நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு , குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கண்டாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள் உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நில, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  1

சிம்ம லக்னம் லக்கினாதிபதி சூரியன் இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் .சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகையில் ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

மன முதிர்ச்சி  3

நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். Understanding the difference between the basic needs and what we want. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.  Reaching the status that happiness is not connected. with material things.

மன முதிர்ச்சி  2 

செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை…

மன முதிர்ச்சி – Maturity of Mind 1

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

சனி 22

சனிக்கு மீனம் 2மிடமாகி நின்றால் பெயர், புகழ், செல்வம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சனிக்கு துலாம் 2மிடமாகி உச்சம் பெற்று நின்றால் தலைவர், செல்வந்தர், அயர்நாட்டுத் தொடர்பும் இருக்கும், சிறப்பாக வாழ்வர். சனி 5மிடத்திலிருந்து லக்னாதிபதியை பார்ப்பது அல்லது 4, 5 வீட்டையும் 4,5க்குரிய கிரகத்தையும் பார்ப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுகிறது. சனி ஆயுள் காரகன், சனி பலம் பெற்று 8ம் பாவத்துக்கு சம்பந்தம் பெற்றால் ஆயுள் விருத்தியாகும். சனி 8ல் நின்றால் பலம் பெற்றால்…

இருப்பதுவும் பிரிவதும்

இருப்பதுவும் பிரிவதும் அவரவர் விருப்பம்  ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 79

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   78

மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால்  கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகக் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   77

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   76

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனி மனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர் . தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   75

இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.    

உரையாடலின் ஒரு பகுதி  107

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாக போக வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் அதை எவர்கள் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதிகம் வருத்தப்படுவது இல்லை. மனித பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயம். மனித பிறவிகள் அனைத்திற்கும் ஒரு விஷயத்தில் என்று மட்டும் பலவீனம் இல்லை நபருக்கு நபர் சூழ்நிலை, அறிவு அந்தஸ்து மனோபாவம் போன்றவைகளை கொண்டே பலவீனங்கள் வெளிப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  106

கனவுகளிலும், கற்பனைகளிலும் யூகித்துக் கொண்ட அனுபவம் (இறைவழிபாடு, இறையை தேடுதல் முக்தி போன்றவை) இது போல் காதலும், குடும்ப வாழ்வையும் சேர்த்துக்கொள்ளலாம் யதார்த்திற்கு வரும் போது பல பேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதை பார்க்கலாம்.

உரையாடலின் ஒரு பகுதி  105

உலகிலேயே ரொம்ப துர் அதிர்ஷ்டசாலி 10 பேர் நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன். தனிமையில் இருக்கும் போது 10 பேர் வேண்டும் என்று தவிப்பவன்.

கீதைகள் மொத்தம் – 60 9 – 10

இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றாக சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.

கீதைகள் மொத்தம் – 60 = 7 – 8

ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல். இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 =5 – 6

அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார். ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 3 – 4

3  அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது. 4  பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.

கீதைகள் மொத்தம் – 60 1 – 2

1   குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. 2   அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன் துன்பங்களையும்…

உரையாடலின் ஒரு பகுதி  104

யதார்த்தமான உண்மை – தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும் மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும் மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.

உரையாடலின் ஒரு பகுதி  103

பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும் ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும் ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால் காதல் எனும் அன்பில் முடியும். இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும். ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  102

தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும் அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம் செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ் எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம் வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம் இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும் அதுவே _ஷடாங்கம் அதுவே…

உரையாடலின் ஒரு பகுதி  101

தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான…