மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.

மது அருந்த

மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும்.  மனசு வீரியம் கொள்ளும்.  உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!

சுக்கிரன் 8

சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.

சுக்கிரன் 7

சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.

சுக்கிரன் 6

சுக்ரன் பலமுடன் இருந்தால் லட்சுமீ பூஜை மூலமாக ஞானவொளி பிறக்கும். சுக்கிரன் லக்னத்தில் தனித்து நின்றால் இருதாரயோகம் ஏற்படலாம். சுக்கிரன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், கலைத்துறையில், நாடகம், போன்றவற்றில் ஏற்பட வைப்பர்.

சப்த முனீஸ்வரர் 5

நாதமுனி : தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி. சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகின்றன

சப்த முனீஸ்வரர் 4

தருமமுனி : தருமச் செயல்களை காத்து,தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி. ஜடாமுனி : வனங்களை காப்பவர்,ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.  

சப்த முனீஸ்வரர் 3

வாழமுனி : வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி. தவமுனி : தேவர்கள்,ரிஷிகள்,யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

சப்த முனீஸ்வரர் 2

மஹாமுனி : அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார்.வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் மஹாமுனி ஆவார்.

சப்த முனீஸ்வரர்: 1

சிவமுனி : உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, உலக மக்களை காக்க படைத்தார். இவர்களில், சிவமுனி : சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17

7 – க்குரியவர் சாரம் பெற்று 8 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று 12 – இல் அமர்ந்தால், மனைவிக்கு நிரந்தர நோய்த்தொல்லை பீடிக்கும். இல்லறம் சோபிக்காது. மன அமைதி கெடும். சரிவர தூக்கம்வராது. 6 – இல் கேது 8 – க்குரியவர் சாரம் பெற்று, சாரநாதன் கேதுவுக்கு லாபம் பெற்று, கேதுவுக்கு நான்கு கேந்திரங்கலும் கிரகங்கள் நிற்கில், கேது தசாகாலம் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் பலம் ஏற்படும். 6 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

6 – இல் 8 – க்கரியவர் 3 – இல் கேது சாரம் பெற்று 9 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் நல்ல யோகம். இவர் தசையில் யோகம் தரும். இந்துடன் லக்கினாதிபதி லக்கினத்திற்கோ, சந்திரனுக்கு 11 – இல் இருப்பது மிக விசேஷம். சுக்கிரன் ( அ ) சனி இருவரில் ஒருவர் 6, 8, 12 – க்கு அதிபதியாகி 6, 8, 12 – ல் பரிவர்த்தனை பெற்றால், பெரும் ராஜயோகம் தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 – ல் ராகு, சனி, சந்திரன், சுக்கிரம் சேர்க்கை ஈனஸ்திரீகளால் கடன் ஏற்படும். 9 – இல் ராகு, 6 – க்குரியவர் சேர்க்கை பெற்று இருப்பின் விபசாரிகளால் கடன் ஏற்படும். 3 – க்குரியவர் நீச்சம் பெற்று, சனியால் பார்க்கப்பட்டு, 6 – க்குரியவர், 3 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் 6 – க்குரியவர் திசையில் வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு பல வருடம் கழித்து ரோகம் நிவர்த்தியாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

2 – இல் பாவர், 10 – இல் பாவர் சுபர் சம்பாதிக்கும் பணத்தில் 25 சதவீதம் வீட்டிற்கு வரும். மீதி எல்லாம் கடன் விழுங்கும். 11, 12 – க்குடையவர் சேர்க்கை 12 – இல் ராகுவுடன் சம்பந்தப்பட்டால் விபசாரிகளால் கடன் ஏற்படும். 5, 9 – இல் குரு இருப்பின் சாப்பட்டு வகை, விருந்தினர் உபசாரம் சுப செலவுகளால் கடன் ஏற்படும். யாத்திரை வகை, புத்திர புத்திர வகை குடும்பச் செலவு இவைகளால் கடன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

புதன், சனி சேர்க்கை, வாத ரோகத்தால் தொல்லை தரும். எங்கு இருப்பினும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. 4, 5, 8,12 – ல் சுபர் சம்பந்தம் பெற்றால் இவர்கள் தசாபுத்தியில் கடன் தீரும். 2, 10, 11 – இல் பாவர் இருந்து பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி அந்திரங்களில் கடன் தொல்லை பொறுக்க முடியாது.

வித்தியாசமான கணக்குகள் 3 பெருக்கல்:

பெருக்கல்: மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை மனிதன் × கவலை = தற்கொலை மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி மனிதன் × இயலாமை = அவதி மனிதன் × அன்பு = மனிதாபிமானம் மனிதன் × ஆசை = வக்கிரம்

வித்தியாசமான கணக்குகள் 2 கழித்தல்:

மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = சோம்பல் மனிதன் – இயலாமை = முயற்சி மனிதன் – அன்பு = குரோதம் மனிதன் – ஆசை = அமைதி

வித்தியாசமான கணக்குகள் 1 கூட்டல்:

கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 49

தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான், நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 48

இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 47

உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 46

ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 45

இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.

நாகரீக வாழ்க்கையின் கேடு

மலச்சிக்கல் வருவானேன்? உண்பது எளிதாயிருப்பது போல் மலக்கழிவும் சாதாரணமாய் ஏன் நடக்கக்கூடாது? சுலபமாய் இஷ்டம் போல் வாயில் பொருள்களைக் கொட்டிவிடுகிறோம். இவ்வளவு சுலபமாக மலத்தையும் கழிக்கச் சக்தியில்லையா?

சுந்தர யோக சிகிச்சை முறை 132

இப்பெருங்குடலை இரண்டு, மூன்று, நான்காவது சேக்ரல் நரம்புகள் ( SECRAL NERVES ) ஆளுகின்றன இடுப்புக்கிரந்திகள் வழியாக “ ஸிம்ப தெடிக் “ கும் (SYMPATHETIC SYSTEM ) வேலை செய்கின்றது. இந்நரம்புகள் எல்லாம் மிகப் பொடி நரம்புகளாக மலப்போக்குக் குழாய்  மேல் முடிகின்றன. இவைகளில் தான் முக்கிய செயல் சக்தியுண்டு.

சுந்தர யோக சிகிச்சை முறை 131

போக்கு உணர்ச்சி மலம் வெளித் தள்ளப்படத் தயாராகி கடைசி இடத்திற்கு வந்தவுடன் மலப்போக்கு உணர்ச்சி உண்டாகிறது.   மலம் அங்குள்ள நரம்பு முனைகளைத் தூண்டி உணர்ச்சி தருகிறது. பல காரணங்களால் இதை அலட்சியம் செய்கிறோம். பல தடைவைகள் தந்தியடித்து பதில் வராமலிருக்கவே நரம்புகள் வேலை நிறுத்தம் செய்கின்றன. மறுபடியும் உணர்ச்சி வருவதில்லை, மலமும் வெளிப்போவதில்லை. சிக்கல், நிலை உண்டாகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 130

ஆரோக்கிய காலங்களில் இச்சலனங்கள் நடக்கின்றன. நோயில் இவைகள் தடைபெறவே உள்ளிருக்கும் சாமான்கள் அழுகி, விஷங்களைக் கக்கி, அபாயத்திற்கிடமாகின்றன.  சிறுகுடல் சீகம் மூடி( LLEO CAECAL VALVE ) யிலிருந்து ரெக்டத்திற்குவர சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும். இங்கு வந்த பிறகு, சில மணி நேரம் தங்கியே ரெக்டத்திற்குள் செல்லுகின்றது. இங்கு அதிகச் சரக்கு சேரவே, இங்குள்ள  காலன் ம‍டிப்பு உயர்ந்து ரெக்டத்திற்குள் தள்ளி, மலத்தை வெளியேற்றுகிறது இந்த வேலைக்கு டயாப்ரமும் வயிற்றுச் சதைகளும் தேவையான இறுக்கத்தால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 129

ஆறில் ஒரு பங்கு ஜீரணத்தை உள்ளிழுக்கும் வேலை சீகத்திலும் “ ஏறு காலனி “ லும், நடக்க வேண்டும்.  அதற்காகவே இப்பாகங்களுக்கு மட்டும் இவ்வளவு சலனங்களுமுண்டு.   இக் “ காலனில் “ இதர பாகங்களுக்குத் தள்ளும் ( PERISTALSIS ) சக்தி மட்டும் தான் உண்டு.

சுக்கிரன் 5

சுக்ரன் லக்னத்தில் நின்றுவிடில் வசதிகளோடு நாகரீகமாக நாலுபேர் மெச்சும்படி வாழ்வர், சுக்கிரன், சனி இருவரும் 10 இடத்தில் இருப்பின் வீர்யசக்தி இழந்தவராய் இருப்பர். சுக்ரன், சந்திரன் சேர்ந்து 1,5,7,8,9மிடங்களில் இருந்தால் ஜாதகர் வாழ்க்கை துணையினை பிரிந்து வாழ நேரிடும்.

சுக்கிரன் 4

சுக்கிரன் நின்ற இராசிக்கு அடுத்த இராசியில் தனியே சந்திரனிருந்தால் திருமணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கையும், பார்வையும் எந்த வீட்டில் ஏற்பட்டாலும் ஆண், பெண் சுக வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் நாசமாகிவிடும். சுக்கிரன் செவ்வாயோடு ஆறாம்பாவதிபனோடு சேர்ந்து இருந்தால் மனைவி மூலம் துக்கம் ஏற்படும்.

சுக்கிரன் 3

சுக்கிரனோடு சனி, செவ்வாய் சேர்ந்து சனி, செவ்வாய் வீட்டில் நின்றால் இல்லறம் சிறக்காது, செல்வமும் இருக்காது. சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து 7, 8ல் இருப்பின் சில சமயம் கொலைபாதகம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கும். சுக்கிரனும் , செவ்வாயும், இராகுவும் ஒரே ராசியிலிருந்தால் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படக்கூடும்.

சுக்கிரன் 2

சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர், எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர். இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால், ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.

சுக்கிரன். 1

சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும் லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும், இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர். சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின் சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும். செழிப்போடும் வாழ்வர்.  சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.

வியாழன் 16

குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள். குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின் அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர். குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது.  குழந்தைகள் குணம் கெட நேரிடும். குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும், சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர். குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம்,…

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா..

ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். அந்த ஊரில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்…

அன்போடு 2

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான் இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்….? உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான் இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான் நான் எடை அதிகமாக…

அன்போடு…. 1  

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா நல்லா தானே இருக்கு என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   2

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.  இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.  குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   1

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.  அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.  ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’  ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள்.…

நல்லது கெட்டதுகளுக்கு யார் காரணம்? 

ஒருநாள், அந்த துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம். ‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா? ’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.  துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே…

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என்…

புகையிலை வரலாறு..

கி . பி. 1405 – ல் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழி காண புறப்பட்டார்.  அப்போது வழியில் மேற்கிந்திய தீவில் தங்க நேரிட்டது.  அவர் கியூபாவைச் சுற்றி பார்த்தபோது அங்கிருந்த கியூபா நகரவாசிகள் சோளத்தட்டை சருகைச் சுருட்டிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதைப் பார்த்த கொலம்பஸ் அதிசயித்து தான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.  அது உலகப் பழக்கமாகி விட்டது.  இதுதான் புகையிலை வரலாறு..

சைக்களில் சாதனை பயணம் செய்த இளம் பெண்

 நீ ஒரு பெண் உன்னால் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் முடியாது இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் அதையெல்லாம் தகர்த்து ஒரு பெண் 4,500 கிலோ மீட்டார் சைக்கிளில் பயணம் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர் பெயர் அனாஹிதா ஸ்ரீபிரசாத் என்ற இளம் பெண் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிரை இவர் வெற்றிபயணம். பெண்கள்  பாதுகாப்புப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டார். 2015ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கி சந்தித்த…

தலைநகரம் பிறப்பெடுத்தது எப்படி?

1639 – ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆக்ரா இந்தியாவுக்கு தலைநகராக இருந்தது. மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தனர். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார். 

எந்த மனிதன்

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான். பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

எந்தவிதக் கொள்கையும்

சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அடக்கம்

அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன் சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

6 – க்குடையவர், 7 – இல், 5 – க்குடையவர் 6 – இல் ராகுவுடன் சேர்ந்தால் நீர் வியாதி, இளைப்பு போன்ற ரோகமும், சத்துருக்களால் தொல்லையும் ஏற்படும். புத்திரங்களுக்கு நோய் ஏற்படும். 6 – க்குரியவர் 4, இல் 8, 11 – லிருப்பின் சூதாட்டம், ரேஸ், குடிப்பழக்கம் இவைகளால் கடன் ஏற்படும். மனைவி வர்க்கத்தில் அவமானம் தரும். மூத்திர இருச்சின ரோகம் ஏற்படும். மகரம், மிதுனம், லக்கினமாக குரு நீச்சம் பெற, சுக்கிரன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11

6, 12 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று இருப்பின் இளம் வயதில் குன்ம நோய் ஏற்படலாம். 6 – இல் சந்திரன், கேது சேர்க்கை இருப்பின் ரத்த குஷ்ட நோய் ஏற்படும். 1 – க்குரியவர் 8 – இல் சனி, புதன், ராகு சேர்க்கை மத்திம வயதிற்கு மேல் வாத ரோகம் ஏற்படும். 1- க்குரியவர் 6 – இல் ( அ ) 12 – க்குரியவர் 1 – இல் மிருகங்களால் பயம்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

6 – இல் செவ்வாய் இருந்து, 6 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று இருப்பின், இளம் வயதிலும், அந்திம வயதிலும் கடுமையான உஷ்ண நோய் உண்டாம். 6 – இல் குரு, 12 – இல் சந்திரன் இருப்பின் இளம் வயதில் வயிற்று வலி, குடல், நோய் உண்டாம். 6 – இல் இராகு, சந்திரன், சனி, இருப்பின், 1 – க்குரியவர் 6 – லிருப்பின் மத்திம வயதில் கொடி ரோகம் உண்டாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

சூரியன், செவ்வாய் பரிவர்த்தனம் பெற்றாலும், எதிர் கேந்திரம் பெற்றாலும், அம்சத்திலிருப்பினும், அடிதடி சண்டையில் தொல்லை ஏற்பட்டு கஷ்டம் ( அ ) மாரகம் ஏற்படலாம். 1, 2, 7 – ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பினும், சூரியனையோ ( அ ) செவ்வாய் பார்வை பெற்றாலும் கடுமையான நோய்கள் ஏற்படும். 8 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை ( அ ) 8 – இல் சனி 12 – இல் செவ்வாய் இருப்பினும்,…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 6

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 5

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 4

மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 3

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2

உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 1

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ…