவனது மனது சலனமடைந்து கொண்டேயிருக்கும் என்பது அதன் உட்பொருள். அதனால்தான் யோகத்தின் படித்தரத்தில் ப்ராணாயாமம் நான்காவது நிலையாக உள்ளது. அதாவது ஒழுக்கம், உடல் நலம், ப்ராண சக்தி இது மூன்றும் இருந்தால்தான் ஒருவன் மனதைக் கையாளவே முடியும். இந்த மூன்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவன் மனதின் கைப்பாவையாகத்தான் இருப்பான். இந்த மூன்றையும் முறைப்படுத்திய பிறகுதான் அவன் புலனடக்கம்,…

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு உங்களைக் காட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்..   உங்கள் தூரத்தை வைத்து பின்வாங்கவும்.. ஏனெனில், தூரம் தான் சிறந்த பதில்!

எந்த அர்த்தமும் தராத

எந்த அர்த்தமும் தராத வார்த்தையும் இருக்கிறது.. எல்லா அர்த்தங்களையும் தருகின்ற மௌனமும் இருக்கிறது! மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது.. இரவலாக வாங்குகின்ற எதுவும்‌ மகிழ்ச்சியை தராது!

நாம் விரும்புவதால்

எப்போது யாரைப் பிரிவோம் என்று சொல்ல முடியாது.. ஆனால்.. யாரையும் பிரியாமலும் இருந்துவிட முடியாது! நாம் விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம்  கிடைப்பதில்லை.. வெறுப்பதால் கல்லறையும்  நம்மை விட்டு விட போவதில்லை..

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 64

அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  63

மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது நமது மதக் கருத்துக்களை அன்போடும் கனிபோடும் பார்ப்பதாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  62

இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  61

நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  60

மேலை நாட்டில், மேலை நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான் அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 153

வயிற்றுக் குழியில் குடல், இரைப்பை, லிவர் என்று பல கருவிகள் அமைந்திருக்கின்றனவென்றும் அவை ஒன்றுக்கொன்று அழுத்திக் கொள்ளுகின்றனவென்றும், அறிந்தோம். இந்த இறுக்கத்தை மேலிருந்து டையாப்ரமும், சுற்றிலுமிருந்து வயிற்று முன்பின் பக்கச் சதைகளும் அதிகமாக்கி நிறுத்துகின்றன என்பதும் தெரிந்த விஷயம் இந்த இறுக்கம் சிலர் வயிற்றில் ஒரு சதர அங்குலத்திற்குப் பத்து பவுண்டு ( ராத்தல் ) என்று கணக்கிடுகிறார்கள். சாதாரணமாயுள்ள மனிதர்களுக்கு இந்த இறுக்கம் உள்கருவிகளைக் கீழே இழுக்கும் பூமி ஆதர்ஷன சக்தியைக் தடுக்கப் போதும். இக்காலத்தில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 152

1. வயிற்றுச் சதையின் ( ABDOMINAL MUSCLES ) பலவீனம். 2. பெருங்குடல் சுவரின் சதை வீரியம், நரம்பு ஆட்சி இல்லாமையும் இவைகளின் கெடுதலும். வயிற்றுக் குழியின் ( ABDOMINAL CAVITY )  பின் சுவருக்கும் பெருங்குடல் மெஸோ காலன் (  MESO COLON ) என்ற தெளிவு சதை மடிப்புகளாய் ஒட்டப்பட்டிருக்கிறது. மெஸோகாலன் மீது குடல் கனம் விழுவதில்லை. வயிற்றுச் சுவர் சதைகள் தான் முக்கியமாய் பெருங்குடல் பாரத்தைத் தாங்குகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 151

மலச்சிக்கலை தடுக்கவும், ஒழிக்கவும் ஹடயோக சிகிச்சை தான் இணையற்றது. ஆராய்ச்சி செய்தால், இதன் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் முன் எழுதிய அத்தியாயங்களைப் படித்தவர்கள் மலச்சிக்கல் நிலையில் உடல் எந்நிலை பெறுகிறதென்று எளிதில் அறியலாம். இந்த நோயின் காரணங்களை இரண்டு பெரிய தலைப்புகளின் கீழ் குறிப்பிடலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 150

ஸர் ஆர்தர்கீர் ( SIR ARTHUR KEITH ), ஆபரேஷன் செய்து கொண்ட பதினைந்து நபர்களைப் பரிசோதித்து அதிருப்தி அடைந்தார். இக் காரணம் பற்றிச் சிறுகுடல்மாறுவதற்கு ஆரம்பித்தாம். இது குறுகித் தடித்து பெருங் குடலைப் போல் பார்வையில் வளர்ந்து விட்டதாம். டாக்டர் ஹர்ஸ்ட் ( Dr. HURST ), அவர்களின் ஆபரேஷன் ஆராய்ச்சிப்படி, ஜீரண சக்தியைக் கெடுத்து விடுகிறதாம். விஷம் ஏற்பட்டால், சிறுகுடல் முழுவதும் பரவ இடம் கொடுக்கிறதாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 149

இப்படி ஆபூர்வமாய் சம்பவிக்கும் நிலையில் ஆபரேஷன் தேவையே. இதைச் செய்துகொள்ள வேண்டியதுதான் இவ்வளவு உருத்தெரியாமல் பெருங்குடலே அழியாவிட்டால், அதை ஆபரேஷன் செய்து எடுத்து விடக் கூடாது.   கொஞ்சம் உயிரிருக்கும் குடல்களை எடுப்பதால் பலகேடுகள் விளைகின்றன. இந்த ஆபரேஷன் சிகிச்சை நிபுணர் பலருக்கு அறுத்து எறிந்து விட்டார் .எல்லோரும் குணம் அடையவில்லை. உயிரற்ற அழிந்த குடலை வைத்திருந்தவருக்கு சுகம் ஏற்பட்டது. சிலர் ஆபரேஷனுக்குப் பின் நோயாளிகளானார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 148

இந்த “காலன்” எல்லாம் கேவலம் கோணிப்பையாக நின்றிருந்தது. இதில் விழுந்த சாமான்களை பூமியின் ஆகர்ஷண சக்தியாலாவது, வயிற்றின் மேலமுக்கத்தாலாவத தான் வெளியேற்ற முடியும். இந்தக் “காலனி”ல் சேர்ந்த வாயுவானது வயிற்றையே ( ABDOMEN ) மிகவும் உப்பச்செய்ய இதன் சதைகளெல்லாம் உயிர்த்தன்மையை இழந்து, மலப்போக்குக்கு ஒத்துழைக்கச் சக்தியற்றதாய் நின்றன”.

சுந்தர யோக சிகிச்சை முறை 147

“ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தேன்.  பெருங்குடலையும் முழுமையாக எடுத்துவிட்டேன். சுமார் மூன்று அடி நீளமும், நான்கு அல்லது ஐந்து அங்குல குறுக்கு அளத்தையுமிருந்தது. இதன் வெவ்வேறு பாகங்களிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்ததில், அவைகளில் சதைப் பற்றே (  MUSCULAR TISSUE ) இல்லை இதிலிருந்து இந்தக் குடலின் சதைச்சுவர்கள் முற்றிலும் செத்துவிட்டன என்பது விளங்கியது.

சுந்தர யோக சிகிச்சை முறை 146

வயிற்றுச் சதைகளின் சக்தியின்மை. குடல் உளுத்தல் பெருங்குடலையே அறுத்தெடுத்து விடுகிறார்கள் என்று முன் கூறினோம். இது சாதாரணமாக அவசியமில்லை. இதனால், எல்லோருக்கும் குணம் ஏற்படாது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். மிக ஆபூர்வமாகத்தான் நோயாளியின் குடலை “ ஆபரேஷன்” செய்து தீரவேண்டும். ஆபரேஷன் செய்த ஒரு “கேசை” சர்ஜன் ஒருவர் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.