அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே. தயிரை கடைதற்க்காக உள்ள மத்து சுழல்வது போல் எண்ணற்ற பிறவிகள் கடந்து அலைந்து திரிந்து சுழன்று உள்ள எனக்கு தாமரை மலரை இருக்கையாய் கொண்ட பிரம்மதேவனும் சந்திரனை தன் திருமுடியில் தாங்கிய சிவபெருமானும் பாம்பனை மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் செய்யும் அம்பிகையே வீடு பேற்றை தந்து…