கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3

6, 2 – க்குடையவர்கள் கூட 12 – இல் உச்சம் பெற. 6, 2 – க்குடையவர்கள் உச்சம் பெற,12 – க்குடையவர், 4 – இல் நிற்க, மேற்படி ஜாதகர்கள் மிகுந்த ரணவாளர்களாகி, பூர்வீக சொத்துக்களை அழித்து விட்டு, மரணம் அடைவர். பின் புத்திரர்களால் கடன் தீரும். இவர் மரணம் அடைந்ததால் தான் கடன் தீர்ந்தது என்று உலகோர் கூறுவார்கள். புதன், 6 – க்குடையவர் சந்திரன் மூவரும் லக்கினத்தில் நிற்க, சூரியன் பார்க்க,…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 2

8, 9 – க்குடையவர்கள் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – இல் நிற்க, 7 – க்குடையவர் 12 – இல் நிற்க, சந்திரனுக்கு 5 – க்குடையவர் உச்சம் பெற்று நிற்க. 9 – க்குடையவர் 6 – க்குடையவரோடு கூடி உச்சமடைய, 12 – க்குடையவர் 2 – ல் நிற்க. குரு 8 – ல் நிற்க, 7 – க்குடையவர் 12…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள்.1

12 – க்குடையவர் 2 – ல் நிற்க, 2 -க்குடையவர் 6 – ல் நிற்க, 9 – க்குடையவர் பலவீனமடைய, 6 – க்குடையவர் கேந்திரத்தில் உச்சமடைய, 9 – க்குடையவர் 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் குரு கூடி 2 – இல் நிற்க, சந்திரனுக்கு 2 – க்குடையவர் நீச்சம் பெற, சந்திரனுக்கு 2, 12 – க்குடையவர்கள் லக்கினத்தில நிற்க, உபய ராசியாதிபதி சந்திரனுக்கு 6…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  52

4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து, லக்கினாதிபதி எட்டில் இருந்தால் நிறைய பூமி உண்டு. நிலபுலன்கள் வீடுகள் உண்டு. 4 – க்குரியவர் திசை நல்ல யோகம் செய்யும். நாலுக்குரியவர் திசையிலும் நாலில் இருப்பவர். பார்த்தவர் திசாபுத்தியிலும் பெரும் வீடு கட்டும் யோகம் உண்டு. இது பாவர் லக்கினத்துக்கே பொருந்தும். 8, 11 – க்குடையவர் 4 – இல் 4 – க்குரியவர், நாலாமிடத்தை பார்த்தால் பூர்வீக சொத்து, நிலபுலன்கள் நிறைய உண்டு.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 51

1 – க்குரியவர் உச்சம் பெற்று சனி – செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும் அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 4 – க்குரியவர் பாதகம் பெற்று சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டால் வாகன விபத்து ஏற்படும். அங்கங்களுக்கு குறைவு ஏற்படலாம். 2 – க்குரியவர் 4 – இல் பலத்து, பாதகாதிபதி சேர்க்கை, பெற்று 12 – க்குரியவர் கூடி இவர்கள் திசாபுத்தி நடக்கும் காலம் மாரகம் ஏற்படும். குடும்ப பற்று குறைந்தவர். 4 – க்குடையவர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 50

4 – க்குரியவர் செவ்வாய் சேர்க்கை பெற்று வலுத்து, 7 – இல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின், நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. நிலத்தின் பேரில் கடன் தொல்லை உண்டு. 4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின் பூர்வீக தனம் நிறைய உண்டு. இவரை பாதகாதிபதி பார்த்தால், இதனால் விர்த்தி இல்லை. 4 – க்குரியவர் உச்சம் பெற்று, கோணத்தில் செவ்வாய் பலத்துடன் இருப்பின் பூர்வீக தனம் நிறைய…

சுந்தர யோக சிகிச்சை முறை 118

சீகம் முக்கியமாய் சம்பந்தப்பட்டுள்ளது.  தண்ணீர் இதுவரையிலும் எட்டுவதில்லை.  ஒரு வேளை எட்டினாலும் தண்ணீர் அங்கேயே நின்று, சதைச் சுவர்கள் மூலம் உள்ளிழுக் கப்படுகிறது.  அதிகமாய் வெளிப்போவதில்லை. சில டாக்டர்கள் மேல்சதைப் பயிற்சிகள் விதிக்கிறார்கள். கருவிகளையும் வியாபாரம் செய்கிறார்கள். அல்ப சொல்ப பலன் உண்டாகலாம் ஆனால் இவை வியாதியைத் தடுக்கவும்.  ஒழிக்கவும், உபயோகப்படா. விளக்கெண்ணெய்  வாங்குவதற்குக் காசில்லதவன் ‘ மாலிஷ்க்கும், கருவிக்கும் எங்கே செல்வான்?

சுந்தர யோக சிகிச்சை முறை 117

இவ்வளவு பிரியமாய் ஒட்டிக்கொள்ளும் இந்தத் தகரடப்பா, நீடித்த நன்மையைத் தருவதில்லை. இதன் வழியாக வரும் தண்ணீர்ப் பெருங்குடல் சதையை சதா உப்பச் செய்து, அதைப் பெரிதாக்கி, பலத்தையும் போக்கி விடுகிறது. மலத்தை வெளித்தள்ளக் கூடச்சக்தி யிருப்பதில்லை, இந்தத் தகரத்தால் கொட்டும் தண்ணீர் பெருங்கடல் முழுவதும் பரவி, மலத்தை வெளியேற்றுவதியில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 116

சில குழந்தைகள் வெல்லத்தைக் கொடுத்தால்தான் அழுகையை நிறுத்தும், ஹீ!ஹீ “ என்று அழுது கொண்டே  “எனிமாவைக் கொண்டா” என்று பெருங்குடல் சதியடிக்கும் பெண்டாட்டியைக் கைவிடலாம்.  குழந்தைகளை கைவிடலாம். வீடு தனத்தையும் மறக்கலாம்.  காபி சுகந்த மூக்குத் தூளைக்கூட ஒருவாறு புறக்கணிக்கலாம். ஆனால் எனிமா டின்னோபிரியா நண்பனாய் ஒட்டிக் கொள்ளும் எந்தப் பாச்சாவும் இதனிடம் பலிக்காது. இதற்கு அடிமையானவர்களைக் கண்டு யோக சாஸ்திரம் அனுதாபம் காட்டுகிறது!.

சுந்தர யோக சிகிச்சை முறை 115

எனிமா எங்கே  எனிமாவை மறக்கவில்லை! மிகவும் கெட்ட நிலமையில் இது சிறிது பலன்படும் என்பதில் ஐயமில்லை ஆனால் மலச்சிக்கலைத் தடுக்கவோ, பலநாளாக வேரூன்றிய நிலையைக் கலைக்கவோ இதற்குச் சக்தியில்லை.  ஆரோக்கியம் பெற இதை அடிக்கடி இடைவிடாது உபயோகிப்பதால் பல கெடுதல்கள் ஏற்படும் பெருங்குடலுக்கு எனிமாவைச் சிநேகம் செய்த்தால், விபத்தாக முடியும்.

சுந்தர யோக சிகிச்சை முறை114

பேதி மருந்தை வாயில் கொட்டி , வயிறு சிறுகுடல் வழியாகப் பாய்ச்சுகிறான்.  இந்தக் ‘குறவர்’ களுக்கு எரிச்சல், உறுத்தல், புண் எல்லாம் உண்டாகின்றன. தற்கால அனுகூலத்திற்கு. ஒவ்வொரு பேதி மருந்து ‘ டோசும்’ம், ஜீரணக் கருவிகளைப் பலவீனப் படுத்துகிறது யோக சாஸ்திரத்திற்கு இந்த பேதி மருந்துகளைக் கண்டாலே அடங்காக் கோபம் வரும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 30

இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல நம்மிடம் போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 29

 வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (ஒரு முறை இளம் ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்.)

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 28

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ;

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 27

குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும் இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும். அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 26 

நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்தவர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது;

வால் இல்லாத ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வால் இல்லாத ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக, ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடிச் சென்றார். அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், சீதாதேவி மணலில் செய்து கொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரான் வழிபட்டு முடித்து விட்டார். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர், தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயன்றதாகவும், அந்த முயற்சியின் போது, ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனதாகவும் ஒரு சாரார்…

ஆதி பைரவர் தலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.

யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீ ராமபிரான்

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் வலது கை சின் முத்திரையுடன் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் உப்பு லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால்…

குமரன் :திருவிடைக்கழி

தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர் இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம் இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச்…

அதிசய காந்த கண்ணாடி

இன்றைக்கு பலரும் கம்ப்யுட்டர் செல்போன் முன் அதிகநேரம் செலவிடுகிறார்கள் இதன் விளைவாக காணும் பலவகையான காட்சிகள் மனக்கண்ணில் பதிந்து உறக்கமின்மை பார்வைக்குறைவு ஆண்மைக்குறைவு வீண்குழப்பம் ஆகியவை ஏற்ப்படுகிறது . இதனால் மனக்கவலை உண்டாவதோடு பலவகையான சிக்கல்கலை வாழ்வில் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் . இவர்களுக்கு இந்த காந்த கண்ணாடி பெரிதும் உதவிசெய்கிறது .வீணான காட்சிகளை மனக்கண்ணில் இருந்து அகற்றி மனதை ஒருநிலைபடுத்துகிறது . நல்ல உறக்கத்தையும் கொடுக்கிறது . கண்பார்வை மற்றும் முன்றாவது கண்ணாண ஞான பார்வை பயிற்ச்சி செய்பவர்களும்…

இரும்புக் குதிரைகள்

ஸ்காட்லாந்தில் இருக்கும் இரும்பு குதிரை சிலைகள், ‘கெல்பீஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் 30 மீட்டர் உயர சிற்பத்தை, ஆண்டி ஸ்காட் என்ற சிற்பி உருவாக்கினார். போர்த் நதியை ஒட்டிய பூங்காவில் இவை அமைந்துள்ளன ஸ்காட்லாந்தின் நீர்வழித் தடங்களில் குதிரைகளின் பங்களிப்பை நினைவுபடுத்தவே இந்த சிலைகள்.

காந்தளூர் சாலை போர் 4

இதுதான் ராஜராஜன் உடனடி படையெடுப்புக்கான காரணமாக சொல்லப்படுகிறது. ராஜராஜனுக்கும் பாஸ்கரரவிவர்மாவுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. திருவனத்நபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சாலைகலை மறுத்தருளிய கோவி ராஜராஜகேசரி என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பதை கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம் இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றிபெற்றார் காந்தளூர் சாலை போர் குறித்தான விவாதங்கள் இனறுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது காந்தளூர் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும், இப்போர்…

காந்தளூர் சாலை போர் 3

அனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு வரலாற்று கூற்று உண்டு. முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்கு தன் தூதுவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சோழ நாட்டு தூதுவரை சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மா சிறைபிடித்தனர்.

காந்தளூர் சாலை போர் 2

அந்த காலகட்டத்தில் இது போன்ற போர் பயிற்சிக்கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர் பயிற்சிக்கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?

 ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.  நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள…

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே!

மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான். என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன்…

.. தன்  வேலையை  தான் செய்யணும் 2

முதலில் சொன்ன கதை வேறு ஒரு கோணத்தில் கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால் தான் கழுதை கத்தியது எனப் புரிந்துக்கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக்கொண்டிருந்த வேலையும்…

தன்  வேலையை  தான் செய்யணும்1  

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.      அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா…

உனக்கு வேற வேலையே இல்லையா?

 ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான். அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு சந்தேகம் “ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே? ” அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க. அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும்…