இயற்கை மருத்துவம் — 2
6) வாய்ப்புண், குடல் புண்களை குணமாக்கும் — மணத்தக்காளி கீரை 7) உடலை பொன்னிறமாக மாற்றும் — பொன்னாங்கண்ணி கீரை 8) மாரடைப்பு நீங்கும் — மாதுளம் பழம் 9) ரத்தத்தை சுத்தமாக்கும் — அருகம்புல் 10) கேன்சர் நோயை குணமாக்கும் — சீதா பழம்
Athma
6) வாய்ப்புண், குடல் புண்களை குணமாக்கும் — மணத்தக்காளி கீரை 7) உடலை பொன்னிறமாக மாற்றும் — பொன்னாங்கண்ணி கீரை 8) மாரடைப்பு நீங்கும் — மாதுளம் பழம் 9) ரத்தத்தை சுத்தமாக்கும் — அருகம்புல் 10) கேன்சர் நோயை குணமாக்கும் — சீதா பழம்
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் — நெல்லிக்கனி 2) இதயத்தை வலுப்படுத்த — செம்பருத்திப் பூ 3) மூட்டு வலியை போக்கும் — முடக்கத்தான் கீரை 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் — கற்பூரவல்லி (ஓமவல்லி) 5) நீரழிவு நோய் குணமாக்கும் — அரைக்கீரை
சுவாலவத மிருத்தியு நாடி லக்ஷணம் …… அஸ்தத்தில் நாடிகள் தங்கள் இடத்தைவிட்டு வேறு நடந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் இருதயத்தில் தீவிரமான உண்டாகி இருந்தாலும் அந்த புருஷன் அந்த எரிச்சல் அடங்குகிறதற்கு முன்பாகவே ஏகுவான். அரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்டமூலத்தில் நடக்கும் நாடிகள் சுவஸ்தானத்தை விட்டு இரண்டரை அங்கலத்திற்கு கீழாக, நடுவிரல், பவித்திரவிரல் இந்த விரல்களில் நாடி காட்டிக்கொண்டிருந்தால் அந்த புருஷன் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான். வேறு விதம் ….. நாடிகள் அங்குஷ்ட மூலத்தை…
சப்ததிவசாந்தரமிருத்யு நாடி ….. தேகமானது சாபவர்ஜிதமா இருக்கும்போது நாடிதனது கதியை தவிர்த்து க்ஷணகாலத்தில் தீவிரமாயும், க்ஷணகாலத்தில் சாந்தமாயும் நடையுள்ளதாயும் இருக்குமாகில் அவர் ஒரு வாரத்திற்குள்ளாக மரிப்பான். மூன்றா நாள் மிருத்தியு நாடி ….. அதிகோரமான சுரம் அடிக்கும்போது நாடியானது பனிக்கட்டிப்போலும், சீதளமாயும் இருக்கிறதல்லாமலும் திரிதோஷ ஸ்பரிச சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த நாடியையுடைய மனிதன் மூன்று நாளுக்குள்ளாக மரணமடைவான். நாலா நாளில் மரணமடையும் நாடி லக்ஷணம் …. வலது பாதத்தில் ஒரு நாடி அதி தீரவிரமாய் நடக்கிறதுடன் முகத்திலும்…
அசாத்திய ரோக நாடி ….. சந்நிபாத அசாத்திய நாடியானது மந்தமாயும், சிதிலமாயும் வியாகுலமாயும், நின்றும் தீவிரகதியாயும் இல்லாததுப்போலும் தனது இடத்தை விட்டு கீழாகவும், மேலாகவும் விரல்களிலும் நடையுடையதும் வேரானகதியுடையதாயும் நாடி நடக்கும். இதுவுமது ….. அதிகவேகமான பாய்ச்சலும், மிகவும் மந்தமாயும் தாமதமாயும் நரம்பைவிட்டு மாமிசதாதுவில் சஞ்சரித்துக்கொண்டும் அதிசூஷ்மமாயும் வக்கிரமாயும் விவிதமாயும் நடக்கும் நாடி சந்நிபாத அசாத்திய நாடியென்றும் அறியவும். மரண குறி நாடி ….. அதிக உஷ்ணமாயிருக்குங்காலத்தில் சீதளநாடியும், அதிக சீதளமாய் இருக்கும்போது உஷ்ண.நாடியும், விவிதபேதங்களான நடையையும்…
வரத பித்தரோக நாடி லக்ஷணம் ….. வாதத்தில் நாடியானது பாம்பு, அட்டை, இவைகளின் நடையைப் பெற்றிருக்கும். பித்தத்தில் நாடியானது வாயசம்லாவகம், மண்டூகம் இவைகளது நடையை ஒத்து நடக்கும். சிலேண்ம ரோக நாடி ….. கபரோகத்தில் நாடியானது அன்னபக்ஷி, மயில், புறா, குருவி, கோழி இவைகளின் நடையை ஒத்து இருக்கும். வாத பித்த ரோக நாடி …. சர்பத்தின் நடையைப்போலும் அடிக்கடி மண்டூகத்திபோலும் வாத பித்த தோஷ நாடி நடக்கும். வாத சிலேஷ்ம நாடி ….. சர்பத்தின் நடை,…
வாத கதி …. . காற்று அடிக்கும்போது அதற்க்கு நேரில் இருக்கும் பொருள் விசேஷமாயும், பின்புறமாகிய பொருள் மந்தமாயும் அசைவதுப்போல் மத்தியிலிருக்கும் வாதம் தன் எதிரில் இருக்கும் பித்தநாடியை அதி வேகமாயும், பின்புறமாயுள்ள கபத்தை மந்தமாயும் நடக்கச்செய்யும். பித்த கபநாடிகளுக்கு சுதந்திரமாகதானே நடக்கும்படியான சக்தி கிடையாது. வாதநாடி கமனத்தை அனுசரித்து மற்ற நாடிகளுக்கும் கமனம் உண்டாகின்றது. வக்கிரமமாய் சஞ்சரிக்கிற உலூகத்தைப்போல் நாடிகளின் முதலில் இருக்கும் வாதநாடி நடந்தால் மற்ற இரண்டும் நடக்கும் வாதம் நடக்காவிட்டால் மற்ற நாடிகள்…
ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…
சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்
மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில் அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள் ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால் அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும் குறைந்தும்நடைபெறும். கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே…
ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…
பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன் கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும், கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற ஜோதிஷ நூல் என்று சொல்கிறது சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும் கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில் பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின் அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான்…
நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…
அதோகாமி நாடி கதி ….. ஆமை போன்ற நாபியின் மேல் மார்பில் சூழ்ந்திருக்கும் நாலு நாடிகளில் இரண்டு இடுப்பின் மார்க்கமாய் தொடைகளின் சந்திகளின் வழியாக பாதத்திர் சேர்ந்து ஐந்து பிரிவுகள் உடையதாய் பாதாங்குலத்தில் வியாபித்து காலை முடக்கவும், நீட்டவும் செய்யும். இன்னம் மற்ற இரண்டு நாடிகள் தொடைகளின் பின்புறத்து சந்திகளின் மார்க்கமாய் பாத அந்தியம் வரையிலும் வியாபித்து காலை நீட்ட செய்கின்றது. லிங்க நாடி ….. அந்த நாபி கூர்மத்திலிருந்து ஒன்பதாவது ஆகிய லிங்கநாடி பிறந்து ஆண்குறி…
சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில் பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும் இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான கடக…
சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ, அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். ) குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும் தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும், ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில்…
சூரியன் தவிர சந்திரன் இருக்கிற இராசிக்குஇரண்டாவது இராசியில் கிரகங்கள் இருந்தால் சுனபாஎன்ற யோகமும், பன்னிரண்டாவது இராசியில்இருந்தால் அனபா என்ற யோகமும் இரண்டிலும்பன்னிரண்டிலுமிருந்தால் துருதரா என்ற யோகமும்சந்திரனுக்கு இரண்டாவது ராசியிலும்,பன்னிரண்டாவது ராசியிலும் கிரகமேஇல்லாவிட்டால் கேமத்துரும என்ற ஒரு அசுபயோகமும் ஏற்படுகின்றன.இவ்விதம் சந்திரனுக்கு இரண்டாவதுபன்னிரண்டாவது இராசியில் இருக்கிற கிரகங்கள்பூர்ண பலத்துடனிருந்தால் அதற்குத் தகுந்தபடி பலன்கள் நடக்குமென்று கூறுவர். இது சாமானியமான விதியாகத் தோற்றினும் இந்த யோகத்திற்குச்சொல்லிய பலன்கள் அனுபவத்திற்கும் சரியாகவேஇருக்கின்றன. மீன இராசியில் இருந்து அதற்கு இரண்டாவதான மேஷ இராசியில்…
ஜாதக பலன்களை அறிவதற்குரியசித்தாந்தப்படி லக்கின கிரகஸ்புடாதிகளை கணித்துக் கொண்டு ஸ்ரீபதி தம்முடைய பத்ததியில் உபதேசித்துள்ளபடி, 1. பாவஸ்புடம், 2 – கிரக ஷ்ட்பலம்,அதாவது ( ஸ்தான, ஜேஷ்டா, அயன, கால, திக், திருக்,ஆகிய இவ்வாறு பலமும் ), 3. சகமஸ்புடம், 4.அஷ்டக வர்க்கம், 5.ஆயுர்த்தாயம் இவ்வைந்தையும்கணித்துக் கொண்டு பலாபலன்களையறிவது சாஸ்திரீய மென்றும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படாதமுறை யென்றும் சொல்வர். பிராணன் என்றுசொல்லப்பட்டுள்ள உதய லக்கினம், சரீரகாரகன்என்று பெயர் பெற்ற சந்திரன் இருக்கும் லக்கினம்,ஆத்மகாரகனான சூரியன் இருக்கிற கிரகங்களின்…
அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம் பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…
நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது,…
சூரியன், குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன், புதன் சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும் குடும்ப சூழ்நிலையும் மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக, ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது. சூரியன், சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு,…
9. அர்க்கள கிரகத்தினால் உண்டாகக்கூடிய பாபஅர்க்களப்பலனை அந்தக் கிரகத்திற்கு ஐந்தாவது, ஒன்பதாவது, பாவத்திலுள்ள கிரகம் மாற்றிவிடும். 10. மேற்சொல்லிய மூன்று, பத்து, பன்னிரண்டில் உள்ளகிரகம் வலிவாக இருந்தால்தான் சுப அர்க்களப் பலனையோ, பாவ அர்க்களப் பலனையோ மாற்றும்,பலவீனமாயிருந்தால் மாற்றாது. 11. ராசி அர்க்களம் கிரக அர்க்களம் என இரண்டுவிதங்களிருப்பதால் இவற்றால் ஆராய்ச்சி செய்யவும். இவைகளில் எவரெவருடைய தசைகள் நடக்கின்றனவோஅவரவர்களின் பலன்களுண்டாகும், எந்த ராசியில் கிரகமிருந்தாலும் அவருடைய தசையின் புத்தி காலத்தில்பலன் உண்டாகும். 12. 1 – வது…
7. ஏழாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் பொறுமையுடைவன். எப்போதும் காமீ, அதிக தீவிர கோபிஷ்டன். சிவந்த சரீரமுடையவன், கெட்டவர்களைக் கொண்டாடி பூஜிப்பவன், கெட்ட புத்தியடையவன். 8. எட்டாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் ரோகத்தால் சபிக்கப்பட்ட அங்கங்களுடையவன், அரசன் பந்து வேலையாட்கள் புத்திரன் இவர்களால் பீடிக்கப்பட்டவன் துக்கமுடையவன். 9. ஒன்பதாமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் புத்திரருடையவன், தனம் நிறைந்தவன், புகழுடையவன். இஷ்டமாய்ப் பார்க்கத் தகுந்தவன். எப்போதும், அதிர்ஷ்டமுடையவன், நல்ல ஆழ்ந்த யோசனையுடையவன். 10. பத்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன்…
1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன், பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன் அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன். 2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம், வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர் இவற்றையுடையவன் ஆவான். 3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன், கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின் யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.…
7. ஏழாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ( ஜிரன் ஸ்திரீ ) திருடன், ஜாரன், பாபத்தைச் செய்பவன், மெல்லிய அங்கங்களுடையவன், சினேகிதத்தையுடையவன். ஸ்திரீயின் திரவியத்திலேயே ஜீவிப்பவன். ஏழாமிடத்தில் சனியிருந்தாலும் இப்பலன் பொருந்தும். 8. எட்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் பசியுள்ளவன், துக்கமுடையவன். குருரன், தீக்ஷண்ணிய ரோஷமுடையவன், கொஞ்சமும் தயையில்லாதவன், தனமின்றியிருப்பவன் பிராணனை அழிப்பவன், குணமும் இல்லாதவன். 9. ஒன்பதாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் வெகு கிலேசமுடையவன், மெல்லிய சரீரமுடையவன், துஷ்டச் செய்கையும் தயவேயில்லாதவனுமாவான். ஒன்பதாமிடத்தில் சனியிருந்தாலும் இதே பலன்தான். மந்தமதியுடையவன். பிசினி…
1. ஜென்ம லக்கினத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் எப்போதும் ரோகபீடையுடையவன், காமீ, பாபாத்மா மூடனில் அதிக கிரமமூடன், நிதானமுடையவன். கெட்ட பாவங்களுடையவன். அதிக துக்கமுடையவன். 2. ஜன்மலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் இயற்கைக்கு மாறுபாடானவன், துக்கமுடையவன், விசனமுடையவன், அடக்கமில்லாதவன், தனமில்லாதவன். 3. மூன்றாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் அழகான அங்கங்கள் உடையவன். சுகமுடையவன், புண்ணியமுடையவன், சரிஜனங்களுடன் கூடியவன், நல்லோரிடம் அதிக அன்புடையவன், ராஜ பூஜையடைவான். 4. நான்காமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ரோகியாவன், சுகமில்லாதவன், எப்போதும் பாபத்தையே செய்பவன், வாதபித்தாதிக்கியமுடையவன். 5.…
பிரம்ம லோக பிராப்திக்கு வேண்டிய உபாசனை செய்தவர்களை சூஷ்ம ரூபமாகிய சுஷம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இடகலை பிங்கலையின் மத்தியமாக சூக்ஷ்மரூபத்துடன் நடுமுதுகிலுள்ள வீணாதண்டமென்கிற எலும்பின் மார்க்கமாய் சஹஸ்ராரத்தையும் பிரம்மாந்திர மூலமாய் சூரியமண்டலம் வரையிலும் வியாபித்து பிரம்மலோகத்தை அடையச் செய்யும். பர பிரம்ம நிலை ….. சகல பிரபஞ்சாத்மக பரஞ்சோதி சொரூபியாகிய பர பிரம்மம் இந்த சுஷம்னா நாடியில் வசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடி அநேக மார்க்கங்களை உண்டாக்கி அனேக முகங்களுடன் வியாபித்திருக்கும். இந்த நாடிதான் சுத்த பரப்பிரம்மத்திற்கு…
பிங்களா நாடி ….. யாகம் முதலிய புண்ணிய கருமங்கள் செய்கிறவர்களை பிங்கலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இருதய ஸ்தானத்தின் வலது பக்கமாய் சிரசிலிருந்து சஹஸ்ராசக்கிரத்தை ஆதாரமாய்க் கொண்டு அக்கினி மண்டலம் வரையிலும் வியாபித்து அர்சராதிமார்க்கமாய் தேவலோகத்திற்கு போகும்படி செய்யும் இதற்கு தேவபானமென்றும் சொல்லுவார்கள். இட நாடி ….. பிதுருலோக பிராப்தி அடையும் படியான கருமங்களை செய்தவர்களை இடகலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து பிரயாணமாகி இருதய ஸ்தானத்து இடது பக்கமாய் சிரசிலிருக்கும் சஹஸ்ராசக்கிரத்தை அடைந்து சந்திரமண்டலம் வரையிலும்…
தூமகேதுவின் துவாதச பாவ பலன்.2 7. ஏழாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் ரக்த பீடையுடையவன், காமி, நேர்மாறுபாடான வழிகளுடையவர், போகத்துடன் கூடியவர், வேசிகளிடத்தில் சினேகமுடையவர். 8. எட்டாமிடத்தில் தூமகேது இருந்தால் நீச்ச செய்கையுடையவர், பாபி, வெட்கம் கெட்டவர், எப்போதும் நிந்திக்கப் படுபவர், நிந்திப்பவர், குற்றவாளி, பிறர் பக்ஷமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சந்தோஷி லிங்கத்தைத் தரிப்பவர் எல்லா ஜீவன்களிடமும் இன்பம்,அன்பு உடையவர், தர்ம காரியங்களின் அறிவும், ஆற்றலுமுடையவர். 10. பத்தாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன்…
தூமகேதுவின் துவாதச பாவ பலன். 1 1. ஜென்ம லக்கினத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் எல்லாக் கல்விகளிலும் சந்தோஷமுடையவர். சுகி, வாக்கு சாலகன், வாக்கு நிபுணர்களிடம் பிரியர், எல்லாவற்றிலும் ஆசையுடையவர். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் உபன்னியாசகர்களுக்கு ( ப்ரியம் சொல்பவர் ) யஜமானன் ஆவார். 3. மூன்றாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் காவியங்களைச் செய்பவர், பண்டிதர், மானி, விநயமுடையவர், வாகனத்துடன் கூடியவர், மன்மதன் போன்றவர், குரூரச் செய்கையுடையவர், மெல்லிய தேகமுடையவர், தனமில்லாதவர்,…
இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 7. ஏழாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கடவுள் போன்ற சம்பூர்ண குணமுடைய பிரபு, சாஸ்திரமறிவார், கார்மிகர், பிரியர். 8. எட்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் பிறர் காரியங்களுடையவர், குரூரர், பரதாரகமனமே பிரதானமானவர், சமீப மரணமுடையவர், சீக்கிரத்தில் மரிப்பார். 9. ஒன்பதாமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகன் தபம் செய்வார், நிலையாக விரதத்தை அநுஷ்டிப்பவர், வித்தை அதிகமாயுடையவர் கொண்டாடப்பட்ட ஞானமுடையவர், ஜகம் முழுவதும் ( உலகம் ) கொண்டாடப்படுவர். 10. பத்தாமிடத்தில் இந்திரதனுசு…
இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் இந்திரதனுசு இருந்தால் தனம், தான்யம், சொர்ணம், முதலியவற்றுடன் கூடியவன். நல்லவர்களுக்கு சம்மத மானவன், எல்லா தோஷங்களும் விலகப் பெறுபவன். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன்இஷ்டமானதைச் சொல்பவன். சமர்த்தன், சம்பாதிப்பவன். வினயமுடையவர். அதிக கல்வியுடையவன், ரூபமுடையவர், மேலான தத்துடன், கூடியவர். 3. மூன்றாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன், அதிக கிருபணன். அதிக வித்தையறிபவர், செளரியமுடையவர். அங்கக்குறைவுடையவர். விசேஷ சினேகிதமுடையவர், குடியுமுடையவர். 4. நான்காமிடத்தில்…
திரி நாடி ஸ்தானம் ….. இளா என்கிற நாடி தேகத்தின் இடது பக்கத்திலும், பிங்களா என்கிற நாடி வலது பக்கத்திலும், சுஷ்ம்னா என்கிற நாடி இவைகளுக்கு மத்தயிலும் இருக்கின்றது . இந்த மூன்று நாடிகளிலும் வாயுவு சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இளா பிங்களா நாடி சுரூபம் ….. இளா என்கிற நாடி சங்கைப் போலவும், சந்திரனைப் போலவும் பிரகாசித்துக் கொண்டு சுஷ்ம்னா என்கிற நாடிக்கு இடது பக்கத்தில் இருக்கின்றது. பிங்களா என்னும் நாடி கறுப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தையுடையதாய்…
நாடிகளின் ரூப நிறங்கள் ….. காந்தாரி என்கிற நாடி மயிலின் கண்டத்தது வன்னமுடியதாய் இடகலை நாடிக்கு பின்புறத்தில் சேர்ந்து சவ்வியபாதம் முதல் நேத்திர அந்தம் வரையிலும் வியாபித்து இருக்கின்றது. ஹஸ்தி ஜிம்மை என்னும் நாடி கருத்த அல்லி புஷ்பத்தின் நிறத்தை ஒத்து இடைகலையின் முன்புறத்தில் வியாபித்து சம்மியபாகத்தில் சிரம் முதல் பாதாங்குண்டம் வரையிலும் வியாபித்திருக்கும். பூஷா என்கிற நாடி கருத்த மேகநிறத்தை அடைந்து பிங்கலை என்கிற நாடிக்கு மேல்பாகத்தில் இருந்து வலது பக்கத்தின் பாத அங்குலம் முதல்…
7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…
பரிவேடனுடைய துவாதச பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் வித்துவான், சத்தியத்துடன் கூடியவன், சாந்தமுடையவன், தனமுடையவன், புத்திரனுடையவன், சுசியுடையவன், கொடையாளி, குரு அன்புடையவன். 2. ஜென்ம லக்கினத்தில் இரண்டாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் குணத்தில் கடவுள் எனப்படுபவன், பிரபு ரூபமுடையவன், போகி, சுகி, தர்மபாராயணம் செய்பவன், பிரபு ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஸ்திரீ வல்லபவன், நல்ல சுரூபமும் அங்கங்களுடையவன், தேவதைகளிடம் அன்புடையவன், சுயஜன சேர்க்கையுடையவன், வேலையாளுடையவன், குருபக்தியுடையவன். 4.…
7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தனம், மனைவி, புத்திரன் இவர்களால் விடுபட்டவன் அதாவது இல்லாதவன், ஸ்திரீ ஜிதன், காமீ, வெட்கங்கெட்டவன், பிறருடைய சிநேகமுடையவன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வக்கிரப் பார்வையுடையவன், அழகில்லாதவன், அபகீர்த்தியுடையவன், பிராம்ணநிந்தையுடையவன், ரக்தபீடை யடையவன், விசனமுடையவன். 9. ஜென்ம லக்கினத்திறகு ஒன்பாதாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அனேக வியாபாரமுடையவன், எப்போதும் அனேக மித்திரருடையவன், வெகு வேத சுருதிகளை அறிபவன், ஸ்திரிகளுக்கு இஷ்டமானதைச் சொல்லவறிந்தவன், பிரயமாகவும் பேசுபவன். 10. ஜென்ம…
1. ஜென்ம லக்கினத்தில் விதீபாதனிருந்தால், ஜாதகன் துக்கத்தினால் அங்கபீடையுடையவன், குரூரமுடையவன், கொலை செய்பவன் மூர்க்கன், பந்துஜன துவேஷி ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அதிக பித்தமுடையவன், போகி, வீண் விசாரமுடையவன், ஆராய்ச்சியுடையவன், பிரசங்கியாவன். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூனறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தயையில்லாதவன், செய்நன்றியுடையவன், துஷ்டாத்துமா, பாபச்செய்கையுடையவன், ஸ்திரமான ( நிலையான ) அறிவுடையவன், சந்தோஷி, தாதா ( அதாவது கொடையாளி ) தனசம்பாதனையுடையவன், ராஜ வல்லவனாவன், சேனாநாயகனாவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில்…
நாடிகளின் குணங்கள் ….. காதுகளில் வியாபித்திருக்கும் நாடிகள் ஓசையை அறியும்படியானவை, கண்களில் வியாபித்திருக்கும் நாடிகள் ரூபத்தை அறியும்படியானவை, மூக்குகளில் இருக்கும்படியான நாடிகள் வாசனையை அறியும்படியானவை, நாவில் வியாபித்திருக்கும் நாடிகள் ரசத்தை அறியும்படியானவை, சர்மத்தில் வியாபித்திருக்கும் நாடிகள் ஸ்பரிசத்தை அறியும்படியானவை, இருதயம் முகம் இந்த இடங்களில் வியாபித்திருக்கும் நாடிகள் பேசுதற்கு உபயோகமானவைகள். மனது புத்தி இவை இரண்டும் இருதய ஸ்தானத்திலிருக்கின்றன. புரீத்தி என்னும் நாடியில் மனது லீனமானால் மனிதனுக்கு தூக்கம் உண்டாகும். மேற்கூறிய பதினான்கு நாடிகளின் நாமங்கள் அல்லாது…
தச நாடிகளின் ஸ்தானங்கள் ….. இடது நாசிகையில் இடகலையும், வலது நாசிகையில் பிங்கலையும், ( பிரம்மாந்தித்தில் ) சுஷ்ம்மணாவும், இடது நேத்திரத்தில் காந்தாரியும், வலது கண்ணில் ஹஸ்திஜிம்மையும், வலது கையில் பூஷா என்கிற நாடியும் இடது கையில் யசஸ்வினியும், நாவில் அலம்புசை என்னும் நாடியும், ஆண்குறியில் குஹ¨ என்கிற நாடியும், சிரத்தில் சங்கினி என்கிற நாடியும் வியாபித்திருக்கும். தச நாடிகளை ஆக்கிரமித்திருக்கும் தசவாயுவுகள் ….. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன்,…
7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் தூமனிருந்தால் தனமில்லாதவன், எப்போதும் காமமுடையவன், பரதார கமனன், தேஜசில்லாதன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் பராக்கிரமமின்றி உற்சாகமுடையவன், பொய் பேசுபவன், இஷ்டமில்லாமல் நிஷ்டூரமாய்ப் பேசுபவன். 9. ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திர சம்பத்து முதலிய உடையவன், மானி, தனமுடையவன், தனத்துடன் கூடியவன், பந்துக்களை ரக்ஷிப்பவன். 10. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திராதி ஸெளபாக்கியங்களுடையவன், அறிவாளி, சுகி, சந்தோஷி, உண்மையான வழியில் இருப்பவன். 11.…
தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன்…
தேஹ வியாபக நாடிகள் ….. மூலாதாரத்தில் ஆசிரயித்து தலைமுதல் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும் எழுநூறு நாடிகளால் மனித தேகமானது மிருதங்கத்தை சருமத்தின் வாறினால் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டு இருக்கிறது. முக்கிய நாடிகள் ….. மேல் கூறிய எழுநூறு நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை, சரஸ்வதி, வாருணி, பூஷா, ஹஸ்திஜிம்ஹ, யசஸ்வினி, விஸ்வோதரி, குஹ¨ சங்சினி, பயிஸ்வினீ, அலம்புசா, காந்தாரி என்னும் பதிநாலு நாடிகள் முக்கியமானவை, இவைகள் பிராணவாஹினிகளாய் ஜீவகோசத்தில் வியாபித்து இருக்கின்றதுகள். இந்த பதிநாலுநாடிகளில் பத்து…
வாயு சஞ்சார நாடிகள் ….. மேற்கூறிய நாடிகளில் எழுப்பத்தீராயிரம் ( 70, 000 ) நாடிகள் வாயு சஞ்சரிக்கிற- அதற்கு யோக்கியமானவைகள் இந்த நாடிகளின் மார்க்கமாய் வாயுவானது போகவும், வரவும், குறுக்காக பாயவும் சக்தியுள்ளதாக இருக்கின்றது. நதிகள் எவ்விதம் தமது பிரவாஹங்களினால் சமூத்திரத்தின் சலத்தை அதிகரிக்கச் செய்கிறதோ அதுப் போல் மேற்கூறிய நாடிகள் தேகியால் புசிக்கப்படும். அன்னபானாதிகளின் ரசங்களை தேகமுழுவது வியாபிக்கச் செய்து தேகத்தை போஷித்துக் கொண்டு வருகின்றன. ஸ்தூல நாடிகள் ….. இந்த எழுபத்தீராயிரம் நாடிகளில் ஆயிரத்து…
நாடி பரீக்ஷ விவரணம் ….. இவைகளில் நாடீபரீக்ஷயை மாத்திரம் இந்த ஜம்புவத்தீவிலுள்ள தேவர் முதல் மானிடர் வரையிலும் உள்ள வைத்திய சிகாமணிகள் முக்கியமாய் விஸ்தரித்து எழுதி இருக்கிறார்கள் அவைகள் வடமொழியில் செய்யுட்களாக இருப்பதினால் திராவிட தேசத்தாருக்கு அதனை தெரியும்படி இலேசான சொற்களால் யாவரும் எளிதில் அறிந்து சிகிச்சை செய்யும்படிக்கு எழுதியிருக்கிறேன். வாத பித்த கபங்களாகிய திரிதோஷங்களின் விரோதத்தினால் உண்டாகும் சகல வியாதிகளும் அவைகளின் சாத்தியம், கஷ்டசாத்தியம், அசாத்தியம், அந்தந்த வியாதிகளின் பேதங்கள் முதலியவை அறிந்து சிகிச்சை செய்ய…
பிரதமை—சூரியன் துவிதியை—சந்திரன் திரிதியை—செவ்வாய் சதுர்த்தி—புதன் பஞ்சமி—குரு சஷ்டி—சுக்கிரன் சப்தமி—சனி அஷ்டமி—ராகு நவமி—சூரியன் தசமி—சந்திரன் ஏகாதசி—செவ்வாய் துவாதசி—புதன் திரியோதசி—குரு சதுர்த்தசி—சுக்கிரன் பௌர்ணமி—சனி அமாவாசை—ராகு
சிவராத்ரி ஒரு விளக்கம்: மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும் பதிநான்காம் நாள் சிவமும் ஆகும். நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம். குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது அதிக கால அளவு த்ரயோதசியும், குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும். அமாவாசை…
பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் விளக்கம்: அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.
ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம., சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண சுத்தியுடன் தியானித்து ( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல புருஷோத்தராகிய வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம் ஆகும் பொருட்டு திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது காண்டம் எழுதலாயினேன். இக்காண்டத்தில், தன்வந்தரி, சாரங்கதரீயம்,…
முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம்,…
1. ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2. அர்க்களம் சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3. சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4. பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2,…
புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே. குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும். இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும்.…
( ஆதான ) கருத்தரிக்கும் நேரத்தில் சந்திரன் இரட்டை ராசியிலும், சூரியன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலித் தன்மை ஏற்படும். சனி இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலியாம். செவ்வாய் ஒற்றை ராசியிலிருந்து சூரியன் இரட்டித்த ராசியிலும் இருந்து செவ்வாய் சூரியனைப் பார்த்தாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், லக்னம் ஒற்றை ராசியிலிருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருக்க, செவ்வாய்…
வியாதியினால் புணர முடியாதவர் நஷ்டகர். ஆண்குறி விரைப்பு இல்லாமல் விந்து வெளிவரக்கூடியவர் அசேவ்யர். பெண் உறுப்பை முகர்ந்த பின்னரே புணரக்கூடியவர் சுஷண்டி. பெண்மைத் தன்மை நிரம்பிய ஆண்களும், உறுப்புக்களை அறுத்துக் கொண்டவரும் ஷண்டர்கள். மோக பீஜர் என்று ஒருவகை உண்டு. பெண் தனது உறுப்புக்களை தொட்ட பின்னரே உணர்ச்சிவரக் கூடியவர், மற்றொரு வகை. க்ரஹநிலைகளை கொண்டு இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ள வேண்டும்.
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அலித்தன்மைகள் திருமணத்திற்கு முன் இவற்றைக் கவனிப்பது மிக அவசியமாகும். இவை பொதுவில் இருவகையாகும். சிலருக்கு பீஜத்தில் பலம் குறைவாகும், மற்றும் சிலருக்கு பீஜத்தில் பலமே இருக்காது. லிங்கம் இல்லாதவர்கள் நைசர்திக சண்டா வகையினர். பீஜத்தில் சக்தியில்லாதவர்கள் ( ஆண் விந்து வெளிப்படாதவர் ) பாத வகையினர். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை சம்போகம் செய்யக்கூடியவர் பக்க்ஷ ஷண்ட வகையினர், ஒரு பெண்ணை மற்றொருவர் புணர்ந்த உடனே புணர்பவர் கீலகர். குரு சாபத்தால புனர்ச்சி…
திரிம்சாம்சம் என்பது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும்…
1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு,…
12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…
கிரகங்களின் அவஸ்தா நிலை மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில். 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவனஅவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை
யாப்பிய ராசிகள்;- மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள். ஆனால் குறைவான பலன்களை தரும். ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும். பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெறுமை-சிறுமை, ஆணவம், அகங்காரம், ஆசை ,போட்டி ,பொறாமை, போன்றவைகளை கொண்டது .
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பிறரை சுலபாக எடைபோடுவதில் வல்லவர்கள். பொதுச் சேவை, ஆன்மீக ,ஈடுபாடு போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள், பிரபலம் உடையவர்கள். ஜோதிடம், மந்திர சாஸ்திரம் போன்ற துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றிடுவார்கள் உயர்ரக பதவியை வகிப்பவர்கள். மனோதத்துவ நிபுணர் என்றும் சொல்லலாம்.
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும், ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் திடமான, நல்லநிலையைப் பெறுவார்கள். கருணை உடயவர்கள். பிறரின் உதவியால் நல்ல ஸ்தானம் பெற்றிடுவார்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள், சகல வசதிகளையும் சுயமுயற்சியால் ஏற்படுத்திக் கொள்வார்கள். இனிய இல்லறம் இவர்களுக்கு உண்டு.
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கு உடையவர்கள். அரசாங்கத்தில் புகழ் கௌரவம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் புகழும் அளவில் சகல சம்பத்தும் பெற்று ராஜயோகத்தில் இருப்பார்கள் கணித, விஞ்ஞான, வியாபார, வல்லவர்கள். சாஸ்திர அறிவு நிரம்பியவர்கள்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சிக்கலான வாழ்க்கயை உடையவர்கள். பலவிதத்தில் ஆற்றலும், திறமையும் அமைந்தவர்களே என்றாலும் நேர்மையான பாதையில் நடப்பவர்கள். எனவே தாமாக வரும் தீய நண்பர்களையும், பங்குதாரர்களையும் விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது. பல பேருக்கு வேலை கொடுத்து நடத்தும் தொழிலில் அதிக வெற்றியுடையவர்கள்.
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். ஆதாயம் இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடவே மாட்டார்கள். வருமானம் வருகிறது என்றால் எந்தப் பிரச்சனையிலும் ஈடுபட்டு தொந்தரவுகளைத் தேடிக்கொள்வர்கள். பல தோல்வியைக் கடந்து பிறகு வெற்றியைப் பெற்றிடுவார்கள். ஆனாலும் வசதியான வாழ்வை வாழ்வார்கள் என்று சொல்ல வேண்டும்.
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பொதுநலத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், சுயநலத்தை நினைத்தாலே இவர்களுக்கு மற்றவர்களின் மேல் வெறுப்பு தானாக ஏற்படும். பெரும்பாலும் இவர்கள் பொதுச்சேவை புரிவதால் இவர்களை மகான் என்றும், மேதை என்றும் போற்றுவார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமை ஸ்தானம் பெறுவார்கள், பெருமையும், புகழும் உடையவர்கள். ஸ்திரபுத்தி இருக்காது ஏற்றத்தாழ்வுகள், பிணி, நலி, கண்டங்கள் வாழ்வில் பல முறை குறுக்கிடும்.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம் என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள்.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது லட்சியம். எனவே எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற குறிக்கோள் கொண்டவர்கள். செல்வச் செழிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என எப்படியாவது செல்வ வளத்தைத் தேடி அடைந்திடுவார்கள்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். துணிச்சலும், ஆற்றலும், அறிவுக் கூர்மையும் உடையவர்கள். தமது திறமையை ஆக்கப் பணிகளுக்குச் செயல்படுத்துவார்கள். மாறாக செயல்படுவார்களேயானால் அதிக இல்லல்களையே பெற்றிடுவார்கள். கலைகளில் தேர்ச்சியுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிவுடன் ஈடுபடுவார்கள்.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உடையவர்களாகவே திகழ்வார்கள். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சியால் நல்ல பெயரும், புகழும், பொருளும் பெறுவார்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். தமது வாக்கு சாதுர்யத்தால் நல்ல முன்னேற்றம் தேடிக்கொள்வார்கள்.
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் பொதுநலத் தொண்டு புரிவதிலும் சிலர் தெய்வீகத் தொண்டு புரிவதிலும் மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். எப்போதும் பிரயாண ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இவர்கள் இருக்க வேண்டும்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலரின் எதிர்ப்புக்கு ஆளாவார். இவர்கள் நம்பக்கூடாத வர்களை நம்பி மோசம் போவார்கள். நண்பர்களே துரோகிகள் என்று சொல்லலாம். எனவே, இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் துயரங்களையும், எதிர்ப்புகளையும், தோல்விகளையும் பொருட்படுத்தாமல் எதிர் நீச்சல் போட்டால் சிறிது, சிறிதாக முன்னேறி உயர்நிலையைப் பெற்றே தீரலாம்.
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். இவர்கள் இளம் வயதில் மிகவும் வறுமை வாட்டத்தில் இருப்பார்கள். நல்ல கல்வித் தகுதியைப் பெற்று நீதித்துறையில் உயர்ந்த பதவி பெறுவார்கள். பொது நலத் தொண்டிலும், ஆன்மீக ஈடுபாட்டிலும் அதிகமான ஆர்வம் கெண்டவர்கள். நல்ல வாக்குத்திறமையை உடையவர்கள். பொருளாதார சிறப்பு நன்றாக அமையும்.
சந்திரன் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் வாழ்க்கையில் ஒரே சீரான அதே நேரத்தில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைபவர்கள். உயர்தர வாழ்க்கையை வாழ்பவர்கள். திடீர் தனயோகம் பெறுவார்கள் தமக்கு மிகவும் வேண்டியவர்களினால் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதிக நஷ்டம் ஏற்படாது. எது எப்படி இருந்தபோதிலும் கவலையை மறப்பவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுபவர்கள்.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் இவர்களது மனதை அவ்வளவு சுலபத்தில் எடைபோட முடியாது. இவரது பேச்சையும், செயலையும் வைத்து இதுதான் இவரது கருத்து என்று கண்டுபிடிக்க முடியாது. அன்புக்கு அடிமையாவார்கள். அடக்கமும், முன் எச்சரிக்கையும் உடையவர்கள். எப்போதும் பார்வைக்கு சந்தோஷமான தோற்றத்துடனே இருப்பார்கள். துன்பத்திலும், துயரத்திலும் புன்சிரிப்புடன் இருப்பார்கள்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். வெற்றிகரமான வாழ்க்கை அமையப்பெறுவார்கள். ஸ்திர சொத்துக்கள் விருத்தி உண்டாகும். அரசாங்க மற்றும் அரசியல் விஷயங்களில் ஈடுபாடும், அவற்றில் அனுகூலமும், வெற்றியும், பதவி, வருவாய், லாபங்களும், பெறுவார்கள். எல்லோரையும் அடக்குவார்கள். வெற்றி கொள்ள வல்லவர்கள். பிடிவாதம், கோபம் விடாமுயற்சி வைராக்கியமும் இருக்கும்.
சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அமைதியான வாழ்க்கையை உடையவர்கள். மதப்பற்று மிக்கவர்கள். பொதுநலச் சேவை புரிபவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். தாமதத் திருமணம் உடையவர்கள். நேர்மையான முறையில் பணம் சேர்ப்பவர்கள். உயர்வு பெற பலரது உதவியையும் நாடுபவர்கள். அதிக முயற்சிகளையும் மேற்கொள்பவர்கள். ஏற்ற பணியை முடிக்க வல்லவர்கள்.
கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் கடவுள் பக்தி அதிகமுடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை அனுசரித்து நடப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதிக் குறைவு ஏற்படவே செய்யும் என்றாலும் அதை சரி செய்து கொள்வார்கள். நல்ல அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் நல்ல உழைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு கடும் உழைப்பாளியாவார்கள். சகல செல்வ சுகங்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களது லட்சியமாகும் நடவடிக்கையாவும் பணம் சம்பாதிப்பதிலேயேதான் இருக்கும். அதற்குத் தகுந்த வகையில் மற்றவர்களைப் பக்குவப்படுத்தி சாதித்துக் கொள்வார்.
புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் லட்சியத்துடன் வாழ்க்கயை நடத்துவபவர்கள். இவர்கள் சிறிய வயதில் முடிவெடுக்கும் திட்டத்தினால்தான் தமது வாழ்க்கையை அமைக்க முடியும். தமது லட்சிய அடிப்படையில் எதிர்காலத்தை ஒளிமயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அளவு கடந்த ஈடுபாடும் ஏற்பட்டு விடும்.
ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். உறுதியான மனம் கொண்டவர்கள். எதையும் திட்டவட்டமாகச் செயல்படுத்துவார்கள். கண்டிப்பான குணம்கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் என்றாலும், விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் நிரந்தரமான வெற்றியைப் பெறலாம். மற்றவர்களை அனுசரித்து நடந்தாலே இவர்களுக்கு தாமாக முன்னேற்றம் ஏற்படும்.
குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் திட்டமிட்டு செயலில் இறங்குவதால் இவர்கள் பெரும் பயன் பெறமுடியும். நுட்பமான தொழில்களில் ஈடுபாடு உடையவர்கள். அதில் நல்ல எதிர்காலம் பெறுபவர்கள். எழுத்துத்துறையிலும் இவர்கள் பிரகாசிக்க முடியும். உயர்ந்த எண்ணம் உடையவர்கள். பயன்தரும் திட்டங்களை உடையவர்கள். அதை செயல்படுத்தவும் செய்வார்கள்.
சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் உயர்ந்த லட்சியங்களை உடையவர்கள். தீவிரமாக எப்போதும் ஆராயச்சியில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அமைதியான குணம் உடையவர்கள். கற்பனைசக்தி மிகுந்தவர்கள். எதையுமே அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றியை பெறவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். பெரும்பான்மையாக கலைத்துறை ஈடுபாடு உடையவர்கள் 2-ம் தேதி பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.
அத்தி அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.
புளிச்சைக் கீரை புளிப்புச்சுவை கொண்டதான இந்தக் கீரையை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும் எனினும் உடலில் புளிப்புச் சுவையை அதிகப்படுத்தப் பண்பு இதற்கு உள்ளது பாரம்பரிய மக்கள் மீன்களை சமைக்கும் போது அவற்றுக்கு புளிப்புச்சுவை கொண்ட இந்த கீரையை பயன்படுத்துவார்கள்
சொத்தைக்களா இது கவர்னர்ஸ் என்ற ஆங்கிலப் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் பழங்கள் உண்ணத் தகுந்தவை. ஜாம் மற்றும் பலவிதமான பழச்சாறுகள் தயாரிப்பிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
கரிசாலை (வெள்ளை கரிசலாங்கண்ணி) வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம். இதனால் கண் பார்வை அதிகரிப்பதுடன் உடல் பலமும் ஏற்படும். ஏதாவது ஒரு வகையில் இந்த மூலிகையை உண்டு வர நரை,திரை முதுமை மாறும் என்பதாக நம் முன்னோர்கள் தெரிவித்து உள்ளனர் அதோடு,கல்லீரல் பலப்படும். இராமலிங்க வள்ளலார் கரிசாலையை காயகற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தினமும் காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட மலச்சிக்கல் தீரும். கரிசாலைச் சாற்றல் வாய் கொப்பளித்தால் பற்களும், ஈறுகளும்,…
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.
கருங்காலி கருங்காலி பழங்கள் உண்ணத் தகுந்தவை பலவிதமான நுண் சத்துக்கள் பொருந்தியவை
நறுவிலி பலவிதமான நுண்சத்துக்கள் நிறைந்து, குழந்தைகள் மற்றும் சிறுவர்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும். கொழகொழப்புச் சுவை மிகுந்த இந்த பழம் வாய்,பல் மற்றும் ஈறு நோய்களுக்கும். மார்பு மற்றும் சிறுநீர்த்தாரை நோய்களுக்கும் சிறந்த துணை மருந்தாகும்.
எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…
நல்வேளை பசுமையான இலைகளை பறித்து, மற்ற கீரைகளுடன் சேர்த்துக் கலவைக் கீரையாகத் துவட்டிச் சாப்பிடலாம். இலைகளை அளவாகச் சேர்த்து, கார குழம்பு செய்து சாப்பிட ஒற்றைத் தலைவலி குணமாகும். அதோடு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு நல்வேளை சிறந்த துணை மருந்தாகத் திகழ்கிறது நல்வேளை இலை சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட இருமல் தீரும்.
கோவைப் பழங்கள் உண்ணுவதற்கு மிகவும் விருப்பமானவை. கோவைக்காய் கூட்டு மற்றும் பொறியல் செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது மேலும் வற்றல் செய்வதற்கும் உகந்தது. இந்த வற்றலை நெய்யில் வறுத்துச் சாப்பிட இளைத்த உடலைத் தேற்றும், வயிற்று புழுக்களை வெளியேற்றும். சில நாட்டுப் பழங்குடி மக்களால் இதன் இளம் தளிர் இலைகளை உண்ணப்படுகின்றன கோவைக்காயை சாம்பார், கூட்டு போன்றவை செய்து சாப்பிடலாம்.
பால்பெருக்கி: இதனைக் கீரையாகச் சமைத்துச் நெய் சேர்த்து துவையலாக சாப்பிடலாம். இதனால் குடல் வாயு அகற்றும் செரிமான தன்மையும் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்பு இந்தக் கீரைக்கு உள்ளதால் தாய்ப்பாலூட்டும் பெண்மணிகளுக்கு வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்து சாப்பிட சிறந்த பலன் ஏற்படும். இறுகிப் போன பழைய மலத்தை வெளியேற்றும் குணமும் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அருகம்புல் : அருகம்புல் சாறு தற்போது மிகவும் பிரபலம் . அருகம்புல்லின் முழுத்தாவரமும் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். அருகம்புல்லை தூய்மையானதாக சேகரித்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் , இந்த சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து பானமாக பருகலாம் . இது ரத்தத்தை சுத்தி செய்வதுடன் உடல் வெப்பத்தையும் குறைக்கும். சிறுநீர்ப்பெருக்கி சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஒரு கைப்பிடி அளவு அருகம் புல்லை அரைத்து பச்சையாக செய்து பசும்பாலில் கலக்கி குடித்து வர வெள்ளைப்படுதல்…
மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.
சுக்கங்காய் முதிராத காய்களில் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் மோர் சேர்த்து கலவையில் ஊற வைத்து வற்றலாகக் செய்து கொள்ளலாம் . இதனை வற்றலை போல் வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொண்டு தேவையான போது நெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டு வறுத்து சாப்பிட நன்றாகப் பசி எடுக்கும் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு இது சிறந்த துணை உணவாகும்.
சங்கு புஷ்பம் மலர்களிலிருந்து இதழ்களை எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீராக கூட அருந்தலாம் . இதனால் உடல் அரிப்பு குணமாகும். இதன் இதழ்களை கொண்டு சிரப், சர்பத் போன்றவை செய்து சாப்பிடலாம் . இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகமாவதுடன் உடலுக்கு நல்ல பலம் ஏற்படும். இதன் மலர் சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலப்படும் தேமல் மற்றும் கரும் புள்ளிகளும் குணமாகும். இலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து…
மீனம் :- “மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும். உபயராசி இரட்டை ராசி என்று அழைக்கப்படும் பெண் ராசி கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது. அதிக கற்பனை வளம் அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும். தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி. ஆனால் மௌனமானதும்…
இரும்பிலி தமிழ் இதற்கு கருவிஞ்சிப் பழம் என்ற பெயரும் உண்டு. இதன் முதிர்ந்த பழங்கள் துவர்ப்புத் தன்மையும் சிறிதளவு கசப்புத் தன்மை கொண்டவை. இவை, கிராமப்புற சிறுவர்களாளும், பறவைகள்,மற்றும் காட்டு விலங்குகளும் உண்ணுகின்றன . இரும்பிலி இலைகளையும் மென்று சாப்பிடலாம் இதனால் உடலில் துவர்ப்புச் சுவை மிகுதியாகி,உடல் பலப்படும்.
தும்பிலி கோள வடிவமான தும்பிலி பழங்கள் உண்ணுதற்கு மிகவும் சுவையானவை மேலும், பலவிதமான நூண் சத்துக்களையும் இவை கொண்டுள்ளன.
வாத நாராயணன் வாதமடக்கி ஆதி நாராயணன், வாதரச ஆகிய மாற்றுப் பெயர்களும் வாத நாராயனுக்கு உண்டு. இலைகள் கசப்பு சுவயும் வெப்ப தன்மையும் கொண்டவை. இதன் இலைகள் குழம்பு செய்யவும் துவயல் தயாரிக்கவும் வதக்கிச் சாப்பிடவும் பெரிதும் பயன்படுகிறது. இதனால் நரம்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்றவை கட்டுப்படும். வீக்கத்தை வடிய வைக்க கரைக்கும் பண்பும் இதற்கு உண்டு. தொடர்ந்து,வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு தயாரிப்பில் வாதநாராயணன் கீரையை சேர்த்துக் கொண்டு வரலாம்.
தழுதாழை இலைகள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இதனை மைய அரைத்து காரக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவை இதனால் குணமாகும். மேலும் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் உடலில் கழிவுகளும் வெளியாகும். தொடர்ந்து உபயோகித்துவர இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கம் குணமாகும்
கட்டுக்கொடி இலைகள் உடல் சோர்வைக் குறைக்கும். இலைகளை கசக்கிச் சாறு எடுத்து அதனை நீரிலிட நுங்கு போல் கட்டும். இதைச் சாப்பிட தாது பலம் உண்டாகும். அதோடு, இளைத்த உடலையும் தோற்றம். கட்டுக்கொடி இலைச்சாற்றுடன் எருமை மோர் கலந்து பருகிவர பெண்களுக்கு உண்டாகும் சிறுநீர் எரிச்சல் வெள்ளைப்படுதல் ஆகிய வெப்ப நோய்கள் குணமாகும்.
காசான் சர்க்கரை வில்வம் என்கின் பெயராலும் வழங்கப்படும் இதன் இலைகளைச் சாப்பிட உடலில் துவர்ப்புச் சுவை கூடுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
குகமதி பழங்கள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன குரங்குகளும்,காட்டு விலங்குகளும் இந்த பழங்களை விரும்பி உண்கின்றன.
நீர்முள்ளி விதைகளை சேகரித்து, நீரில் இட்டு முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ள வேண்டும், இதனைக் காலையில் சாப்பிடலாம் இதனால் தாது பலஹீனம் குணமாகும்.
ஆலம் ஆலம்பழம் விலங்குகளலும் பறவைகளாளலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும். பாரம்பரிய மக்களால் இந்தப் பழங்கள் உண்ணப்படுகின்றன. மலட்டுத் தன்மை நீங்க இதன் விதைகள் முக்கியமான மருந்தாகின்றன.
ஆதண்டை காய்களை வெட்டி, உப்பிட்டு ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி, வற்றல் செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுவலாகச் செய்து சாப்பிடலாம். மேலும், ஆதண்டை ஊறுகாய் சுவையானது, பசியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஊறுகாய் நமது பாரம்பரிய உணவான கூழ்,கஞ்சி போன்றவற்றுக்கு மிகவும் சுவை சேர்ப்பதாகும்
கள்ளி முளையான் இளம் தண்டுகள் பாரம்பரிய மக்களால் உண்ணப்படுகின்றன. சில நேரங்களில், உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்டினி போன்றவை தயார் செய்யவும் பயன்படுகின்றன.
முட்சங்கன் பழங்கள் ௨ண்ணத் தகுந்தவை. இலைகளை கசாயமாக ச் செய்து வயிற்றுப்போக்கு மற்றும் மூட்டு வலிக்கு ௨ள்மருந்தாக கொள்ளலாம். பால் கறக்கும் கால்நடைகளுக்கு முட்சங்கன் இலைகளை ௨ணவாகக் கொடுக்க, கறக்கும் பால் மற்றும் ௮திலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்றவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.
உலக சாஸ்திரத்தில் முழுமையாக வெற்றி அடைந்தது என்று எதுவுமே இல்லை. அவரவர் சிந்தனைக்கு எது பிடிக்கிறதோ அந்த பாதையில் சென்று பிரபஞ்ச சக்தியின் ஆசீர்வாதத்துடன் வெற்றி கொள்கிறார்கள். நமது உடல் பஞ்சபூதங்களோடு இணைந்து இயங்குவதை அறிந்தோம். நமது உடல் 72 ஆயிரம் நாடி நரம்புகளால் ஆனது. இதில் முக்கியமான 10 நாடிகள், இந்த பத்தில் முக்கியமானது மூன்று ( 3 ) அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை அது போல் வாயுக்கள் பத்து ( 10 )…
காட்டு எலுமிச்சை முதிர்ந்த காட்டு எலுமிச்சைப் பழங்களை ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பழங்களின் மேல் தோலில் இருந்து வடித்து எடுக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்த்தொரு மருந்தாகவும் பயன்படுகிறது.
இருவாட்சி ( திருவாத்தி) இலைகளை வதக்கி, மிளகு, உப்பு ,சேர்த்து அரைத்து , தாளித்து-வதக்கி துவையலாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால்,பசி, மந்தம்,வயிற்றுக் கடுப்பு போன்றவை குணமாகும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து இந்தத் துவையலைக் கொடுத்துவர நல்ல பசி எடுப்பதுடன் நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படும்.
காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.
கிழமைகள் ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம் திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம் செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம். சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்…
அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும். பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ரஜோகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும். கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி தாம்ஸகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.
முந்திரி முந்திரியின் கனி பொய்க்கனி (pseudo -fruit)வகையச் சேர்ந்தது. இது,முதிர்ந்த நிலையில் இனிப்புச் சத்து கொண்டது. மேலும்,இதில்’அஸ்கார்பிக் அமிலமும் நிறைந்துள்ளது. பழம் அல்லது பழச்சாறாகச் செய்து இதனை சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு அதிகமான சத்துக்கள் நிரம்பியது. இதனை உலர்த்தியோ,அல்லது,நெய் சேர்ந்து வறுத்தோ சாப்பிடலாம் ஜாம்,பலவகையான பானங்கள்,இனிப்புப் பொருட்கள் மற்றும் போதை நீர்மங்கள் தயார் செய்வதற்காகப் பல நாடுகளிலும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.
சீத்தா ஆங்கிலத்தில் சர்க்கரை ஆப்பிள் ( sugar apple) எனப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் இதன் சதைப்பகுதி விருப்ப உணவாகக் கொள்ளப்படுகிறது. பழத்தில் 1.6% புரதம், கொழும்பு 0.4% , நார்ச்சத்து 3.1%, மாவுச்சத்து 23.5% மற்றும் ,தாது உப்புக்கள் (100 கிராமுக்கு 0.9 கிராம் அளவில்) காணப்படுகின்றன. அதோடு , பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தையமின், ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன . பழச்சாற்றில் 20% அளவிற்கு சர்க்கரைச் சத்து நிரம்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது .…
௮ரைகீரை தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளை கீரையாகக் கடைந்தோ ௮ல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம். அதோடு இதன் தண்டுகளைக் கடைந்தோ, கூட்டு ௮ல்லது சாம்பாரில் இட்டு வேகவைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இலைகளில் புரதச் சத்து 5.2%, கொழுப்பு 0.3%, நார்ச்சத்து 6.1%, மாவுச்சத்து 3.8% மற்றும் தாது ௨ப்புகள் 2.8% ௮ளவிற்கு நிறைந்துள்ளது. அதோடு ,கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-சி அகியவையும் அடங்கியுள்ளன.
பிரப்பன் கிழங்கு பிரப்பன் பழத்தைப் பசுமையாக அல்லது ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம், பலவிதமான நுண் சத்துக்கள் நிறைந்தது. மேலும் இதனால் மிகுதாகம் மற்றும் நாவறட்சியும் கட்டுப்படும். இளம் தண்டுப் பகுதியை பசுமையாகவோ, சமையல் செய்தோ சாப்பிட உடலுக்கு நற்பயன் விளையும்.
செம்பிரண்டை பாரம்பரிய பழங்குடி மக்கள் இதன் பழங்களை விரும்பி உண்கிறார்கள். இலைகளை சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் அடி வேர்களை சிறு துட்டுகளாக்கி,அரைத்து இஞ்சிக் குழம்பு வைப்பது போல காரக் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பு அகலும், தொடை வலியும் குணமாகும்.
காட்டுச் சேனை அடிகிழங்குளை சிறு துண்டுகளாக்கி, புளியன் இலை சேர்த்து வேகவைத்து அதிலுள்ள அரிப்புத் தன்மையான(நமநமக்கும்) காரப்பண்பினை நீக்கி விடலாம். பின்னர்,இதனை,பொரியல்,காரக்குழம்பு அல்லது ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பாரம்பரிய மக்களிடம் இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது.
ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி…
அழிஞ்சில் அழிஞ்சில் பழங்கள் உண்ணுவதற்கு இனிப்புச் சுவையுடன் கூடிய புளிப்புத் தன்மை கொண்டவை, மார்ப்புச் சளியைக் குறைக்கும் மற்றும் மலமிளக்கும் தன்மையானவை. குறைந்த அளவில் உண்பது கண் ஒளியைக் கூட்டுவதுடன் இரத்தப் போக்கையும் தடுக்கும்
நாயுருவி நாயுருவியின் இலைகளைக் பிற கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட உடலுக்கு வலு சேர்க்கும். விதைகளைச் சேகரித்து, மேல் தோல் நீக்கி தினை அரிசியை சமைப்பது போலச் சமைத்து சாப்பிட உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. எனவே, நீண்ட நேரம் தியானத்தில் அமர்பவர்கள் மட்டும் இதை பின்பற்றலாம். மேல் தோல் நீக்கப்பட்ட இதன் விதைகளில் 22.5% புரதமும் , 4.7% கொழும்பும் , 56.1% மாவுப் பொருட்கள், 1.8%…
துத்தி துத்தி இலைகளைத் துவையல் செய்து சாப்பிடுவது அஜிரணித்திற்கு மருந்தாகும். மேலும் இது முலநோய்க்கும் மருந்தாகிறது. துத்தி இலைகளை நெய்யில் வதக்கித் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூலம் குணமாகும். இலைகளைக் காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வெள்ளைபடுத்தல் குணமாகும். இலையைக் கஷாயம் செய்து கொப்பளிக்க பல்வலி குணமாவதுடன் ஈறு வீக்கமும் வடியும். இலைகள் மற்றும் தண்டுகளில் வைட்டமின் சி (31.1 மி.கி. /100 கிராம்) அடங்கியுள்ளது. துத்திப்…
குன்றிமணி (Abrus precatorious) குன்றிமணிக் கொடியின் வேர் “நாட்டு அதிமதுரம்” எனவும் கூறப்படும். இதன் இலைகளை வாயிலட்டு மென்று சாப்பிடலாம். அளவாக 5-10 இலைகள் சாப்பிட மலமிளக்கியாகச் செயல்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்கள் இந்த இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். அதிகமாகச் சாப்பபிட்டால் பேதியாகும், எனவே எச்சரிக்கையுடன் சாப்பிட்டு வர வேண்டும் இலைகளை உலர்த்தி,தேனீர்.தயாரிப்புக்கான மூலிகைப் பொடியாகவும் செய்து கொள்ளலாம். இலைகளில் ‘கிளைசிரைசின் எனப்படும் ‘செயல்படும் முலக்கூறு’ காணப்படுகிறது. இலைகளைக் கொண்டு கொதிநீர் தயாரித்து சாப்பிட…
பலாப் பழம் முக்கனிகளில் ஒன்றானது பலா, இது இனிப்பு சுவை கொண்டது. பல விதமான பலா மரங்கள் இருந்தாலும் வேர்ப் பலா மற்றும் மலைப் பலா சிறந்தது என்பார்கள். இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை உண்டாக்கி வயிற்று கடுப்பு, வயிற்று வலி முதலியவற்றை உண்டாக்கும். இதில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவாக சாப்பிட வேண்டும். பயன்கள் கண் நோய் வராமல் தடுக்கும் உடம்பில் உள்ள புண்களை பொங்கி வரச் செய்து…
முலாம் பழம் கோடைக் காலத்தில் இயற்கை நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை இந்த முலாம் பழம். 75 சதவீதம் நீர் சத்தும், இரும்பு சத்தும் நிறைந்தது. உடலிற்க்கு குளிர்ச்சியை தந்து கோடைக் கால உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறது. பயன்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் கட்டிகள், பருக்களையும் போக்கும் மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரை அதிக அளவு உற்பத்தி செய்து தேவையற்ற அசுத்தங்களை வெளியே கொண்டு வரும்.
லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு மற்றும்…
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு…
இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சீத்தாபழம் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது.சீத்தாபழம். கிராமங்களில் வீடுதோறும் பயிரிடபட்டு இருக்கும் பழம் சீத்தாபழம் தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் வளர்க்கப்பட்டு வருகிறது.. இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்தது சீத்தாபழம்
அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம். சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான்…
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…
துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…
சிம்மம். 1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்– கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல்…
ஆப்பிள் பழம் ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் சக்தி நிறைந்த பழமாகக் கருதப்படுகிறது. 30 சதவித தண்ணிரும், வைட்டமின் “சி” மற்றும் தாது உப்புகளும் நிறைந்தது. நெல்லிக்கனியோடு ஒப்பிடும்பொழுது இதன் சக்தி குறைவுதான். ஆப்பிள் பல வகையாக இருந்தாலும், சிவந்த நிறத்தில் மேற்பகுதியும் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம் சிறந்தது. பயன்கள் 1, இரத்த சோகையை குணப்படுத்தும். 2. உடல் தோல் சுருக்கத்தை நீக்கும். 3. கண், பல் வியாதிகளை குணப்படுத்தும் 4. சிறுநீரகக்…
அன்னாசிப்பழம் இந்த அன்னாசிப் பழத்தின் அமைப்பு வேறுபட்டிருக்கும், 75 சதவிதம் தண்ணீர் கலந்துள்ள இந்தப் பழத்தின் உள் அமைப்பும் மிக வித்தியாசமாக இருக்கும், இது ஒரு காரல் தன்மையைக் கொண்டது, வைட்டமின் “சி”டிநிறைந்தது. பயன்கள் அன்னாசிப்பழம் பல், எலும்பு, தோல் வியாதிகளை குணப்படுத்தும், ஸ்கர்வி வியாதிக்கும் நல்ல மருந்து. வாரத்திற்கு மூன்று நாட்கள் பயன்படுத்தினால் போதும். நிமோனியா உள்ளவர்கள் நாள்தோறும் 200 கிராம் வீதம் தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
சப்போட்டாப் பழம் சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை. இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது. அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது. இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. பயன்கள் சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள் 1, இரத்த சோகையைப் போக்கும் 2, உடலின் கருமை நிறத்தை மாற்றும் 3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் 4, அதிக பேதி…
திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…
சுக்கிரன் – களத்திரகாரகன் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் திசை புக்தியில் திருமணம் நடக்கும் ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும்,…
பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும். அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. நாவல்…