சுந்தர யோக சிகிச்சை முறை 73

உடலை வனப்புறச் செய்கிறது. ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது. ஆயுளை அதிகரிக்கின்றது. புலன்களை சுத்தம் செய்கிறது. மூளையை அபிவிருத்தி செய்கிறது. நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து, வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது. காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 72

உயிர்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீர்ய நிலையில் வைக்கிறது. ரத்தவோட்டத்தை சுறுசுறுப்பாக்கி, அசுத்தத்தை எளிதாக முற்றிலும் போக்குகிறது. ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. நோய் கிருமிகளைக்கொன்று, உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை, உன்னதம் பெற உதவுகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 4

 பகவான் வியாஸர் தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார், வேதத்தில்  இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ), மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ). அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே, அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 3

நாம் நாள்தோறும் கண்டனுபவிக்கும் உலகம் வியவகாரத்தில் உண்மையாகத் தோன்றினாலும் அடுத்த நொடியில் பொய்த்துப் போவதால் அது இருப்பில்லாத கனவுலகம் போன்றதேயாகின்றது. ஞானத்திற்கும் கருமத்திற்குமிடையே உள்ள வேற்றுமை மலை போன்று அசைக்க முடியாதது.

சந்தோஷம் என்பது  24

ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம்  சாத்தியமே  எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?

சந்தோஷம் என்பது  23

இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி  இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.  பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…

சந்தோஷம் என்பது  22

அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.  மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 12

3 – ல் சுக்கிரன் நிற்க, 3 – க்குடையவர் சுக்கிரன் வீட்டில் நிற்க, முத்து, ரத்தினம், மாலையணியும் பொன் போன்ற தேகம் உடையவர். குரு 3 – இல் நிற்க, புதனுடன் 3 – க்குடையவர் கூடி பகை பெற்று செவ்வாய் பார்க்க ரத்தினமாலை அணிவார். லக்கினாதிபதியுடன் 2 – க்குடையவர் கூடி கேந்திரமடைய புதன் பார்க்க அழகான உடல், ரத்தினமாலை அணிவான். சந்திரன் நின்ற ராசிக்கு 2 – க்குடையவர் 12 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 11

சனி, சூரியன் சேர்க்கையை 3 – க்குடையவர் பார்க்க 12 – க்குடையவர் சேர பல சகோதரர்கள் இருந்தும் ஒற்றுமை குறையும். மனபேதங்கள் காணும். உயிர் சேதங்கள் ஏற்படும். 3 – க்குடையவரும், சனியும், கூடி 12 – ல் நிற்க, 8 – க்குடையவர் 3 – ல் நிற்க, சகோதரர்களைப் பெற்ற தாய்க்கு வீண் வேதனையும் பாவமும் தரும் சகோதரர்களாக வருவார்கள்.  3, 10 – க்குடையவர்கள்ள கூடி 8 – ல் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 10

 3 – க்குடையவரும், செவ்வாயும், சனி, மூவரும் சேர்ந்து 7 – இல் நிற்க ஒரு சகோதரர் இருந்தும் பயன் இல்லை. செவ்வாய், 3 – க்குடையவருடன் கூடி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய, 3 – ஆமிடம் சூன்யமாக இருக்க, சொப்பனத்திலும் சகோதரர் இல்லை.  3 – இல் ராகு நிற்க, 5 – ஆம் இடம் சூனியமாக செவ்வாய் 3 – க்குடையவருடன் கூடி நிற்க, முன்னும், பின்னும் சகோதரம் இல்லை.…

சந்திரன் 5

சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது.  சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.

சந்திரன் 4

சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது.  சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  68

இதுவுமது …..  சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள்.  அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் …..  மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  67

சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது.  அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.  சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  66

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.  இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 2

விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை.  உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை.  ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன.  எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 1

எப்படியோ மனிதப்பிறவியை, அதிலும் புருஷ சரீரத்தை, அடைந்து வேதத்தையும் கற்றுணர்ந்து அதன் பின்னும், ஒருவன் மூடனாய் முக்திக்கு முயலாவிட்டால், இவன் தற்கொலை செய்து கொண்டவனுக் கொப்பாகிறான். ஏனெனில் பொய்யான பொருள்களைப் பற்றிக் கொண்டு அவன் தன்னை மாய்த்துக் கொள்ளுகிறான். முக்திக்குதவும் சாதனங்களுள் பக்திதான் தலைசிறந்தது.  தன்னுடைய உண்மை நிலையில் நாட்டமே பக்தியெனப்படும்

காயப்படுத்தாமல்

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…

சுந்தர யோக சிகிச்சை முறை 71

உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன், நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ, யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது?  இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன? இந்த கேள்விகளுக்கு விபரமாக யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும். இந்தக்கவசத்தின் சக்தியையும், இது வேலை செய்யும் முறைகளையும் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 70

ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது.  இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை, உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது.  இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது.  வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத‍, நோய், தடுக்கும்.  சீர்திருத்தம், அமோக  சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும்.  அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 69

 ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன.  இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன.  ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல.  லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை. இதில் உணவு தயாரிக்கும் முறைகள்  சேர்க்கப்படும் பொருள்கள், நோய் பரவக் காரணமாகின்றன.  பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய, ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.

அபான வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும். பலன்கள்:- 1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும். 4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும். 5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும். 6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும். 7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள்…

நாஷக் முத்திரை

சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும். 2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும். 3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும். 4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும். 5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.  வயதானவர்கள், ஆசனநிலையில் அமர…

சூரிய முத்திரை:

மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 3.தொப்பை குறையும்.       4.கொழுப்பை குறைக்கும் 5.உடல் பருமன் குறையும்      6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும் 7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும்   8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 9.பார்வைத் திறன் அதிகரிக்கும்     10.களைப்பைப் போக்கும். 11.ஆஸ்துமா,பீனிசம்…

அடக்குமுறையும் எதிர்ப்பும் வரவேற்கத் தக்கவையே

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.  

கரடு முரடான பாதை

இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.

உன் வினை உன்னைச் சுடும்

பகை, பொறாமை ஆகியவற்றை  நீ  வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து  எப்போதும் விலகியிரு.

சண்டையிடுவதிலும், குறை சொல்வதும் வீண்

சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 9

4, 9 – க்குடையவர்கள் 11 – ல் நிற்க, 11 – க்குடையவர், 3 – ல் நிற்க, சந்திரன் செவ்வாய்க்கு கேந்திரம் அடைய, 7 – க்குடையவர் பார்க்க, பேதமில்லாத துணைவர் உண்டு. சந்திரனுக்கும், லக்கினத்திற்கும், 3 – க்குடையவர்கள் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, செவ்வாய் திரிகோணமடைய புண்ணிய சகோதரர்கள் உண்டு. 3 – ல் புதன் நிற்க, 12 – ல் சனி நிற்க, 5 – ல் சூரியன் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 8

7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க, 3 – க்குடையவர் கேந்திரமடைய குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு. செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து, அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய 3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு.  3 – க்குடையவர் திரிகோணமடைய, செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 7

 3 – இல் பாவர் இருக்க பாவர் பார்க்க, பிறந்த ஜாதகங்கள் எவ்வகையினாலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளுவான். பிறரின் பொருளை அபகரிப்பான். தவறான காரியங்களில் ஈடுபடுவான். தாய்க்கும், தந்தைக்கும் ஆபத்துக்களைத் தருபவன்.  3 – க்குரியவர், 9 – க்குரியவருடன் சேர்ந்து பாவரால் பார்க்கப்பட்டு இருந்தால், தாய், தந்தையை துன்புறுத்துவான். உடன் பிறப்புக்களுக்கு ஆகாதவன். காம இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவான். 3 – க்குரியவர், 8 – க்குரியவர், 7 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 6

3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று 8, 12 – லிருந்து 8 – க்குரியவருடன் சேர்ந்திருந்தால் மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் உடன் பிறப்பு பிரிவினை, குடும்பம் பிரிந்து வாழுதல் குடும்பத்தில் தற்கொலை நிகழ்ச்சிகள் நடக்கும்.  3 – இல் 7 – க்குரியவர், 3 – க்குரியவர் 12 – லிருந்து, 10 – க்குரியவர் சாரம் பெற்று இருந்தாலும், அக் கிரக சாரத்தை பெற்று கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், இளம் வயதிலேயே பெண்…

சந்திரன் 2

சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க.  ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.

சந்திரன் 1

                     கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.

சந்தோஷம் என்பது  21

அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.  அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.

சந்தோஷம் என்பது 20

நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…

சந்தோஷம் என்பது 19

பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம்.  விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்   ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள்  நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே   ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 68

பசிக்கும் பொழுது உண்ணவேண்டும்.  நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன?  நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன.  தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 67

மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.  விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன.  வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.  இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும்.  சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன.  விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை.  வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 66

நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே!  கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம்.  மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.    

துாய்மைபபடுத்திக் கொள்

நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.

உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்

துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தாதே

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  65

காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.  அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள்  சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  64

மேலும் காலமானது  வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி  பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது  நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது.  இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர  வேறு கிடையாது.  ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 12

ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 11

எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள் பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில் மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண். காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன் அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும். புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால் நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.

ஆதி. 9 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம்

உண்மையில் அப்படி யாரும் இல்லை.   அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன  அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை  ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை  நம்…

ஆ தி. 8 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 2

இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம். பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம். உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை காரணம் கடவுளை காணமுடியாது. நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம் பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம் இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை

ஆதி.7  லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 1

கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.  எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு கடவுளும் தப்பவில்லை.   பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால் சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.   சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.  சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.  லோகாயதவாதிகளின் தத்துவம் புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே…

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்  மதுரை மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர் திருத்தலம். தனி சன்னிதியில் 16 கரங்களுடன் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் திருக்கோலம், பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் திவ்விய தரிசன காட்சியாகும். இவரது 16 கரங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. இவரது பின்புறம் நரசிம்மர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்த சக்கரத்தில் உள்ள 6 வட்டங்களில் 154 எழுத்துக்களும், 48 இறைவன் திருவுருவங்களும் அமைந்துள்ளன. இவரை தரிசனம் செய்வதால் பில்லி, சூனியம், ஏவல், கொடும்…

108 திவ்யதேசங்களில்

108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

சூன்ய முத்திரை

நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் :- இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும். பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும். காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம் மற்றவர்கள்…

வாயு முத்திரை:-

ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  பலன்கள்: வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.    தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும். மூட்டுவலி குணமாகும்.    குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

பிராண முத்திரை:

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும்.    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும்.   நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் களைப்பு நீங்கும்     நரம்புத் தளர்ச்சி நீங்கும்    பக்கவாதம் குணமாகும்   நினைவாற்றல் அதிகரிக்கும் ஆஸ்துமா,…

தனஞ்சேருவது

ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள்  இவைகள் கிடைக்கும்.  

சந்தோஷம் என்பது  18

மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன்  என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய  விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…

சந்தோஷம் என்பது 17

இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது.  மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.  அதனால் மனிதனும் பணம் மேலும்  பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.

சந்தோஷம் என்பது 16

அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது.  மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது. 

நமது விதியை நாமே நிர்ணயிக்கிறாம்

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள். அல்லது புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள். விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டு துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை, பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை

நமது நிலைக்கு நாமே காரணம்

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம்இருக்க வேண்டும் என்று விரும்புகிறேhமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடையமுன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால்உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆற்றலை வீணாக்காதே

சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை. நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் * நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக,…

ஆதி.6        

உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம்.  இதோடு, உபநிடதத்துவத்தை  நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…

ஆதி.5        

உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய  செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.  இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …

ஆதி.4        

என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும் மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.  இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால் வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும் முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது…

ஆதி.3

உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால் உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.  இது முரண்பாடான கருத்தாக தோன்றும் காரணம் முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று விஷயம் என்னவென்றால் வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம், உபநிடத்தில்…

ஒவ்வொரு கெட்ட குணங்களும்

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும் போது உணவருந்துங்கள்.

சூரியன் 8

சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…

சூரியன் 7

சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…

வியான முத்திரை:-

வியான முத்திரை:- ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:_ தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும். தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும். இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும். தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும். கண் எரிச்சல் உள்ளங்கை…

வருண முத்திரை

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும். சிறுநீரக கோளாறுகள் அகலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் ரத்த ஓட்டம் சீராகும் தாகம் குறையும் சதைப்பிடிப்பு நீங்கும் குடல் அழற்சி நீங்கும் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும். அம்மை நோய்…

பிருத்திவி முத்திரை

பிருத்திவி முத்திரை:- மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும். முடிஉதிர்வைப் போக்கும். உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும். சிந்தனைத் தெளிவடையும். ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லை நீங்கும். உடல் வெப்பநிலை சமனடையும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 65

பிணி (நோய்) தடுக்கும் கவசம் எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும், தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது.  இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம், இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது. இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது. மேலும் பெரும்பாலோர் வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 64

                யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத!                 யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ.                 தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்!                 ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும்.  இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும்.  எப்பிணியும் துக்கமே,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 10

காரணமாகிற மண்ணைப்பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவது போல் பிரம்மத்தையறிந்தால்  உலகம் அறியப்பட்டதாகிறது. அனைத்தையும், பிரம்மமென்று அறிந்து கொண்ட ஞானிகளுக்கு தியானிப்பதற்கோ தியானிக்காமலிருப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ, செய்யமலிருப்பதற்கோ என்ன இருக்கிறது?

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 9

ஆகையால் நீ பிரம்மம்.  நான் பிரம்மம் அல்லன் என்பது மாயை.  மாயையினின்று உதிப்பது வேற்றுமை.  எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே வேர்.  பிரம்மம் ( மனதால் ) அறிய முடியாததென்றாலும், ஸ்வயம் பிரகாசமாயிருப்பதால் அனுபவிக்க முடியாததன்று. ( ஸத்யம் ஞானம் ஆனந்தம் ) பிரம்மும், ஸத்தியமும், ஞானமும் எல்லையற்றதாகும் என்ற வேதாந்த வாக்கியம் அதை விளக்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 8

 ஒரு பானைக்கும் மண்ணிற்கும் காரிய காரண சம்பந்தம் எப்பொழுதும் எப்படி இருக்கிறதோ அப்படியே வியவஹார உலகிற்கும், பிரம்மத்திற்கும் அதே சம்பந்தம் இருக்கிறது, இது சுருதியாலும், யுக்தியாலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பானை முதலிய மண்ணாலான பாண்டங்கள் எப்படி மக்கள் அறியாமற் போனாலும் மண்ணேயாகுமோ அப்படியே மக்கள் அறியாமற்போனாலும் அவர்கள் செய்யும் செயலெல்லாம் பிரம்மத்தினிடமே பிரம்மத்தின் மூலமே நிகழ்கின்றது.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 5

3 – க்குரியவர் பலம் பெற்று 3 – இல், ராகு 8, 11 – க்குரியவரின் தொடர்பை பெற்று சுபரால் பார்க்கக்பபட்டால், இவர்களின் தசாபுத்தி அந்திர காலங்களில் எடுத்த காரியம் வெற்றி திடீர் தனப்பிராப்தி, ரேஸ் பந்தயம், சூதாட்டங்களில் லாட்டரி போன்றவகைளில் ஆதாயம் கிட்டும். 3 – இல் கேது அமர்ந்து லக்கினாதிபதி, குரு 9 – ஆம்பாவாதிபதி தொடர்பு கிடைத்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றமடைவர். உடன் பிறப்புக்களால் நன்மை இல்லை. மாமனார் வகை ஆதாயம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 4

3 –  ஆம் பாவதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்கு பலம் பெற்ற கிரகம் நவாம்சப்படி மூத்தவர் எண்ணிக்கை ஆண் கிரகம் ஆனால் ஆண், பெண் கிரகங்களால் பெண், இதில் அலிக்கிரகங்களை தள்ளிவிட வேண்டும் எண்ணிக்கையில் மட்டும்.  3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி, ராகு, குருவின் தொடர்பை பெற்று, 3 –  ஆமிடத்தை பாவர்கள் தீண்டினால் பல மாதர்களின் தொடர்பு கிடைத்துக்கொண்டே இருக்கும். இளம் வயது உள்ள பெண்களின் தொடர்பு அடிக்கடி கிடைக்கப்பெற்று இன்பமாக…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

பலம் பெற்ற 3 – ஆம் பாவாதிபதியோ, செவ்வாயோ, பலம் பெற்று மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளிலிருந்தால் அந்த ராசியை முதலாக கொண்டு, நவாம்சத்தில் அவர் உள்ள வீடுவரை எண்ணி வரும் எண்ணிக்கையை சொல்ல வேண்டும். மேற்படி கிரகம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியிலிருந்தால், அதற்கு 7 – ஆம் ராசியை முதலாக வைத்து, நவாம்சத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அது வரை எண்ணி உடன் பிறப்புக்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.…

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர் 

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒருவேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும்…

உன் கனவை நிறைவேற்று 

ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று  மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க…

பாவம் போக்க

நம் முகத்தை முழுமையாக புருவ மையத்தில் கொண்டு வந்து, ஓடும் கலை வழியாக_காற்றை இழுத்து 3 மாத்திரை நிறுத்தி அடைத்த பாகம் வழியாக நிதானமாக விடவும். பின்பு மறுபடியும் புருவமையத்தில் நம் முகத்தைக் கொண்டு வந்து கண்களை திறக்கவும். _ பலன் — கண், காது , வாய், மூக்கால் செய்த பாவம் போகும். _

கீழாநெல்லிவேர்

கீழாநெல்லிவேர், திங்கட்கிழமை, சந்திரகலையில் வீட்டில் வைத்து இஷ்டதெய்வ படம் முன் வாசிசெய்ய காற்றுபேசும். தெய்வம் வீட்டில் நடமாடும்

ஆகாய முத்திரை:-

பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். 1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்; 3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும். 4.உடல் கழிவுகள் வெளியேறும். 5.ஒற்றைத் தலைவலி குணமாகும். 6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும். 7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும். 8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும். 10.உடலில் ஜீவகாந்த ஆற்றல்…

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:

  கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.மனதை ஒருநிலைப்படுத்தும். 2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். 3.ஞாபக சக்தி அதிகாரிக்கும். 4.மனநோய், மனக்குழப்பம் தீரும். 5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும். 6.தலைவலி நீங்கும். 7.தூக்கமின்மை குணமாகும். 8.கவலை, கோபம் ஆகியவை விலகும். 9.தன்னம்பிக்கை அதிகரிக்கும். 10.மன அமைதி உண்டாகும். 11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும். 12 இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.  இம்முத்திரையை 20…

அஞ்சலி முத்திரை:-

நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும். இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.  பலன்கள் :- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும். உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும். உடல் முழுவதும் பிராண சக்தி…

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும்.  ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒற்றுமை

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது.   சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள்.  இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார்.  நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்.  நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்.  அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

உண்மைய ஒத்துக்கறியா?”

 “நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?” “ஐயா ஒத்துக்கறேன்யா!” “அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?” “ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!” “உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?” “ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க… ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி…

தலையில் சக்கரம் உள்ள நந்தியம்பெருமான்

வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும், ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை. நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

தெய்வம் ஒன்று.. வடிவம் மூன்று

கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமான் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதிகாலை தொடங்கி காலை 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

விடாமுயற்சியே வெற்றி தரும்

வெற்றி பெறுவதற்கு நிறைந்த  விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று  சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

பசு மனிதனாகி விடாது

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  63

பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.  காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது. அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின் உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள் மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது. வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில் வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  62 

காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம் என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான் பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள். பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான் திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால் விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது.  தானியங்கள் பலிக்கின்றது. ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும் மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும் உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும் தேவேந்திரர்கள் பிறந்து…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  2

 3 – க்குரியவர் பரிவர்த்தனை பெற்று, செவ்வாய் பலம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டால், 6, 7 உடன் பிறப்புக்கள் உண்டு. உடன் பிறப்புக்கள் ஒருவருக்கொருவர் முன்னேறுவர். ஒற்றுமையில் குறைவு இருக்காது. சொத்துக்கள் சேரும். இவர்களுக்கு வரும் மனைவிமார்களால் குடும்பம் பிளவுபடும்.  3 – ஆம் பாவாதிபதி எத்தனை அம்சம் கடந்து உள்ளாரோ, அத்தனை உடன்  பிறப்புக்கள் உண்டு. 3 – ஆம் பாவாதிபதி வர்க்கோத்தம், உச்சம் பெற்றிருந்தால், எத்தனை அம்சம் கடந்துள்ளாரோ அதற்கு இரு மடங்கு சகோதர,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்

3 – க்குரியவர், 7, 8 – லிருந்து, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றால் அரசாங்க தொல்லைகளால் அவதி, பண விரயம், அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுதல், காம இச்சையின் விளைவால் பல துர்க்காரியங்களை செய்தல், பல பெண்களின் தொடர்பு ஏற்படும். 3 – க்குடையவர், 11 – ல் செவ்வாயின் தொடர்பை பெற்றால் ஆண், பெண் உடன் பிறப்புகள் உண்டு. இளைய சகோதரர்களால் லாபம், சுகம் அனுபவிப்போன். அன்னியவர்களின் சகாயம் கிடைக்கும். 3 –…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  40

சனி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய சந்திரனுக்கு 10 – ல் 8 – க்குடையவர் நிற்க, ஊமை 5 – ல் குரு நிற்க, 11 – ல் சந்திரன் நிற்க காவியங்கள் செய்வார். 2 – க்குடையவரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ஊமை. 6 – க்குடையவர், சுக்கிரன், புதனும் கூடி 6, 8, – ல் நிற்க 8, 2 –…

சந்தோஷம் என்பது 15

மனிதர்கள்  சிந்தனையில் அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால் பணம் என்பது தான் விடையாக வரும் அதுவும் பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்று உறுதியாக சொல்ல முடியும் இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் மனிதன் நிகழ்காலத்தில் வாழுவதில்லை.

சந்தோஷம் என்பது 14

ஆனால் வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒரு கட்டத்தில் நின்று திரும்பி பார்க்கும் போது அதாவது இந்த சூழ்நிலை சாதாரண மனிதரில் இருந்து மிக உயர்ந்த வெற்றி பெற்ற மனிதர் வரை அனைவருக்கும் ஒரு கணமாவது தோன்றியிருக்கும் என்னென்ன இழந்துவிட்டோம் என்றும் எதற்கு வேண்டி இத்தனை ஓட்டம் என்றும். இதை பட்டியல் இட வேண்டியது உங்கள் வேலை ஏனென்றால்  எதை, எதை இழந்தீர்கள்  எதை, எதை இழந்ததாக நினைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

சந்தோஷம் என்பது 13

நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்  எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் அதிகமாக உழைப்பது, ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது, வெற்றிக்கு வேண்டி ஊண், உறக்கமின்றி செயல்படுவது, பணம் சம்பாதிப்பது , பதவியை அடைய முயற்சிப்பது  இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால் ஒரே ஒரு பதில்தான் சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான் வேறு எதுவாக இருக்க முடியும்.

ஓட்டமட காளியம்மன்

ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள். ஒவ்வொரு முறையும், இப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக பாலங்கள், வீடுகள் கட்ட ஜல்லி மற்றும் செங்கற்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள், அவற்றிலிருந்து சிறுபகுதியை காணிக்கையாக அம்மனிடம் வைத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களின் பயணமும், கட்டுமானத் தொழிலும் விபத்துகளோ, தடைகளோ எதுவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 63

 சாந்தி யோகம் என்ற என்நூலைப் படித்தால், கருத்து நன்கு விளங்கும், ருத்ரம், சமகம் முதலிய வேதாந்த மந்திரங்கள், சாந்தி பஞ்சகம், அஷ்டாங்க யோகம் என்ற எல்லா மன சிகிச்சைகளும், நாம் இவைகளில் பெற்றுள்ள தேர்ச்சியையும் இவைகளின் அவசியத்தையும் புலப்படுத்துகின்றன. நம் மேதாவிகள் உடல்பிணி, மனப்பிணி என்பவைக்கு மேலாக பவப்பிணி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். சுகம் சாந்தியாக நிலைக்கும்.  தன்மைக்கு விரோதமான அவித்தை பிறப்பிறப்புப் பிணியைப் போக்கும் சிகிச்சையை யோகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். எனவே உடல் பிணி மனப்பிணி, மனப்பிணி,…

சுந்தர யோக சிகிச்சை முறை 62

 இன்னும் இரண்டு சுலோகங்கள் இந்த விசாரணையில் கலக்க வேண்டி யிருக்கிறது.  உடல்பிணி மட்டும் கவனித்தோம்.  உடல்பிணி, மனப்பிணியை உண்டாக்கும். மனப்பிணி, உடல்பிணியை உண்டாக்கும். தற்காலப் பிணி, விஞ்ஞான மேதாவிகள் மேல்நாட்டு ஆராய்ச்சி சிகரத்திலிருந்து முறையிடுகின்றனர்.  மன சிகிச்சை, அதாவது, சைகியாட்ரி (  PSYCHIATRY OR PSYCHOANALYSIS ) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இவர் கூற்றைக் கேட்டு, மருந்துக் கடலில் மிதக்கும் நம் மக்களுக்கு, இதைப் பற்றி ஏதோ உளறவும், விசாரிக்கவும், சிறிது ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த மன சிகிச்சை  யோகத்தின் …

சுந்தர யோக சிகிச்சை முறை 61

யோகியார்- யோகம் யாருக்குக் கிட்டுகிறது? என்ற கேள்விகளுக்குப் பரமாத்மா சொன்ன ” யுக்தம் ” பிணைந்ததான உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களை ஆராய்ந்தோம். இங்கு நோய் தடுத்தல் என்று விசாரணை  செய்யும் பொழுது, மேல் வறிய ஆராய்ச்சிகளுக்கு இடம் ஏது என்று வினவலாம்.  பரமாத்மா துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது எனக்கூறுகிறார்.  யோகத்தால் பிணியைத் தடுத்தலே நாம் எடுத்த விஷயமாகும்.  பிணி என்பது துக்கத்தின் ஒரு தொகுதி.  பிணி வந்தபின் அதைப்போக்கும்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 7

 பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல.   உண்மையனுபவத்தை அடைந்தபின் ஒருவன் உலகை அத்வீதீயப் பிரம்மமாகவே காண்கிறான். ஒரு பானையை எண்ணும் பொழுது மண்ணினுடைய ஞாபகம் நமக்கு தானே எழுவது போல், வியாவரிகப் பிரபஞ்சத்தை எண்ணும்பொழுது நமக்கு பிரம்மத்தின் எண்ணம் உதிக்கிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 6

உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும் ( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று. உலகம் பிரம்மமே, பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை. பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால் அது கானல் நீரைப் போல் பொய்யானது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 5

ஆதியந்தமற்ற பிரம்மம் அவித்தையின் நீக்கத்தாலன்றி வேறெந்த ஸாதனத்தாலும் அடையப்படமாட்டாது. எது ஆத்மாவோ அதுவே நிகரற்றதும் அளவு கடந்ததும் உண்மைப் பொருளுமான பிரம்மம் என்று அறிய வேண்டும். அது ( ப்ருஹத் ) பெரிதாயிருப்பதால் பிரம்மம் என்று கூறப்படுகிறது.

சூரியன் 6

சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள். சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும். சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர், மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார்.  மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர். சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும் அதேபோல் மனவிக்கும்…

சூரியன் 5

சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும். சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார்.  வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும். சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது. சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும். சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.…

சூரியன் 4

சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும், கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார். சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது. சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது.  மனதில் உறுதி இராது. 1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக்…

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

அதிசய முருகர்

தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப் பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  4

சூரியனையும், சந்திரனையும் போன்றே ஒளி மண்டலங்கள் எதனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றனவோ, ஆனால் எது அவற்றின் ஒளியால் பிரகாசிக்கப்படமாட்டாதோ, மேலும் அனைத்துமே எதனால் பிரகாசிக்கின்றதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. தீயானது ஒரு இரும்பு குண்டை உள்ளும், புறமும் வியாபித்து எப்படித் தனது சக்தியால் பிரகாசிக்குமோ அப்படியே பரப்பிரம்மம் உலகனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்து தனது சக்தியால் பிரகாசிக்கிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  3

எல்லாப் பொருள்களும் அதில் பிணைக்கப்பட்டுள்ளன. எல்லாச் செயல்களும் அந்த அறிவுடன் தொடர்புள்ளன, பாலில் எங்கும் நெய் வியாபித்திருப்பது போல் பிரம்மம் உலகில் எங்கும் வியாபித்திருக்கிறது. ஸ்தூலமாயில்லாமலும் ஸூக்ஷ்மமாயில்லாமலும், நீளமாயில்லாமலும், குட்டையாயில்லாமலும், பிறப்பில்லாமலும், தேய்வில்லாமலும், வடிவும் குணமும் வண்ணமும் இல்லாமலும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

இல்லை என்று சொல்லாதே

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ

உங்களை நீங்களே நம்புங்கள் 

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை – இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் (தேவ தேவியர்களிடத்தும்) மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதிமோட்சமில்லை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  61

கால பிரசம்ஸை …..  காலமானது  சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது.  தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  60

கால ஞானம்              இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.  சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…

சுந்தர யோக சிகிச்சை முறை 60

கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ   நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் .  இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம். மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது. அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.                       

சுந்தர யோக சிகிச்சை முறை 59

ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும் உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும், சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம். மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல் உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும்.  சுத்தமான படுக்கையில் தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம். விழிப்பு– மிதம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 58

உழைப்பு — மிதம் –உடல் சக்தி ஏற்கும்.  வாழ்வுக்கு அவசியமான  உழைப்பே மிதம்.  உடல் தாங்காத அதிக உழைப்பு யுக்தமாகாது. ஹிதம் — பயன் தரக்கூடிய கெடுதலை விளைவிக்காத, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான உழைப்பே ஹிதம். மேத்யம் — உழைப்பு அல்லது செயல், எவ்விதத்திலும் சுத்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அசுத்தச் செயல் துக்கத்தை விளைவிக்கும்.  சுத்தமே, மங்களமே யதார்த்தைத்க் கொடுப்பதே மேத்யம் – யுக்தம். தூக்கம்–மிதம்–தூங்குவது அவசியம்.  ஆனால் அளவில்லாது உறங்கிக் கம்பளிக்கடியில் பாதி வாழ்வைக் கழிப்பது…

சந்தோஷம் என்பது 12

 தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல் இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது  நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள் மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.  நாம் செய்வது நமக்கு  தெளிவாக தெரிந்தால் போதும் அதில் நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.

சந்தோஷம் என்பது 11

உண்மையில் உறவு சிக்கல் என்பது நமக்கும் பிறருக்கும் உண்டான உறவு சிக்கல் அல்ல நமக்கும் – நமக்கும் உண்டான உறவு சிக்கலை இங்கு குறிப்பிடுகிறேன். நாமே நமக்குள் எத்தனை விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தால் மட்டுமே அதை சீர் செய்ய முடியும் செய்ய கூடாத விஷயத்தை  செய்ய நமக்குள் வரும் ஆர்வத்தைத்தான் நாமே நமக்குள்  முரண்படுதல் என்கிறேன்.

சந்தோஷம் என்பது 10

 இப்படி விஷயத்தை சிந்திக்கும்  போது அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை அதனால் நாம் புரிந்து கொள்ளலாம் அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.  கோபம் செயலற்றுவிட்டாலே அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்

சந்தோஷம் என்பது 9

உண்மையில் மார்க் வாங்குவது என்பது எது, எது சம்பந்தப்பட்ட விஷயம் என்று யோசித்தால் அதிக மார்க் வாங்க அதிகம் படிக்க வேண்டும், அதிகம் படித்ததை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும் நினைவில் வைத்ததை சரியாக நேரத்திற்கு நினைவுக்கு கொண்டு வரும் ஆற்றலும் வேண்டும் அது மட்டுமல்ல புரிந்துகொள்ளும் பக்குவமும் வேண்டும் எதையும் புரிந்து கொள்ளும் போது சுலபமாகிவிடும். அப்படி சுலபமானால் பரிட்சை சுலபமாகும் அதில் மார்க்கும் அதிகம் வரும்.

J கிருஷ்ணமூர்த்தி

வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் அமைப்புகள் அனைத்தும் உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன நீங்களும் இணங்க விரும்புவதால் அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது   J கிருஷ்ணமூர்த்தி   இது நிஜமா என்று அறியவேண்டுமானால் நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும் அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும் அப்படி எல்லோராலும் முடியுமா முடிந்தால் J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா தவறா என்பது தெரியவரும்

கல்யாண சுப்ரமணியர்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம்  108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும் 

அதிசய கருடன்

நாச்சியார் கோயிலில் கல் கருடன் சன்னிதி உள்ளது. ஒன்பது நாகங்கள் அவர் உடலில் இருப்பதால், நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஆகும். கல் கருடனே உத்ஸவத்தில் வலம் வருவார். அதன் எடையை ஆரம்பத்தில் 8,16,32,64 பேர்கள் வரை சுமப்பதும், திரும்ப கோயிலில் நுழைந்து கர்ப்பக்கிருஹம் செல்லும்பொழுது 64, 32, 16, 8 பேராகப் படிப்படியாகக் குறைந்து கடைசியாக நான்கு பட்டர்கள் மட்டும் சுமப்பதும் ஒரு அதிசயம் என்றால், கருடன் உத்ஸவத்தில் வீதிஉலா வரும் பொழுது கருடனுக்கு வியர்ப்பதும், பட்டர்கள்…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  39

சூரியனும், சந்திரனும் கூடி நட்பு உச்சமடைய 2 – ல் 4, 10 – க்குடையவர்கள் நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். லக்கினாதிபதியும், 4 – க்குடையவரும் கூடி 9 – ல் நிற்க, ராகு கூடி நிற்க, புதன் 6 – ல் நிற்க, குரு லக்கினத்திலிருந்து பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். 3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க விநோத…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 38

லக்கினாதிபதி சூரியனுடன் கூடி 5 – ல் நிற்க, லக்கினத்தை குரு பார்க்க கணிதத்தில் வல்லவர். சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்க்க மேற்படி பலன்.  4 – ல் குரு நின்று சனியைப் பார்க்க, புதன் லக்கினத்தில் நிற்க, 2 – ல் சூரியன், சுக்கிரன் கூட வாகடநூல் பண்டிதர் லக்கினத்திற்கு 4 – லிலும், சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சனி நிற்க மேற்படி பலன். 7, 6 – க்குடையவர்கள் கூடி 4 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  37

11 – ல் ,குரு இருந்து சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி பார்க்க  ஞானநூல் ஆசிரியர். 11 – ல் குரு இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன்  கல்வியில் தேர்ச்சி உள்ளவர். 11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரத்தன்மை உடையவர்.  4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36

லக்கினத்தில் குரு இருந்து, புதன், சந்திரன், சுக்கிரனைப் பார்க்க ஸ்திர லக்கினத்தில் ஜெனனமானவர் தனம். கல்வியில் சிறப்புடன் இருப்பார். லக்கினத்தில் குரு இருந்து கேது – சந்திரன் – செவ்வாய் – புதன் நால்வரையும் பார்க்க மேற்படி பலன்.  11 – ல்  சந்திரன், இருந்து சுக்கிரன், சூரியன், சனி, ராகு ஐவரையும் பார்கக கல்வி அறிவு உடையவர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  59

சப்த  பரீக்ஷ வாத தோஷ குறி …..  வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும். பித்த தோஷ குறி ……  பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும். கப தோஷ குறி …..  கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும். துவந்த தோஷ குறி …..  துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  58          

ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ …..  வாத தோஷத்தில் தேகத்தைப்  பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ …..  பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள்  நிறமாயும் அல்லது  சிகப்பு  நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ …..  கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ …..  துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் …..  சந்நிபாத தோஷத்தில் தேகமானது…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 3

கடவுளைக் காண வாக்குவாதம் உதவுமா ? ஆன்மீக அனுபவம் ஒன்றுதான் நமக்கு ஞானமாக அல்லது உண்மை மதமாக இருக்கிறது. ஆன்மாவைப் பற்றி காலங் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதால் அதை நாம் அறிய முடியாது. வெறும் கொள்கைகளைப் பேசுவதற்கும்  நாத்திகத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. வெளிச்சத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் எப்போதும் எனக்குச் சொந்தமாகிறது. ஓரு நாட்டைச் சென்று பார்த்தால் பிறகு அது உன்னுடையதாகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் சுய அனுபவத்தைப் பெறவேண்டும். ஆசிரியர் உனக்கு…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார்  2

அறிவு வேறு  உணர்வு வேறு உணர்வு என்பது ஒரு தளை. உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது. ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும். இதுதான் மாயை, கடவுள் நம்மைப் படைக்கிறார். நாம் கடவுளைப் படைக்கிறோம். இதுதான் மாயை. காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது. மரத்திலிருந்து விதை…