நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 6

திருப்புன்கூர் நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை. நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 5

சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 4

பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 3

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது 

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 2

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 1

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

சனி 5

சனி ரிஷபத்தில் இருப்பின் அடிமைத்தொழில் செல்வ சபிட்சமிராது. கெட்டசகவாசம் இருக்கும், ஒழுக்கத்தில் தரம் குறைந்திருக்கும். சனி மிதுனத்தில் இருப்பின் கடுமையாக உழைப்பவர்கள், பெரிய நிறுவனத்திற்கு தலமை ஏற்பார், குணப்போக்கு நன்றாய் இராது. சனி கடக்ததில் உள்ளவர்கள் இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும், ஒய்வில்லாமல் உழைப்பார்கள், குடும்ப நலம் குறைவாக இருக்கும்.

சனி 4

சனி 1,3,6,9ல் இருந்தால் வாதம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 2ல் இருந்தால் ஜாதகர் தனது அறிவை கொண்டே சம்பாதிப்பர். சனி பலமுடன் இருந்தால் ஸ்ரீ தத்தாத்ரேயர் போன்றவரை பூஜை செய்தால் ஞானம் பிறக்கும். சனி மேஷத்தில் இருப்பின், கடுமையாக பேசுவர், கடினமாக உழைப்பவர், நீச்சனாகவும், நண்பர்கள் குறைவாகவும் பாபகாரியத்தில் ஈடுபடவர்.

சனி 3

சனி 3,8,11ல் இருந்து 5ல் ராகு இருப்பின் கர்மகிரியை செய்ய புத்திரர் இருக்கமாட்டார். சனியுடன் சந்திரன் சேர்ந்திருந்தாலும், சனி நின்ற ராசிக்க 3,7,10ல் சந்திரன் இருந்தாலும் வசதியான வாழ்க்கைத்துணை அமையாது, சன்யாசிபோல் பற்றற்று வாழ்வர். சனி 1,5,10 ஆகிய இடங்களியொன்றில் இருந்து 1,3,6,11ல் ராகு இருப்பின் திருமண வாழ்வில் பிரச்சனை, விவாகரத்துவரை செல்லலாம்.

ப்ராணனே அமுதம்

ப்ராணனே அமுதம் என்கிறது ப்ரச்ன உபநிடதம். சூரியனாகச், சந்திரனாக, பஞ்ச பூதங்களாக விளங்குவது ப்ராணனே என்று அது கூறுகிறது. ஆணில் விந்துவாகவும், பெண்ணில் கருவாகவும் விளங்குவது ப்ராணனே என்று கூறுகிறது. பெறறோரின் சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும், அந்த உடலில் உயிராக நின்று உலகை அனுபவிப்பதும், அதற்காகப் புலன்களை இயக்குவதும் ப்ராணனே என்பது கோட்பாடு. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. மனிதனும் நிழலும் போல ஆன்மாவும் ப்ராணனும் பிரிக்க முடியாதது. ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. அது தன் ஆசைகளுக்கேற்ற உடலைத்…

ப்ராணாயாமம்

ப்ராணாயாமம் என்பது யோக சாதனங்களில் முக்கியமானது. ப்ராணனின் சலனம் மனதின் சலனம் என்பார்கள். அதாவது ப்ராண சக்தி குறைவுபட்ட ஒருவனது மனது சலனமடைந்து கொண்டேயிருக்கும் என்பது அதன் உட்பொருள். அதனால்தான் யோகத்தின் படித்தரத்தில் ப்ராணாயாமம் நான்காவது நிலையாக உள்ளது. அதாவது ஒழுக்கம், உடல் நலம், ப்ராண சக்தி இது மூன்றும் இருந்தால்தான் ஒருவன் மனதைக் கையாளவே முடியும். இந்த மூன்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவன் மனதின் கைப்பாவையாகத்தான் இருப்பான். இந்த மூன்றையும் முறைப்படுத்திய பிறகுதான் அவன் புலனடக்கம்,…

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு

உங்களைப் பார்க்க விரும்பாதவர்களுக்கு உங்களைக் காட்ட வேண்டும் என்று நினைக்காதீர்கள்..   உங்கள் தூரத்தை வைத்து பின்வாங்கவும்.. ஏனெனில், தூரம் தான் சிறந்த பதில்!

எந்த அர்த்தமும் தராத

எந்த அர்த்தமும் தராத வார்த்தையும் இருக்கிறது.. எல்லா அர்த்தங்களையும் தருகின்ற மௌனமும் இருக்கிறது! மகிழ்ச்சியை இரவல் வாங்க முடியாது.. இரவலாக வாங்குகின்ற எதுவும்‌ மகிழ்ச்சியை தராது!

நாம் விரும்புவதால்

எப்போது யாரைப் பிரிவோம் என்று சொல்ல முடியாது.. ஆனால்.. யாரையும் பிரியாமலும் இருந்துவிட முடியாது! நாம் விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம்  கிடைப்பதில்லை.. வெறுப்பதால் கல்லறையும்  நம்மை விட்டு விட போவதில்லை..

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 64

அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  63

மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது நமது மதக் கருத்துக்களை அன்போடும் கனிபோடும் பார்ப்பதாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  62

இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  61

நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  60

மேலை நாட்டில், மேலை நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான் அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 153

வயிற்றுக் குழியில் குடல், இரைப்பை, லிவர் என்று பல கருவிகள் அமைந்திருக்கின்றனவென்றும் அவை ஒன்றுக்கொன்று அழுத்திக் கொள்ளுகின்றனவென்றும், அறிந்தோம். இந்த இறுக்கத்தை மேலிருந்து டையாப்ரமும், சுற்றிலுமிருந்து வயிற்று முன்பின் பக்கச் சதைகளும் அதிகமாக்கி நிறுத்துகின்றன என்பதும் தெரிந்த விஷயம் இந்த இறுக்கம் சிலர் வயிற்றில் ஒரு சதர அங்குலத்திற்குப் பத்து பவுண்டு ( ராத்தல் ) என்று கணக்கிடுகிறார்கள். சாதாரணமாயுள்ள மனிதர்களுக்கு இந்த இறுக்கம் உள்கருவிகளைக் கீழே இழுக்கும் பூமி ஆதர்ஷன சக்தியைக் தடுக்கப் போதும். இக்காலத்தில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 152

1. வயிற்றுச் சதையின் ( ABDOMINAL MUSCLES ) பலவீனம். 2. பெருங்குடல் சுவரின் சதை வீரியம், நரம்பு ஆட்சி இல்லாமையும் இவைகளின் கெடுதலும். வயிற்றுக் குழியின் ( ABDOMINAL CAVITY )  பின் சுவருக்கும் பெருங்குடல் மெஸோ காலன் (  MESO COLON ) என்ற தெளிவு சதை மடிப்புகளாய் ஒட்டப்பட்டிருக்கிறது. மெஸோகாலன் மீது குடல் கனம் விழுவதில்லை. வயிற்றுச் சுவர் சதைகள் தான் முக்கியமாய் பெருங்குடல் பாரத்தைத் தாங்குகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 151

மலச்சிக்கலை தடுக்கவும், ஒழிக்கவும் ஹடயோக சிகிச்சை தான் இணையற்றது. ஆராய்ச்சி செய்தால், இதன் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் முன் எழுதிய அத்தியாயங்களைப் படித்தவர்கள் மலச்சிக்கல் நிலையில் உடல் எந்நிலை பெறுகிறதென்று எளிதில் அறியலாம். இந்த நோயின் காரணங்களை இரண்டு பெரிய தலைப்புகளின் கீழ் குறிப்பிடலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 150

ஸர் ஆர்தர்கீர் ( SIR ARTHUR KEITH ), ஆபரேஷன் செய்து கொண்ட பதினைந்து நபர்களைப் பரிசோதித்து அதிருப்தி அடைந்தார். இக் காரணம் பற்றிச் சிறுகுடல்மாறுவதற்கு ஆரம்பித்தாம். இது குறுகித் தடித்து பெருங் குடலைப் போல் பார்வையில் வளர்ந்து விட்டதாம். டாக்டர் ஹர்ஸ்ட் ( Dr. HURST ), அவர்களின் ஆபரேஷன் ஆராய்ச்சிப்படி, ஜீரண சக்தியைக் கெடுத்து விடுகிறதாம். விஷம் ஏற்பட்டால், சிறுகுடல் முழுவதும் பரவ இடம் கொடுக்கிறதாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 149

இப்படி ஆபூர்வமாய் சம்பவிக்கும் நிலையில் ஆபரேஷன் தேவையே. இதைச் செய்துகொள்ள வேண்டியதுதான் இவ்வளவு உருத்தெரியாமல் பெருங்குடலே அழியாவிட்டால், அதை ஆபரேஷன் செய்து எடுத்து விடக் கூடாது.   கொஞ்சம் உயிரிருக்கும் குடல்களை எடுப்பதால் பலகேடுகள் விளைகின்றன. இந்த ஆபரேஷன் சிகிச்சை நிபுணர் பலருக்கு அறுத்து எறிந்து விட்டார் .எல்லோரும் குணம் அடையவில்லை. உயிரற்ற அழிந்த குடலை வைத்திருந்தவருக்கு சுகம் ஏற்பட்டது. சிலர் ஆபரேஷனுக்குப் பின் நோயாளிகளானார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 148

இந்த “காலன்” எல்லாம் கேவலம் கோணிப்பையாக நின்றிருந்தது. இதில் விழுந்த சாமான்களை பூமியின் ஆகர்ஷண சக்தியாலாவது, வயிற்றின் மேலமுக்கத்தாலாவத தான் வெளியேற்ற முடியும். இந்தக் “காலனி”ல் சேர்ந்த வாயுவானது வயிற்றையே ( ABDOMEN ) மிகவும் உப்பச்செய்ய இதன் சதைகளெல்லாம் உயிர்த்தன்மையை இழந்து, மலப்போக்குக்கு ஒத்துழைக்கச் சக்தியற்றதாய் நின்றன”.

சுந்தர யோக சிகிச்சை முறை 147

“ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தேன்.  பெருங்குடலையும் முழுமையாக எடுத்துவிட்டேன். சுமார் மூன்று அடி நீளமும், நான்கு அல்லது ஐந்து அங்குல குறுக்கு அளத்தையுமிருந்தது. இதன் வெவ்வேறு பாகங்களிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்ததில், அவைகளில் சதைப் பற்றே (  MUSCULAR TISSUE ) இல்லை இதிலிருந்து இந்தக் குடலின் சதைச்சுவர்கள் முற்றிலும் செத்துவிட்டன என்பது விளங்கியது.

சுந்தர யோக சிகிச்சை முறை 146

வயிற்றுச் சதைகளின் சக்தியின்மை. குடல் உளுத்தல் பெருங்குடலையே அறுத்தெடுத்து விடுகிறார்கள் என்று முன் கூறினோம். இது சாதாரணமாக அவசியமில்லை. இதனால், எல்லோருக்கும் குணம் ஏற்படாது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். மிக ஆபூர்வமாகத்தான் நோயாளியின் குடலை “ ஆபரேஷன்” செய்து தீரவேண்டும். ஆபரேஷன் செய்த ஒரு “கேசை” சர்ஜன் ஒருவர் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

சுந்தர யோக சிகிச்சை முறை 145

உணவுத் தவறுதலாலும், பெருங்குடல் புண் வருவதாலும், மலச்சிக்கல் நிலைத்துவிடும். இடுப்புக்கான நரம்புகள் கெடுவதாலும் இது உண்டாவதுண்டு. மலச்சிக்கலுண்டாக, ஒரு பெரும் கெடுதிச் சக்கரம் ஏற்படுகிறது.

உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 2

தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா! எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?” என்று கேட்டார் நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய் . எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு” என்றார் துறவி. அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.…