மன முதிர்ச்சி  3

நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். Understanding the difference between the basic needs and what we want. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.  Reaching the status that happiness is not connected. with material things.

மன முதிர்ச்சி  2 

செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை…

மன முதிர்ச்சி – Maturity of Mind 1

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

உரையாடலின் ஒரு பகுதி  107

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாக போக வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் அதை எவர்கள் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதிகம் வருத்தப்படுவது இல்லை. மனித பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயம். மனித பிறவிகள் அனைத்திற்கும் ஒரு விஷயத்தில் என்று மட்டும் பலவீனம் இல்லை நபருக்கு நபர் சூழ்நிலை, அறிவு அந்தஸ்து மனோபாவம் போன்றவைகளை கொண்டே பலவீனங்கள் வெளிப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  106

கனவுகளிலும், கற்பனைகளிலும் யூகித்துக் கொண்ட அனுபவம் (இறைவழிபாடு, இறையை தேடுதல் முக்தி போன்றவை) இது போல் காதலும், குடும்ப வாழ்வையும் சேர்த்துக்கொள்ளலாம் யதார்த்திற்கு வரும் போது பல பேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதை பார்க்கலாம்.

உரையாடலின் ஒரு பகுதி  105

உலகிலேயே ரொம்ப துர் அதிர்ஷ்டசாலி 10 பேர் நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன். தனிமையில் இருக்கும் போது 10 பேர் வேண்டும் என்று தவிப்பவன்.

உரையாடலின் ஒரு பகுதி  104

யதார்த்தமான உண்மை – தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும் மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும் மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.

உரையாடலின் ஒரு பகுதி  103

பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும் ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும் ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால் காதல் எனும் அன்பில் முடியும். இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும். ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  102

தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும் அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம் செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ் எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம் வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம் இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும் அதுவே _ஷடாங்கம் அதுவே…

உரையாடலின் ஒரு பகுதி  101

தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.

உரையாடலின் ஒரு பகுதி  100

ப்ருத்ருஹரியின் நீதி சதகம் அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே விஷேச- ஞானலவ _துரீவிதக்தம் ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி.. இதன் பொருள் – அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம் அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம் மிக குறைவாகவே அறிந்து எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.

உரையாடலின் ஒரு பகுதி  99

ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனதளவில் இறந்து போக தொடங்கினால் அதற்கு பிறகு அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது நிற்கவும் நிற்காது.

உரையாடலின் ஒரு பகுதி 98

எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.

உரையாடலின் ஒரு பகுதி  97

காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.

உரையாடலின் ஒரு பகுதி  96

எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி.   எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…

உரையாடலின் ஒரு பகுதி  95

அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்

உரையாடலின் ஒரு பகுதி  94

இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும்  உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  93

வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி  92

ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்

உரையாடலின் ஒரு பகுதி  91

அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.

உரையாடலின் ஒரு பகுதி  90

கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.

உரையாடலின் ஒரு பகுதி  89

இப்படிதான் வாழ வேண்டும் என்ற நியதியோ, நியாயமோ, வரம்போ எந்த ஒரு வாழ்க்கையையும் இந்த ஜென்மத்தில் வாழாதவனால் அடுத்த ஜென்மத்தில் மட்டும் எப்படி (அப்படி பட்ட) ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகில் அறிவினாலும் மனதினாலும் வாழ விரும்புவர்கள் இந்த உலகில் புதிய ஆண்மை ஒன்றை படைத்திருக்கிறார்கள் அதுதான் சான்றாண்மை சால்பை ஆள்வது தான் சான்றாண்மை, சான்றாண்மை குணத்தை விரும்புகிறவர்கள் எதை எதிர்ப்பதையும் வீரமாக கொள்வதில்லை பொறுத்து நிற்பதை தான் வீரமாக கொள்கிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி  88

அழுக்கு படாமல் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமல் போய்விடும். அன்பில்லாமல் கருணை இல்லை எல்லையை உடையது அன்பு எல்லையற்றது கருணை அன்பு முதிர்ந்து தான் கருணையாக மாற வேண்டும் அன்பே இல்லாத கருணை உலகில் தோன்றியதில்லை. பூ அழிந்து தானே காய் உண்டாகிறது

உரையாடலின் ஒரு பகுதி  86

மனித குலம் இத்தனை பாடு பட்டும் இன்பமாய் சந்தோஷமாய் ஆனந்தமாய் இல்லாதிருக்க காரணம் அவரவர்களின் பதிவுகளே முதலில் நாம் நம் மனதின் துணை கொண்டு அதாவது மனதின் அறிவு கொண்டு நம் பதிவுகளை அறிவோம் பின் அந்த பதிவுகள் இல்லாமல் செயல் புரிவது எப்படி என்று பார்ப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  85

 கீதை அதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. கர்மத்தை செய், பலனை எதிர்பார்க்காதே என்று. அதாவது, அதை புரிந்து கொள்ள வேண்டிய விதம் கர்மத்தை செய். பதிவுகளை உருவாக்காதே என்பதே பதிவுகளில் நல்ல பதிவு, கெட்ட பதிவு என்று இல்லை ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. பதிவு என்பது வேண்டாம் என்பதே

உரையாடலின் ஒரு பகுதி  84

மேலே சொன்ன திரைகளனைத்தும் நம் செயல்களின் விளைவுகளால் உண்டானது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் உண்மை என்னவென்றால் நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இது தான் இதை அறிந்து கொண்ட பின் நாம் நமது செயல்களில் கவனம் வைத்து செயல்களை செய்து பழக வேண்டும் அது எப்படியென்றால் செயல்கள் இருக்கும் விளைவுகள் இருக்கும் ஆனால் பதிவுகள் இருக்காது. இந்த முறையில் செயல்களை செய்ய தான் கீதை நமக்கு அறிவுறுத்துகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 83

அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது காம, குரோத, மோக, மத மாச்சர்யம், அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது. சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும் ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால் அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு அறிவேயல்ல என்பது…

உரையாடலின் ஒரு பகுதி  82

 இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம் அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது. அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது. இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல் பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  81

நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…

உரையாடலின் ஒரு பகுதி  80

எல்லாம் நம் மனதில் இருப்பதே அப்படி இருப்பதை வெளி கொணர உண்டான சாதனமே. மனம் புறம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அது ஆதவனாகட்டும் அல்லது அடுப்படி ஆகட்டும் ஆதவனின் உதயம் மனதிற்கு தரும் உணர்வு, அடுப்பு எனும் புறப்பொருள்.  நம் மனதிற்கு தரும் உணர்வு இரண்டும் ஒன்றா என்று யோசித்தால் இல்லையென்ற பதிலே வரும் அப்படியானால் அந்த புறப்பொருள் மூலம் நாம் அடைந்த உணர்வு அகத்தில் என்பது புரியும் அதில் கவனம் செலுத்தி பார்க்கும் போது காலப் போக்கில்…

உரையாடலின் ஒரு பகுதி  79

அறிந்து கொள்வது அறிவெனப்படுவது அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம் அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது. அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம். ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை. புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  78

சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம். மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது. இது புரிந்து கொள்ள முயலும் போது முரண்பாடாகவே தோன்றும் புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.

உரையாடலின் ஒரு பகுதி  77

அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் இன்ப துன்பமென்ற ஆசிரியரிடம் கற்று அதன் வழியே குருவிடம் வரும் போது அனுபவத்தின் மூலம் நாம் அதை கண்டு உணர்ந்து கொள்ளலாம் வேறு வழி_ இருப்பதாக தெரியவில்லை. சரியாக சிந்தித்தால் இன்ப துன்பங்களால் உண்டான அனுபவபதிவே குண இயல்புகளாக மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  76

அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய   நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.   

உரையாடலின் ஒரு பகுதி  75

 அதுவும் நிரந்தரமாக இது கேட்பதற்கும், படிப்பதற்கும் புரியாதது போலவும், புதிரானது போலவும் இருந்தாலும் உண்மை இதுதான். படிப்பினையே ஒரு மனிதனை புடமிடுகிறது. அந்த படிப்பினை இந்த உலகத்தில் இன்பம், துன்பமாக இருக்கிறது. அவரவர் வினை விதிப்படி இன்ப, துன்ப என்ற ஆசிரியர்கள் மூலம் வெறும் சாதாரண அறிவானது ஒரு கால கட்டத்தில் பிரபஞ்ச அறிவாக மாறுகிறது.

 உரையாடலின் ஒரு பகுதி  74

ஒரு மனிதனின் லட்சியமே இந்த பிரபஞ்ச அறிவை பெறுவது தான் அதற்கு மனிதன் தற்போது தான் கொண்டுள்ள அறிவை எல்லாம் முழுக்க, இழக்க வேண்டியது மிக அவசியமாகிறது. தற்போது, மனிதன் கொண்டுள்ள அறிவினால் அழிவும் அனர்த்தமுமே விளையும், விளைகிறது. ஆனால், பிரபஞ்ச அறிவை கொண்ட மனிதன் அன்பும் ஆனந்தமும் இன்பமும் உடையவனாகவே இருக்கிறான்.

உரையாடலின் ஒரு பகுதி  73

அதில் உள்ள கருத்து இன்பத்தை, சந்தோஷத்தை இன்பம் சந்தோஷம் என்று சொல்லாமல் அறிவு என்ற ஒரு வார்த்தையில் குறிப்பிட்டு அந்த அறிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் அந்த அறிவை நாம் பெற்றால் நாம் நினைக்கின்ற, நினைத்துக் கொண்டிருக்கின்ற நிரந்தர இன்பம் நம் வசப்படும் என்கிறார்கள். அது என்ன அறிவு என்று சிந்தித்தால் அந்த அறிவுக்கு பிரபஞ்ச அறிவு என்ற விளக்கம் வருகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  72

இது எதனால் தொடர்ந்து இன்பம் தர கூடியது மனிதனிடம் _நிறைய இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் அவனுக்கு இன்பம் எது தந்ததோ அதனை சீ சீ என்று ஒதுக்கிறானே இது ஏன்? இப்படி சிந்தித்துக் கொண்டே போனால் நாம் வேதங்கள் உபநிஷத்துகளிடம் தான் சென்றடைய வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை அது பொய்யான கற்பனையாக நமக்கு தோன்றினாலும் அதில் தான் உண்மையே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதில் மட்டும் தான் நிரந்தர இன்பம் பற்றியும்…

உரையாடலின் ஒரு பகுதி 71

மனித வாழ்வின் லட்சியம் எது? இது வினா, பதில் நிறைய வருகிறது கூட்டி கழித்து பார்த்தால் மனிதன் சந்தோஷமாய் இருப்பது பதில், இத்தனை தான் என்று நினைத்தால் இதில் எத்தனை கிளை பதில்கள் சந்தோஷத்தை நாடி இன்பத்தை தேடி என்று மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுக்கு இன்பத்தை தந்துவிட்டதா என்றால் பூரண இன்பம் தரவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், நிரந்தர இன்பம் எது என்ற வினாவை வைக்க வேண்டியிருக்கிறது. இனிப்பு பண்டம்…

உரையாடலின் ஒரு பகுதி 70

வானின் நட்சத்திரங்களை விஞ்ஞானி கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். ஞானியின் உள்ளத்தில் வானின் நட்சத்திரங்கள் இடம் கொள்ளுகின்றன இவை இரண்டும் என்றுமே ஒன்றாகாது. எப்போதுமே எந்த துறையிலுமே அரை வேக்காடுகளினால், தான் கோளாறு உண்டாகிறது. ஆத்ம தரிசனத்தின் முன்னனியில் கருணை, அன்பு மிக முக்கியமானது ஆனால் ஆத்ம தரிசனத்தின் அரை வேக்காடான நிலையில் மத வாதம் கருணையற்ற ரணகளங்களை சரித்திரத்தில் ஏற்படுத்துகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 69

மனதிற்கு பற்றுதல் இல்லாத சூழ்நிலையில் இருந்தும் ஒட்டுதல் இல்லாத உறவுகளில் இருந்தும் விடுபட்டு வெளியேறுவது மனதிற்கு எத்தனை சந்தோஷம் தருகிறது. அந்த சந்தோஷம் நீடித்து நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? ஒன்று தான் செய்ய வேண்டும் பற்றுதலோடும், ஒட்டுதலோடும் பிரபஞ்சத்தை படைத்த இறையின் உணர்வோடு இருக்க வேண்டும் அத்தனைதான். விஞ்ஞானம் மனிதனின் உச்ச கட்ட முயற்சியின் விளைவு ஆன்மீகம், மனித முயற்சிகளை துறந்த ஆழமான செயலின்மையின் விளைவு.

வாழ்க்கை 9

வாழ்க்கை என்பது கற்பனை அல்ல யதார்த்தம் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் பெறுவதற்கு எதை, எதை இழந்தோம் என்றும் இழந்ததற்கு எதை எதை எப்படி எப்படி எவர் எவரிடம் பெற்றோம் என்றும் நடு நிலையில் தனக்குள் உண்மையாய் சிந்தித்து பார்த்தால் மட்டுமே தெரியும் விளங்கும்.

ஆசிரியருக்கு உண்டான தகுதி வரையறை

நிலத்தை போல தம்மை அடைந்தவர்களை தாங்கும் பொறுமையும் மலையை போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ள குறையாத வளமும் நல்ல நறுமணம் தரும் மலரை போன்ற மென்மையும் துலாகோலை போல நடுநிலை பிறழாத தன்மையும் உடையவரே ஆசிரியர் ஆவர்.

அறிவு என்பதற்கு வரையறை

அறிவு என்பதற்கு வரையறை நல்லதின் நலனும் தீயதின் தீதும் உள்ளவாறு அறிதலே அறிவு என்பதாம் இதில் எங்கு பிழை ஏற்படினும் மிக்க கற்றவரேயானாலும் அவர் அறிவு அற்றவரே

வாழ்க்கை 8

நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும் போது நம்முடைய நினைவில் அந்த வினாடி வரை தோன்றாத ஏதேனும் ஒரு திசையை காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதின் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே யாரோ வந்து போகிறார்கள். அதன் காரணங்கள் நமக்கு தெரிவதில்லை நமக்கு தெரிந்த காரணங்கள் அதற்க்கு பொருந்துவதில்லை இது  தான் வாழ்க்கையின் சூட்சுமம்

வாழ்க்கை. 7

நம்முடைய வினைகள் நமக்குத் தெரியத் தொடங்கும் போது நாம் எதை, எதை எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டி வரும் என்பது தெரிந்து விடும். அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய் விடும், பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும். தெளிவு வந்து விட்டால் சிந்தனை சரியாய் அமையும். சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும். சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும் அப்போது பாபம் பின் தொடராது. பாபம் தொடராத வாழ்க்கை அமைவது…

வாழ்க்கை. 6

தன்னைத்தான் அறிய வேணும் சாராமல் சார வேணும் பின்னைத் தான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி – அகப்பேய் சித்தர். தேவையைப் பற்றியும் ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அது தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும். பேயறிவு என்று அவர் சொன்ன காரணம் அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தை போக்காது, புண்ணியத்தை சேர்க்காது முக்கியமாக தன்னை அறிந்திருக்காது. தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத்…

வாழ்க்கை.5

உண்மையில், நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப்பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால் நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம். நாம், உடலை பற்றி அறிந்து கொண்டால் தேவையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது இரண்டை பற்றியும் அறிந்து கொண்டவர் எல்லாம் அறிந்தவர் ஆகின்றனர்.

வாழ்க்கை. 4

 நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம். இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்ல தோன்றுகிறது,  இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது நோக்கமாகிவிட்டது. அப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறிதானே போகும். வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மானது வினைகளை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்து விட்டது.

வாழ்க்கை.3

தன்னைப் பற்றிய சிந்தனையை  தேவைகளில் செலுத்தும் போது நன்மை  நம்மை நாடி வரும் தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக, அதிகமாக தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும்.  இதை புண்ணியம், பாபம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில் நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும்.

வாழ்க்கை. 2

உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்ய தொடங்கிவிடுகிறது. அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல் அமிர்தமும் நஞ்சாகிறது. நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கி விட்டாலே நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.

வாழ்க்கை. 1

மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும்  நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது, பசி, தூக்கம், போன்றவை, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும்போது, நன்மையோ, தீமையோ உண்டாகிறது.

வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

    நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.   இந்த நொடி முதல் யாவும் மாறும், மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்…. செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டு வளமாக வாழ்வோம்…

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்.. உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.. இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

அந்தணர்கள் மனிதனை பற்றி

அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள் மனிதனின் போருக்கு காரணம் மண், பெண். அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை.  என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை. கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து. இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி முடிந்தால் நீதி சொல்வது இல்லையேல் மவுனமாக இருப்பது.

எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்

இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம். அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு. அந்தணர்கள் கர்வம் வினோதமானது அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும்.  வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும். எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் அதுதான் வாழ்க்கையின் அடிப்படை உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணர்வு உனக்குள் நீ

உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது,  அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது. பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.  

சமத்துவ சிந்தனை 5

வெள்ளையாய்யும் – நீர்ம நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பாலும், கள்ளும் ஒன்று என்று சொல்லுவது அறிவுடைமை ஆகுமா? அப்படி இரண்டையும் ஒன்றாய் பாவித்தால் பலன் ஒன்றாய் வருமா? இப்படி எல்லாம் யோசிக்கும் போது சமத்துவம் என்பது இயற்கைக்கு மாறுதலான விஷயம். அதனால், நெடு நாட்கள் அந்த தத்துவம் நிலைபெறாது என்ற முடிவுக்கு தான் வர வேண்டியயிருக்கிறது.

சமத்துவ சிந்தனை 4

கிரககிக்கும் ஆற்றல் செயல்படுத்தும் திறமை போன்றவற்றில் பல்வேறு வித்தியாசங்களை சமமாய் பாவிப்பது எப்படி சரியாய் வரும். சமத்துவத்தை சமநிலையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்துவது சரியா? அப்படி செய்தால் எதிர் கால வளர்ச்சி என்பது சரியாய் வருமா? தனிப்பட்ட மனிதனின் ஆற்றல் மனிதருக்கு மனிதர் வேறுபடுவதை கண்கூடாய் நாம் காணும் போது எப்படி சமன் செய்ய முடியும்.

சமத்துவ சிந்தனை 3

நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.

சமத்துவ சிந்தனை 2

சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது. ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று, எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட  தத்துவம் தானே சமத்துவம் என்பது  ரொம்ப சரியான தத்துவம் தானே என்று தோன்றினாலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.

சமத்துவ சிந்தனை 1

சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது.  அதிலும் முக்கியமாக அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில் சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும். அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும். அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.

தற்போதய சமுதாய சூழ்நிலையில்

தற்போதய சமுதாய சூழ்நிலையில் அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது காரணம் என்று தேடினால் நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது. விளைவு சரி  தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு இல்லாமல் போய்விட்டது அதனால் ஏமாற்றுதல் என்பது வாழ்க்கையின் நியதியாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும் அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.   பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, ‍தொழில் என்று எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம். இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து சரி செய்து விட்டால் குடும்பம்…

கணவன், மனைவிக்கிடையே

கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால்

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சியை விட நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள்

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 4

எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும். நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் ! நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள். உறுதி காட்டியதில்லை. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள். நான் தலையிட்டுள்ளேன் !! உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்திருக்கிறேன் !! மேற்சொன்ன  கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க…

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 3

நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம். எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !! உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம். பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !! உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள். நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 2

பிறரது பொறுப்புகள் குறித்து, சதா பேசிக் கொண்டிருக்காதீர்கள். அதை மட்டும் தான் செய்துள்ளேன் !! கேட்டால் மட்டும் உதவுங்கள். உணர்ந்து உதவினேன் !! மற்றவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறேன் !! எந்த ஆபத்தும் வளர்ந்து, உங்கள் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு விடாதீர்கள். பல ஆபத்துக்களில் என் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 1

மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.   மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து ஆலோசனைகள் சொல்லிகொண்டே  இருப்பேன் கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள். பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை, வந்தால் ருத்ரதாண்டவம் தான் ! யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள். நான் பலபேர் மத்தியில் பாராட்டியுள்ளேன்

உரையாடலின் ஒரு பகுதி 68

எப்போதுமே ஆசை வேகம் கொடுக்கும் நிறைவேறாத ஆசை ஏக்கம் வளர்க்கும், ஏக்கம் சோர்வு தரும் சோர்வு ஆசைக்கு எதிர்மறையான விஷயம் அப்படியிருக்கும் நாம் ஆசையினால் ஏக்கப்படாமல் தேடுவதே ஏக்கத்தை தொலைக்கும் விஷயம் இது தெரிந்து விட்டது என்றால் எதிர்பாராமல் ஆசை கைகூடாவிட்டாலும் நம்மை ஏக்கமும் சோர்வும் ஆட்கொள்ளாது காரணம் ஆசையை அடைய நாம் எடுத்த முயற்ச்சிகள் நமக்கு அனுபவமாயிருக்கும்.

உரையாடலின் ஒரு பகுதி 67

எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.

உரையாடலின் ஒரு பகுதி 66

 பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 65

ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை. 

மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.

மது அருந்த

மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும்.  மனசு வீரியம் கொள்ளும்.  உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 6

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 5

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 4

மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 3

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2

உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 1

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ…

இதை புரிந்ஞசுக்க முடியுமா

இதை புரிந்ஞசுக்க முடியுமா – முடியுதா? மனிதர்களை அதிகம் நேசிக்க கூடாது.  உறவாகட்டும், நட்பாகட்டும் அதிகமான நேசிப்பு பிரச்சனையை தருது. பிரச்சனையில்லாம இருக்கனும்னா ஒரு எல்லையை வகுத்துக்கறது நல்லது. அது கணவன், மனைவி, காதலன், காதலி, அண்ணன், தம்பி, இன்னும் இப்படி எத்தனையோ எங்க பிரச்சனை வருதுன்னு பார்த்தா நேசிகப்படுகிறவர்களின் தனிமை கெடுது அதாவது ( INDUJUVALITY) கெடுது அதானல மனசோட மூலையில் சின்னதா வர்ர எதிர்ப்பு காலப்போக்குல வன்மமாகி,பெரிய மன உளைச்சல தந்துறுது இன்னொரு விஷயம்…

வாழ்க்கையின் ஓட்டமே

வாழ்க்கையின் ஓட்டமே அடுத்தவர்களின் அபிப்பராயத்தில் தானே முக்கால் பாகம் ஓடுது. இப்படி இருக்கும் போது அவரவர் வாழ்க்கை என்பது எது, ஏது அடுத்தவர்களின் அபிப்பராயத்தை ஒதுக்க முடியுமா? முடியாது என்றால் அவரவர் வாழ்க்கையை அடையாளம் காணுவது எப்படி? அடுத்தவர் நம்மை அடையாளம் கண்டு கொண்ட பின்தான் நாம் நம்மை அடையாளம் காணவேண்டுமா? அப்படி அடையாளம் கண்டாலும் மாறுதல் ஏதாவது இருக்குமா? அப்படி மாறுதல் இருந்தாலும் அதை வெளிப்படையாய் சொல்ல முடியுமா? சொல்லித்தான் ஆகவேண்டுமா புரியவில்லை காரணம் புரிந்து…

மனதை கொண்டு தேடும் முறை

ஆதிசேஷன் என்று சொல்கின்ற பொழுது அது ஒரு மிகப் பெரிய பாம்பு . அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது, அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன் உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருக்கு குடையாக வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயம் ஆனால் சூக்‌ஷும நிலையில் வேறு பொருள் தெரியவரும் ஆயிரம் ஆசைகளை அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து, தலை குனிய வைத்து, அந்த ஆசைகள் எழ முடியாத…

ஒவ்வொரு நாளும் காலம்

ஒவ்வொரு நாளும் காலம் நம் உடம்பை தின்று கொண்டிருப்பது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை காலன் மனிதனின் காலுக்கு அடியிலோ, முதுகுக்கு பின்னோ இருப்பதை அவன் அறிவதில்லை. மாயை மறைக்கிறது என்ற நினைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு என்ன நினைப்பது? எப்படி நினைப்பது?

வெற்றியாளர்கள்

திறமையற்றவர் என்று யாரும் இல்லை தனக்கு எதில் திறமை என்று அறியாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம் அவர்களே உலகத்தோரின் கண்முன் தோல்வியாளர்களாக தென்படுகின்றனர். அவரவர்களுக்கு எதில் திறமை என்று அறிந்தவர்கள் அதை சரியான சந்தர்பத்தில் மிக சரியாக பயன்படுத்தி வெற்றியாளர்களாக உலகோர் முன் காட்சி அளிக்கின்றனர்.

லோகாதாய வாழ்க்கையினால்

உலகாதாய இலக்குகளை அடைய அதை பற்றிய வெளி உலக அறிவை பெற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் நம் வாழ்வை அதனோடு மட்டுமே என்று இருக்கும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கும் லோகாதாய பயனால் நம்முள் அகங்காரம் வளர்கிறது. அது நாம் பிறறை மதிக்க வேண்டும் மூத்தோர்களை குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது அது மட்டுமல்லாமல் சுய நலமும் எவேராடும் ஒட்டாத பண்பும் எதையும், எவரையும் மிக அலட்சியபடுத்தும் தன்மையும்…

நமது கலாச்சாரம் 3

நமது பெண்கள் மேலை நாட்டு பெண்கள் போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் (அதாவது உடை, ஒழுக்கம், வேலை, அறிவு) நாம் நமது கலாச்சாரத்தை இழந்துவிடுவோம் இது ஏனோ நமக்கு புரியவில்லை காரணம் நமது பெண்கள் தங்களின் தூய தவ வாழ்வை இழக்க நேரிடும் அதனாலேயே அந்த மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் வேண்டாம் என்று நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது.

நமது கலாச்சாரம் 2

ஏதாவது காரணம் சொல்லி நம் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டே இருந்தால் இழப்பு நமக்கும் நமது அடுத்த தலைமுறையினர்க்கும் அடுத்தது மிக முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும் தான்.

நமது கலாச்சாரம் 1

இந்திய நாட்டின் மிக பெரிய சொத்து எது என்று கேட்டால் அதனுடைய கலாச்சாரம் தான். கலாச்சாரம் என்று நாம் எதை குறிப்பிட்டு சொல்லுவது உண்மையில் நம்முடைய கலாச்சாரம் என்பது நம்முடைய வாழ்க்கை முறைதான் நம் வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் ஆகட்டும், உடையாகட்டும், பேச்சு அதாவது மொழி, கலை, தினசரி நாம் மேற்கொள்ளும் பணிகள் நமது நம்பிக்கைகள் இது அனைத்தும் சேர்ந்தது தான் நமது கலாசாரம்,

வெற்றி

ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி என்ற நிலையில் இருந்து மாற்றி அந்த வெற்றியை பிறருக்கும் அல்லது பிறரும் மகிழத்தக்கதாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை தான் வளரும் போதே தன்னோடு உள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்த கலை கை கூடுகிறது. தேனீயின் உழைப்பிற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் தருகிறோம் காரணம் அது மற்றவர்களுக்காக உழைப்பதால் தான்.

உழைப்பின் உன்னதம்

ஆசைப்படாமல் உழைக்க மனம் வராது ஆர்வம் இல்லாமல் செயலில் வெற்றி கிடைக்காது உலகில் மிக, மிக உன்னதமான உழைப்பே அதன் ஆற்றலே மனிதனை இப்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

உழைப்பினால்

உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும் எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும் அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும் மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.

நேர கெடு

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரக்கெடு அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கம் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யும் போது நம் மனதுக்கு உண்டாகும் ஆனந்தமே தனிதான் எந்த வேலையை செய்வதற்கு முன்னும் அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டியது முக்கியம் அப்படி தீர்மானிக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தும் பழக வேண்டும். ஏனென்றால் கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாமதங்கள் பல அபாயகரமான முடிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி. விடும்

பெரிய சாதனை 5

இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில் நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம். மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும் மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .

பெரிய சாதனை 4

இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்

பெரிய சாதனை 3

அப்போது இளவரசன் முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட்டு ஓடினான் அதை பார்த்ததும் வீராங்கனையின் ஓட்டம் குறைந்தது அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது

பெரிய சாதனை 2

ஒட்டபந்தயத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கும் ஒரு இளவரசனுக்கும் போட்டி நடந்தது. அதில் வீராங்கனை இளவரசனை முந்தி ஓடும் போது இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிளை தரையில் வீசினான் அதை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது பின் அதை எடுத்து வேகமாக ஓடினாள்

பெரிய சாதனை 1

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால் அது பெரிய சாதனைதான் மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது சஞ்சலம் கொண்ட மனமே.

மரண பயம்.

உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும் பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம் முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம். பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை இந்து…

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 2

உண்மையில் ஆன்மீகத்தின் முகவரியை சிந்தித்து பார்த்தால் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கதைதான். அது, இது, எது, அப்படி, இப்படி எப்படி, ஏன், எதற்கு, என்பது போல் இன்னும்  உள்ள பல ஊசலாட்டங்கள் தான் ஆன்மீகத்தின் முகவரிகள்.

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 1

தனி ஒருவருக்கு உணவில்லையென்றல் ஜகத்தினை அழிப்பது பாரதியின் ஆன்மீகம், அடங்கமறு, அத்துமீறு புரட்சி செய் இது ஒரு கூட்டாரின் ஆன்மீகம், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது ஏசு பிரான் ஆன்மீகம் ஏழைகள் சிரிப்பினில் இறைவனை காண்பது பகுத்தறிவாளர்கள் ஆன்மீகம். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிட்டு கொள்ளுங்கள் என்பது மருத்துவர்கள் ஆன்மீகம் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது கண்ணனின் ஆன்மீகம்.

விமர்சனம் செய்யுங்கள்

விமர்சனம் செய்யுங்கள் அதே நேரம் வாழ்த்தவும் செய்யுங்கள் கேள்விகள் கேளுங்கள் அதே நேரம் பதில்களை நம்புங்கள் சொன்ன பதில்களை கண்காணியுங்கள் அப்போது பதில்கள் பயனுக்கு வரவில்லையென்றால் கண்டியுங்கங்ள கண்டனம் செய்யுங்கள் புகார்களை சொல்லுங்கள் அதே நேரம் புன்னகை செய்யுங்கள் புதியதை முயலுங்கள் அதே நேரம் தெரிந்ததை செய்து கொண்டே இருங்கள் முன்னேறி செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் நட்பு பாராட்டுங்கள் ஒரு வேளை சறுக்கி விழ நேர்ந்தால் கீழிருந்து தாங்கி பிடிப்பார்கள். தவறு செய்த ஒருவருக்கு நம்…

பெற்றோர்களின் விருப்பமே 2       

 குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், எவர்களுடன் பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கண்டிப்பும், கண்காணிப்பும் இல்லாது போவது தவறுகளை கண்டிக்காமல் பாசம் மட்டும் மிகைந்து நிற்கும் பெற்றோர்கள் ஒரு நாள் கவலையும், கண்ணீரும் விட்டே தீர வேண்டும்.   அடங்கி இருப்பது அடிமை தனம் அல்ல என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் சொல்லி கொடுத்துவிட வேண்டும்.   ஒரு தவறு செய்த பிறகு அதை திருத்தாதவன் இன்னுமொரு தவறு செய்தவனாகிறான் இது தொடர்ந்தால் வாழ்க்கையே தவறாகி விடுகிறது.

பெற்றோர்களின் விருப்பமே 1

பெற்றோரின் விருப்பமே நமது வாழ்க்கை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும் அப்படி உணர்ந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள். இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகள் உறவு ஏனோ தடம் மாறியே இருக்கிறது இது ஏன் காரணம் எதுவாக இருக்கும் என்ற சிந்தித்தால் தகவல் தொழில் நுட்பவளர்ச்சி அடுத்தது பொறுப்பை சொல்லி கொடுக்காமல், பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று நினைத்து வளர்க்கும் பெற்றோர்கள் இதில் பெற்றோர்கள் ஏமாறும் இடமும், பெற்றோரை குழந்தைகள் ஏமாற்றும் களமாகவும், தளமாகவும் இது அமைந்து விடுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 64

 இன்றைய நிலை உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நொடி பொழுதில் தொடர்பு கெள்ள சாதனங்கள் வந்து விட்டது.   ஆனாலும் சமுதாயத்தில் அன்பு குறைந்த கொண்டே போகிறது. அன்புடன் பழகுபவர்களக்கு அந்நியர்கள் யாருமில்லை எல்லாவற்றையும் வெறுப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் நேசித்துப் பாருங்கள் புது உலகம் தெரியும்

உரையாடலின் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

உரையாடலின் ஒரு பகுதி 62

சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும் எதுவும் திருப்திகரமாய் இல்லை இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல் விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பார்க்கும்  சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள் நிலைமை இப்படி இருக்க…

உரையாடலின் ஒரு பகுதி 61

அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.  ஒரு 75 வருடங்களுக்கு  முன்  இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால் இல்லையென்ற பதில் தான் வரும் ஏன்? எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும், நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை. அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.…

உரையாடலின் ஒரு பகுதி 60

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது   என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்  

உரையாடலின் ஒரு பகுதி 59

உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.

உரையாடலின் ஒரு பகுதி 58

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.  சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.

உரையாடலின் ஒரு பகுதி 57

உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.  பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.

உரையாடலின் ஒரு பகுதி 56

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.

உரையாடலின் ஒரு பகுதி 55

அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.

உரையாடலின் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.

உரையாடலின் ஒரு பகுதி 53 

பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.  உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.  

உரையாடலின் ஒரு பகுதி 52

பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து  இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது.  ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது.  என்ன கொடுமையடா சாமி.

உரையாடலின் ஒரு பகுதி 51

ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது.  அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரையாடலின் ஒரு பகுதி 50

அந்த அமைதியில் மனிதன் பழகிவிட்டான் என்றால் நிம்மதி அவனுக்கு என்றும் நிரந்தரம் இல்லாவிட்டால்  எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்பது சாஸ்வதம். ( என்று தேடி அலைவது ) எத்தனை பேர்களால் நான் நானாக எனக்குள் எனக்காக தன் பொருட்டு தானே அமைதியாய் இருக்கும் நிலையை அடைய முடிந்திருக்கிறது. அப்படி எந்த இரைச்சலும் இல்லாமல் _வேறு வெளி எந்த இரைச்சலும் கேட்காமல் ஆடாமல், அசையாமல், ஆனந்தத்தை அமைதியாய் பருகிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை பேருக்கு வாய்க்கிறது. எத்தனை…

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்  10

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரேவழி. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து அதை அனுதினமும் நினைத்து அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம், எண்ணத்தை சீர் செய்து ஆழ்மன சக்தியை உணர்ந்து, ஏற்றமுடன் வாழ்வோம்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 9

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம் நாம் விரும்பியதை அடைய ஒரே வழி நம் எண்ணங்களை சீர் செய்வது தான் அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான் ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது நல்லது எது….??? கெட்டது எது…??? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 8

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது…??? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது…??? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது….??? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும் நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 7

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது .”இது வரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும்,இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும், இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 6

இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது இருக்க நினைப்பவர்களுக்கு வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை மனித மனம்தான் அறிவு மனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 5

நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 4

நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது இதை உணர முடிவதில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இதுவும் உண்மை.” சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது…??? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்தது பிரபஞ்சம்தான் நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை,

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 3

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது ஆனால்“பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அது உண்மை,  

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 2

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம் அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும் நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும் மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாத, மாற விரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்1

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும் ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வசிக்கப் பிறந்தோமா ??? அல்லது வாழப்பிறந்தோமா. ??? என்று

உரையாடலின் ஒரு பகுதி 49

இது புரிய அடிபட வேண்டும் அப்போது தான் தெளிவு எது என்று மனம் தேடும் அப்படி தேடும் போதுதான் செய்ததெல்லாம் எத்தனை சிறுபிள்ளைதனமானது என்று தெரிய வரும் அப்போது வரும் தெளிவில் தோன்றும் வாழ்வை அனுபவிக்க ரசிக்க ஆசை மிக பெரிய முட்டுகட்டையென்று அப்போது உண்டாகும் ஞானமே அமைதி  

உரையாடலின் ஒரு பகுதி 48

மனிதனின் நிம்மதி தொலைவதற்க்குண்டான காரணம் எது என்று யோசித்தால் வரும் பதில் இப்படி தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஆசை, அதற்கான முயற்சி, முயற்சியால் பரபரப்பு, வேகம் உடனே வேண்டும் என்கின்ற எண்ணம், அதனால் பயம், பயத்தினால் நாலு பேர் துணை, துணை செய்தவர்க்கு உதவி, உதவி செய்வதற்க்கு விளம்பரம் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செல்லும்போது நமக்கு மிஞ்சுவது நிம்மதி இழந்த நிலை

உரையாடலின் ஒரு பகுதி 47

 நாம் மறந்துவிட்ட காரணத்தால், ஒரு விஷயம் நடைபெறும் விதம் என்பது, நினைப்பது – மனம், செய்வது – உடல் எப்படி இது என்று நினைப்பது  அறிவு – புத்தி. எவர் நினைக்கிறார், எவர் செய்கிறார் இது தான் மிக பெரிய கேள்வி இதற்கு உண்டான பதில்களே வேதம், உபநிதஷம், பல்வேறு மதங்களின் கருத்துகள் இந்த கேள்விக்கு எத்தனை பேர்களால் எத்தனை காலங்களாய் எத்தனை பதில்கள் ஆச்சரியமும் அதிசயமான விஷயம் இது தான்.

உரையாடலின் ஒரு பகுதி 46

இப்படி மனதை புரிந்து கொண்டால் மனதை பழக்க, இயக்க, சுலபமாக இருக்கும் மனதை தன் இஷ்டப்படி இயக்கும் பயிற்சி பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளை நிம்மதியுடன் திருப்தியுடன் கடத்தி விடுவர். மனதை பண்படுத்தி, அதனை பயன்படுத்தி நித்திய ஆனந்ததிற்க்கு செல்லும் வழியை உபதேசிப்பதே நம் தேசத்தின் வேதா உபநிஷத்துகள் பண்பட்ட மனம் சரியான பயன்பாட்டிற்க்கு வரும் போது இறைவனை அடைய முடியும் என அறியும் அறிவுக்கான கல்வியே நமது நாட்டின் கல்வி அந்த கல்வி மறைந்து இருக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி 45

மனிதனின் அடிப்படை குண விஷேசத்தை இப்படி பாகுபடுத்தலாம் அதாவது, ஆசை, பாசம், பற்று, அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்டாவது மனதினாலேயே இதற்க்கு அடிப்படை காரணம் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு விஷயங்கள் இதற்க்கு அடிப்படையான காரணம், உயிர் வாழ வேண்டும் எனும் ஆசை நான் என்ற நினைவு இது எல்லாவற்றிக்கும் அடிப்படை மூல காரணம் மாயை எனும் அறியாமை.

உரையாடலின் ஒரு பகுதி 44

செயல்களால்,சிந்தனைகளால், மனம் இருப்பதை அறிய முடியும் ஆனால் அதற்க்கு ஆதார மூலமான ஆன்மாவை அறிய முடியாது. மனம் இறந்த நிலையே ஆன்மா பிரகாசிக்கும் இடம்.  நாம் உயிருடன் இருப்பதை அறிய உணர முடியும். ஆனால், உயிரை அறிய உணர  முடியாது. இது போல் தான் மேல் சொன்னது.

உரையாடலின் ஒரு பகுதி 43

மரணத்திற்க்கு பிறகும் உண்டாகும் நித்திய ஆனந்தமே நம் முன்னோர்களின் ஆய்வாக இருந்தது.  மேனாட்டு கல்வி முறை – வாழ்க்கை முறை நமது தேச மக்களின் இயற்கையான  கல்வி முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் நேர் விரோதமானது.  சாதாரண மக்களால் நன்கு தேர்ச்சியடைய முடியவில்லை இயற்க்கையான கல்வி முறையும் கிடைக்கவில்லை விஞ்ஞானத்தை விரும்பினர், வேதாந்தத்தை விட்டனர். விஞ்ஞானம் இவர்களின் விருப்ப பொருள் ஆனது. வேதாந்தமோ இவர்களின் ‍உதாசீனத்தால் தூசி படிந்து மறைய தொடங்கியது. இதனால் இரண்டிலும் நிறைவு இல்லாத நிலை…

உரையாடலின் ஒரு பகுதி 42

நம் முன்னோர்கள் விஞ்ஞானத்தின் முற்றிய வளர்ச்சியை முழுமையாய் அறிந்திருந்தனர்.  அதனாலேயே அதை மறைத்தும் மறந்தும் விட்டனர் காரணம் அவற்றால் ஆக்க பூர்வமானதைவிட அழிவு பூர்வமானதே அதிகம், அடுத்தது குறுகிய கால தேவைக்கு மட்டுமே பயன்படும்.  அதனால், ஏற்படும் தீய விளைவுகளோ, வெகு காலத்திற்க்கு சமுதாயத்திலேயே படிந்து நிற்க்கும்.

உரையாடலின் ஒரு பகுதி 41

கணிதம், வான ஆராய்ச்சி , கலைகள், தொழில்களில் நம் முன்னோர்கள் ஆக்க பூர்வமான அறிவோடு அளவோடு இருந்தனர். யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இப்போது எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அதனாலேயே தீமையும் அழிவும் பெருகி விட்டது. அஸ்திர சஸ்திரங்களில் நம் முன்னோர்கள் வெகு அறிவுடனும், திறமையுடனுமே இருந்தார்கள் ஆனால் அதை பொது மக்களின் கைகளுக்கு கிடைக்குமாறு செய்யவில்லை, இப்போது எது வேண்டுமானாலும் பொது மக்கள் கைக்கு மிக விரைவில் வந்து விடுவதால்…

உரையாடலின் ஒரு பகுதி 40

சின்ன, சின்ன விஷயங்களுக்கு மிக பெரிய விலையாகிய தன்னை இழந்தது தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பதை மனிதன் அறியவில்லை.  அதில், கிடைக்கும் சுகமும், மகிழ்ச்சியும் தற்காலிகமானது என்பதை மனிதன் அறியவில்லை. மன வலிமை பெற்ற மனிதனுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஓர் அளவு போதும் தற்போதய மனிதன் மன வலிமை அடைய உள்ள பயிற்ச்சிகளை மறந்து விட்டான் அதனால் அவன் எப்போதும் சந்தேகம், கவலை, துக்கம் போன்றவற்றின் பிடியில் சிக்கி வாழ்க்கையை அனர்த்தமாக்கி விட்டான். ஆயுத கண்டுபிடிப்புகளே இதற்க்கு…

உரையாடலின் ஒரு பகுதி 39

 நமது முன்னோர்கள் ஆராய்ச்சி பொருளாய் எடுத்தது பிரபஞ்ச இருப்பை, இயல்பை அதனுடன் தொடர்புடைய இயற்கையை இப்படி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதால் நாம் பேசும் விஞ்ஞானம் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் ஆன்ம விஞ்ஞானத்தை முதன்மை படுத்தியதால் மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.  ஒரு விதத்தில் பார்த்தால் நிரந்தரமற்ற வாழ்க்கையை பெரிதாய் எண்ணி வேண்டாத வினைகளை வளர்த்துக்கொள்ள அஞ்சினார்கள் தற்போதய விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவில் அல்லவா வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால்…

உரையாடலின் ஒரு பகுதி 38

பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே மனிதன் திறமாகிறது.  மனிதனின் திறமையாகிறது. பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும். நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது.  ஈரம்  என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது. நெருப்பு –  கோபம், தூய்மை கொண்டுள்ளது. வாயு –  போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது, மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது. ஆகாயம் –  போல பரந்து…

உரையாடலின் ஒரு பகுதி 37

பிராணணின் செயல்பாட்டால் உடலில் நோய் ஏற்படவும் நோய் குணப்படுத்தவும் முடியும் அது போல மன வலிமையையும் மன தளர்ச்சியையும் அடைய முடியும். பிராணணின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடல் நோய்வாய்படுகிறது.   உடல் நோய்வாய்பட்டால் மனம் தளர்ந்து சோர்ந்துவிடுகிறது. மனம் சோர்ந்து விட்டால் புத்தி தெளிவாய் இருப்பதில்லை, தெளிவில்லாத புத்தியின் செயல்கள் நம் வாழ்க்கைக்கு பெரும் கேடு விளைவிக்கின்றது.

உரையாடலின் ஒரு பகுதி 36

இப்படிப்பட்ட மனதை சரியான படி உபயோகித்தால் மனிதன் மாமனிதன் ஆகலாம் இதிலிருந்து நமக்கு ஒன்று தெரியும் மனிதன் வேறு மனம் வேறு என்பது தான் மனிதன் இல்லாவிட்டால் மனம் இல்லை, மனமே சரியில்லையென்றால் அவன் மனிதனே இல்லை மனதின் செயல்பாட்டால் உடலை கட்டுப்படுத்த முடியும் உடலின் செயல்பாட்டால் மனதை கட்டுபடுத்துவது என்பது முழுமையாக முடியாது ஆனால் பிராணணின் செயல்பாட்டால் உடல், மனம் இரண்டையும் கட்டுப்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்,