சுந்தர யோக சிகிச்சை முறை 113

ஒழுங்கான உணவுப் பழக்கங்களை நம்பியே மலப்போக்கு வழியை அமைத்துள்ளது. டாக்டர்களெல்லாம், இந்தப் பேதி வஸ்துக்கள் கெடுதலென்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். இவைகள் கருவிகளை உறுத்தி வதைப்படுத்துகின்றன. பேதி சிகிச்சை பெருங்குடலுக்குத் தேவை! அதற்க நேராக அளிக்கப்படாமல் வாய் வழியாக இவைகளைக் கொட்ட வேண்டியிருக்கிறது கேட்டீர்களா கதையை! குறத்தி பிள்ளை பெறவும் குறவன் காயம் தின்றானாம்! இவனுக்கு என்ன கிடைக்கும்  வயிற்றெரிச்சல், வாயு, வாய்புண்! இவைகள் தாராளமாகக் கிட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 112

பேதி வகை – வேறு சிகிச்சையே இல்லாவிட்டால், பெருங்குடலைப் பலி கொடுக்கலாம். அவ்வளவு மோசமில்லாத கேசுக‍ளுக்கு வழியாயில்லை நேர்வாளம் இருக்கும் வரை என்ன சார் பயம்?”  எனக்கொக்கரிக்கலாம்.  மலக்கழிவுடன் பிராணனும் கழியக்கூடும்! நம்மையெல்லாம் நம்பித்தானே “ ப்ரூட் சால்ட்” உண்டாக்குகிறான்”!.  நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா சார்?” என்று உள்ளம் உருகட்டும் “ என்ன சார் ! விளக் கெண்ணை சாப்பிட்டால் குளுமை, சுகம் என்கிறார்களே?” என்றும் வினவலாம். ஆனால் நேர் வாளத்திற்கும், சால்ட்டுக்கும் விளக்கெண்ணெய்க்கும் அடிமையாவதற்காக இயற்கை…

சுந்தர யோக சிகிச்சை முறை 111

 நூற்றில் ஒருவனுக்கு மலச்சிக்கல் என்றால் குடலை அறுத்து விட சட்டமிடலாம். ஏறக்குறைய நூற்றில் தொண்ணூறு பேருக்கு மலச்சிக்கல் இருப்பதனால் எத்தனை பேர் குடல்களை அறுத்தெறிவது கோடிக்கணக்கான டாக்டர் “ லேன் “ கள் இருந்தாலுமே வேலை தீராதே!

சுந்தர யோக சிகிச்சை முறை 110

இதுவரை வெளிப்பட்ட ஆராய்ச்சியிலருந்து, இப்பெருங்குடலுக்கு வேலை இருக்கிறதென்று அறிகிறோம். சீகத்தைச் சார்ந்து உயரும் குடல்பாகத்தில், இழுக்கப்படாத சில உணவுச் சத்துக்கள் கிரகிக்கபடுகின்றன. மேலும் மாமிச பட்சிணிகளைக் காட்டிலும், மரக்கறியை அண்டி நிற்கும் மனிதனின் குடல் மிகவும் நீண்டிருக்கின்றது. சுமார் ஐந்தடி நீளமுள்ள இந்த பாகத்தில் நமக்கு விளங்காத  அவசியம் அமைந்திருக்க வேண்டும் டாக்டர் கீத் ( Dr.KEITH ) துரை இதை அலட்சியம் செய்ய முடியாதென்று கூறுகிறார்.

சுந்தர யோக சிகிச்சை முறை 109

பெருங்குடல் இருப்பதால் மலம் தங்குகிறது, மலத்தால் நோய் உண்டாகிறது. குடலையே அறுத்து எறிந்து விடுவது, உத்தமமானதே என்று கூறுகின்றார். டாக்டர் அர்ப்பத்நாட்லேன், தலை வலித்தால் தலையையே வெட்டிவிடுவதா? டாக்டரின் எண்ணத்தில் பெருங்குடல் அனாவசியப் பொருள்!  விஷயமின்றிப் பருத்துத் தொங்கியிருப்பதாக யோசனை இயற்கையின் செய்கை காரணமற்றதென்று யாரால் கூற முடியும் நம் மூளைக்கு எட்டாமல் இருக்கலாம்.

வியாழன் 10

குரு லக்னத்தில் உள்ளவர்கள், ஆசிரியராக, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகராக, பெற்ற பிள்ளைகளிடம், மிகுந்த பாசமுள்ளவராக திகழ்வர். வியாழன் எந்த லக்னமானாலும், பொதுவாக, 1,2,5,7,9,11ல் இடங்களில் இருப்பின் குரு பலம் உடைய ஜாதகமென கொள்ளவேண்டும். குரு பெண்களுக்கு 2ம் இடம், குடும்பஸ்தானம், 5ம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம், புத்திர ஸ்தானம் 9ம் இடம் பாக்கியஸ்தானம், புகுந்த வீடு பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். இந்த அமைப்பு அதிர்ஷ்ட இடமாகும்.

வியாழன் 9

குரு, சுக்ரன், சுக்ல பட்சத்து சந்திரன், புதன் ஆகியோர் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலேயே இருந்தால், அதிர்ஷ்டசாலியாக, நற்குணவதியாக இருப்பர். குரு பலம் என்றால் குறிப்பிட்ட ராசிக்கு கோசார ரீதியாக குருவானவர் 2,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். குரு உச்சமாக கடகத்தில் நின்றவருக்கு ஒரு தொழிலில் நிச்சயம் இருப்பர், அல்லது தனியார் துறை பள்ளியில் ஆசிரியராகவாவது தொழில் செய்வர்.

வியாழன் 8

குரு மகரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அறிவாற்றல் குறைந்திருப்பார்கள், அளவோடு செல்வமும், மகிழ்ச்சி ஏற்படும். குரு கடகத்தில் இருந்தால் சரீர நலம் ஏற்படும்.  தோற்றப்பொலிவிருக்கும், கல்விஅறிவு, இனிய சுபாவம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குரு 5, 9ல் இருந்தால் ஜாதகர் பிள்ளைகளை அதிகம் விரும்புவார்.

வியாழன் 7

குரு 9ம் இடத்தில் இருப்பின் நிர்வாக படிப்பில் நாட்டம் ஏற்படும். வேதம், சாஸ்திரம் போன்ற கல்வி துறைகளிலும் தேர்ச்சி உண்டாகும். குரு பலமாக 5ல் இருந்தால் அறிவாளியாகவும், நல்ல கல்வியும், உன்னதமான ஸ்தானத்தை வகிப்பர். குருவும், சந்திரனும் கூடி 2ம் இடத்தில் இருக்க 9ம் வீட்டோன் அவர்களைப் பார்க்க, இந்த அமைப்புடைய ஜாதகர், சீரும், சிறப்பும் பெற்று வாழ்வர். குரு,சனி, கேது மூவருமே வேத, வேதாந்தங்களை சத்தியத்தின் தத்துவத்திற்கு ஆதார பூர்வமாகத்திகழ்கின்றனர்.

வியாழன் 6

குரு மேஷத்தில் இருந்தால் குடும்பநலமுண்டாகும், உடல்வலு இருக்கும் ராணுவத்தலைமை தாங்கக்கூடும், ஒரு ஸ்தாபனத்தில் தலைமை தாங்ககூடும். குரு தனபாவத்தின் அதிபதி இருவரும் 1,2,4,7,10 ஆகிய ஸ்தானத்தை அடைந்திருந்தால் சகல சம்பத்தும் நிறைந்தவராவர். குரு தனுசில் அல்லது மீனத்தினருக்காகவும் அது லக்னமாக அமையவும் அங்கு செவ்வாயும் சந்திரனும் கூடி இருக்கும் பொழுது பிறந்தவர் சிறந்த செல்வம் பெற்றவர். குருவும் சூரியனும் இணைந்து இருப்பின் குறிப்பிட்ட ஜாதகர் பெற்றோரை விட சீரும் சிறப்புமாக இருப்பர். பொருட் சேர்க்கை பாராட்டு புகழும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 39

நான் வலிமையுடையவன்  எல்லையற்ற ஆற்றலை கொண்டவன் என்ற நினைவும் அதை தொடர்ந்து கடினமான முயற்சிக்கும் குணமும் நமக்கு வேண்டும் இவைகளை நாம் பெற்ற இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் சோகமோ, வருத்தமோ, துன்பமோ அடையமாட்டோம் நம்மிடம் இருக்கும் பல விதமான ஆயுதங்களில் மிக முக்கியமான சிலதை பட்டியல் இட்டால் அது மனநலம், அறிவின் தீட்ஷண்யம், விவேகம், பொறுமை, நேர்மை, வீரம், அன்பு, கருணை இரக்கம் இப்படிப்பட்ட ஆயுதங்களின் துணை நாம் நம்மை எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 38

இந்த பூமியில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற கனவிலும் அந்த கனவு மெய்பட வேண்டும் என்ற பேராரர்வத்துடனேயே இருக்கிறது. ஆனால் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத போது , வாய்ப்புகள் சரியாய் அமையாத போது வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்தாத போது மிகுந்த ஏமாற்றத்திற்க்கும் துக்கத்திற்கும் மனிதன் ஆளாகிறான் இதிலிருந்து மீள ஒரே வழி தான் உள்ளது அது  விவேகானந்தர் சொன்னது தான்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 37

 நமக்கு நமது செயல் ஊக்கத்திற்குண்டான சக்தியை குறைக்காமல் பாதுகாக்கும் குறிக்கோள் நிறைவேறவில்லையென்றாலும் மிகப்பெரிய சோகத்தின் பிடியில் சிக்கமாட்டோம் என்ன கொஞ்சம் சந்தோஷத்தின் அளவு மட்டும் குறைந்து இருக்கும் அத்தனை தான். நம்மை ஏமாற்றத்தில் இருந்து காக்க உள்ள வழிமுறைகளில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 36

எந்த ஒரு குறிக்கோளை கொண்டிருந்தாலும் அதற்கு இணையான, மாற்றான ஒன்றை எப்போதும் சிந்தித்து செயல்படுத்த தயராக இருக்க வேண்டும் இந்த சூட்சுமம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருந்து காக்கும் அதனால் நம்முடைய சோகத்தின் அளவும் குறையும் ஒரு குறிக்கோள் மட்டுமே நாம் கொண்டிருந்து எதிர்பாராவிதமாக நம்முடைய அணுகுமுறையில் உள்ள ஏதாவது தவறினால் அந்த குறிக்கோளை அடைய முடியாவிட்டால் நாம் மனதளவில் வாங்கும்  பின்னடைவுகள் நமது ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அழித்துவிடும் அதற்கு முன் நாம் பெற்ற அத்தனை…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 35

 காலத்தின் ஓட்டத்தில் பருவங்கள் மாறுவது போல மனிதனின் வாழ்க்கை பயணத்திலும் சூழ்நிலைகள் அறிவு, அனுபவம் காரணமாக பல பருவங்களை மனிதன் கடக்கின்றான். ஒவ்வொரு பருவத்திலும் விருப்பு, வெறுப்புகள் ஆசை, நிராசைகள் மாறிக்கொண்டேயிருப்பதை நாம் காணலாம் இதிலிருந்து, நாம் புரிந்து கொள்ளவேண்டியது மாறுதல் நிலையானது அந்த மாறுதலில் நமக்கு பிடித்த மாறுதலை உருவாக்க உண்டான யுக்தியே நான் முன்னமே சொன்ன கற்பனா சக்தி, இந்த கற்பனா சக்தியின்  துணையை சரியானபடி புரிந்து அதை செயல்படுத்தும் வழி வகைகளையும் நன்கு…

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 20

பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 19

அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை தவிர  ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 18

வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களுக்கு நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம் அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 17

நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 16

எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும். ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை .

சினிமாவில்

சினிமாவில் குளோசப், லாங்ஷாட், ஃபேட் இன் ஃபேட் அவுட், கிராஸ்கட் போன்ற பல தொழில் நட்பங்களை அறிமுகம் செய்தவர் கிரிஃபித் என்ற அமெரிக்கர், இப்புதுமைகள் தோன்றி 100 வருடங்கள் ஆகின்றன

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 4

வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர். இடையில் தரகர்கள் ஆசைகாட்டி அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர் மக்களும் ஏமாந்தனர் அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர் மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர். அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 3

அரசாங்கம், வசதியுள்ளவர்கள் மக்களுக்கு உணவு, உடை _கொடுத்து உதவினார்கள். வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்ச நிவாரண பணிகளில் ஒன்றாக ‘ பக்கிங்காம்’ கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 2

இந்த தண்டனையைப் பற்றி விசாரிக்க 1854ல் சித்திரவதை விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.  அதனுடைய விவாதத்தால் அரசாங்கம் தண்டனையை கொடுக்கக்கூடாது என்று அறிவித்தது 1876 – 78 – ம் ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.  வட ஆற்காட்டில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் காட்டுக் கீரைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள்.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 1

தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது. அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம். அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர் தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால் வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள்.  இது பற்றி அரசாங்கத்துக்கு…