சுந்தர யோக சிகிச்சை முறை 158

உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும். உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும். பயிற்சியும் சரியாக வராது. நெளலியை நின்றும் செய்யலாம் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம் குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி, தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும். இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 157

உட்டியாண வயிற்றின் வீரியத்திற்கு எடுத்ததே. ஆனால் இதைக் காட்டிலும் உயர்ந்த அப்பியாசம் ஒன்றுள்ளது. அதுவே ‘ நெளலி ‘ பழகும் வகைக்கு சென்ற பயிற்ச்சிக்கும் இதற்கும் வித்தியாசம் நன்கு தெரியும். உட்டியாணாவில் வயிறு எங்கேயோ முதுகை நோக்கி ஓடிவிட்டது. நெளலியில் இது உருண்டு திரண்டு தண்டாக, நடுவில் நின்று காட்சி அளிக்கிறது.  ஜாலவித்தை ஒன்றுமில்லை. உட்சதைகளின் ஆட்சியால் கிடைக்கும் நிலையே இது இலட்சக்கணக்கான சாதகர்கள் இதை இப்பொழுதும் நம்நாட்டில் பழகி வருகிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 156

யோக சாதனையில் உட்டியாணா, நெளலி என்ற அபூர்வ அப்பியாசங்கள் உள்ளன. நான்கோரும் பலனைக்கொடுக்க இவைகள் தான் மிகவும் உகந்தவை. உட்டியாணாவை பழகும் வகையைப் படித்த உடனேயே, உட்டியாணாவின் பலன்களை ஊகிக்க முடியும். பழக ஆரம்பித்தால் சந்தேகம் அறவே ஒழியும். அப்பியாசம் சித்திக்கவே, வயிற்றுச் சதைகளின் பலவீனம் பறந்தோடி உழைக்கப்படுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 155

பெருங்குடல் பொருள்கள் வெளித்தள்ளப்படாமல் தேங்குகின்றன. தீவிர மலச்சிக்கல் உண்டா கின்றது. வயிற்றுச் சதைகளின் பலவீனத்தால் இங்கே கெடுதல் ஏற்படுகிறது. விளக்கெண்ணெயும், ‘சால்டு’களும், ‘எனிமா’வும் ஒரு பலனும் தரா. குடல் கெடுமே ஒழிய குறைநீங்காது சதைப்பயிற்சி கொடுத்தே தீர வேண்டும். நான் என்ன வரைந்தாலும் இந்த உண்மை சிலர் மூளைக்குள் புகாது. ‘ஸர்ஜரி’ யைப் ( SURGERY  – ரணசிகிச்சை ) பற்றிய பெரிய வைத்திய புத்தகங்கள் கூட வயிற்றுச் சதைப்பயிற்சி  செய்யத் திட்ட மிடுகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 154

ஆனால் வயிற்றுச்சுவர் ( சதைகள் ) பலவீனமடைந்தால் இந்நிலை தவறுகிறது. பூமி சக்தி கருவிகளையெல்லாம் கீழே இழுக்கின்றன. வயிற்று இறுக்கம் ( INTRA ABDOMINAL PRESSURE ) குறைகிறது. வயிற்றுச் சுவர் ( சதைகள் ) பூமி சக்தியைத் தடுப்பதுமின்றி, பெருங்குடலை வேலைக்குத் தூண்டுகிறது. இச்சதைகள் இளகவே மேற்கூறிய இறுக்கம் குறைகிறது. பெருங்குடலின் மேல் தூண்டுதலும் பலவீனப்படுகிறது. இரைப்பையும், குடல்களும் உப்புகின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   74

ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாளும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   73

நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள் நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   72

எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   71

தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   70

பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன் புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  89

இப்படிதான் வாழ வேண்டும் என்ற நியதியோ, நியாயமோ, வரம்போ எந்த ஒரு வாழ்க்கையையும் இந்த ஜென்மத்தில் வாழாதவனால் அடுத்த ஜென்மத்தில் மட்டும் எப்படி (அப்படி பட்ட) ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகில் அறிவினாலும் மனதினாலும் வாழ விரும்புவர்கள் இந்த உலகில் புதிய ஆண்மை ஒன்றை படைத்திருக்கிறார்கள் அதுதான் சான்றாண்மை சால்பை ஆள்வது தான் சான்றாண்மை, சான்றாண்மை குணத்தை விரும்புகிறவர்கள் எதை எதிர்ப்பதையும் வீரமாக கொள்வதில்லை பொறுத்து நிற்பதை தான் வீரமாக கொள்கிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  88

அழுக்கு படாமல் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமல் போய்விடும். அன்பில்லாமல் கருணை இல்லை எல்லையை உடையது அன்பு எல்லையற்றது கருணை அன்பு முதிர்ந்து தான் கருணையாக மாற வேண்டும் அன்பே இல்லாத கருணை உலகில் தோன்றியதில்லை. பூ அழிந்து தானே காய் உண்டாகிறது

உரையாடலின் ஒரு பகுதி  86

மனித குலம் இத்தனை பாடு பட்டும் இன்பமாய் சந்தோஷமாய் ஆனந்தமாய் இல்லாதிருக்க காரணம் அவரவர்களின் பதிவுகளே முதலில் நாம் நம் மனதின் துணை கொண்டு அதாவது மனதின் அறிவு கொண்டு நம் பதிவுகளை அறிவோம் பின் அந்த பதிவுகள் இல்லாமல் செயல் புரிவது எப்படி என்று பார்ப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  85

 கீதை அதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. கர்மத்தை செய், பலனை எதிர்பார்க்காதே என்று. அதாவது, அதை புரிந்து கொள்ள வேண்டிய விதம் கர்மத்தை செய். பதிவுகளை உருவாக்காதே என்பதே பதிவுகளில் நல்ல பதிவு, கெட்ட பதிவு என்று இல்லை ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. பதிவு என்பது வேண்டாம் என்பதே

உரையாடலின் ஒரு பகுதி  84

மேலே சொன்ன திரைகளனைத்தும் நம் செயல்களின் விளைவுகளால் உண்டானது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் உண்மை என்னவென்றால் நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இது தான் இதை அறிந்து கொண்ட பின் நாம் நமது செயல்களில் கவனம் வைத்து செயல்களை செய்து பழக வேண்டும் அது எப்படியென்றால் செயல்கள் இருக்கும் விளைவுகள் இருக்கும் ஆனால் பதிவுகள் இருக்காது. இந்த முறையில் செயல்களை செய்ய தான் கீதை நமக்கு அறிவுறுத்துகிறது.

இதை உணர்ந்து இருக்கிறீர்களா

ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது

7 தலைமுறைகளின் முக்கியத்துவம்

ஜீன்களை சுமந்து செல்வதே சுக்லதாது . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது . தந்தையிடமிருந்து (father) 21 அம்சங்கள்; பாட்டனிடமிருந்து (grand father) 15 அம்சங்கள்; முப்பாட்டனிடமிருந்து (great grandfather) 10 அம்சங்கள் ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. பாக்கி உள்ள 10 அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை. நான்காவது மூதாதையிடமிருந்து 6…

ஓசை ……

  தடுக்கி விழுந்தால்                         அ  ஆ. சிரிக்கும் பொழுது                          இ..  ஈ. தீ புண்பட்டால்                                  உ..  ஊ. அதிகாரம் செய்யும் போது.…

புலன்களை வென்றவனே வீரன்.

இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி. துன்பங்களைப் பொறுப்பவனே தவசி. விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான். அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன். கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.

யோசிக்க 15

‘உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, ‘நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்’ என்று சொல்ல உங்களால் முடியவேண்டும். இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான்…

யோசிக்க 14

நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.

யோசிக்க 13

ஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி ‘ஹிந்து வளர்ச்சி விகிதம்’ என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை ‘நேருவின் வளர்ச்சி விகிதம்’ என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

யோசிக்க 12

சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.’என்று குறிப்பிட்டுள்ளார்

யோசிக்க 11

இந்தியர்களின் முன்னேற்றம்: அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

யோசிக்க 10

ஜாவஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.

யோசிக்க 9

இந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல. சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு ‘வளம் பெற வேண்டுமா? சகித்துக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை. ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது (மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும்…

யோசிக்க 8

இந்தியாவின் பிரச்னை வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல, அது அரசியல் பிரச்னை. இப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்க நமக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு அரசியல் சார்ந்தது. நாம் நமக்கு இருக்கும் சக்தியைக் கூட்டாகப் பயன்படுத்தி, பொறுப்புள்ள பதவிகளுக்கு நல்ல மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

யோசிக்க 6

ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது? இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும்? ‘இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள் மனத்தை உலுக்கக் கூடியவை. இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.’ என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.