ஓளவையார் முருகனுக்கு கூறிய பதில்களில் பெரியது எது?என்பதற்கு பதில்

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 35

அங்குள்ள பலரும், ஏன், பண்பட்டு உள்ளோரும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள் மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 34

மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 33

யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 32

இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 31

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம்.

அவர்களே வருவார்கள்

அவர்களே வருவார்கள் அவர்களே பிடிக்குமென்பார்கள்.. அவர்களே சலித்துவிடுவார்கள்; அவர்களே காணாமல் போய்விடுவார்கள்! அவர்கள் அவர்களாக இருக்கட்டும்; நீங்கள் அவர்களாக இருக்காதீர்கள்.. அவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே ஏராளம் பூமியில்!

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 43

எந்த துன்பமும் நமக்கு மட்டுமே என்ற நினைவு நமக்கு தேவையில்லாதது அது பணம் சம்பந்தப்பட்டதாகட்டும் தொழில் சம்பந்தப்பட்டதாகட்டும், குடும்பம், உறவு, நட்பு, கல்வி என எது சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் அதிலும் இன்பம் உண்டு என்பதை அறிந்து அதை கண்டு பின் அதை கொண்டு இன்பமாய் மகிழ்ச்சியாய், ஆனந்தமாய் இருக்கலாம் காரணம் பூமியின் மக்கட் தொகையை சிந்திக்கும் போது நாம் நம்முடைய துயரத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவேண்டியது இல்லை கவிஞரின் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 42

நாம் சிறிது சிந்தித்து பார்த்தால் இந்த பூமியின் தற்போதய மக்கள் தொகை சற்றேற குறைய 750 கோடி இத்தனை மக்களும் நாம் வரையறத்துள்ள நியதிபடி பல்வேறு நாடுகளில், பல்வேறு சீதோஷண நிலைகளில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர் சிலர் அறிவாளிகள், பலர் அப்படியில்லை சிலர் பெரும் செல்வந்தர்கள், பலர் அப்படியில்லை சிலர் கறுத்தவர் சிலர் பழுப்பு நிறகண்களை உடையவர், சிலர் கறுத்தவர் , சிலர் சுருள், சுருளான தலை முடிஉடையவர், சிலர் இறை நம்பிக்கை உடையவர், பலர் அப்படியில்லை,…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 41

எந்த மனிதனின் தனிப்பட்ட கவலைக்கும் சுலபமான மாற்று விஷயம் சேவை செய்தலாகும். ஆம், உண்மையில் அடுத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் போது  நமது  உள்ளார்ந்த சக்தியும் கவலையினால் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு பொலிவுடன், புது சக்தியுமாக உருப்பெறுகிறது. இந்த முறையை கைகொண்டால் நம் வாழ்க்கைப் பயணத்தில் உண்டாகும் எந்த துயரம் மிகுந்த காலத்தையும் வென்று சுகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கலாம். நான் துயரத்தின் வலியில் அழுது கொண்டிருந்தாலும் எனது இதயம் சோகத்தில் இருந்தாலும் எனது இதழ்கள் மற்றவர்களைப் பார்த்து புன்னகைக்கட்டும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 40

எந்த ஒரு கவலை அது யாருக்கு வந்தாலும் எதன் மூலம் வந்தாலும் அந்த கவலைக்கு காரணமான விஷயத்தில் இருந்து மனதை மடை மாற்றம் செய்வதுதான் கவலையில் இருந்து தப்பிக்க உள்ள ஒரே வழி அப்படி மடை மாற்றம் செய்வது நமது உள்ளார்ந்த சக்தியினை பெருக்குவதற்க்கு அனுகூலமான விஷயங்களில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும் அது இல்லாமல் நமது உள்ளார்ந்த சக்தியினை குறைப்பதற்க்கு உண்டான விஷயங்களில் மடை மாற்றம் செய்தால் நாம் கவலை எனும் புதை சேற்றில் மூழ்கி மறைந்துவிடுவோம்.

வெற்றி

ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி என்ற நிலையில் இருந்து மாற்றி அந்த வெற்றியை பிறருக்கும் அல்லது பிறரும் மகிழத்தக்கதாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை தான் வளரும் போதே தன்னோடு உள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்த கலை கை கூடுகிறது. தேனீயின் உழைப்பிற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் தருகிறோம் காரணம் அது மற்றவர்களுக்காக உழைப்பதால் தான்.

உழைப்பின் உன்னதம்

ஆசைப்படாமல் உழைக்க மனம் வராது ஆர்வம் இல்லாமல் செயலில் வெற்றி கிடைக்காது உலகில் மிக, மிக உன்னதமான உழைப்பே அதன் ஆற்றலே மனிதனை இப்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

உழைப்பினால்

உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும் எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும் அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும் மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.

நேர கெடு

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரக்கெடு அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கம் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யும் போது நம் மனதுக்கு உண்டாகும் ஆனந்தமே தனிதான் எந்த வேலையை செய்வதற்கு முன்னும் அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டியது முக்கியம் அப்படி தீர்மானிக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தும் பழக வேண்டும். ஏனென்றால் கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாமதங்கள் பல அபாயகரமான முடிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி. விடும்

பெரிய சாதனை 5

இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில் நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம். மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும் மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .

பெரிய சாதனை 4

இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்

பெரிய சாதனை 3

அப்போது இளவரசன் முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட்டு ஓடினான் அதை பார்த்ததும் வீராங்கனையின் ஓட்டம் குறைந்தது அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது

பெரிய சாதனை 2

ஒட்டபந்தயத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கும் ஒரு இளவரசனுக்கும் போட்டி நடந்தது. அதில் வீராங்கனை இளவரசனை முந்தி ஓடும் போது இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிளை தரையில் வீசினான் அதை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது பின் அதை எடுத்து வேகமாக ஓடினாள்

பெரிய சாதனை 1

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால் அது பெரிய சாதனைதான் மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது சஞ்சலம் கொண்ட மனமே.

மரண பயம்.

உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும் பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம் முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம். பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை இந்து…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3

6, 2 – க்குடையவர்கள் கூட 12 – இல் உச்சம் பெற. 6, 2 – க்குடையவர்கள் உச்சம் பெற,12 – க்குடையவர், 4 – இல் நிற்க, மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி, பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர். பின் புத்திரர்களால் கடன் தீரும். இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள். புதன், 6 – க்குடையவர் சந்திரன் மூவரும் லக்கினத்தில் நிற்க, சூரியன் பார்க்க,…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 2

8, 9 – க்குடையவர்கள் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – இல் நிற்க, 7 – க்குடையவர் 12 – இல் நிற்க, சந்திரனுக்கு 5 – க்குடையவர் உச்சம் பெற்று நிற்க. 9 – க்குடையவர் 6 – க்குடையவரோடு கூடி உச்சமடைய, 12 – க்குடையவர் 2 – ல் நிற்க. குரு 8 – ல் நிற்க, 7 – க்குடையவர் 12…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள்.1

12 – க்குடையவர் 2 – ல் நிற்க, 2 -க்குடையவர் 6 – ல் நிற்க, 9 – க்குடையவர் பலவீனமடைய, 6 – க்குடையவர் கேந்திரத்தில் உச்சமடைய, 9 – க்குடையவர் 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் குரு கூடி 2 – இல் நிற்க, சந்திரனுக்கு 2 – க்குடையவர் நீச்சம் பெற, சந்திரனுக்கு 2, 12 – க்குடையவர்கள் லக்கினத்தில நிற்க, உபய ராசியாதிபதி சந்திரனுக்கு 6…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  52

4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து, லக்கினாதிபதி எட்டில் இருந்தால் நிறைய பூமி உண்டு. நிலபுலன்கள் வீடுகள் உண்டு. 4 – க்குரியவர் திசை நல்ல யோகம் செய்யும். நாலுக்குரியவர் திசையிலும் நாலில் இருப்பவர். பார்த்தவர் திசாபுத்தியிலும் பெரும் வீடு கட்டும் யோகம் உண்டு. இது பாவர் லக்கினத்துக்கே பொருந்தும். 8, 11 – க்குடையவர் 4 – இல் 4 – க்குரியவர், நாலாமிடத்தை பார்த்தால் பூர்வீக சொத்து, நிலபுலன்கள் நிறைய உண்டு.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 51

1 – க்குரியவர் உச்சம் பெற்று சனி – செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும் அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 4 – க்குரியவர் பாதகம் பெற்று சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும். அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 2 – க்குரியவர் 4 – இல் பலத்து, பாதகாதிபதி சேர்க்கை, பெற்று 12 – க்குரியவர் கூடி இவர்கள் திசாபுத்தி நடக்கும் காலம் மாரகம் ஏற்படும். குடும்ப பற்று குறைந்தவர். 4 – க்குடையவர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 50

4 – க்குரியவர் செவ்வாய் சேர்க்கை பெற்று வலுத்து, 7 – இல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின், நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. நிலத்தின் பேரில் கடன் தொல்லை உண்டு. 4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின் பூர்வீக தனம் நிறைய உண்டு. இவரை பாதகாதிபதி பார்த்தால், இதனால் விர்த்தி இல்லை. 4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின் பூர்வீக தனம் நிறைய…

சுந்தர யோக சிகிச்சை முறை 118

சீகம் முக்கியமாய் சம்பந்தப்பட்டுள்ளது.  தண்ணீர் இதுவரையிலும் எட்டுவதில்லை.  ஒரு வேளை எட்டினாலும் தண்ணீர் அங்கேயே நின்று, சதைச் சுவர்கள் மூலம் உள்ளிழுக் கப்படுகிறது.  அதிகமாய் வெளிப்போவதில்லை. சில டாக்டர்கள் மேல்சதைப் பயிற்சிகள் விதிக்கிறார்கள். கருவிகளையும் வியாபாரம் செய்கிறார்கள். அல்ப சொல்ப பலன் உண்டாகலாம் ஆனால் இவை வியாதியைத் தடுக்கவும்.  ஒழிக்கவும், உபயோகப்படா. விளக்கெண்ணெய்  வாங்குவதற்குக் காசில்லதவன் ‘ மாலிஷ்க்கும், கருவிக்கும் எங்கே செல்வான்?

சுந்தர யோக சிகிச்சை முறை 117

இவ்வளவு பிரியமாய் ஒட்டிக்கொள்ளும் இந்தத் தகரடப்பா, நீடித்த நன்மையைத் தருவதில்லை. இதன் வழியாக வரும் தண்ணீர்ப் பெருங்குடல் சதையை சதா உப்பச் செய்து, அதைப் பெரிதாக்கி, பலத்தையும் போக்கி விடுகிறது. மலத்தை வெளித்தள்ளக் கூடச்சக்தி யிருப்பதில்லை, இந்தத் தகரத்தால் கொட்டும் தண்ணீர் பெருங்கடல் முழுவதும் பரவி, மலத்தை வெளியேற்றுவதியில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 116

சில குழந்தைகள் வெல்லத்தைக் கொடுத்தால்தான் அழுகையை நிறுத்தும், ஹீ!ஹீ “ என்று அழுது கொண்டே  “எனிமாவைக் கொண்டா” என்று பெருங்குடல் சதியடிக்கும் பெண்டாட்டியைக் கைவிடலாம்.  குழந்தைகளை கைவிடலாம். வீடு தனத்தையும் மறக்கலாம்.  காபி சுகந்த மூக்குத் தூளைக்கூட ஒருவாறு புறக்கணிக்கலாம். ஆனால் எனிமா டின்னோபிரியா நண்பனாய் ஒட்டிக் கொள்ளும் எந்தப் பாச்சாவும் இதனிடம் பலிக்காது. இதற்கு அடிமையானவர்களைக் கண்டு யோக சாஸ்திரம் அனுதாபம் காட்டுகிறது!.

சுந்தர யோக சிகிச்சை முறை 115

எனிமா எங்கே  எனிமாவை மறக்கவில்லை! மிகவும் கெட்ட நிலமையில் இது சிறிது பலன்படும் என்பதில் ஐயமில்லை ஆனால் மலச்சிக்கலைத் தடுக்கவோ, பலநாளாக வேரூன்றிய நிலையைக் கலைக்கவோ இதற்குச் சக்தியில்லை.  ஆரோக்கியம் பெற இதை அடிக்கடி இடைவிடாது உபயோகிப்பதால் பல கெடுதல்கள் ஏற்படும் பெருங்குடலுக்கு எனிமாவைச் சிநேகம் செய்த்தால், விபத்தாக முடியும்.

சுந்தர யோக சிகிச்சை முறை114

பேதி மருந்தை வாயில் கொட்டி , வயிறு சிறுகுடல் வழியாகப் பாய்ச்சுகிறான்.  இந்தக் ‘குறவர்’ களுக்கு எரிச்சல், உறுத்தல், புண் எல்லாம் உண்டாகின்றன. தற்கால அனுகூலத்திற்கு. ஒவ்வொரு பேதி மருந்து ‘ டோசும்’ம், ஜீரணக் கருவிகளைப் பலவீனப் படுத்துகிறது யோக சாஸ்திரத்திற்கு இந்த பேதி மருந்துகளைக் கண்டாலே அடங்காக் கோபம் வரும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 30

இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல நம்மிடம் போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 29

 வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (ஒரு முறை இளம் ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்.)

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 28

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ;

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 27

குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும் இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும். அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 26 

நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்தவர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது;

வால் இல்லாத ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வால் இல்லாத ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக, ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடிச் சென்றார். அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், சீதாதேவி மணலில் செய்து கொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரான் வழிபட்டு முடித்து விட்டார். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர், தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயன்றதாகவும், அந்த முயற்சியின் போது, ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனதாகவும் ஒரு சாரார்…

ஆதி பைரவர் தலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.

யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீ ராமபிரான்

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் வலது கை சின் முத்திரையுடன் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் உப்பு லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால்…

குமரன் :திருவிடைக்கழி

தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர் இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம் இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச்…

அதிசய காந்த கண்ணாடி

இன்றைக்கு பலரும் கம்ப்யுட்டர் செல்போன் முன் அதிகநேரம் செலவிடுகிறார்கள் இதன் விளைவாக காணும் பலவகையான காட்சிகள் மனக்கண்ணில் பதிந்து உறக்கமின்மை பார்வைக்குறைவு ஆண்மைக்குறைவு வீண்குழப்பம் ஆகியவை ஏற்ப்படுகிறது . இதனால் மனக்கவலை உண்டாவதோடு பலவகையான சிக்கல்கலை வாழ்வில் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் . இவர்களுக்கு இந்த காந்த கண்ணாடி பெரிதும் உதவிசெய்கிறது .வீணான காட்சிகளை மனக்கண்ணில் இருந்து அகற்றி மனதை ஒருநிலைபடுத்துகிறது . நல்ல உறக்கத்தையும் கொடுக்கிறது . கண்பார்வை மற்றும் முன்றாவது கண்ணாண ஞான பார்வை பயிற்ச்சி செய்பவர்களும்…

இரும்புக் குதிரைகள்

ஸ்காட்லாந்தில் இருக்கும் இரும்பு குதிரை சிலைகள், ‘கெல்பீஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் 30 மீட்டர் உயர சிற்பத்தை, ஆண்டி ஸ்காட் என்ற சிற்பி உருவாக்கினார். போர்த் நதியை ஒட்டிய பூங்காவில் இவை அமைந்துள்ளன ஸ்காட்லாந்தின் நீர்வழித் தடங்களில் குதிரைகளின் பங்களிப்பை நினைவுபடுத்தவே இந்த சிலைகள்.

காந்தளூர் சாலை போர் 4

இதுதான் ராஜராஜன் உடனடி படையெடுப்புக்கான காரணமாக சொல்லப்படுகிறது. ராஜராஜனுக்கும் பாஸ்கரரவிவர்மாவுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. திருவனத்நபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சாலைகலை மறுத்தருளிய கோவி ராஜராஜகேசரி என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பதை கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம் இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றிபெற்றார் காந்தளூர் சாலை போர் குறித்தான விவாதங்கள் இனறுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது காந்தளூர் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும், இப்போர்…

காந்தளூர் சாலை போர் 3

அனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு வரலாற்று கூற்று உண்டு. முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்கு தன் தூதுவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சோழ நாட்டு தூதுவரை சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மா சிறைபிடித்தனர்.

காந்தளூர் சாலை போர் 2

அந்த காலகட்டத்தில் இது போன்ற போர் பயிற்சிக்கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர் பயிற்சிக்கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?

 ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.  நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள…

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே!

மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான். என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன்…

.. தன்  வேலையை  தான் செய்யணும் 2

முதலில் சொன்ன கதை வேறு ஒரு கோணத்தில் கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால் தான் கழுதை கத்தியது எனப் புரிந்துக்கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக்கொண்டிருந்த வேலையும்…

தன்  வேலையை  தான் செய்யணும்1  

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.      அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா…

உனக்கு வேற வேலையே இல்லையா?

 ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான். அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு சந்தேகம் “ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே? ” அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க. அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும்…

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 2

உண்மையில் ஆன்மீகத்தின் முகவரியை சிந்தித்து பார்த்தால் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கதைதான். அது, இது, எது, அப்படி, இப்படி எப்படி, ஏன், எதற்கு, என்பது போல் இன்னும்  உள்ள பல ஊசலாட்டங்கள் தான் ஆன்மீகத்தின் முகவரிகள்.

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 1

தனி ஒருவருக்கு உணவில்லையென்றல் ஜகத்தினை அழிப்பது பாரதியின் ஆன்மீகம், அடங்கமறு, அத்துமீறு புரட்சி செய் இது ஒரு கூட்டாரின் ஆன்மீகம், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது ஏசு பிரான் ஆன்மீகம் ஏழைகள் சிரிப்பினில் இறைவனை காண்பது பகுத்தறிவாளர்கள் ஆன்மீகம். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிட்டு கொள்ளுங்கள் என்பது மருத்துவர்கள் ஆன்மீகம் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது கண்ணனின் ஆன்மீகம்.

சோம்பேறித்தனம் 2

எப்போதும் ஆசையுடனும் மனப்பூர்வமாகவும் வேலைகளை செய்ய கற்றுக்கொண்டாலே சோம்பேறிதனம் இருக்காது வாழ்வின் விடியலில் நாம் ஆசைப்பட்ட விடியலில் இருப்போம் இது அனுபவத்தால் மட்டுமே தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.

சோம்பேறித்தனம் 1

காலையில் நாம் எழவைத்த அலாரத்தை அது அடித்தவுடன் நாம் அதை அடித்து அணைத்துவிட்டு போர்வைக்குள் இன்னம் கொஞ்ச நேரம் என்று உறக்கத்தை தொடரும் சோம்பேறித்தனம் நம்முள் இருக்கும் வரை வாழ்க்கையில் வெற்றி எனும் விடியலை எப்போது பார்க்க முடியும் மேலே சொன்ன செயலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எப்போது விடியல் என்று

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால்

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால் வயதானவர்களுக்கு தங்களின் பழைய நினைவுகளை பற்றி சொல்லுவதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு எதுவும் இல்லை._

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82

தூது சகுனம் …..  ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து  சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன். ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் …..  எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது. நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் ……  ஒரு தூதன்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  81

மரண லக்கின திதிகள் …..  விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான். திதிகளின் விவரணம் …..  செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  80

மரண லக்ஷணம் …..  இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும். ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி …..  மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  79

நாலாவது விதம் ……  சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ). ஐந்தாவது விதம் …..  மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாவது விதம் …..  மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  78

அசாத்திய லக்ஷணம் …..  வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும்.  மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான். இரண்டாவது விதம் …….   மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.…

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம் என்ற ஊர் இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்  

பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!

திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர் 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர்

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்

சிங்கிரிகுடி தலத்தில் 16 கைகளுடன் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து எழுந்தருளியுள்ளார். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 25

நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர் இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 24

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.  

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 23

நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்துமாகக் கொள்ளக் கூடாது,

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 22

நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி , மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 21

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்பதெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு…

காந்தளூர் சாலை போர் 1

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ படையானது.  ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டது. ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார், சேர, பாண்டிய ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர் சாலையில் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி என சொல்லப்படுகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 4

 பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு மாறிவிடுகின்றன, இதை பரிணாமவியல் கொள்கையில் ஒரு பகுதியாக டார்வின் விளக்கு இருக்கிறார் தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்த காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்த பரவல் மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும்.…

நவீன மனிதர்கள் தோற்றம் 3

மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன? எனக் கேட்கலாம், ஒரு குழு தன் தாய்நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறொரு நிலப்பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் கால நிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்து வாழ தொடங்குகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 2

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ளது, போட்ஸ்வானா, இந்த நாட்டின் வடபகுதி, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்கு பாலைவனமாக மாறிவிட்ட மக்கடிக்கடி-ஒகவாங்கோ என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி, கோய்சான் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் என்ற இடத்தில்  கிடைத்துள்ளது.   இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை, வாலில்லா குரங்குகளுக்கும்,…

நவீன மனிதர்கள் தோற்றம் 1

நவீன மனிதர்கள் தோன்றிய இடம் எது’ என்பது குறித்த ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில்தான் அது நிகழ்ந்தது என்றாலும் குறிப்பாக எந்த நிலப்பகுதியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்பதை நமது அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிலவேளை முட்டாளாக

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.  (1) மதத்தலைவர்.     (2) வழக்கறிஞர்.  (3) இயற்பியலாளர்.  முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது.  ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர் மதத்தலைவர் தப்பிவிட்டார்.  அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார்.…

நாம் தான் நிர்மாணிக்கிறோம்  

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு வேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர். “எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?” என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு…

கறுப்பு கலர் 

 ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தான். மெல்ல பலூன்காரரிடம் வந்தான். “இந்த பலூன்கள் என் லாமே மேலே பறக்குமா?” என்று கேட்டாள். “ஒரு பறக்குமே. என்ன விஷயம்?”  பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?” என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி,  சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை. “ஏம்மா கேக்குற?   இல்ல,…

 ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. …

போர்க்கள யானை

பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையி ல் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.  ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த…

சுந்தர யோக சிகிச்சை முறை 113

ஒழுங்கான உணவுப் பழக்கங்களை நம்பியே மலப்போக்கு வழியை அமைத்துள்ளது. டாக்டர்களெல்லாம், இந்தப் பேதி வஸ்துக்கள் கெடுதலென்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். இவைகள் கருவிகளை உறுத்தி வதைப்படுத்துகின்றன. பேதி சிகிச்சை பெருங்குடலுக்குத் தேவை! அதற்க நேராக அளிக்கப்படாமல் வாய் வழியாக இவைகளைக் கொட்ட வேண்டியிருக்கிறது கேட்டீர்களா கதையை! குறத்தி பிள்ளை பெறவும் குறவன் காயம் தின்றானாம்! இவனுக்கு என்ன கிடைக்கும்  வயிற்றெரிச்சல், வாயு, வாய்புண்! இவைகள் தாராளமாகக் கிட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 112

பேதி வகை – வேறு சிகிச்சையே இல்லாவிட்டால், பெருங்குடலைப் பலி கொடுக்கலாம். அவ்வளவு மோசமில்லாத கேசுக‍ளுக்கு வழியாயில்லை நேர்வாளம் இருக்கும் வரை என்ன சார் பயம்?”  எனக்கொக்கரிக்கலாம்.  மலக்கழிவுடன் பிராணனும் கழியக்கூடும்! நம்மையெல்லாம் நம்பித்தானே “ ப்ரூட் சால்ட்” உண்டாக்குகிறான்”!.  நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா சார்?” என்று உள்ளம் உருகட்டும் “ என்ன சார் ! விளக் கெண்ணை சாப்பிட்டால் குளுமை, சுகம் என்கிறார்களே?” என்றும் வினவலாம். ஆனால் நேர் வாளத்திற்கும், சால்ட்டுக்கும் விளக்கெண்ணெய்க்கும் அடிமையாவதற்காக இயற்கை…

சுந்தர யோக சிகிச்சை முறை 111

 நூற்றில் ஒருவனுக்கு மலச்சிக்கல் என்றால் குடலை அறுத்து விட சட்டமிடலாம். ஏறக்குறைய நூற்றில் தொண்ணூறு பேருக்கு மலச்சிக்கல் இருப்பதனால் எத்தனை பேர் குடல்களை அறுத்தெறிவது கோடிக்கணக்கான டாக்டர் “ லேன் “ கள் இருந்தாலுமே வேலை தீராதே!

சுந்தர யோக சிகிச்சை முறை 110

இதுவரை வெளிப்பட்ட ஆராய்ச்சியிலருந்து, இப்பெருங்குடலுக்கு வேலை இருக்கிறதென்று அறிகிறோம். சீகத்தைச் சார்ந்து உயரும் குடல்பாகத்தில், இழுக்கப்படாத சில உணவுச் சத்துக்கள் கிரகிக்கபடுகின்றன. மேலும் மாமிச பட்சிணிகளைக் காட்டிலும், மரக்கறியை அண்டி நிற்கும் மனிதனின் குடல் மிகவும் நீண்டிருக்கின்றது. சுமார் ஐந்தடி நீளமுள்ள இந்த பாகத்தில் நமக்கு விளங்காத  அவசியம் அமைந்திருக்க வேண்டும் டாக்டர் கீத் ( Dr.KEITH ) துரை இதை அலட்சியம் செய்ய முடியாதென்று கூறுகிறார்.

சுந்தர யோக சிகிச்சை முறை 109

பெருங்குடல் இருப்பதால் மலம் தங்குகிறது, மலத்தால் நோய் உண்டாகிறது. குடலையே அறுத்து எறிந்து விடுவது, உத்தமமானதே என்று கூறுகின்றார். டாக்டர் அர்ப்பத்நாட்லேன், தலை வலித்தால் தலையையே வெட்டிவிடுவதா? டாக்டரின் எண்ணத்தில் பெருங்குடல் அனாவசியப் பொருள்!  விஷயமின்றிப் பருத்துத் தொங்கியிருப்பதாக யோசனை இயற்கையின் செய்கை காரணமற்றதென்று யாரால் கூற முடியும் நம் மூளைக்கு எட்டாமல் இருக்கலாம்.

வியாழன் 10

குரு லக்னத்தில் உள்ளவர்கள், ஆசிரியராக, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகராக, பெற்ற பிள்ளைகளிடம், மிகுந்த பாசமுள்ளவராக திகழ்வர். வியாழன் எந்த லக்னமானாலும், பொதுவாக, 1,2,5,7,9,11ல் இடங்களில் இருப்பின் குரு பலம் உடைய ஜாதகமென கொள்ளவேண்டும். குரு பெண்களுக்கு 2ம் இடம், குடும்பஸ்தானம், 5ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம், புத்திர ஸ்தானம் 9ம் இடம் பாக்கியஸ்தானம், புகுந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். இந்த அமைப்பு அதிர்ஷ்ட இடமாகும்.

வியாழன் 9

குரு, சுக்ரன், சுக்ல பட்சத்து சந்திரன், புதன் ஆகியோர் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலேயே இருந்தால், அதிர்ஷ்டசாலியாக, நற்குணவதியாக இருப்பர். குரு பலம் என்றால் குறிப்பிட்ட ராசிக்கு கோசார ரீதியாக குருவானவர் 2,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். குரு உச்சமாக கடகத்தில் நின்றவருக்கு ஒரு தொழிலில் நிச்சயம் இருப்பர், அல்லது தனியார் துறை பள்ளியில் ஆசிரியராகவாவது தொழில் செய்வர்.

வியாழன் 8

குரு மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அறிவாற்றல் குறைந்திருப்பார்கள், அளவோடு செல்வமும், மகிழ்ச்சி ஏற்படும். குரு கடகத்தில் இருந்தால் சரீர நலம் ஏற்படும்.  தோற்றப்பொலிவிருக்கும், கல்விஅறிவு, இனிய சுபாவம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குரு 5, 9ல் இருந்தால் ஜாதகர் பிள்ளைகளை அதிகம் விரும்புவார்.

வியாழன் 7

குரு 9ம் இடத்தில் இருப்பின் நிர்வாக படிப்பில் நாட்டம் ஏற்படும். வேதம், சாஸ்திரம் போன்ற கல்வி துறைகளிலும் தேர்ச்சி உண்டாகும். குரு பலமாக 5ல் இருந்தால் அறிவாளியாகவும், நல்ல கல்வியும், உன்னதமான ஸ்தானத்தை வகிப்பர். குருவும், சந்திரனும் கூடி 2ம் இடத்தில் இருக்க 9ம் வீட்டோன் அவர்களைப் பார்க்க, இந்த அமைப்புடைய ஜாதகர், சீரும், சிறப்பும் பெற்று வாழ்வர். குரு,சனி, கேது மூவருமே வேத, வேதாந்தங்களை சத்தியத்தின் தத்துவத்திற்கு ஆதார பூர்வமாகத்திகழ்கின்றனர்.

வியாழன் 6

குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும். குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர். குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும் அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர் சிறந்த செல்வம் பெற்றவர். குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர் பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர். பொருட் சேர்க்கை பாராட்டு புகழும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 39

நான் வலிமையுடையவன்  எல்லையற்ற ஆற்றலை கொண்டவன் என்ற நினைவும் அதை தொடர்ந்து கடினமான முயற்சிக்கும் குணமும் நமக்கு வேண்டும் இவைகளை நாம் பெற்ற இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் சோகமோ, வருத்தமோ, துன்பமோ அடையமாட்டோம் நம்மிடம் இருக்கும் பல விதமான ஆயுதங்களில் மிக முக்கியமான சிலதை பட்டியல் இட்டால் அது மனநலம், அறிவின் தீட்ஷண்யம், விவேகம், பொறுமை, நேர்மை, வீரம், அன்பு, கருணை இரக்கம் இப்படிப்பட்ட ஆயுதங்களின் துணை நாம் நம்மை எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 38

இந்த பூமியில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற கனவிலும் அந்த கனவு மெய்பட வேண்டும் என்ற பேராரர்வத்துடனேயே இருக்கிறது. ஆனால் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போது , வாய்ப்புகள் சரியாய் அமையாத போது வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்தாத போது மிகுந்த ஏமாற்றத்திற்க்கும் துக்கத்திற்கும் மனிதன் ஆளாகிறான் இதிலிருந்து மீள ஒரே வழி தான் உள்ளது அது  விவேகானந்தர் சொன்னது தான்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 37

 நமக்கு நமது செயல் ஊக்கத்திற்குண்டான சக்தியை குறைக்காமல் பாதுகாக்கும் குறிக்கோள் நிறைவேறவில்லையென்றாலும் மிகப்பெரிய சோகத்தின் பிடியில் சிக்கமாட்டோம் என்ன கொஞ்சம் சந்தோஷத்தின் அளவு மட்டும் குறைந்து இருக்கும் அத்தனை தான். நம்மை ஏமாற்றத்தில் இருந்து காக்க உள்ள வழிமுறைகளில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 36

எந்த ஒரு குறிக்கோளை கொண்டிருந்தாலும் அதற்கு இணையான, மாற்றான ஒன்றை எப்போதும் சிந்தித்து செயல்படுத்த தயராக இருக்க வேண்டும் இந்த சூட்சுமம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருந்து காக்கும் அதனால் நம்முடைய சோகத்தின் அளவும் குறையும் ஒரு குறிக்கோள் மட்டுமே நாம் கொண்டிருந்து எதிர்பாராவிதமாக நம்முடைய அணுகுமுறையில் உள்ள ஏதாவது தவறினால் அந்த குறிக்கோளை அடைய முடியாவிட்டால் நாம் மனதளவில் வாங்கும்  பின்னடைவுகள் நமது ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அழித்துவிடும் அதற்கு முன் நாம் பெற்ற அத்தனை…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 35

 காலத்தின் ஓட்டத்தில் பருவங்கள் மாறுவது போல மனிதனின் வாழ்க்கை பயணத்திலும் சூழ்நிலைகள் அறிவு, அனுபவம் காரணமாக பல பருவங்களை மனிதன் கடக்கின்றான். ஒவ்வொரு பருவத்திலும் விருப்பு, வெறுப்புகள் ஆசை, நிராசைகள் மாறிக்கொண்டேயிருப்பதை நாம் காணலாம் இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ளவேண்டியது மாறுதல் நிலையானது அந்த மாறுதலில் நமக்கு பிடித்த மாறுதலை உருவாக்க உண்டான யுக்தியே நான் முன்னமே சொன்ன கற்பனா சக்தி, இந்த கற்பனா சக்தியின்  துணையை சரியானபடி புரிந்து அதை செயல்படுத்தும் வழி வகைகளையும் நன்கு…

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 20

பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 19

அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை தவிர  ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 18

வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களுக்கு நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம் அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 17

நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 16

எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும். ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை .

சினிமாவில்

சினிமாவில் குளோசப், லாங்ஷாட், ஃபேட் இன் ஃபேட் அவுட், கிராஸ்கட் போன்ற பல தொழில் நட்பங்களை அறிமுகம் செய்தவர் கிரிஃபித் என்ற அமெரிக்கர், இப்புதுமைகள் தோன்றி 100 வருடங்கள் ஆகின்றன

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 4

வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர். இடையில் தரகர்கள் ஆசைகாட்டி அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர் மக்களும் ஏமாந்தனர் அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர் மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர். அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 3

அரசாங்கம், வசதியுள்ளவர்கள் மக்களுக்கு உணவு, உடை _கொடுத்து உதவினார்கள். வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்ச நிவாரண பணிகளில் ஒன்றாக ‘ பக்கிங்காம்’ கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 2

இந்த தண்டனையைப் பற்றி விசாரிக்க 1854ல் சித்திரவதை விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.  அதனுடைய விவாதத்தால் அரசாங்கம் தண்டனையை கொடுக்கக்கூடாது என்று அறிவித்தது 1876 – 78 – ம் ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.  வட ஆற்காட்டில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் காட்டுக் கீரைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள்.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 1

தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது. அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம். அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர் தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால் வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள்.  இது பற்றி அரசாங்கத்துக்கு…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 49

11 – க்குரியவர் 4 – இல், 4 – க்குரியவர் 9 – இல், 5 – க்குரியவருடன் சேர்க்கை, நஞ்சை, புஞ்சை நிலம் வாகனம் உண்டு. 8, 10 – க்குரியவர் சேர்க்கை பெற்று, 10 – க் குரியவர் வலுத்து 4 – ஆமிடத்தை பார்த்தால் நிலம் கிட்டும் ஆடம்பரமான வீடு உண்டு. 4 – ல் 7 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று 4 – க்குரியவர் மறைவு பெற்றால்,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 48

3, 6, 8, 12 – இல் சந்திரன் இருப்பினும் அல்லது   3, 6, 8, 12 – க்குடையவர், சந்திரனுக்கு 3, 6, 8, 12 – லிருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலங்களில் வாகனம், நிலம், வீடு தனம் சேர்க்கை ஏற்படும். 4 – க்குரியவர், சந்திரன் 3, 6, 8 லிருப்பின் செல்வம் நிலைக்காது. 4 – ல் சூரியன், 4 – க்குரியவர் உச்சம் பெற்று சுக்கிரன் சேர்க்கை பார்வை பெற்றால், 30…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 47

4 – க்குடையவர் நின்ற நவாம்சாதிபதியின் திசையில் அல்லது 4 – க்குரியவர் திசையில் தந்தைக்கு கண்டம் 4 – இல் இருப்பவரின் திசையில் ஏற்படலாம். 4 . ல் சனி, செவ்வாய் சேர்க்கை மனைவிக்கு துர்தேவதா பயம், இட பயம் ஏற்படும். 4– க்குரியவர், சுக்கிரன் கூடி 10 – இல் இருப்பின் செல்வந்தர்.  4 . க்குரியவர், 1, 7 – லிருப்பின் அனேக வித்தை அறிவான். பிறர் சொத்தை அழிப்பான். சபையில் ஊமையாக…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  46

குருவும், 4 – க்குடையவரும் கூடி சந்திரனுக்கு 4 – இல் நிற்க, 7, 3 அந்த ராசியாதிபதி லக்கினத்திற்கு 4 – இல் நிற்க மேற்படி பலன். 4 – க்குடையவர், குரு ஆகியவர்கள்  நின்ற ராசியாதிபதி, பகை அஸ்தமனம், நீச்சம் அடைந்தால் பசு தங்காது பால் கிடைக்காது. 9 – இல், 4 – க்குடையவர், சுக்கிரன் பார்வை பெற்று நிற்க, 9 – க்குடையவர் 4 – ல் மாறி நின்று சுபர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 45

12 – க்குடையவரோடு எத்தனை கிரகங்கள் கூடி இருக்கிறதோ அத்தனை வீடுகள் உண்டு. இவர் சுபத்தன்மை பெறவேண்டும். சந்திரனுக்கு, 8, 4 – க்குடையவர்களும் சுக்கிரனும் கூடி 4 – இல் நிற்க கூரை வீடு, 4 – ஆமிடத்திற்கு இரு பக்கமும் பாபிகள் நிற்க மேற்படி பலன். ஆட்சி பெற்ற சந்திரனோடு 4 – க்குடையவரும் சுக்கிரனும் கூடி நிற்க, குரு பார்க்க சிவந்த பசுவின் பாலை சாப்பிடுவார்.  4 – க்குடையவர் சுபராயிருந்து, 5…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 44

2, 4 – க்குடையவர் 4 – இல் நிற்க, குரு சந்திரனுக்கு 2 – இல் மாறி நிற்க வித்துவான். 2 – க்குடையவர் 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் 2 – இல் மாறி நிற்க வித்துவான். 3, 9, 10 – க்குடையவர் மூவரும் 3 – இல் நிற்க, சுபர்கள் பார்க்க மேற்படி பலனே. 4 – ஆம் இடம் சுபர் வீடாகி, அதற்குரியவர் குருவோடு 9…

விமர்சனம் செய்யுங்கள்

விமர்சனம் செய்யுங்கள் அதே நேரம் வாழ்த்தவும் செய்யுங்கள் கேள்விகள் கேளுங்கள் அதே நேரம் பதில்களை நம்புங்கள் சொன்ன பதில்களை கண்காணியுங்கள் அப்போது பதில்கள் பயனுக்கு வரவில்லையென்றால் கண்டியுங்கங்ள கண்டனம் செய்யுங்கள் புகார்களை சொல்லுங்கள் அதே நேரம் புன்னகை செய்யுங்கள் புதியதை முயலுங்கள் அதே நேரம் தெரிந்ததை செய்து கொண்டே இருங்கள் முன்னேறி செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் நட்பு பாராட்டுங்கள் ஒரு வேளை சறுக்கி விழ நேர்ந்தால் கீழிருந்து தாங்கி பிடிப்பார்கள். தவறு செய்த ஒருவருக்கு நம்…

மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்

நாம் இளமையாய் இருக்கும் போது பணமிருக்காது. சரி கொஞ்சம் பணத்தை சேர்த்துட்டு ஜாலியா இருக்கலாங்கறதுக்குள்ள இளமை போயிடுது.  சரி மத்திய வயசுலயாவது தாராளமா செலவு செஞ்சு மகிழ்ச்சியா இருக்கலாம்னு நினைச்சா அப்ப நேரம் இருக்காது முக்கியமான விஷயம் நேரம் பணம் எல்லாம் இருக்கறப்போ மனசு இருக்காது.   ஒரு வேளை மனசு வெச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது, இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும் அப்படீன்னு நான் நினைக்கிறேன். எதையோ நெனைச்சு எதை, எதையோ துரத்திட்டு எப்பவுமே ஒடறதே…

பெற்றோர்களின் விருப்பமே 2       

 குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், எவர்களுடன் பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கண்டிப்பும், கண்காணிப்பும் இல்லாது போவது தவறுகளை கண்டிக்காமல் பாசம் மட்டும் மிகைந்து நிற்கும் பெற்றோர்கள் ஒரு நாள் கவலையும், கண்ணீரும் விட்டே தீர வேண்டும்.   அடங்கி இருப்பது அடிமை தனம் அல்ல என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் சொல்லி கொடுத்துவிட வேண்டும்.   ஒரு தவறு செய்த பிறகு அதை திருத்தாதவன் இன்னுமொரு தவறு செய்தவனாகிறான் இது தொடர்ந்தால் வாழ்க்கையே தவறாகி விடுகிறது.

பெற்றோர்களின் விருப்பமே 1

பெற்றோரின் விருப்பமே நமது வாழ்க்கை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும் அப்படி உணர்ந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள். இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகள் உறவு ஏனோ தடம் மாறியே இருக்கிறது இது ஏன் காரணம் எதுவாக இருக்கும் என்ற சிந்தித்தால் தகவல் தொழில் நுட்பவளர்ச்சி அடுத்தது பொறுப்பை சொல்லி கொடுக்காமல், பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று நினைத்து வளர்க்கும் பெற்றோர்கள் இதில் பெற்றோர்கள் ஏமாறும் இடமும், பெற்றோரை குழந்தைகள் ஏமாற்றும் களமாகவும், தளமாகவும் இது அமைந்து விடுகிறது.

உரையாடலில் ஒரு பகுதி 64

 இன்றைய நிலை உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நொடி பொழுதில் தொடர்பு கெள்ள சாதனங்கள் வந்து விட்டது.   ஆனாலும் சமுதாயத்தில் அன்பு குறைந்த கொண்டே போகிறது. அன்புடன் பழகுபவர்களக்கு அந்நியர்கள் யாருமில்லை எல்லாவற்றையும் வெறுப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் நேசித்துப் பாருங்கள் புது உலகம் தெரியும்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 8

அருள்மிகு  நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம் அருள்மிகு  இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம் அருள்மிகு  அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் அருள்மிகு  திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 7

 அருள்மிகு  கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு  வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்  அருள்மிகு  காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் அருள்மிகு  மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 6

அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி அருள்மிகு  ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 5

அருள்மிகு  விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம் அருள்மிகு  கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம் அருள்மிகு  இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 4

 அருள்மிகு  சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்  அருள்மிகு  பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால் அருள்மிகு  மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 15

ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வசமயப் பேரவை நடைபெற்றதையும் அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 14

சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 13

சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒரு வனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன் . எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 12

நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன். அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 11

கும்பகோணம் சொற்பொழிவு! 3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. வேதாந்தப் பணி: மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது – கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது…

உங்கள் பிரச்சினைகளின்

உங்கள் பிரச்சினைகளின் அளவு..அவற்றைத் தீர்ப்பதற்கான உங்கள் திறனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை.. உங்கள் பிரச்சினைகளை மிகைப்படுத்தி உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

நம் வாழ்க்கையை

நம் வாழ்க்கையை கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்கிறோம்..  சில பாடங்கள் வலிமிகுந்தவை.. சில வலியற்றவை.. வலி அல்ல இங்கு விஷயம் கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதே விஷயம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வலியை பொருட்படுத்தாது உண்மையில் அனைத்தும் விலைமதிப்பற்றவை!

நேரம் ஒதுக்கி

நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் பழகுங்கள்.. வேலைகளை ஒதுக்கி பேசுபவரை நேசியுங்கள்! நேரத்திற்கும் வேலைக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே இது சாத்தியம்

நம்முடைய இந்த நிலைக்கு

நம்முடைய இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என உணர்வோம். மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். பிரச்சனையை ஒரு பிரச்சனையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு பிரச்சனை.. உங்கள் கண்ணோட்டத்தை  மாற்றினால்.. பிரச்சனைக்கு.. பதிலாக வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள்!

செயலின் நோக்கம்

 ஒரு வீட்டுக்குப் பிச்சைக்காரன் ஒருவன் வந்தான். அந்த வீட்டுக்காரி உள்ளேயிருந்து அவனுக்கு அரிசியைக் கொண்டு வந்தாள். அதைத் தன் குழந்தையிடம் கொடுத்து பிச்சை இடச் செய்தாள். அடுத்த வீட்டுக்காரியும் அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிச்சைக்காரன் தன் வீட்டு வாயிலுக்கு வந்ததும் அவளும் பக்கத்து வீட்டுக்காரி செய்ததுபோல் தன் குழந்தையின் கைகளில் அரிசியைக் கொடுத்துப் பிச்சையிட்டாள். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இறந்தனர். மேல் உலகத்தில் தீர்ப்பு, முந்தைய வீட்டுக்காரி சொர்க்கத்துக்கும், அவளைப் பார்த்துப் பிச்சையிட்ட…

ஜூடோ  பயிற்சி

 சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.   தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.  ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு…

இணைக்கும் செயல் 

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.…

எடை அளவு

ஒருமுறை, ஒரு விவசாயி ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் அளவு சரியாக இல்லை என்று கண்டுபிடித்தார் எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.  வெண்ணெயை எடைபோட ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “யுவர் ஹானர், நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம்…

நஞ்சு

அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.  கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…

உரையாடலில் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

காலத்தின் நிலை 2

காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும் யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம். அதனால் கற்றலோ, கற்பித்தலோ, விளையாட்டோ, ஆலயவழிபாடோ, தவமோ, வேலையோ எதுவானாலும் உரிய காலத்தே செய்து பழவோம்

காலத்தின் நிலை 1

காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள், காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர் அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால் உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய். காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது. வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான் நம்மாள் அதை பிடிக்க முடியாது. அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் காலத்தே பயிர் செய்,…

உலகில் கடினமானது

உலகில் கடினமானது எத்தனையோ உண்டு அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.   1. ரகசியத்தை காத்தல், 2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை, 3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல். .

கோபம்

கோபம் என்பது உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, சுற்றுபுறம் சார்ந்த பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லாத சூழ்நிலை காரணமாக உண்டாகிறது கோபம் உண்டாக அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதில் ஒன்று சிந்திக்காமல் செயல்படுத்தும் அதிர்ப்தி தான் கோபம், மேலும் பிறர் நம்மை தாழ்த்தும் போதும் உண்டாகும் எதிர்வினை  உணர்வே கோபம், எவனால் சிந்தித்து தனது கோபத்தை தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி கொள்கிறானோ அவன் தனது வாழ்நாளின் மிக பெரிய எதிரியை வெற்றி கொண்டவன்…

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை   7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி தமிழ்..!